search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மலட்டுத்தன்மை"

    • அடுத்த தலைமுறை பக்க விளைவில்லாத நம் பாரம்பரிய மருத்துவ முறையின் வலிமையை அறியும்.
    • குழந்தையின்மை ஒவ்வொரு தம்பதிக்கும் மிகப்பெரிய பிரச்சினையாக உருவெடுத்து வருகிறது.

    இன்றைய கால சூழலில் குழந்தையின்மை என்பது ஒவ்வொரு தம்பதிக்கும் மிகப்பெரிய பிரச்சினையாக உருவெடுத்து வருகிறது. இதற்கு பல்வேறு காரணங்கள் உண்டு. அவற்றுக்கு நம் பாரம்பரிய மருத்துவ முறை மூலமே பல்வேறு தீர்வுகளை தருகிறது. அதற்கு ஓம் மரபுவழி மருத்துவமனை சார்பில் அந்த குறைபாடு இருக்கும் பட்சத்தில் எளிய தீர்வுகளையும் காண்போம்.

    சீரற்ற மாதவிடாய் சுழற்சி: சீரற்ற மாதவிடாய் சுழற்சி குறைபாடு மாறுவதற்கு தினமும் இரவு அத்திப்பழம், பால் சாப்பிடலாம். கருமுட்டை வளர்ச்சி போன்ற காரணிகள் இருப்பின் அதனை சரி செய்ய சித்த மருத்துவத்தில் நல்ல மருந்துகள் உள்ளது.

    கருப்பை (சினைப்பை) நீர்க்கட்டி: சீரற்ற உணவு பழக்க வழக்கங்கள் மற்றும் சூழலியல் இதற்கு காரணமாக அமைகிறது. இந்த பிரச்சினை இருந்தாலும் குழந்தை உருவாவதற்கு பெருவாரியாக வாய்ப்பு உள்ளது. ஆனால் சில நேரங்களில் இது பாதிப்பையும் உண்டாக்கும். இந்த பிரச்சினை வராமல் தடுக்க வாரம் இருமுறை எண்ணெய் குளியல், உணவில் தேவையான அளவு துவர்ப்பு சுவை ஆகியவை உதவும். இதனை களைவதற்கும் நம் மருத்துவ முறை மருந்துகளை அளித்துள்ளது. பெரும்பாடு, வெள்ளைப்பாடு, கருப்பை தடிமன், கருப்பை குழாய் அடைப்பு, கருப்பை திசுக்கட்டிகள், புற்று ஆகிய பிரச்சினைகளுக்கும் சித்த மருத்துவம் நல்ல தீர்வை அளிக்கிறது. ஆண்களுக்கு ஏற்படும் விந்தணு நீந்தும் தன்மை குறைபாடு நீங்க பாதாம் பிசினை தினமும் இரவு பாலில் முருங்கை பிஞ்சு, பூ உணவில் சேர்க்க குறைபாடுகள் சரியாகும்.

    பாதிப்பு அதிகமாக இருப்பின் விந்தணு எண்ணிக்கை அதிகரிக்கவும், நீந்தும் தன்மை அதிகரிக்கவும் எழுச்சி குறைபாடு சீர் செய்யவும் சிறப்பான மருந்துகள் நம் மருத்துவ முறையில் உள்ளது. மேலும் விரைப்பை, நரம்புச்சுருள் மற்றும் சில காரணிகளால் ஏற்படும் விந்தணு இல்லாமை உள்ளிட்ட நோய்களுக்கும் சித்த மருத்துவமுறை நல்ல தீர்வு அளிக்கும். எங்கள் மருத்துவமனையில் நவீன வசதிகள், ஆய்வுக்கூடம், நவீன உள் நோயாளிகள் வசதி, பிராணவாயு, தொக்கனம் வசதிகள் போன்ற பாரம்பரிய கட்டமைப்புகள், பாரம்பரிய மருந்துகள், நவீன உபகரணங்கள், படித்த அனுபவம் பெற்ற மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் கொண்டு இன்றைய கால சூழலுக்கு ஏற்ப கட்டமைத்து உள்ளோம்.

    குழந்தையின்மை தவிர ஆஸ்துமா, சைனஸ், இதய நோய்கள், சிறுநீரக கோளாறுகள், தோல் நோய்களுக்கும் சிறந்த மருத்துவம் அளிக்கப்படுகிறது. குழந்தைக்கு சித்த மருத்துவ மகளிர் மற்றும் குழந்தைகள் நல பிரிவில் பட்டம் பெற்ற மருத்துவரால் சிகிச்சை அளிக்கப்படுகிறது. அடுத்த தலைமுறை பக்க விளைவில்லாத நம் பாரம்பரிய மருத்துவ முறையின் வலிமையை அறியும். எங்கள் மருத்துவமனையில் நாங்கள் குழந்தைகளை உருவாக்கவில்லை. ஆரோக்கியமான பெற்றோரை உருவாக்குகிறோம்.

    டாக்டர் பிரின்சி, தலைமை மருத்துவர்.

    டாக்டர் ஜெயந்தி, மகளிர் மற்றும் குழந்தைகள் நலம்.

    டாக்டர் சுபாசினி, பொது மருத்துவர்.

    டாக்டர் வெங்கடகணபதி, பொது மருத்துவர்.

    ஓம் மரபுவழி மருத்துவமனை, 31, அருணாச்சலம் வீதி, பெரியார் சிலை அருகில், காரைக்குடி-630001. சிவகங்கை மாவட்டம்

    அலைபேசி: 9361810100, தொலைபேசி: 04565 236555/497666.

    • குழந்தையின்மை பிரச்சனை அதிகரித்து வருகிறது.
    • குழந்தையின்மைக்கு 40 சதவீத பெண்களும் காரணம்.

    குழந்தை பேறுக்கு லிஸ்டர் குழந்தையின்மை கருத்தரித்தல் மையத்தில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இங்குள்ள மருத்துவ சிகிச்சை நிபுணர் டாக்டர் எஸ்.ஆனந்தி அரவிந்த் ஜெர்மனியில் சிறப்பு பயிற்சி பெற்றவர். அவர் தலைமையிலான மருத்துவக்குழு சுமார் 7 ஆண்டுகளாக சிகிச்சை அளித்து வருகிறார்கள். டாக்டர் ஆனந்தி அரவிந்த் கூறியதாவது:-

    திருமணமான தம்பதிகளிடையே நாளுக்கு நாள் குழந்தையின்மை தன்மை அதிகரித்து வருகிறது. பொதுவாக திருமணமான தம்பதிகளில் சுமார் 10-15 சதவீதம் பேருக்கு குழந்தையின்மை ஏற்படுகிறது. அதற்கு 30 முதல் 40 சதவீதம் வரை ஆண்கள் காரணம் ஆகின்றனர். அவர்களுக்கு முக்கிய காரணம் உயிரணுக்களின் வேகமாக நகரும் தன்மை குறைவு (Asthenozoospermia) எண்ணிக்கை குறைபாடு ஆகும். இவற்றிற்கு மது பழக்கம், துரிதஸ்கலிதம், புகைப்பிடித்தல், போதை வஸ்துக்களை உபயோகித்தல், அம்மை, டி.பி., வலிப்புநோய், தைராய்டு நோய், சர்க்கரை நோய், சிறுநீரில் கிருமி தொற்று, கிட்னி கல் பிரச்சினை உள்ளிட்டவை முக்கிய காரணங்கள் ஆகும்.

    இவை தவிர கடுமையான தட்ப வெப்ப சூழ்நிலையில் வேலை செய்தல். பல மணி நேரம் கணினி வேலை, சுமார் 6 மணி நேரத்திற்கு மேலாக வெயிலில் பயணம் செய்வது போன்றவைகளும் விந்தணுக்கள் உற்பத்தி மற்றும் செயல் திறனை பாதிக்கின்றது. Antis perm Antibody எனப்படும் தன் உயிரணுக்களுக்கான எதிர் உயிரி உடம்பிலேயே உற்பத்தி ஆகிய விந்தணுக்களை கொன்று விடுவதும் ஒரு காரணம் ஆகும்.

    குழந்தையின்மைக்கு 40 சதவீத பெண்களும் காரணம் ஆகின்றனர். கருமுட்டை நீர்கட்டிகள், Endometriosis கருகுழாய் டியூப் அடைப்பு மற்றும் கர்ப்பப்பையில் அடைப்பு, கட்டிகள் Uterine Anamolies. Adenomyosi போன்றவை PID எனப்படும் கர்ப்பப்பைவாய் கிருமி தொற்று குழந்தையின்மைக்கு முக்கிய காரணமாகின்றன. அதிக எடை, மாத விடாய் ஒழுங்கற்ற தன்மையில் வருவது போன்றவையும் குழந்தையின்மைக்கு காரணம் ஆகும்.

    20 சதவீதம் unexplained infertility என காரணம் கண்டறிய முடியாத பிரச்சினைகளால் குழந்தை கிடைக்காமல் போகின்றது.

    மேற்கூறிய காரணங்களை தம்பதிகளிடையே பேசி, ரத்த பரிசோதனை, அல்ட்ரா சவுண்டு ஸ்கேன், follicular study. HSG (டியுப் பரிசோதனை) Laparoscopy and hysteroscopy (நுண்துளை கர்ப்பப்பை பரிசோதனை) மூலம் பரிசோதித்து சிகிச்சை செய்ய வேண்டும்.

    இன்றைய நவீன தொழில்நுட்பம் மூலம் 90 சதவீத குழந்தையில்லா பெண்களை கருத்தரிக்க வைக்க முடியும். மாத்திரைகள், ஊசிகள், IUI மூலம் குழந்தை கிடைக்காமல் போனால் IVF (டெஸ்ட் டியூப்) அல்லது ஜெர்மன் தொழில் நுட்பத்தில் ICSI எனப்படும் சிகிச்சை மூலம் கருத்தரிக்க வாய்ப்பு உள்ளது. உயிரணுக்கள் எண்ணிக்கை 1 மில்லியன் அணுக்கள் இருந்தாலே இந்த சிகிச்சை மூலம் அணுக்களை கரு முட்டைக்குள் செலுத்தி கருத்தரிக்க செய்ய முடியும்.

    லிஸ்டர் குழந்தையின்மை கருத்தரித்தல் மையம் குமரி மாவட்டத்தில் குழந்தை பேறுக்கு தீர்வு காணும் மையமாக செயல்படுகிறது. தொடர்புக்கு செல்போன் எண்கள்: 73730 05563, 73730 05513.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • இன்று ஐவிஎப் முறையால் பலர் குழந்தைப் பேறு பெற்றுப் பலனடைகிறார்கள்.
    • குழந்தைப் பேறு பெறுவதில் சிக்கல் இருக்கும் தம்பதியினருக்கு இது நல்ல வாய்ப்பாக உள்ளது.

    பல இந்திய தம்பதிகளுக்கு இடையே நாளுக்கு நாள் குழந்தையின்மை சிக்கல் அதிகரித்து வருகிறது. அவர்களுக்குக் குழந்தை பாக்கியத்தை ஏற்படுத்த இந்த IVF (ஐவிஎப்) முறை மிகச் சிறந்த வாய்ப்பாக உள்ளது. இன்று ஐவிஎப் முறையால் பலர் குழந்தைப் பேறு பெற்றுப் பலனடைகிறார்கள்! ஐவிஎப் என்பது உதவிகரமான இனப்பெருக்க தொழிற்நுட்பம் ஆகும். இது பெரும் அளவில் திருமணமானதாகிப் பல ஆண்டுகள் குழந்தைப் பேறு பெறுவதில் சிக்கல்கள் உள்ள தம்பதியினர்களுக்கு உதவியாக உள்ளது.

    ஐவிஎப் (IVF) சிகிச்சை முறை பலரைத் தாயாக ஆக்கி உள்ளது. இனியும் நம்மால் குழந்தைப் பெற முடியுமா என்று நம்பிக்கை இழந்த பெண்களுக்கும், நம்பிக்கை ஊட்டும் விதமாக இந்தச் சிகிச்சை முறை அமைந்துள்ளது. இந்தச் சிகிச்சை முறையில் மனைவியின் கரு முட்டை மற்றும் கணவனின் விந்தும் உபயோகிக்கப்படுகின்றன.

    ஐவிஎப் முறையின் நடைமுறைப்படி (IVF Procedure Step by Step) கரு முட்டை மற்றும் விந்தணு ஒரு ஆய்வக வட்டில் வைத்துக் கருத்தரிக்கப்படுகிறது. கரு குறிப்பிட்ட வளர்ச்சி அடைந்த பின் கருப்பைக்குள் வைக்கப்பட்டு முழு வளர்ச்சி அடைகிறது. கரு முட்டை மற்றும் விந்தணுவைக் கொண்டு ஆய்வகத்தில் கரு உற்பத்தி செய்யப்பட்ட பின் பெண்ணின் கருப்பைக்குள் வைத்து முழு வளர்ச்சி அடைவதால் இந்தச் சிகிச்சை முறை உறுதியான குழந்தைப் பேறு பெறுவதில் சிக்கல்கள் இருக்கும் தம்பதியினருக்கு ஒரு நல்ல வாய்ப்பாக உள்ளது. எனினும் இந்தச் சிகிச்சை முறையின் வெற்றி விகிதம் அந்தப் பெண் மற்றும் ஆண் வயது, உடல் ஆரோக்கியம், கருப்பையின் ஆரோக்கியம் ஆகியவற்றைச் சார்ந்தே உள்ளது.

    இந்தச் சிகிச்சை முறையைச் செய்து கொள்ள மனம் மற்றும் உடல் பலம் தேவை. இது ஒரு உலகளவில் வெற்றி பெற்ற சிகிச்சை முறையாகும். இந்தச் சிகிச்சை முறை நடைபெற குறைந்தது 2 வாரக் காலங்கள் எடுத்துக் கொள்ளும். இதனால் சிகிச்சை பெரும் தம்பதியினர் அவ்வப்போது மருத்துவமனைக்கு வந்து செல்ல வேண்டிய தேவை இருக்கும். பொறுமையும் திடமான மனதும் இந்த சிகிச்சையில் வெற்றி பெற பெரிதும் அவசியம்.

    ஐவிஎப் சிகிச்சை முறையின் வெற்றி பெரும் விகிதம்

    அனைத்து வயது பெண்களும் இந்தச் சிகிச்சை முறையை முயலலாம் என்றாலும் அதன் வெற்றி பெரும் விகிதம் அவர்களது தற்போதைய வயது, உடல் மற்றும் மனதின் ஆரோக்கியத்தின் அளவைக் கொண்டே நிர்ணயிக்கப்படுகிறது. அதை நீங்கள் தெரிந்து கொள்ள இங்கே சில குறிப்புகள்:

    35 வயதிற்குள் இருக்கும் பெண்களின் வெற்றி விகிதம் 41% - 43%

    35 - 37 வயதிற்குள் இருக்கும் பெண்களின் வெற்றி விகிதம் 33% - 36%

    38 - 40 வயதிற்குள் இருக்கும் பெண்களின் வெற்றி விகிதம் 23% - 27%

    40 வயதிற்கு மேல் இருக்கும் பெண்களின் வெற்றி விகிதம் 13% -18%

    ×