search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மறியல் போராட்டம்"

    • சண். முத்துகிருஷ்ணன் தலைமையில் கட்சி நிர்வாகிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • துணை மேயர் தாமரைச்செல்வன் மற்றும் நிர்வாகிகளிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.

     கடலூர்:

    கடலூர் அருகே சுப்பிரமணியபுரத்தில் வி.சி‌.க சார்பில் 60 அடி கொடிக்கம்பம் அமைத்து கொடியேற்று விழா துணை மேயர் தாமரைச்செல்வன் ஏற்பாட்டின் பேரில் விசிக தலைவர் திருமாவளவன் கொடி ஏற்ற இருந்தார். அந்த பகுதியில் வி.சி.க. கொடியேற்ற விழாவிற்கு பா,ம,க, மாவட்ட செயலாளர் சண். முத்துகிருஷ்ணன் தலைமையில் கட்சி நிர்வாகிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து விசிக கொடியேற்றி விழா தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. பின்னர் வருவாய் கோட்டாட்சியர் அதியமான் கவியரசு தலைமையில் பாமக மற்றும் விசிகவினரிடையே இரண்டு முறை சமாதான பேச்சுவார்த்தை கூட்டம் நடைபெற்றது. இதில் விசிக வினர்கள் கட்சிக்கொடி ஏற்றுவதற்கு வருவாய் துறை மற்றும் போலீசார் அனுமதி அளித்தனர். இதனை தொடர்ந்து துணை மேயர் தாமரை ச்செல்வன் தலைமையில் 60 அடி உயரத்தில் கட்சி கொடியேற்று விழா இன்று மாலை விசிக தலைவர் திருமாவளவன் கொடியேற்றுவதற்கு வருகை தர இருந்தார். இந்த நிலையில் நேற்று மதியம் சுப்பிரமணியபுரத்தை சேர்ந்த 10க்கும் மேற்பட்ட நபர்கள் திடீரென்று கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் கொடி கம்பம் வைப்பதால் அருகாமையில் உள்ள அதிக திறன் கொண்ட மின் பாதை செல்வதால் பாதிப்பு ஏற்படுவதாக கூறி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் வி.சி.க கொடிக்கம்பம் வைப்பதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து பாமக மாவட்ட செயலாளர் சண். முத்துகிருஷ்ணன் தலைமையில் புதுவை மாநில அமைப்பாளர் கணபதி, முன்னாள் மாநில துணை பொது செயலாளர் தாமரைக்கண்ணன், மாணவரணி கோபிநாத் மற்றும் நிர்வாகிகள் பொதுமக்கள் திரண்டு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதனை தொடர்ந்து அவர்களிடம் போலீசார் பேச்சு வார்த்தை நடத்தியதின் பேரில் அங்கிருந்து அவர்கள் கலந்து சென்றனர். இதனை தொடர்ந்து கொடி ஏற்றுவதற்கு பா.ம.க வினய் எதிர்ப்பு தெரிவித்ததை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் துணை மேயர் தாமரைச்செல்வன் தலைமையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக அந்த பகுதி முழுவதும் பெரும் பரபரப்பாகவும், பதற்ற மாகவும் காணப்பட்டது. இதனைத் தொடர்ந்து குள்ளஞ்சாவடி போலீஸ் நிலையத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன் தலைமையில் துணை மேயர் தாமரைச்செல்வன் மற்றும் நிர்வாகிகளிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசுகையில், கொடியேற்று விழா நடைபெறுவதால் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது. இதன் காரணமாக தற்காலிகமாக கொடியேற்று விழாவை தள்ளி வைக்குமாறு அறிவுறுத்தினர்‌. அதன்படி நீண்ட நேரம் பேச்சு வார்த்தையில் விடுதலை சிறுத்தை கட்சி நிர்வாகிகள் போலீ சாருக்கு ஒத்துழைப்பு வழங்குவதாக தெரிவித்து விட்டு அங்கிருந்து கொடி க்கம்பம் வைத்திருக்கும் இடத்திற்கு வந்தனர். பின்னர் துணை மேயர் தாமரைச்செல்வன், அங்கு தொடர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களிடம் பேசினார்.

    பா.ம.க - வி.சி.க வினர் மறியல் போராட்டம்

    நள்ளிரவில் வி.சி.க வினர் கட்சி கொடி ஏற்றியதால் பதட்டம்- போலீஸ் குவிப்புஇதில் கொடியேற்று விழா நடைபெறுவதால் பதற்றமான சூழ்நிலை உருவாகி இருப்பதாக போலீசார் தற்காலிகமாக கொடியேற்றி விழாவை தள்ளி வைக்க வேண்டும். மேலும் கொடியேற்றுவதற்கு அனுமதி வழங்கி உள்ளதால் போராட்டத்தை கலைக்க வேண்டும் என தெரிவித்தார். அப்போது அங்கிருந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து உடனடியாக அமைக்கப்பட்ட 60 அடி கொடிக்கம்பத்தில் கொடி ஏற்ற வேண்டும் என திட்டவட்டமாக தெரிவி த்தனர். இதன் காரணமாக தாமரைச்செல்வன் நள்ளிரவில் விடுதலை சிறுத்தைகள் கட்சி கொடியேற்றினார். அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த நூற்றுக்கு மேற்பட்ட போலீசார் கடும் அதிர்ச்சி அடைந்தனர். இதனை தொடர்ந்து அங்கு ஏராளமான விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் திரண்டதால் போலீசார் அவர்களை அவசர அவசரமாக அங்கிருந்து உடனடியாக கலைந்து செல்லுமாறு கடும் எச்சரிக்கை விடுத்து அனுப்பி வைத்தனர். மேலும் திடீரென்று கட்சி கொடி ஏற்றியதால் மேலும் அப்பகுதியில் பதற்றம் நீடித்து வந்தது‌. இதன் காரணமாக சுமார் 200க்கும் மேற்பட்ட போலீசார் அந்த பகுதி முழுவதும் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சம்பவத்தால் கடலூர் மாவட்டம் முழுவதும் பதற்றமான சூழ்நிலை காணப்பட்டு வருகின்றது. 

    • போடியில் டாஸ்மாக் கடையை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
    • பொதுமக்கள் சார்பில் போராட்ட அறிவிப்பு போஸ்டர் பல்வேறு பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ளது

    மேலசொக்கநாதபும்:

    தேனி மாவட்டம் மேலசொக்கநாதபுரம் ராணிமங்கம்மாள் சாலையில் 2 டாஸ்மாக் கடைகள் உள்ளன. இந்த கடைகளில் குடிமகன்கள் எந்தநேரமும் குடித்துவிட்டு சாலையில் அரைகுறை ஆடையுடன் மயங்கி கிடப்பதும், பாட்டில்களை நடைபாதையில் உடைத்துவிட்டு செல்வதும் வாடிக்கையாக உள்ளது.

    இதனால் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், வாகன ஓட்டுனர்கள் மிகவும் சிரமமடைந்து வருகின்றனர். ரெங்கநாதபுரம், கரட்டுப்பட்டியில் வசிக்கும் பெண்களுக்கும், குடிமகன்களுக்கும் இடையே அடிக்கடி தகராறும் ஏற்பட்டு வருகிறது. எனவே இந்த டாஸ்மாக் கடையை அகற்ற வலியுறுத்தி இப்பகுதி பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கும், பேரூராட்சி அலுவலகத்திற்கும் புகார் அளித்தனர்.

    ஆனால் கடை அகற்றப்படாததால் பொதுமக்கள் மிகுந்த வேதனை அடைந்து வருகின்றனர். எனவே கடைகளை அகற்றாவிட்டால் மக்களை திரட்டி மாபெரும் மறியல் போராட்டம் நடத்துவோம் என்று கரட்டுப்பட்டி பொதுமக்கள் சார்பில் பல்வேறு பகுதிகளில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    • தருமபுரி சம்பவத்தை கண்டித்து அய்யலூர், செம்பட்டியில் மாற்றுத்திறனாளிகள் கோஷம் எழுப்பி மறியல் போராட்டம்
    • இந்த போராட்டத்தால் அப்பகுதியில் பரபரப்பை ஏற்பட்டது.

    செம்பட்டி:

    பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 100-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் மாநில பொதுச்செயலாளர் நம்புராஜன் தலைமையில், தர்மபுரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் போராட்டம் நடத்தச் சென்றனர்.

    அப்போது, போராட்டத்திற்கு சென்ற மாற்றுத்திறனாளிகளை குண்டுகட்டாக தூக்கி போலீசார் கைது செய்துள்ளனர்.

    இதனை கண்டித்து, செம்பட்டி பஸ் நிலையம் அருகே, ஆத்தூர் ஒன்றிய மாற்றுத்திறனாளிகள் சார்பில் ஒன்றிய செயலாளர் மலைச்சாமி தலைமையில், சுமார் 150-க்கும் மேற்பட்டோர் பஸ் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    தர்மபுரியில் குண்டுகட்டாக தூக்கி, மாற்றுத்திறனாளிகள் கைது செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து, போலீசாரை கண்டித்தும் கோஷம் எழுப்பினர். அவர்களிடம் செம்பட்டி இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு போராட்டம் கைவிடப்பட்டது. இந்த போராட்டம் இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    அய்யலூரில் மாற்றுத்திறனாளிகள் நலச்சங்க ஒன்றிய செயலாளர் முத்துப்பாண்டி தலைமையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    போராட்டத்தினால் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வடமதுரை இன்ஸ்பெக்டர் நாகசாந்தி மற்றும் சப் இன்ஸ்பெக்டர் பிரபாகரன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனைத்தொடர்ந்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

    ×