search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மத்திய அமைச்சரவை"

    • பழங்குடியினருக்கு வழங்கப்படும் சலுகைகள் அனைத்தும் நரிக்குறவர், குருவிக்காரர் பிரிவினருக்கும் கிடைக்கும்
    • பிரதமர் மற்றும் மத்திய அமைச்சருக்கு தமிழக பாஜக சார்பில் மாநில தலைவர் அண்ணாமலை நன்றி தெரிவித்துள்ளார்.

    புதுடெல்லி:

    தமிழ்நாடு, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் விடுபட்டிருந்த சமுதாயங்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது. நரிக்குறவர், குருவிக்காரர் என அழைப்படுவோரை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கும் மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக மத்திய மந்திரி அர்ஜூன் முண்டா கூறியுள்ளார். சத்தீஸ்கர், இமாச்சலப்பிரதேச மாநிலங்களிலும் பழங்குடியினர் பட்டியலில் இணைப்புகளுக்கும் அனுமதி தரப்பட்டுள்ளது. பழங்குடியினருக்கு வழங்கப்படும் சலுகைகள் அனைத்தும் நரிக்குறவர் - குருவிக்காரர் பிரிவினருக்கும் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    நரிக்குறவர், குருவிக்காரர் என்று அழைக்கப்படும் சமுதாயத்தினரை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க ஒப்புதல் அளித்த பிரதமர் மற்றும் மோடி மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் அர்ஜூன் முண்டா ஆகியோருக்கு தமிழக பாஜக சார்பில் மாநில தலைவர் அண்ணாமலை நன்றி தெரிவித்துள்ளார்.

    1965ஆம் ஆண்டு லோக்கூர் கமிட்டி நரிக்குறவர், குருவிக்காரர் என்று அழைக்கப்படும் சமுதாயத்தினரை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று பரிந்துரைத்தது. தமிழக பாஜகவின் தொடர் முயற்சியாலும், நரிக்குறவர் மக்களின் நீண்ட கால கோரிக்கையையும் மனதில் கொண்டு பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க பிரதமர் ஒப்புதல் அளித்துள்ளார் என்றும், இந்த மகத்தான முடிவு நரிக்குறவர், குருவிக்காரர் சமுதாய மக்களுக்கு சம உரிமையையும் அவர்களின் பொருளாதார வளர்ச்சியையும் வலுப்படுத்தும் விதமாக அமைந்துள்ளது என்றும் அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார்.

    • 35 ஆண்டுகள் வரை தனியாருக்கு குத்தகைக்கு அளிக்க மத்திய அரசு திட்டம்.
    • ரெயில்வே நிலத்தின் மதிப்பில் 1.5 சதவிகிதத்தை குத்தகை தொகையாக வசூலிக்க முடிவு

    பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை கூட்டம் டெல்லியில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சரக்கு போக்குவரத்து நடவடிக்கைகளுக்காக ரெயில்வே நிலத்தை 35 ஆண்டுகள் வரை தனியாருக்கு குத்தகைக்கு அளிக்க ஒப்புதல் வழங்கப்பட்டது. இதுவரை ரெயில்வே நிலங்கள் 5 ஆண்டுகளுக்கு மட்டுமே குத்தகைக்கு அளிக்கப்பட்டு வந்தது. 

    தற்போது நீண்ட காலத்திற்கு ரெயில்வே நிலங்கள் குத்தகை விட முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக ரெயில்வே நிலத்தின் மதிப்பில் 1.5 சதவிகிதத்தை குத்தகை தொகையாக வசூலிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ரெயில்வே நிலங்களை நீண்டகால குத்தகைக்கு விடுவதால், நாடு முழுவதும் 300 சரக்கு கையாளும் முனையங்கள் அமைய வாய்ப்புள்ளதாக மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை மந்திரி அனுராக் தாக்குர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

    இதன் மூலம், ரெயிவே சரக்கு போக்குவரத்து அதிகரிப்பதுடன் தொழில்துறையின் சரக்கு போக்குவரத்திற்கான செலவு குறையும். ரெயில்வேக்கு அதிக வருவாய் கிடைக்கும். மின்சாரம், எரிவாயு, தண்ணீர் விநியோகம், தொலை தொடர்பு கேபிள், சாலை, மேம்பாலம் உள்ளிட்ட பொதுப்பணிகள், வளர்ச்சியடையும். மேலும் 1.2 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதேபோல் கேரள மாநிலம் ஜே.எல்.என்.மைதானம் முதல் தகவல் பூங்கா வரையிலான கொச்சி மெட்ரோ ரெயில் திட்டத்தின் இரண்டாம் கட்டப் பணிக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. 

    • இத்திட்டம் ஆசிரியர் தினத்தன்று பிரதமர் நரேந்திர மோடியால் அறிவிக்கப்பட்டது
    • ஐந்தாண்டுகளுக்கு மொத்த திட்டச் செலவு ரூ.27,360 கோடியாக இருக்கும்.

    புதுடெல்லி:

    நாடு முழுவதும் 14000 பள்ளிகளை ரூ.27360 கோடி செலவில் எழுச்சிமிகு இந்தியாவிற்கான பிரதமரின் பள்ளிகளாக தரம் உயர்த்துவதற்கு மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளது.

    இந்த திட்டத்தின்கீழ், கேந்திரிய வித்யாலயாக்கள் மற்றும் நவோதயா வித்யாலயாக்கள் உட்பட 14,000 க்கும் மேற்பட்ட பள்ளிகள் எழுச்சிமிகு இந்தியாவிற்கான பிரதமரின் பள்ளிகளாக மேம்படுத்தப்படும் என அமைச்சரவை கூட்டத்திற்குப் பிறகு மத்திய மந்திரிகள் தர்மேந்திர பிரதான், அனுராக் தாக்கூர் தெரிவித்தனர்.

    ஆசிரியர் தினத்தன்று பிரதமர் நரேந்திர மோடியால் அறிவிக்கப்பட்ட இந்தத் திட்டம், மத்திய மற்றும் மாநில அரசுகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளால் நிர்வகிக்கப்படும் பள்ளிகளை வலுப்படுத்தும் திட்டமாகும். ஐந்தாண்டுகளுக்கு மொத்த திட்டச் செலவு ரூ.27,360 கோடியாக இருக்கும். இதில் மத்திய அரசின் பங்கு ரூ.18,128 கோடியாக இருக்கும். இத்திட்டத்தின் மூலம் 18.7 லட்சம் மாணவர்கள் பயனடைவார்கள் என அரசு எதிர்பார்க்கிறது.

    • குறுகிய கால விவசாயக் கடனுக்கு 1.5 சதவீதம் வட்டி மானியம் வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
    • இத்திட்டத்தின் கீழ் கடன் வழங்க ரூ.34,856 கோடி கூடுதல் பட்ஜெட் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    புதுடெல்லி:

    மத்திய அமைச்சரவை ரூ.3 லட்சம் ரூபாய் வரையில், விவசாயிகளுக்கு குறுகியக்காலக் கடன் வழங்கும் அனைத்து வகையான நிதி நிறுவனங்களுக்கும் ஆண்டுக்கு 1.5 சதவீதம் வட்டி மானியம் வழங்க ஒப்புதல் அளித்துள்ளது.

    விவசாயிகளுக்கு நடப்பு 2022-23 நிதியாண்டு முதல் 2024 - 25 வரை ரூ.3 லட்சம் வரை குறுகிய கால கடனுதவி அளிக்கும். பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகள், சிறு நிதி நிறுவனங்கள், மண்டல ஊரக வங்கிகள், கூட்டுறவு மற்றும் கணினி மயமாக்கப்பட்ட தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு வங்கிகளுக்கு இந்த வட்டி மானியம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இத்திட்டத்தின் கீழ் கடன் வழங்க 2022-23 முதல் 2024-25 வரை உள்ள நிதியாண்டில் ரூ.34,856 கோடி கூடுதல் பட்ஜெட் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. உரிய காலத்தில் கடனை திருப்பிச் செலுத்தும் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 4 சதவீதம் வட்டி விகிதத்தில் குறுகிய கால கடன் வழங்குவது தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • ரூ.1.64 லட்சம் கோடி மதிப்பீட்டில் பி.எஸ்.என்.எல் நிறுவனம் மறுசீரமைப்பு செய்யப்படுகிறது.
    • கிராமங்களுக்கு 4ஜி மொபைல் சேவை வசதி வழங்க நடவடிக்கை.

    தலைநகர் டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் 1.64 லட்சம் கோடி மதிப்பில் பிஎஸ்என்எல்-ன் மறுசீரமைப்பு திட்டத்திற்கு ஒப்புதல் வழங்கப்பட்டது.

    இதன் மூலம் புதிய மூலதனம், ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு, பாரத் பிராட்பேண்ட் நிகாம் நிறுவனத்தை பிஎஸ்என்எல் உடன் இணைப்பதன் மூலம் பைபர் நெட்வொர்க்கை அதிகரித்தல் ஆகிய மறுசீரமைப்பு பணிகள் மூலம் பிஎஸ்என்எல் சேவைகள் மேம்படும்.

    மேலும் ஊரகப் பகுதிகளில் உள்ள 24,680 கிராமங்களுக்கு 4ஜி மொபைல் சேவை அளிக்கும் வகையில் ரூ.26,316 கோடி மதிப்பிலான திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. இதன் மூலம் 2ஜி, 3ஜி மொபைல் சேவை வசதி மட்டும் உள்ள 6,279 கிராமங்கள் 4ஜி மொபைல் சேவை வசதி பெற்ற கிராமங்களாக மேம்படுத்தப்படுகிறது.

    17 வயதுக்கு உட்பட்டோருக்கான ஃபிஃபா மகளிர் உலகக் கோப்பை கால்பந்து போட்டியை நடத்துவதற்கு மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம் இப்போட்டி நடத்துவதற்காக அகில இந்திய கால்பந்து கூட்டமைப்புக்கு 10 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட உள்ளது. அக்டோபர் மாதம் 11-ந் தேதி தொடங்கி 30-ந் தேதி வரை இந்த போட்டிகள் நடைபெறுகின்றன.

    • நெல், சோளம், பருப்பு வகைகள் உள்ளிட்ட 17 வகை பயிர்களின் கொள்முதல் விலையை மத்திய அரசு உயர்த்தியுள்ளது.
    • மத்திய அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை மத்திய மந்திரி அனுராக் தாக்கூர் அறிவித்தார்.

    புதுடெல்லி:

    பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் தலைநகர் டெல்லியில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை மத்திய மந்திரி அனுராக் தாக்கூர் அறிவித்தார்.

    நெல் உள்ளிட்ட 17 வகையான பயிர்களின் கொள்முதல் விலையை உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது என தெரிவித்தார்.

    நெல் குவிண்டால் ஒன்றுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை ரூ.100 உயர்த்தி ரூ2,040 ஆக அதிகரித்துள்ளது. 2022-23 ஆம் ஆண்டில் நெல் குவிண்டால் ஒன்றுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை ரூ.100 உயர்த்தப்பட்டுள்ளது.

    எள் குவிண்டாலுக்கு ரூ.523, பாசி பருப்பு குவிண்டாலுக்கு ரூ.480 உயர்த்தியும், சூரியகாந்தி விதை குவிண்டாலுக்கு ரூ.385 உயர்த்தப்பட்டுள்ளது என குறிப்பிட்டார்.

    ×