search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மதுகடை"

    • உணவு பாதுகாப்பு துறையில் பீர்பாட்டில்களை கொடுத்து சோதனை செய்தார்.
    • தனியார் மதுபான விற்பனையாளர், தயாரிப்பு நிறுவனத்தின் மீது நஷ்டஈடு கோரி வழக்கு தொடர்ந்தார்.

    புதுச்சேரி:

    புதுவை வேல்ராம்பட்டை சேர்ந்தவர் பீமாராவ். இவர் கடந்த 2021-ம் ஆண்டு லாஸ்பேட்டை கொட்டுப் பாளையத்தில் உள்ள தனியார் மதுக்கடையில் 6 பீர் பாட்டில் வாங்கினார்.

    அதில் 2 பாட்டில் காலாவதியாக இருந்தது. இதையடுத்து உணவு பாதுகாப்பு துறையில் பீர்பாட்டில்களை கொடுத்து சோதனை செய்தார்.

    சோதனை முடிவில் புதுவை மாவட்ட நுகர்வோர் தீர்வு ஆணையத்தில் மனு தாக்கல் செய்து, தனியார் மதுபான விற்பனையாளர், தயாரிப்பு நிறுவனத்தின் மீது நஷ்டஈடு கோரி வழக்கு தொடர்ந்தார்.

    வழக்கை விசாரித்த மாவட்ட நுகர்வோர் குறைதீர்வு அமர்வு தலைவர் முத்துவேல், உறுப்பினர்கள் சுவிதா, ஆறுமுகம் ஆகியோர், மதுபான கடை ரூ.75 ஆயிரத்து 240 இழப்பீடு வழங்க வேண்டும் என உத்தரவிட்டனர்.

    • கலெக்டர் தகவல்
    • திருவள்ளுவர் தினம், குடியரசு தினத்தை முன்னிட்டு நடவடிக்கை

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்டதில் உள்ள அனைத்து அரசு மதுபான சில்லரை விற்பனைக் கடைகள் (டாஸ்மாக் கடைகள்), மதுபானக் ஒட்டியுள்ள மதுக்கூடங்கள் மற்றும் நட்சத்திர அந்தஸ்து ஓட்டலில் உள்ள மது கூடங்கள் அனைத்தும் வருகின்ற 16.01.2023 (திங்கட்கிழமை) திருவள்ளுவர் தினம் அன்றும் மற்றும் குடியரசு தினமான 26.01.2023 (வியாழக்கிழமை) அன்றும் மதுபான கடைகள் மற்றும் மதுக்கூடங்கள் மூடி வைக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

    கலெக்டர் உத்தரவின்படி மேற்படி இந்நாட்களில் ராணிப்பேட்டை மாவட்டதில் உள்ள அனைத்து அரசு மதுபான கடைகள், அரசு மற்றும் தனியார் மதுகூடங்கள் இயங்காது என கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார். அன்றைய தினங்களில் மது பார்கள் திறந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் எச்சரித்துள்ளார்.

    ×