என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "மட்டன் ரெசிப்பி"
- அசைவ உணவுகளில் ஆரோக்கியம் நிறைந்தது மட்டன்.
- மட்டன் சமைக்கும் போது வீடே மணக்கும்.
அசைவ உணவுகளில் ஆரோக்கியம் நிறைந்தது மட்டன். மற்ற உணவுகளை காட்டிலும் மட்டன் சமைக்கும் போது வீடே மணக்கும். மட்டன் தொடங்கி மட்டன் ஈரல், மட்டன் எலும்பு, மட்டன் குடல், மட்டன் தலைக்கறி, மட்டன் சூப் என பல வகைகளில் செய்யலாம். அதிலும் மட்டனில், அரைத்த மசாலா சேர்த்து செய்யப்படும் மட்டன் கோலா உருண்டை சாப்பிடவே அட்டகாசமாக இருக்கும். அதை வீட்டிலேயே செய்வது எப்படி என்று பார்க்கலாம்...
தேவையான பொருட்கள்:
மட்டன் (வெள்ளாட்டு இறைச்சி) -1கிலோ
மிளகாய்த் தூள் 12 கிராம்
மஞ்சள் தூள் - 4 கிராம்
உப்பு -தேவைக்கு ஏற்ப
நறுக்கிய பச்சை மிளகாய்- 10 கிராம்
நறுக்கிய பூண்டு - 20 கிராம்
நறுக்கிய கொத்தமல்லி - 30 கிராம்
எலுமிச்சைச் சாறு- 5மி.லி.
எண்ணெய் - கால் லிட்டர்
அரைக்க
துருவிய தேங்காய் 25 கிராம்
லவங்கப்பட்டை 2 கிராம்
கிராம்பு, கசகசா - 10 கிராம்
வறுத்த உளுந்தம்பருப்பு - 15 கிராம்
செய்முறை:
முதலில் மிக்சியில், சிறிய துண்டுகளாக வெட்டப்பட்ட ஆட்டிறைச்சியை அரைத்து எடுக்கவும்.
அடுத்து ஒரு பாத்திரத்தில் மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், உப்பு, பச்சை மிளகாய், நறுக்கிய பூண்டு, நறுக்கிய கொத்தமல்லி, எலுமிச்சை சாறு சேர்த்து நன்றாக கலவையை கலந்துகொள்ளவும்.
பின்னர் மிக்சியில் தேங்காய்த் துருவல், லவங்கப்பட்டை, கிராம்பு, கசகசா, வறுத்த உளுந்தம்பருப்பு சேர்த்து அரைக்கவும். இந்த கலவையை அரைத்த இறைச்சியுடன் சேர்த்து கலக்கவும்.
கடைசியாக, உருண்டை பிடித்துக் கொள்ள வேண்டும். பின்னர் வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் பொரித்து எடுத்தால் சுவையான கோலா உருண்டை, உங்களை ருசிக்க கூப்பிடும்.
- ரத்த அளவை அதிகரிக்க பலரும் பரிந்துரைப்பது சுவரொட்டியை தான்.
- சுவரொட்டியில் ஏராளமான சத்துக்கள் அடங்கியுள்ளன.
ஆட்டுக்கறியை விட அதன் மற்ற உறுப்புகளில் ஏராளமான சத்துக்கள் அடங்கியுள்ளன, குறிப்பாக ரத்த அளவை அதிகரிக்க பலரும் பரிந்துரைப்பது சுவரொட்டி எனும் மண்ணீரலைத் தான். ஹீமோகுளோபின் அளவு குறைவாக உள்ள நபர்கள் வாரம் ஒருமுறை இதை தவறாமல் எடுத்துக்கொள்ள பரிந்துரைக்கப்படுகிறது. கர்ப்பிணி பெண்கள், ரத்த அழுத்தப் பிரச்சனை இருப்பவர்கள் சாப்பிடுவது பலனைத் தரும். வயிற்றுப்புண், வாய்ப்புண் பிரச்சனையால் அவதிப்படும் நபர்களுக்கும் அற்புதமான உணவு சுவரொட்டி தான். இந்த பதிவில் சுவரொட்டி வறுவல் எப்படி செய்வது என தெரிந்து கொள்வோம்.
தேவையான பொருட்கள்:
மிளகு- ஒரு ஸ்பூன்
சீரகம்- ஒரு ஸ்பூன்
சோம்பு- ஒரு ஸ்பூன்
சுவரொட்டி- 2
சின்ன வெங்காயம்- 10
இஞ்சி, பூண்டு விழுது- தேவையான அளவு
கரம் மசாலா தூள்- அரை டீஸ்பூன்
பெருஞ்சீரகம்- அரை டீஸ்பூன்
தேங்காய்- சிறிதளவு
நல்லெண்ணெய்- 2 டீஸ்பூன்
செய்முறை:
மட்டன் கடையில் சுவரொட்டியை வெட்டாமல் வாங்கி வர வேண்டும், அதனை நன்றாக சுத்தம் செய்த பிறகு குக்கரில் போட்டு 2 விசில் வரை வேகவைத்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் மிளகு, சீரகம், சோம்பு ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து மிக்சி ஜாரில் பொடித்துக்கொள்ள வேண்டும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி தாளித்ததும், பட்டை, சோம்பு, கடுகு உளுந்து, கிராம்பு, லவங்கப்பட்டை கருவேப்பில்லை சேர்க்கவும். இதனுடன் நறுக்கி வைத்துள்ள சின்ன வெங்காயத்தை சேர்க்க வேண்டும். வெங்காயம் வதங்கிய பின்னர் இஞ்சி பூண்டு விழுது சேர்க்க வேண்டும்.
அதன்பிறகு சுவரொட்டியை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். தண்ணீர் சேர்க்க வேண்டாம், இதனுடன் கரம் மசாலா தூள், நாம் ஏற்கனவே பொடித்து வைத்துள்ள மிளகு, சீரகம், சோம்பு பொடியை சேர்க்க வேண்டும்.
பச்சை வாசனை போகும் வரை வதக்கிக் கொண்டே இருக்கவும், கடைசியாக நல்லெண்ணெய் ஒரு டீஸ்பூன் கொத்தமல்லி தழை தூவி இறக்கினால் சுவையான வறுவல் தயார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்