search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "போண்டா மாஸ்டர்"

    • தீ வைத்து கொள்வேன் என ஜெயபால் கூறிவந்துள்ளார்.
    • பெருந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    பெருந்துறை:

    பெருந்துறை காஞ்சிக்கோயில் ரோட்டை சேர்ந்தவர் ஜெயபால் (71). திருமணமாகவில்லை. இவரது அண்ணன் சி வராமன் (74). தங்கை குமுதா (68). தனது அண்ணன் சிவ ராமன் குடும்பத்துடன் வசி த்து வந்த ஜெயபால், அவரு டன் சேர்ந்து தள்ளுவண்டியில் போண்டா, பஜ்ஜி வியாபாரம் செய்து வந்தார்.

    திருமணமாகாத விரக்தி யில் இருந்து வந்த ஜெயபால் தினமும் மது அருந்தி வந்து ள்ளார். அதுகுறித்து தங்கை குமுதா ஏதாவது கேட்டால் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து கொள்வேன் என ஜெயபால் கூறிவந்துள்ளார்.

    இந்த நிலையில் சம்பவத்தன்று வழக்கம்போல கடையை திறக்க சென்றவர் திடீரென மண்ணெண்ணெய்யை தன் மீது ஊற்றி தீவைத்து கொண்டதாக தெரிகிறது.

    அப்போது அந்த வழியாக சென்றவர்கள் தீயை அணைத்து அவரை மீட்டு பெருந்துறை அரசு மருத்து வக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

    அங்கு அவரை பரிசோதித்த டாகடர் வரும் வழியிலேயே ஜெயபால் இறந்து விட்டதாக தெரிவித்தார். இது குறித்து பெருந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • சத்தியமங்கலம் பவானி ஆற்றங்கறையில் இருந்தபோது பாண்டுரங்கன் திடீரென மயங்கி விழுந்தார்.
    • அவரை சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் கோட்டுவீராம்பாளையம் முனியப்பன் கோவில் தெருவை சேர்ந்தவர் பாண்டுரங்கன் (61). இவருக்கு திருமணம் ஆகி ஒரு மகன் உள்ளார்.

    பாண்டுரங்கன் சத்தியமங்கலம் அடுத்த ரங்கசமுத்திரம் பகுதியில் ஒரு டீக்கடையில் போண்டா மாஸ்டராக வேலை பார்த்து வருகிறார். குடும்பத்தினருடன் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக கடந்த 13 வருடமாக பாண்டுரங்கன் தனியாக வசித்து வருகிறார்.

    இந்நிலையில் கடந்த 4 மாதமாக அவர் உடல்நிலை சரியில்லாமல் இருந்து வந்தார். சம்பவத்தன்று இரவு சத்தியமங்கலம் பவானி ஆற்றங்கறையில் இருந்தபோது திடீரென மயங்கி விழுந்தார்.

    உடனே அங்கிருந்தவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் அவரை சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே பாண்டுரங்கன் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இது குறித்து சத்தியமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து நடத்தி வருகின்றனர்.

    ×