search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "போக்குவரத்து பாதிப்பு"

    பாலத்தில் இருந்த வேகத்தடை மீது ஏறி இறங்கிய டிரெய்லர் லாரி சாலையிலிருந்த பள்ளத்தில் விழுந்தது.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பில் இருந்து இட்டாச்சி வாகனத்தை ஏற்றிக் கொண்டு டிரெய்லர் லாரி இன்று காலை பண்ருட்டிக்கு புறப்பட்டது. இந்த லாரி சென்னை - கும்பகோணம் - தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில் வடலூர் அருகே உள்ள மருவாய் பரவனாற்று பாலத்தின் மீது இன்று காலை 11 மணியளவில் வந்தது.அப்போது பாலத்தில் இருந்த வேகத்தடை மீது ஏறி இறங்கிய டிரெய்லர் லாரி சாலையிலிருந்த பள்ளத்தில் விழுந்தது. இதில் டிரெய்லர் லாரியில் ஏற்றி வந்த இட்டாச்சி வாகனம், லாரியிலிருந்து துள்ளி குதித்து அந்தரத்தில் தொங்கியது.

    இதனால் லாரி ஒரு பக்கமாக சாய்ந்து பாலத்தில் வேறு எந்த வாகனமும் செல்லமுடியாதபடி பழுதாகி நின்றது. இதையடுத்து அந்த சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு சென்னை, கும்பகோணம், தஞ்சாவூர், வேலூர், சேலம் செல்லும் வாகனங்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கியது.இது குறித்து தகவல் அறிந்த வடலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று டிரெய்லர் லாரியை அப்புறப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    • எதிர்பாராத விதமாக அறுந்து, அங்கு விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்கள் மீது விழுந்துள்ளது.
    • ஜக்காம் பேட்டையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    விழுப்புரம்:

    மயிலம் அருகே உயர் மின்ன ழுத்த கம்பி அறுந்து விழுந்ததில் சிறுவன் உயிரி ழந்த நிலையில், மற்றொரு சிறுவன் படுகாய மடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். திண்டிவனம் அடுத்த மயிலம் அருகே உள்ள வேங்கை கிராமத்தைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் யுவனேஸ்வரன்(4).அதே பகுதியை சேர்ந்த ராஜா மகன் நித்திஷ்(4), உள்ளிட்ட 4 சிறுவர்கள் இன்று காலை வீட்டின் அருகே உள்ள வயல்வெளி பகுதியில் விளையாடிக் கொண்டி ருந்தனர். அப்போது அப்பகுதியில் சென்ற உயர் மின்னழுத்த கம்பி எதிர்பாராத விதமாக அறுந்து, அங்கு விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்கள் மீது விழுந்துள்ளது. இதில் யுவனேஸ்வரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற மயிலம் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் காயமடைந்த நித்திஷ் திண்டிவனம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் காலை 7.30 மணியளவில் நடைபெற்ற சம்பவம் குறித்து, அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் மின்வாரிய அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். ஆனால் இதுவரை மின் ஊழிய அலுவலர்கள் சம்பவ இடத்திற்கு செல்லவில்லை என கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த சிறுவனின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள், ஜக்காம்பேட்டையில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் சென்று தகவல் தெரிவித்துள்ளனர். அப்போது மின்வாரிய ஊழியர்களுக்கும் பொது மக்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டதால், ஆத்திரமடைந்த பொதுமக்கள் சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலை ஜக்காம் பேட்டையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த டிஎஸ்பி சுரேஷ் பாண்டியன் மற்றும் மயிலம் போலீசார் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதனால் போராட்டம் கைவிடப்பட்டது. மேலும் இந்த சாலை மறியல் போராட்டத்தால் சுமார் 30 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    • சத்தம் கேட்டு அக்கம் பக்கம் உள்ளவர்கள் ஒடிவந்தனர்.
    • ஆற்றில் மாயமான வாலிபர்களை உடனே மீட்க வேண்டும் என்று கோஷமிட்டனர்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் அருகே பேரங்கியூர் கிராமத்தை சேர்ந்தவர்கள் சதீஷ் (வயது30), செந்தல்(30). இவர்கள் 2 பேரும் நேற்று மாலை பிடாகம் தென்பெண்ணை ஆற்றில் குளிக்க சென்றனர். குளித்து கொண்டிருந்த போது 2 பேரும் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டனர். இதனால் அவர்கள் கூச்சல் போட்டனர். சத்தம் கேட்டு அக்கம் பக்கம் உள்ளவர்கள் ஒடிவந்தனர். அவர்கள் 2 பேரையும் மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் கிராம மக்களால் மீட்க முடியவில்லை. இதுபற்றி விழுப்புரம் தாலுகா போலீஸ் நிலையம், தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் விரைந்து சென்று 2 வாலிபர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் அவர்களால் 2 பேரையும் கண்டு பிடிக்கப்படவில்லை. இரவு நேரமாகியும் 2 பேரையும் கண்டு பிடிக்கப்படவில்லை.

    இந்த தகவல் கிராமம் முழுவதும் பரவியது. இதனால் அவர்கள் ஆவேசம் அடைந்தனர். இன்று காலை பேரங்கியூர் ஒன்று திரண்டனர். அவர்கள் ஆற்று முகப்பில் உள்ள திருச்சி- சென்னை சாலையில் அமர்ந்த மறியல் செய்தனர். இதனால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. உடனே பஸ் போக்குவரத்து மாற்று வழியாக திருப்பி விடப்பட்டது. தகவல் அறிந்த போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் செல்வ ராஜ், காமராஜ், சப்-இன்ஸ்பெக்டர்கள் பிரபு, ஆனந்தன் ஆகியோர் விரைந்தனர். முன்னாள் எம்.எல்.ஏ. குமரகுருவும் அங்கு விரைந்தார். அப்போது கிராம மக்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினார். ஆற்றில் மாயமான வாலிபர்களை உடனே மீட்க வேண்டும் என்று கோஷமிட்டனர். இதுபற்றி அறிந்த தாசில்தார் பாஸ்கரன் விரைந்து சென்று உரிய நட வடிக்கை எடுக்கப்படும். இளைஞர்களை மீட் கும்பணி துரிதப்படுத்தப் படும் என்று தெரிவித்தார். இதனை தொடர்ந்து மறி யல் கைவிடப்பட்டது.

    ×