search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பொரியல் தட்டை"

    • கிடைக்கும் தண்ணீரை பொறுத்தும், நல்ல விலை கிடைக்கும் சீசன்களை இலக்காக வைத்து நடவு பணிகளை மேற்கொள்கின்றனர்
    • அதிக நோய்த்தாக்குதலும் இச்சாகுபடியில் ஏற்படுவதில்லை

    உடுமலை,ஜூலை.17-

    உடுமலை சுற்றுப்பகுதிகளில் கிணற்றுப்பாசனத்துக்கு, பல்வேறு காய்கறி சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது. இந்தாண்டு கோடை கால மழை போதிய அளவு பெய்யாமல், நிலத்தடி நீர் மட்டம் குறைந்துள்ளது.

    கிடைக்கும் தண்ணீரை பொறுத்தும், நல்ல விலை கிடைக்கும் சீசன்களை இலக்காக வைத்து நடவு பணிகளை மேற்கொள்கின்றனர். அவ்வகையில் கேரளாவில், பொரியல் தட்டைக்கு நல்ல வரவேற்பு உள்ளது. எனவே, குறைந்த தண்ணீர் வசதியுள்ள பகுதிகளில் இச்சாகுபடியை ஆண்டு முழுவதும் மேற்கொள்கின்றனர்.

    தற்போது கோட்டமங்கலம், மைவாடி உள்ளிட்ட பல பகுதிகளில் பரவலாக இச்சாகுபடி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    இது குறித்து விவசாயிகள் கூறியதாவது:-

    இப்பகுதியில் விளையும் பொரியல் தட்டை, கேரளா மாநிலம் பாலக்காடு, மூணாறு, மறையூர் போன்ற பகுதிகளுக்கு அதிகளவு விற்பனைக்கு கொண்டு செல்லப்படுகிறது.நடவு செய்து செடிகளுக்கு 50 நாட்கள் ஆன பிறகு காய்களை குறிப்பிட்ட இடைவெளி விட்டு அறுவடை செய்யலாம்.ஏக்கருக்கு சராசரியாக 100 முதல் 150 கிலோ வரை ஒரு பறிப்பில் கிடைக்கும். அதிக நோய்த்தாக்குதலும் இச்சாகுபடியில் ஏற்படுவதில்லை.கடந்தாண்டு போதிய விலை கிடைக்கவில்லை. ஓணம் பண்டிகை சீசனில் நல்ல விலை கிடைக்க வாய்ப்புள்ளது.

    முக்கிய சீசனில் கேரளா வியாபாரிகள் நேரடியாக விளைநிலங்களுக்கு வந்து கொள்முதல் செய்து கொள்வதால் விற்பனை சந்தை பிரச்னையும் இல்லை. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர் 

    • ஒரே வகையான சாகுபடியை மேற்கொள்ளாமல், சந்தை வாய்ப்புகள் அடிப்படையில், மாற்று சாகுபடியையும் சில விவசாயிகள் மேற்கொள்கின்றனர்.
    • கடந்த சில ஆண்டுகளாக, பொரியல் தட்டை சாகுபடிக்கு உடுமலை பகுதி விவசாயிகளிடையே ஆர்வம் அதிகரித்துள்ளது

    குடிமங்கலம் :

    உடுமலை, குடிமங்கலம், மடத்துக்குளம் வட்டாரத்தில், கிணற்றுப்பாசனத்துக்கு ஆண்டு முழுவதும், தக்காளி, கத்தரி உள்ளிட்ட சாகுபடிகள் மேற்கொள்ளப்படுகிறது.தொடர்ச்சியாக ஒரே வகையான சாகுபடியை மேற்கொள்ளாமல், சந்தை வாய்ப்புகள் அடிப்படையில், மாற்று சாகுபடியையும் சில விவசாயிகள் மேற்கொள்கின்றனர்.அவ்வகையில் கடந்த சில ஆண்டுகளாக, பொரியல் தட்டை சாகுபடிக்கு உடுமலை பகுதி விவசாயிகளிடையே ஆர்வம் அதிகரித்துள்ளது.கேரளாவில், அவியல், பொரியல், கூட்டு என பொரியல் தட்டை உணவில் அதிகளவு பயன்படுத்தப்படுகிறது.எனவே இப்பகுதிகளில் விளையும் பொரியல் தட்டை, கேரள மாநிலம் மூணாறு, மறையூர் மற்றும் பாலக்காடு பகுதிகளுக்கு, விற்பனைக்கு செல்கிறது.முக்கிய சீசனின் போது கேரள மாநில வியாபாரிகள் விளைநிலங்களுக்கு நேரடியாக வந்து, கொள்முதல் செய்கின்றனர்.

    இது குறித்து விவசாயிகள் கூறியதாவது:-

    பொரியல் தட்டை அனைத்து வகை நிலங்களிலும், அனைத்து பருவத்திலும் சாகுபடி செய்யலாம். குளிர் சீதோஷ்ண நிலை உள்ள உடுமலை சுற்றுப்பகுதிகளில் நல்ல மகசூல் கிடைக்கிறது.விதைப்பு செய்த, 50வது நாள் முதல் காய்கள் தினமும் பறிக்கலாம். நாள்தோறும் ஏக்கருக்கு 100 முதல் 150 கிலோ வரை மகசூல் கிடைக்கிறது.ஏக்கருக்கு 15 ஆயிரம் ரூபாய் வரை செலவாகிறது. 10 டன் வரை மகசூல் கிடைக்கிறது.கேரளா மட்டுமல்லாது உள்ளூரிலும், சந்தை வாய்ப்புகளை ஏற்படுத்தி கொடுத்தால் அனைத்து சீசன்களிலும் பொரியல்தட்டைக்கு நிலையான விலை கிடைக்கும்.இதே போல், தோட்டக்கலைத்துறை வாயிலாக சாகுபடிக்கு தேவையான விதைகளை விற்பனை செய்தால் பயனுள்ளதாக இருக்கும்.இவ்வாறு விவசாயிகள் தெரிவித்தனர்.

    ×