search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பேட்டை"

    • அனவரத சுந்தர விநாயகர் கோவில் தெருவில் கிழக்கு பகுதியில் அகலமான கழிவு நீரோடை உள்ளது.
    • எல்.ஐ.சி காலனியில் அமைந்துள்ள பூங்காவில் வேலைகள் முடிந்தும் மக்களின் பயன்பாட்டுக்கு வரவில்லை.

    நெல்லை:

    நெல்லை மாநகராட்சி அலுவலக கூட்ட அரங்கில் இன்று வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்துக்கு மேயர் சரவணன் தலைமை தாங்கினார். துணை மேயர் ராஜூ முன்னிலை வகித்தார். தொடர்ந்து ஏராளமான பொதுமக்கள் மனு அளித்தனர்.

    கழிவுநீரோடை

    நெல்லை மாநகராட்சி 16-வது வார்டுக்கு உட்பட்டது பேட்டை அனவரத சுந்தர விநாயகர் கோவில் தெரு. இந்த தெருவில் கிழக்கு பகுதியில் அகலமான கழிவு நீரோடை உள்ளது. ஆனால் அதனை மூடி போட்டு மூடாமல் திறந்த நிலையில் காட்சியளிக்கிறது. இதனால் அந்த பகுதியில் கழிவு நீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகும் நிலை உருவாகியுள்ளது.

    எனவே அந்த பகுதியில் காங்கிரீட் மூடி அமைத்து சுகாதார சீர்கேடு இல்லாமல் பாதுகாத்து தர வேண்டும் என்று மக்கள் நீதி மையம் கட்சியின் நெல்லை மத்திய மாவட்ட துணைச் செயலாளர் மாரிராஜா தலைமையில் வட்ட செயலாளர்கள் வீரராகவன், தங்கவேல் மற்றும் நிர்வாகிகள் கந்தசாமி, இசக்கியப்பன், சுப்புராஜ் ஆகியோர் மனு அளித்தனர்.

    பூங்கா

    நெல்லை மாநகராட்சிக்குட்பட்ட 54- வது வார்டு தியாகராஜ நகர் எல்.ஐ.சி காலனியில் அமைந்துள்ள பூங்காவில் வேலைகள் முடிந்து இன்னும் மக்களின் பயன்பாட்டுக்கு வரவில்லை. இந்த பூங்காவை பயன்பாட்டுக்கு கொண்டு வந்தால் சிறுவர்கள், வயதானவர்கள் நடைப்பயிற்சி மேற்கொள்ளவும், விளையாடவும் பயன்படுத்திக் கொள்ள விரைவில் அதனை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு சைவ வேளாளர் சங்கத்தினர் மனு அளித்தனர்.

    இந்த கூட்டத்தின் போது கவுன்சிலர்கள் நித்திய பாலையா, சுந்தர், மாநகர நல அலுவலர் டாக்டர் சரோஜா, உதவி கமிஷனர் காளிமுத்து, உதவி செயற்பொறியாளர்கள், மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • பேட்டையில் மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் நந்தீஸ்வரனை வெட்டினர்.
    • நந்தீஸ்வரன் சிகிச்சைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.

    நெல்லை:

    நெல்லை பேட்டையை அடுத்த சத்யா நகரை சேர்ந்தவர் அழகுமலை. இவரது மகன் நந்தீஸ்வரன்(வயது 22). இவர் அங்குள்ள காலனியில் நேற்று இரவு நின்று கொண்டிருந்தார்.

    அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம நபர்கள் கண்ணிமைக்கும் நேரத்தில் நந்தீஸ்வரனை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி சென்றனர்.

    இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்த அவர் சிகிச்சைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.

    இதுதொடர்பாக அவர் அளித்த புகாரின்பேரில் பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்கள் 2 பேரையும் தேடி வருகின்றனர்.

    • பேட்டை செக்கடி அருகே சிவபாலா மற்றும் அவரது நண்பர்கள் நள்ளிரவில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர்.
    • அப்போது ஏற்பட்ட கைகலப்பில் சிவபாலா மற்றும் சந்தணகுமார் ஆகியோருக்கு காயம் ஏற்பட்டது.

    நெல்லை:

    நெல்லையை அடுத்த பேட்டை செக்கடி அருகே அதே பகுதியை சேர்ந்த சிவபாலா மற்றும் அவரது நண்பர்கள் பூபதி, செல்வம், மாடசாமி உள்பட 6 பேர் நேற்று நள்ளிரவில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர்.

    அப்போது அந்த வழியாக திருத்து சாலையில் அதே பகுதியை சேர்ந்த சந்தண குமார் மற்றும் அவரது நண்பர்கள் சொர்ணராஜ், சுந்தரம், இஸ்மாயில், பரமசிவம், மாரி செல்வம் ஆகியோர் மோட்டார் சைக்கிளில் வேகமாக சென்றதாக கூறப்படுகிறது.

    இதுதொடர்பாக 2 தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஒருவரையொருவர் தாக்கி கொண்டனர். அப்போது ஏற்பட்ட கைகலப்பில் சிவபாலா மற்றும் சந்தணகுமார் ஆகியோருக்கு காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள் நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இதுதொடர்பாக 2 தரப்பையும் சேர்ந்த 11 பேர் மீது பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×