search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பெற்றோர்"

    • குமரி கலெக்டர் - போலீஸ் சூப்பிரண்டு உறுதிமொழியை ஏற்றனர்
    • திராவகம் கலந்த குளிர்பானம் விவகாரத்தில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை தீவிரம்

    கன்னியாகுமரி:

    களியக்காவிளை அருகே உள்ள மெதுகும்மல் நுள்ளிக் காடு பகுதியைச் சேர்ந்தவர் சுனில். இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த நிலையில், அவரது மனைவி மற்றும் மகன் அஸ்வின் (வயது 10) ஆகியோர் இங்கு வசித்து வந்தனர்.

    அதங்கோடு பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்த அஸ்வின், கடந்த 24-ந் தேதி பள்ளி முடிந்து வீடு திரும்பிய போது உடல்நலக்குறைவு ஏற்பட்டது. ஆஸ்பத்திரியில் அவனை பரிசோதித்த டாக்டர்கள், திராவகம் கலந்த ஏதோ ஓன்றை குடித்ததால் தான் அஸ்வினுக்கு பாதிப்பு ஏற்பட்டு இருப்பதாக தெரிவித்தனர்.

    இது தொடர்பாக அஸ்வினிடம் கேட்ட போது, பள்ளி முடிந்து வீடு திரும்பும் போது, பள்ளிச் சீருடை அணிந்து வந்த ஓருவர் குளிர்பானம் கொடுத்ததாக கூறினான். அதனை கொடுத்தது யார் என போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில், ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி கடந்த 17-ந் தேதி அஸ்வின் பரிதாபமாக இறந்தான்.

    இதனைத் தொடர்ந்து ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனைக்கு பிறகு அஸ்வின் உடலை அவரது பெற்றோரிடம் போலீசார் ஓப்படைத்தனர். ஆனால் அவர்கள் உடலை வாங்க மறுத்தனர். குளிர்பானத்தில் திராவகம் கலந்து கொடுத்த வரை கைது செய்ய வேண்டும். அதுவரை உடலை வாங்க மாட்டோம் என அஸ்வினின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதற்கிடையில் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசாரின் விசாரணைக்கு மாற்றப்பட்டது. அவர்கள் சம்பந்தப்பட்ட பள்ளிக்குச் சென்று விசாரணை நடத்தினர். இந்த நிலையில் மாணவன் அஸ்வினின் பெற்றோர் மற்றும் உறவினர்களை மாவட்ட கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு ஆகியோர் நேரில் சந்தித்து பேசினர். குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என அவர்கள் உறுதி அளித்தனர்.

    இதனை தொடர்ந்து, உடலை பெற்றுக் கொள்ள அஸ்வினின் பெற்றோர் சம்மதம் தெரிவித்தனர். அதன்பிறகு 6 நாட்களுக்குப் பிறகு நேற்று மாலை அஸ்வின் உடலை உறவினர்கள் பெற்றுக் கொண்டனர்.

    தொடர்ந்து, மெதுகும்மல் பகுதிக்கு உடல் கொண்டு செல்லப்பட்டது. அங்கு இறுதிச்சடங்குக்கு பிறகு அஸ்வின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

    • வீட்டிற்கு போக வழி தெரியாமல் 15 கிலோ மீட்டர் நடந்து தக்கலை வந்துள்ளார்
    • குளிக்க சென்றவர் காணவில்லை

    கன்னியாகுமரி:

    குமரி மாவட்டம் தக்கலை காமராஜர் சிலை அருகே சுமார் 20 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் இடுப்பில் துண்டு மட்டும் கட்டிய நிலையில் சுற்றி வந்துள்ளார்.

    மன நலம் பாதிக்கப்பட்ட வர் போல காணப்பட்ட அந்த வாலிபரை, ஆட்டோ சங்கத்தினர் அழைத்து விசா ரித்தனர். குடும்பத்தினர் குறித்து விசாரித்த போது அந்த வாலிபர் சில விவரங்களை தெரிவித்தார். இதன் மூலம் அந்த வாலிபர் வழி தவறி வந்ததும் தெரியவந்தது.

    இதுபற்றி எழுத்தாளர் சிவனிசதீஷ் 'வாட்ஸ்அப்' மூலம் இளைஞரை பற்றி தகவல் பரப்பப்பட்டது. மேலும் தக்கலை போலீசுக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. இதன் பலனாக சுமார் ஒரு மணி நேரத்துக்குள் வாலிபரின் குடும்பத்தினரை வடசேரி போலீசார் கண்டு பிடித்த னர்.

    நாகர்கோவில் வடசேரி அருகே உள்ள கட்டை யன்விளை பகுதியில் வசித்து வருபவர் அய்யாக்குட்டி. இவரது 2-வது மகன் இசக்கி பாண்டி (வயது 18) என்பவர் தான் தக்கலை பகுதியில் சுற்றித் திரிந்தவர் என தெரியவந்தது.

    அய்யாக்குட்டி பானிபூரி கடை நடத்தி வருவதும் அவருக்குஉதவியாக மகன்கள் இசக்கி ராஜா (23), மற்றும் இசக்கி பாண்டி செயல்பட்டு வந்தனர்.இதில் இசக்கி பாண்டி பிறப்பால் சற்று மனநிலை பாதிக்கப்பட்டவர். நேற்று காலையில் குளிக்க சென்ற அவர், அதன்பிறகு வீட்டிற்கு போக வழி தெரியாமல் இடுப்பில் கட்டிய துண்டு டன் பாதை மாறி சுமார் 15 கிலோ மீட்டர் நடந்து தக்கலை காமராஜர் சிலை பக்கம் வந்துள்ளார் என்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

    தொடர்ந்து தக்கலை வந்த அய்யாக்குட்டியிடம் தக்கலை போலீஸ் நிலைய தலைமை காவலர்களின் முன்னிலையில் பொது மக்கள் இசக்கி பாண்டியை ஒப்படைத்தனர்.

    ×