search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பெண்கள் உடல்நல பிரச்சனை"

    பெண்கள் இருந்த இடத்தை விட்டு அசையாமல் இருக்கச் செய்யும் வீட்டு உபகரணங்கள் மற்றும் வாகனப் பயன்பாடு போன்றவையும் சேர்ந்து, கொழுப்பை அதிகரித்து உடல் நலத்தை பாதிக்கிறது.
    கூடுதல் கொலஸ்ட்ரால் அல்லது கொழுப்பு ஆண், பெண் ஆகிய இருபாலருக்கும் பொதுவானதொரு பிரச்சினையாக இருந்த போதும் பெண்களை பொறுத்தமட்டில் மிக அதிகப்படியான பெண்கள் பாதிக்கப்படுவது கூடுதல் கொஸ்ட்ரால் காரணமாகத் தான். முக்கியமாக சாதாரண மெலிந்த தேகத்துடன் இருக்கும் பெண்கள் கூட, திருமணத்திற்கு பின் எடை அதிகரித்து கூடுதல் உடல் பருமனை பெற்று விடுகிறார்கள்.

    சந்தோஷமான சூழ்நிலை, விசேடமான விருந்து உபசரிப்பு முதலியவை காரணமாக பெண்கள் திருமணத்திற்கு பின் உடல் பருமனை பெறுவது சர்வ சாதாரணமாக நிகழ்ந்து விடுகிறது. இதனை தடுத்துக் கொள்ள முன்னெச்சரிக்கையோடு கூடிய உணவு பழக்கவழக்கங்கள் வைத்துக் கொள்ளுதல் அவசியமாகும். அத்துடன் உடலில் கொழுப்பு சேரக்கூடிய உணவு பதார்த்தங்களை பெரிதும் தவிர்த்தலும் வேண்டும்.

    முதல் பிரசவத்திற்கு முன்பாக உடல் பருமன் அதிகமாவதால் பெண்கள் பலவிதத்திலும் உடல் ரீதியாக பாதிக்கப்படுகிறார்கள் என்பது மறுக்க முடியாத உண்மையாகும். எனவே திருமணத்திற்கு முன்பும், பின்பும் பெண்கள் ஒரே சீரான உடல் பருமன் கொண்டு விளங்குவதற்கும் ஆரோக்கியமான உடல் நிலையை பெறுவதற்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மிக மிக அவசியமாகும்.

    உணவில் கொழுப்பு அதிகமாக இருப்பது மட்டுமே பிரச்சனை அல்ல. நம் மக்களின் உணவில் அரிசிப் பதார்த்தங்கள், பெரிய வாழைப்பழம், மாம்பழம், இனிப்பு போன்ற மாவுச்சத்து அதிகமாக இருப்பதும் இதற்குக் காரணமாகலாம். கொழுப்பு உடலுக்கு சக்தியையும் சூட்டையும் தருவது மட்டுமல்ல. சிறு உறுப்புகளையும் நரம்புகளையும் பாதுகாக்கும் உறைகளுக்கும் அவசியம்.

    விட்டமின்கள் A, D, E, K போன்ற முக்கியமான விட்டமின்கள் கொழுப்பில் கரையக் கூடியவை. இதனாலும், கொழுப்பு மிக முக்கியமானது. அட்ரீனல் மற்றும் இனப்பெருக்க ஹார்மோன்களுக்கும் கொழுப்பு அமிலங்கள் மிக முக்கியமானவை.



    கொழுப்பில் கரையும் விட்டமின்களை விட்டமின் D என்று கூறுவார்கள். இவை குறைந்தால் பலவித சரும நோய்கள், பித்தப்பை கல், தலைமுடி உதிர்தல், வளர்ச்சி குறைவு, மலட்டுத்தன்மை, சிறுநீரக ப்ராஸ்டேட் மற்றும் மாதவிடாய் பிரச்சனைகள் உருவாகும்.

    குடலில் விட்டமின் B உருவாவதற்கும் கொழுப்புச்சத்து அவசியம். மூளையின் நினைவாற்றலுக்கும் கொழுப்பு மூலக்கூறுகள் முக்கியம்.

    ஆனால் இவை எப்போதும் கட்டுபாட்டில் வைக்கப்பட வேண்டியதும் அவசியமாகின்றது, ஏனென்றால் அதிகப் படியான கொழுப்பு சேரும் போது அது தொடர்பான பலவித உடல் உபாதைகளும் தொற்றிக் கொள்ளும். ஒருவரது உணவில் 65% மாவுச்சத்தும் 25% புரதச்சத்தும் 5-10% கொழுப்புச்சத்தும் இருந்தாலே போதுமானது. இவற்றோடு, காய்கறிகள், பழம், பருப்பு (Nuts) என இருப்பதையே சமச்சீர் உணவு என்கிறோம்.

    துரித உணவு (Fast Food), வாரக் கணக்கில் குளிர்சாதனப் பெட்டியில் கெட்டுப்போகாமல் இருக்கும்படி தயாரிக்கப்படும் உணவு (Frozen Food), ஹொட்டேல் உணவுபோலவே வீட்டுச் சமையலில் எண்ணெய் அதிகமாக்கி வறுத்தவை (Fried food), அதிகம் பொரித்த உணவுகள் (Deep Fried Food), நெய்யும் இனிப்பும் அதிகமுள்ள உணவுகள் ஆகியவையும் கூட, இப்போது பாரம்பரிய உணவுமுறையிலும் ஊடுருவி விட்டது.

    இருந்த இடத்தை விட்டு அசையாமல் இருக்கச் செய்யும் வீட்டு உபகரணங்கள் மற்றும் வாகனப் பயன்பாடு போன்றவையும் சேர்ந்து, கொழுப்பை அதிகரித்து உடல் நலத்தை பாதிக்கிறது.

    ஒவ்வொரு நாள் உணவிலும் 5 சத விகிதம் கொழுப்பு, நிறைய காய்கறிகள், குறைவான அளவில் பழம் ஆகியவை அவசியம். மிகக்குறைவான ஆல்ஹகால் மற்றும் தவிர்க்கப்பட்ட புகைப்பழக்கம் ஆகியவை நல்லது. எடை குறைப்பு மற்றும் ரத்தக்கொ திப்பு, சர்க்கரை நோய், சரியான கட்டுப்பாடு என்பது மிக அவசியம்.

    நோய் என்று வருமுன்பே பூமியிலே கால் பதியுங்கள். சுத்தமான காற்றைச் சுவாசித்து, மற்ற மனிதர்களையும் நேரில் கண்டு, உடற்பயிற்சி செய்யுங்கள். உடல் அசைவே உயிர்! இது உடற்பயிற்சியினால் மட்டுமே சாத்தியம். உணவினாலோ, மருந்தின் மூலம் மட்டுமோ சாத்தியமில்லை!
    புகை பழக்கம் பெண்களிடமும் அதிவேகமாக பரவிவருவதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. புகைபிடித்தல் பற்றி பெண்களுக்கு விழிப்புணர்வுகள் தருவது மிகவும் நல்லது.
    இன்றைய காலகட்டத்தில் பெண்கள் புகைபிடித்தல் என்பது நாகரிகம் என்றும், கவலையில் இருந்து ரிலாக்ஸ் ஆக இருப்பதாக எண்ணமும் பெண்கள் மத்தில் பரவி வருகிறது. இது கவலையளிக்கூடிய சம்பவம் ஆகும். தன்னையும் அழித்துக்கொண்டு பிறரையும் அழிப்பதுதான் இன்றைய வாழ்க்கையா?

    புகை பழக்கம் பெண்களிடமும் அதிவேகமாக பரவிவருவதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. புகைபிடித்தல் பற்றி பெண்களுக்கு விழிப்புணர்வுகள் தருவது மிகவும் நல்லது.

    ஒரு சிகரெட்டில் 4000 வகையான வேதிப்பொருட்கள் இருக்கின்றன. இவற்றில் பாதிக்கு மேல் மோசமான வேதிப்பொருட்கள் ஆகும். புகை பிடிப்பதனால் புற்றுநோய்க் கூட ஏற்படும். புகை பிடிப்பதால் மூச்சி எடுக்கும், மயக்கம் வரும், இருமல் வரும். தொடர்ந்து புகைப்பதனால் உடல் எதிர்ப்புசக்தியை இழந்து மாரடைப்பு, பக்கவாதம் வருவதற்கான வாய்ப்பு அதிகம். ஏன் மரணம் கூட ஏற்படலாம்.

    கார்பன் மோனாக்சைடு உடலில் செல்லுவதால் இதயமும் கடுமையாக பாதிக்கப்பட்டு நுரையீரலுக்கு மற்றும் கை கால்களுக்கு தேவையான ஆக்சிஜன் கிடைக்காது. இதனால் நுரையீரல், இதயச் செயலிழப்பு ஏற்படலாம் மேலும் உடலில் ஊனமும் ஏற்படலாம்.

    சிகரெட் புகையால் ஏற்படும் பாதிப்புகள்:

    * வாய், தொண்டை, உணவுக் குழாய்களில் புற்றுநோய் ஏற்பட வழி வகுக்கிறது.

    * புகை பிடிப்பவர்களுக்கு மூளை மங்கி விடுதல்.

    * புகை பிடிப்பவர்களுக்கு புற்றுநோய், வாய் கேன்சர் அதிகம் ஏற்படுகிறது.



    * புகை பிடிப்பதனால் மூச்சி வங்கும், மயக்கம் வரும், இருமல் போன்ற நிலைகள் ஏற்படும்.

    * புகை பிடிப்பதனால் மாரடைப்பு, பக்கவாதம் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

    * புகை பிடிப்பதனால் நுரையீரல் பாதிப்படைகிறது.

    * புகை பிடிப்பதனால் இதயச் செயலிழப்பு நிலையடைகிறது.

    * உடலில் நோய் எதிர்ப்பு தன்மை குறைவதால் தொற்று நோய்கள் வந்தால் எளிதில் தீராது.

    * கார்பன் மோனாக்சைடு உடலில் செல்லுவதால் இதயமும் கடுமையாக பாதிக்கப்பட்டுகிறது.

    * புகை தன் உயிரைக் கெடுக்கும் அடுத்தவன் உயிரையும் கெடுக்கும்.

    * முடிந்தவரை புகை பழக்கத்தை குறைத்து கொள்வது நல்லது.

    * புகை பிடிப்பவரின் அருகில் இருந்து தள்ளி இருப்பது நன்மை தரும்.

    * முக்கியமாக இளம் பெண் சமுதாயத்தை புகை பழக்கத்தில் இருந்து பாதுகாக்க வேண்டியது

    * பெண்கள் புகை பழக்கத்துக்கு அடிமையாகி தன்னை அழிப்பது இன்றி குழந்தைகளையும் அழிக்கின்றனர்.

    * கருவறை குழந்தைக்கு ஆபத்து புகைபிடிக்கும் பெண்கள் பிரசவத்தில் பாதிப்புக்கு உள்ளாகிறார்கள்.

    * அதுமட்டுமின்றி வயிற்றில் வளரும் குழந்தைகளுக்கும் வளர்ச்சி குறைந்து விடுகிறார்கள்.

    * பெண்களுக்கு குறைபிரசவம் எடை குறைந்த ரத்த சோகை போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.

    நம்மையும், நம்மை சுற்றி இருப்பவர்களை பலியாக்கும் புகையிலை பழக்கத்தை கைவிடுவோம் என்று உலக புகையிலை ஒழிப்பு தினமான இன்று சபதம் ஏற்போம்.
    கர்ப்ப காலத்தில் மிகமிக அவசியமான சத்துக்களில் முதன்மையானது இரும்புச்சத்து. கர்ப்ப காலத்தில் இரும்புச்சத்து குறையாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது மிக முக்கியம்.
    கர்ப்ப காலத்தில் மிகமிக அவசியமான சத்துக்களில் முதன்மையானது இரும்புச்சத்து. கர்ப்ப காலத்தில் இரும்புச்சத்து குறையாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது மிக முக்கியம். அதனால்தான் கர்ப்பம் உறுதியானதும் மருத்துவர்கள் ரத்தப் பரிசோதனை செய்து ஹீமோகுளோபின் அளவை சரிபார்த்து அதற்கேற்ப இரும்புச்சத்து மாத்திரைகளைப் பரிந்துரைக்கிறார்கள். இதன் மூலம் கர்ப்பத்திலிருக்கும் குழந்தைக்கும், அதைச் சுமக்கும் தாய்க்கும் இரும்புச்சத்துக் குறைபாட்டினால் ஏற்படுகிற எந்த பாதிப்பும் வந்துவிடாமல் தடுக்கப்படும்.

    * முதல் கட்டமாகக் குழந்தையின் வளர்ச்சி பெருமளவில் பாதிக்கப்படும்.
    * குறைப்பிரசவம் நிகழலாம்.
    * கர்ப்பத்தில் சிக்கல் வரலாம்.
    * குழந்தை எடை குறைவாகப் பிறக்கலாம். பிறந்த பிறகும் அதன் நோய் எதிர்ப்புத் திறன் வெகுவாகப் பாதிக்கப்படலாம்.
    * பிறந்த குழந்தைக்கும் ரத்தசோகை தாக்கலாம்.

    பிரசவத்தின் போதும் பெண்ணுக்குப் பெரிய அளவில் ரத்த இழப்பு ஏற்படும் என்பதால் அதன் பிறகும் ரத்த சோகைக்கு வாய்ப்புகள் அதிகம். அரிதாக பிரசவத்தின்போது தாய் உயிரிழக்கவும் நேரலாம். எனவே, கர்ப்பத்தை எதிர்நோக்கும் நாட்களிலிருந்தே ரத்தசோகை அண்டாமலிருப்பதற்கான வழிகளை மேற்கொள்ள வேண்டும்.

    என்ன செய்ய வேண்டும்?

    கர்ப்பம் உறுதியானதும் மருத்துவர் சொல்கிற பரிசோதனைகளைத் தவறாமல் மேற்கொள்ள வேண்டும். அதில் ஹமோகுளோபின் பரிசோதனையை எக்காரணம் கொண்டும் தவிர்க்கக்கூடாது. பரிசோதனையில் தெரிய வரும் அளவுகளை வைத்து மருத்துவர் கர்ப்பிணிக்கான சப்ளிமென்ட்டுகளைப் பரிந்துரைப்பார். கால்சியம் சப்ளிமென்ட்டும் சேர்த்துப் பரிந்துரைக்கப்படும்போது அது பற்றி மருத்துவரிடம் கேட்டு விளக்கம் பெறலாம்.

    கர்ப்ப கால ரத்த சோகையை வெறும் சப்ளிமென்ட்டுகளால் மட்டுமே சரி செய்துவிட முடியாது. இரும்புச்சத்து, கால்சியம், வைட்டமின் சி சத்துகள் நிறைந்த உணவுகளைப் போதுமான அளவு உட்கொள்ள வேண்டும். தினசரி உணவில் கீரைகள், நட்ஸ், பருப்புகள் போன்றவை இருக்க வேண்டும்.
    சினைப்பை நீர்க்கட்டி ஒரு பெண்ணின் டீன்-ஏஜ் பருவத்திலேயே தொடங்கும் அபாயமும் அதிகரித்து வருகிறது. இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.
    சினைப்பை நீர்க்கட்டிகள் உடைய பெண்களுக்கு, ஆண் ஹார்மோன்கள் சுரப்பு அதிகமாக இருக்கும். இதன் எதிரொலியாக முறையற்ற மாதவிடாய் சுழற்சி, தேவையற்ற இடங்களில் ரோம வளர்ச்சி மற்றும் முகப்பரு போன்றவை ஏற்படுகிறது. இந்த சினைப்பை நீர்க்கட்டி ஒரு பெண்ணின் டீன்-ஏஜ் பருவத்திலேயே தொடங்கும் அபாயமும் அதிகரித்து வருகிறது.

    PCOS சில அறிகுறிகள்:

    * முறையற்ற மாதவிடாய் சுழற்சி (45 நாட்கள் அல்லது அதற்கும் மேல் மாதவிடாய் இல்லாமல் இருப்பது அல்லது ஒரு வருடத்தில் 8 முறைக்கும் குறைவாக மாதவிடாய் சுழற்சி)

    * சினைப்பை சற்று பெரிதாக (தொகுதி பெரும்பாலும் (>10cc) காணப்படும் மற்றும் பல சிறிய கட்டிகள் இருக்கலாம். அல்ட்ரா சவுண்ட் மூலம் இதை அறியலாம்.

    * முகம் அல்லது உடலின் மற்ற பகுதிகளில் அதிக ரோம வளர்ச்சி

    * முகப்பரு

    * எடை அதிகரித்தல் (முக்கியமாக வயிற்றுப் பகுதியில்) மேலும் எடை குறைப்பதில் கடினம்.

    * கழுத்து மற்றும் பிற பகுதிகளில் கருந்திட்டுகள் ஏற்படுவது (dark skin patches).

    * இடுப்பு வலியோடு மன அழுத்தம்.

    மேலே குறிப்பிட்டுள்ளவற்றில் சில அறிகுறிகளோ அல்லது அனைத்து அறிகுறிகளும் இருந்தால், PCOS பாதிப்பு இருக்கும் வாய்ப்பு அதிகம் உள்ளதால் மருத்துவரை உடனடியாக அணுக வேண்டும்.



    PCOS எதனால் ஏற்படுகிறது?

    PCOS என்பது சினைப்பை மற்றும் மூளைப் பகுதியில் இருக்கும் ஹார்மோன்களின் சமநிலையின்மையால் ஏற்படுகிறது. குறிப்பாக, பிட்யூட்டரி சுரப்பியிலிருந்து சுரக்கும் Luteinizing hormone அல்லது கணையத்தில் இருந்து சுரக்கும் இன்சுலின் சராசரி அளவை விட அதிகமாக இருப்பின் அது சினைப் பையில் அதிக அளவு டெஸ்டோஸ்டிரோன் என்கிற ஆண் ஹார்மோன்கள் சுரக்க காரணமாகிறது.

    மரபணுக்களும் கூட இதில் முக்கியப்பங்கு வகிக்கிறது. அம்மாவுக்கோ அல்லது சகோதரிக்கோ PCOS இருந்தால் அந்தக் குடும்பத்தில் மற்றவருக்கும் வருவதற்கான சாத்தியங்கள் அதிகம் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். PCOS-க்கு சிகிச்சை பொதுவாக PCOS-க்கு கருத்தடை மாத்திரைகள், ஹார்மோன் சிகிச்சை பரிந்துரைக்கப்படலாம். உங்கள் மருத்துவரிடம் ஆலோசனை செய்வது மிக அவசியமானது.

    * ஹார்மோன் சமநிலைபடுத்துதல்

    * டெஸ்டோஸ்டிரோன் அளவை குறைத்தல்.

    * மாதவிடாய் முறைப்படுத்துதல்

    * உங்கள் இன்சுலின் அளவை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருதல்.

    * உடல் எடையைக் குறைத்தல் ஆயிவற்றை பரிந்துரை செய்வார்கள்.
    நீரிழிவு, சிறுநீர் பாதை தொற்று, கர்ப்பிணிப் பெண்களுக்கு கர்ப்ப காலத்தில், புரோஸ்டேட் பிரச்சனைகள் போன்றவற்றின் காரணமாக அடிக்கடி சிறுநீர் கழிக்க நேரிடலாம்.
    இரத்தத்தில் கால்சியம் அதிகளவு கலந்திருந்தாலும் கூட பெண்களுக்கு அடிக்கடி சிறுநீர் கழியும். ஓர் நாளுக்கு சராசரியாக 4 முதல் 8 முறை சிறுநீர் கழிப்பது இயல்பானது. ஆனால், இந்த எண்ணிக்கைக்கு அதிகமாக அடிக்கடி சிறுநீர் கழித்துக்கொண்டே இருப்பது உடலில் ஏதோ தாக்கம் ஏற்பட்டிருக்கிறது என்பதை வெளிக்காட்டும் அறிகுறியாக தான் எடுத்துக் கொள்ள வேண்டும்.

    நிறைய பேர் இதை மிக சாதாரணமாக எடுத்துக் கொள்கின்றனர். ஆனால், அடிக்கடி சிறுநீர் கழிப்பது அபாயகரமான உடல்நலத்தின் அறிகுறியாக கூட இருக்கலாம். இதை உதாசீனப்படுத்துவது பின்னாளில் எதிர்மறை விளைவுகளை சந்திக்க காரணியாக அமையலாம்.

    நீரிழிவு, சிறுநீர் பாதை தொற்று, கர்ப்பிணிப் பெண்களுக்கு கர்ப்ப காலத்தில், புரோஸ்டேட் பிரச்சனைகள் போன்றவற்றின் காரணமாக அடிக்கடி சிறுநீர் கழிக்க நேரிடலாம். மேலும், சிறுநீரக தொற்று, சிறுநீர்ப்பை கற்கள் போன்றவற்றின் கூட இவ்வாறு நிகழலாம் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

    பெண்கள்! கர்ப்ப காலத்தின் போது பெண்களுக்கு கருப்பை பெரிதாகிவிடும். மேலும், சிறுநீர் பையில் அழுத்தம் அதிகரித்து காணப்படும். இதனால், அடிக்கடி சிறுநீர் கழிக்க நேரிடும். இதிலும், இரு வகை இருக்கிறது, சிலருக்கு சிறிதளவு சிறுநீர் கழியும், சிலருக்கு பெருமளவு சிறுநீர் கழியும் எனப்படுகிறது.



    சிறுநீர் பாதை தொற்று, சிறுநீரகத்தில் தொற்று, சிறுநீர் பை அல்லது இடுப்பு பகுதியில் தாக்கங்கள் ஏற்பட்டிருந்தாலும் கூட அடிக்கடி சிறுநீர் வெளியேற்றப்படும். மேலும், இரத்தத்தில் கால்சியம் அதிகளவு கலந்திருந்தாலும் கூட பெண்களுக்கு அடிக்கடி சிறுநீர் கழியும்.

    அடிக்கடி சிறுநீர் கழிக்கும் பிரச்சனை இருந்தால் மருத்துவரிடம் பரிசோதனை செய்துக் கொள்வது அவசியம். ஒருவேளை பயப்படும் அளவிற்கு எந்த பிரச்சனையும் இல்லையெனில், நீங்கள் இயற்கை உணவுகளை உண்டே இதற்கு நல்ல தீர்வுக் காணலாம்.

    மாதுளையின் தோலை நன்கு பேஸ்ட் போல அரைத்து கொள்ளுங்கள். சிட்டிகை அளவு பேஸ்ட்டை சில துளி நீர் கலந்து பருகுங்கள். ஒருநாளுக்கு இருமுறை என ஐந்து நாட்கள் தொடர்ந்து இதை பருகிவந்தால், சிறுநீர் பையின் வெப்பம் குறையும், அடிக்கடி சிறுநீர் கழியும் பிரச்சனைக்கு நல்ல தீர்வளிக்கும்.

    நூறு கிராம் அளவு கொள்ளை வறுத்துக்கொள்ளவும். அதை வெல்லத்துடன் சேர்த்து கலந்து உட்கொள்ளுங்கள். சிறுநீர் பாதை தொற்றுக்கு இது சிறந்த நிவாரணியாக விளங்குகிறது. கொள்ளில் இருக்கும் ஆண்டி-ஆக்ஸிடன்ட்ஸ் சிறந்த மருத்துவ குணம் வாய்ந்தது ஆகும்.

    இந்த இரண்டு வீட்டு மருத்துவ முறையும் பக்கவிளைவுகள் அற்றவை. மேலும், இதை நீங்கள் மிக சுலபமாக வீட்டிலேயே தயாரிக்கலாம்.
    ×