search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பெண் விவகாரம்"

    விருதுநகரில் பழிக்குப்பழியாக கட்டிட தொழிலாளி வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    விருதுநகர்:

    விருதுநகர் மாத்து நாயக்கன்பட்டி ரோடு பகுதியைச் சேர்ந்தவர் சங்கரேசுவரன் (வயது 47), கட்டிட தொழிலாளி. இவர் நேற்று இரவு 10 மணிக்கு வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது 2 மோட்டார் சைக்கிள்கள் அங்கு வேகமாக வந்தன.

    அதில் வந்த 4 பேர், சங்கரேசுவரனை சுற்றி வளைத்தனர். அவர்களை கண்டதும் அதிர்ச்சி அடைந்த அவர் தப்பி ஓட முயன்றார்.

    இருப்பினும் அந்த கும்பல் சங்கரேசுவரனை சுற்றி வளைத்து சரமாரியாக வெட்டியது. இதில் பலத்த காயம் அடைந்த சங்கரேசுவரன் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பலியானார்.

    இந்த கொலை சம்பவம் விருதுநகர் பகுதியில் பதட்டத்தை ஏற்படுத்தியது. சங்கரேசுவரனின் சகோதரர் சுடலைமாடசாமி விருதுநகர் கிழக்கு போலீசில் புகார் செய்தார்.

    போலீசார் விரைந்து சென்று உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். இதில் பழிக்குப்பழியாக கொலை நடந்திருப்பது தெரியவந்தது.

    விருதுநகர் அல்லம் பட்டியைச் சேர்ந்த முத்து காமாட்சி கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெண் விவகாரத்தில் கொலை செய்யப்பட்டார்.

    இது தொடர்பாக சங்கரேசுவரன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். தற்போது அவர் ஜாமீனில் வெளிவந்தார். இந்த நிலையில் தான் முத்துகாமாட்சியின் சகோதரர்கள் பழிக்குப்பழியாக அவரை வெட்டிக் கொலை செய்துள்ளனர்.

    இது தொடர்பாக முத்து காமாட்சியின் சகோதரர்கள், ஐ.சி.ஏ. காலனியைச் சேர்ந்த விக்கி என்ற விக்னேஷ், சேர்மராஜ், அல்லம்பட்டியைச் சேர்ந்த சதீஷ் குமார், மாத்துநாயக்கன் பட்டியைச் சேர்ந்த கீர்த்தி சுவரன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் தேடி வருகின்றனர்.

    ஆட்டோ டிரைவர் கொலையில் ரவுடி உள்பட 3 பேர் சிக்கியதால், அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    நாகர்கோவில்:

    இரணியல் அருகே மேற்கு நெய்யூரைச் சேர்ந்தவர் ரூபன்டேனி (வயது 28). ஆட்டோ டிரைவர். இவர் வெள்ளிச்சந்தை பகுதியில் தங்கி ஆட்டோ ஓட்டிவந்தார். கடந்த மாதம் 14-ந்தேதி சவாரிக்கு சென்ற ரூபன்டேனி மாயமானார். இது குறித்து அவரது தந்தை சுந்தர்ராஜ் வெள்ளிச்சந்தை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குபதிவு செய்து ரூபன்டேனியை தேடி வந்தனர்.

    இந்த நிலையில் ரூபன் டேனி கொலை செய்யப்பட்டு ரெயில்வே தண்டவாளத்தில் வீசப்பட்டு இருப்பதாக தகவல் தற்பொழுது வெளியாகி உள்ளது. இது தொடர்பாக ஈத்தாமொழி பகுதியை சேர்ந்த பிரபல ரவுடி ஒருவர் போலீசாரிடம் சிக்கி உள்ளார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தியபோது ரூபன் டேனியை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். மேலும் இந்த கொலை வழக்கில் ரூபன்டேனியின் நண்பர்கள் 2 பேருக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது. போலீசார் அவர்களையும் பிடித்துள்ளனர். அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. பிடிபட்ட பிரபல ரவுடி மீது கோட்டார் போலீஸ் நிலையத்தில் கொலை வழக்கு மற்றும் கொலை முயற்சி வழக்குகளும் உள்ளது.

    பிடிபட்ட 3 பேரும் போலீசாரிடம் கூறுகையில், கடந்த மாதம் ரூபன்டேனியை சவாரிக்காக அழைத்துச் சென்றோம். அப்போது எங்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் அவரை தாக்கினோம். பின்னர் இரணியல் அருகே ரெயில்வே தண்டவாளத்தில் ரூபன்டேனியை வீசிச் சென்றோம் என்றனர். இவர்கள் 3 பேரும் கூறுவது உண்மைதானா? என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. 

    இதையடுத்து கடந்த மாதம் இரணியல் அருகே ரெயில்வே தண்டவாளத்தில் பிணம் கிடந்ததா? என்பது குறித்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது ரெயில்வே போலீசார் அடையாளம் தெரியாத வாலிபர் ஒருவர் பிணம் கிடந்ததாக கூறி பறக்கின்கால்மடம் பகுதியில் புதைத்ததாக கூறினார்கள். எனவே புதைக்கப்பட்ட வாலிபர் ரூபன்டேனியாக இருக்கலாம் என்று போலீசார் கருதுகிறார்கள். எனவே புதைக்கப்பட்ட அந்த உடலை தோண்டி எடுத்து டி.என்.ஏ. பரிசோதனை செய்யவும் போலீசார் முடிவு செய்துள்ளனர்.

    கொலை செய்யப்பட்ட ரூபன்டேனி ஏற்கனவே திருமணம் ஆனவர். கணவன், மனைவிக்கிடையே ஏற்பட்ட பிரச்சினை காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள். தற்பொழுது பெண் விவகாரத்தில் இந்த கொலை நடந்திருக்கலாமா என்ற கோணத்திலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
    ×