search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பூமியான்பேட்டை"

    புதுவை பூமியான்பேட்டையில் இளம் பெண்ணை வாலிபர் கடத்தி சென்று விட்டதாக தாய் போலீசில் புகார் தெரிவித்துள்ளார்.
    புதுச்சேரி:

    புதுவை பூமியான்பேட்டை பாவாணர் நகரை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மனைவி தேவகி. இவர்களுக்கு அனுஷா (வயது 23) என்ற மகளும், ஒரு மகனும் உள்ளனர்.

    கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் தேவகி கணவரை விட்டு பிரிந்து மகள் மற்றும் மகனுடன் வசித்து வந்தார். அனுஷா திருமண நிகழ்ச்சிகளில் வரவேற்பாளராக நிற்கும் வேலை செய்து வந்தார்.

    இந்த நிலையில் சம்பவத்தன்று வீட்டில் இருந்து வெளியே சென்ற அனுஷா அதன் பிறகு வீடு திரும்பவில்லை. உறவினர்கள் மற்றும் தோழிகள் வீடுகளில் தேடியும் எங்கும் அனுஷா இல்லை.

    இதையடுத்து தேவகி தனது மகள் மாயமானது குறித்து ரெட்டியார் பாளையம் போலீசில் புகார் செய்தார். புகாரில் தனது மகள் அனுஷாவை நைனார் மண்டபத்தை சேர்ந்த சந்தோஷ் என்ற வாலிபர் கடத்தி சென்றிருக்கலாம் என சந்தேகப்படுவதாக கூறியுள்ளார்.

    இதுகுறித்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வீர புத்திரன், ஏட்டு இரிசப்பன் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். #Tamilnews
    ×