search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பூத்"

    • கிள்ளியூர் தெற்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் பூத் முகவர்கள் கூட்டம் கருங்கல் பாலூரில் நடைபெற்றது.
    • வீடு வீடாக சென்று வாக்காளர்களை சந்தித்து அவர்களுடைய குறைகளை கேட்டறிவது


    நாகர்கோவில் : கிள்ளியூர் தெற்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் பூத் முகவர்கள் கூட்டம் கருங்கல் பாலூரில் நடைபெற்றது. ஒன்றிய செயலாளர் கோபால் தலைமை தாங்கினார். ஒன்றிய பொருளாளர் தங்கத்துரை, ஒன்றிய கவுன்சிலர் தேவதாஸ், தொழிலாளர் அணி துணை அமைப்பாளர் அபிஷன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக மாவட்ட அவைத்தலைவர் மரியசிசு குமார் கலந்துகொண்டு முகவர்களுக்கு ஆலோசனை வழங்கினார். கூட்டத்தில் குறும்பனை முதல் ராமன் துறை வரையிலான பூத் முகவர்கள் வீடு வீடாக சென்று வாக்காளர்களை சந்தித்து அவர்களுடைய குறைகளை கேட்டறிவது. அனைத்து நிர்வாகிகளும் இணைந்து பூத் முகவர்களுடன் சென்று வாக்காளர்களை சந்திப்பது என்றும், வரும் தேர்தலுக்கான அனைத்து பணிகளையும் உடனடியாக ஒருங்கிணைந்து செயல்படுவது என்றும் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் ஜீன், பெதலிஸ், லயோலியன், ஜோசப் பாத், சீலன், லீலா, ஆண்டனி, பெர்சிலின் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

    • புதிய உறுப்பினர் சேர்க்கைக்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
    • வடக்கு தொகுதியில் மட்டும் 374 பூத்கள் உள்ளன.

    திருப்பூர் :

    அ.தி.மு.க. திருப்பூர் மாநகர் மாவட்டம், திருப்பூர் வடக்கு சட்டமன்ற தொகுதி சார்பில் புதிய உறுப்பினர் சேர்க்கைக்கான ஆலோசனை கூட்டம் குமார்நகரில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு திருப்பூர் ஒன்றிய செயலாளர் கே.என்.விஜயகுமார் எம்.எல்.ஏ., தலைமை தாங்கினார். மாநகர் மாவட்ட அவைத்தலைவர் பழனிச்சாமி, எம்.எஸ்.எம்.ஆனந்தன் எம்.எல்.ஏ., தெற்கு தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. ,சு.குணசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் மாநகர் மாவட்ட செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன் எம்.எல்.ஏ., கலந்து கொண்டு பேசியதாவது :- எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா கட்சியை வலுவாக வழிநடத்தியது போல அதை விட 4 மடங்கு மக்களை கவர்ந்து எளிமையின் அடையாளமாக கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளார். இந்த கூட்டத்தின் நோக்கம் ஏற்கனவே உறுப்பினர்களாக இருப்பவர்களை புதுப்பித்துக் கொள்ள வேண்டும்.

    மேலும் புதிய உறுப்பினர்களை சேர்க்க வேண்டும். ஒரு பூத்திற்கு 200 புதிய உறுப்பினர்களை சேர்ப்பதே நோக்கமாக இருக்க வேண்டும். இதில் மகளிர் சுயக்உதவிகுழுவில் இருந்து 25 பேரும், இளைஞர், இளம்பெண்கள் பாசறைக்கு 25 பேரும், அம்மா பேரவை, எம்.ஜி.ஆர். மன்றத்திற்கு உள்பட ஒரு பூத்திற்கு 200 உறுப்பினர்களை சேர்க்க வேண்டும். வடக்கு தொகுதியில் மட்டும் 374 பூத்கள் உள்ளன. இந்த பணிகளை வார்டு செயலாளர்கள், பகுதி செயலாளர்கள் 1 மாத காலம் முழுமையாக, விருப்பு, வெறுப்பின்றி பணியாற்ற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் இணை செயலாளர் சங்கீதா சந்திரசேகர், துணை செயலாளர் பூலுவப்பட்டிபாலு, பகுதி செயலாளர்கள் கருணாகரன், பட்டுலிங்கம், சுப்பு, பாலசுப்பிரமணியம், பி.கே.முத்து, ஹரிஹரசுதன், 15 வேலம்பாளையம் பகுதி அவைத்தலைவர் வி.கே.பி.மணி, மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞரணி பொருளாளர் தண்ணீர்பந்தல் தனபால், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் சிட்டி பழனிச்சாமி, வர்த்தக அணி செயலாளர் எஸ்.பி.என்.பழனிச்சாமி, அம்மா பேரவை செயலாளர் அட்லஸ் லோகநாதன், வார்டு செயலாளர்கள் தங்கராஜ், கனகராஜ், விஜயகுமார், ஒன்றிய அவைத்தலைவர் ஐஸ்வர்ய மகாராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×