search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பூத் முகவர்கள் வீடு வீடாக சென்று வாக்காளர்களை சந்திக்க வேண்டும் : கிள்ளியூர் தெற்கு ஒன்றிய தி.மு.க. கூட்டத்தில் தீர்மானம்
    X

    பூத் முகவர்கள் வீடு வீடாக சென்று வாக்காளர்களை சந்திக்க வேண்டும் : கிள்ளியூர் தெற்கு ஒன்றிய தி.மு.க. கூட்டத்தில் தீர்மானம்

    • கிள்ளியூர் தெற்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் பூத் முகவர்கள் கூட்டம் கருங்கல் பாலூரில் நடைபெற்றது.
    • வீடு வீடாக சென்று வாக்காளர்களை சந்தித்து அவர்களுடைய குறைகளை கேட்டறிவது


    நாகர்கோவில் : கிள்ளியூர் தெற்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் பூத் முகவர்கள் கூட்டம் கருங்கல் பாலூரில் நடைபெற்றது. ஒன்றிய செயலாளர் கோபால் தலைமை தாங்கினார். ஒன்றிய பொருளாளர் தங்கத்துரை, ஒன்றிய கவுன்சிலர் தேவதாஸ், தொழிலாளர் அணி துணை அமைப்பாளர் அபிஷன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக மாவட்ட அவைத்தலைவர் மரியசிசு குமார் கலந்துகொண்டு முகவர்களுக்கு ஆலோசனை வழங்கினார். கூட்டத்தில் குறும்பனை முதல் ராமன் துறை வரையிலான பூத் முகவர்கள் வீடு வீடாக சென்று வாக்காளர்களை சந்தித்து அவர்களுடைய குறைகளை கேட்டறிவது. அனைத்து நிர்வாகிகளும் இணைந்து பூத் முகவர்களுடன் சென்று வாக்காளர்களை சந்திப்பது என்றும், வரும் தேர்தலுக்கான அனைத்து பணிகளையும் உடனடியாக ஒருங்கிணைந்து செயல்படுவது என்றும் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் ஜீன், பெதலிஸ், லயோலியன், ஜோசப் பாத், சீலன், லீலா, ஆண்டனி, பெர்சிலின் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

    Next Story
    ×