search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "new members"

    • புதிய உறுப்பினர் சேர்க்கைக்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
    • வடக்கு தொகுதியில் மட்டும் 374 பூத்கள் உள்ளன.

    திருப்பூர் :

    அ.தி.மு.க. திருப்பூர் மாநகர் மாவட்டம், திருப்பூர் வடக்கு சட்டமன்ற தொகுதி சார்பில் புதிய உறுப்பினர் சேர்க்கைக்கான ஆலோசனை கூட்டம் குமார்நகரில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு திருப்பூர் ஒன்றிய செயலாளர் கே.என்.விஜயகுமார் எம்.எல்.ஏ., தலைமை தாங்கினார். மாநகர் மாவட்ட அவைத்தலைவர் பழனிச்சாமி, எம்.எஸ்.எம்.ஆனந்தன் எம்.எல்.ஏ., தெற்கு தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. ,சு.குணசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் மாநகர் மாவட்ட செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன் எம்.எல்.ஏ., கலந்து கொண்டு பேசியதாவது :- எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா கட்சியை வலுவாக வழிநடத்தியது போல அதை விட 4 மடங்கு மக்களை கவர்ந்து எளிமையின் அடையாளமாக கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளார். இந்த கூட்டத்தின் நோக்கம் ஏற்கனவே உறுப்பினர்களாக இருப்பவர்களை புதுப்பித்துக் கொள்ள வேண்டும்.

    மேலும் புதிய உறுப்பினர்களை சேர்க்க வேண்டும். ஒரு பூத்திற்கு 200 புதிய உறுப்பினர்களை சேர்ப்பதே நோக்கமாக இருக்க வேண்டும். இதில் மகளிர் சுயக்உதவிகுழுவில் இருந்து 25 பேரும், இளைஞர், இளம்பெண்கள் பாசறைக்கு 25 பேரும், அம்மா பேரவை, எம்.ஜி.ஆர். மன்றத்திற்கு உள்பட ஒரு பூத்திற்கு 200 உறுப்பினர்களை சேர்க்க வேண்டும். வடக்கு தொகுதியில் மட்டும் 374 பூத்கள் உள்ளன. இந்த பணிகளை வார்டு செயலாளர்கள், பகுதி செயலாளர்கள் 1 மாத காலம் முழுமையாக, விருப்பு, வெறுப்பின்றி பணியாற்ற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் இணை செயலாளர் சங்கீதா சந்திரசேகர், துணை செயலாளர் பூலுவப்பட்டிபாலு, பகுதி செயலாளர்கள் கருணாகரன், பட்டுலிங்கம், சுப்பு, பாலசுப்பிரமணியம், பி.கே.முத்து, ஹரிஹரசுதன், 15 வேலம்பாளையம் பகுதி அவைத்தலைவர் வி.கே.பி.மணி, மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞரணி பொருளாளர் தண்ணீர்பந்தல் தனபால், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் சிட்டி பழனிச்சாமி, வர்த்தக அணி செயலாளர் எஸ்.பி.என்.பழனிச்சாமி, அம்மா பேரவை செயலாளர் அட்லஸ் லோகநாதன், வார்டு செயலாளர்கள் தங்கராஜ், கனகராஜ், விஜயகுமார், ஒன்றிய அவைத்தலைவர் ஐஸ்வர்ய மகாராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    மதுரை புறநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் பேசிய ராஜன்செல்லப்பா எம்எல்ஏ, புதிய உறுப்பினர்களை அதிகம் சேர்க்க வேண்டும் என்றார்.

    மதுரை:

    மதுரை புறநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் அவனியாபுரம், திருப்பரங்குன்றம் பகுதியைச் சேர்ந்த வட்ட நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. கலந்து கொண்டு ஆலோசனை வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது:-

    மறைந்த முதல்-அமைச்சர் அம்மா வழியில் சிறப்பான ஆட்சி நடத்திவரும் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு வலு சேர்க்கும் வகையில் அயராது உழைக்க வேண்டும்.

    1½ கோடி உறுப்பினர்களை கொண்ட இயக்கமாக திகழும் அ.தி.மு.க.வை மேலும் வலிமையாக்க இளைஞர்களையும், பொதுமக்களையும் அதிக அளவில் சேர்க்க வேண்டும்.

    குறிப்பாக பூத் கமிட்டி நிர்வாகிகள் அரசின் சாதனைகளை எடுத்துக்கூறி பொதுமக்களை சந்தித்து கட்சியில் சேர்க்க உழைக்க வேண்டும்.

    எந்த தேர்தல் வந்தாலும் அதில் அ.தி.மு.க. அமோக வெற்றிபெறும். அதற்கேற்ப நாம் உழைக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த கூட்டத்தில் நிர்வாகிகள் வக்கீல் ரமேஷ், நிலையூர் முருகன், முத்துக்குமார், முனியாண்டி, ராமகிருஷ்ணன், பன்னீர் செல்வம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    ×