search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பூச்சி மருந்து"

    • தொழில் நுட்பத்தின் மூலம் யூரியா வீணாவதை தடுக்க முடியும். வேப்பம் புண்ணாக்கு உள்ள எண்ணெய் சத்து யூரியா கசிந்து நீராக வெளியேறுவதை தடுக்கிறது.
    • விவசாயிகள் இதனை வயலில் மாலை நேரங்களில் மட்டும் இட வேண்டும். வயலில் நீர் இல்லாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.

    மதுக்கூர்:

    மதுக்கூர் வேளாண் உதவி இயக்குனர் திலகவதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது,

    எந்த ஒரு பயிரையும் பச்சைப் பசேல் என்று கண்ணுக்கு குளிர்ச்சியாக வைப்பதில் யூரியா உரமே முதலிடம் வகிக்கிறது.

    அதனால் விவசாயிகள் தேவைக்கு வைப்பதை விட்டுவிட்டு அதிக பச்சை கொடுப்பதற்காகவும், அதிக வளர்ச்சிக்காகவும் பரிந்துரை செய்யப்பட்ட அளவிற்கு மீறி யூரியா உரங்களை இடுகின்றனர்.

    இது உர செலவையும் அதிகரிக்கும். தேவையற்ற தீமை செய்யும் பூச்சிகளையும் பயிரை நோக்கி ஈர்க்கும். பூச்சிகளை கட்டுப்படுத்த மீண்டும் பூச்சிக்கொல்லி மருந்துகளை நோக்கி நாம் செல்ல வேண்டும்.

    எனவே விவசாயிகள் ஒவ்வொரு பயிருக்கும் பரிந்துரைக்கப்பட்ட அளவிலான யூரியா உரத்தை மட்டும் பயன்படுத்துவதன் மூலம் உரச்செலவை குறைக்கலாம்.

    நெல்லுக்கு ஏக்கருக்கு 25 கிலோ யூரியா மேலுரமாக இடப் பரிந்துரை செய்யப்படுகிறது.இந்த யூரியா வினை நேரடியாக வயலில் இடாமல் ஒரு எளிய தொழில் நுட்பத்தின் மூலம் அடுத்த 15 நாட்களுக்கு தேவையான போது சிறிது சிறிதாக உரமானது பயிருக்கு கிடைக்கும் வகையில் செய்ய இயலும். இதற்கு 5 பங்கு யூரியா எனில் 4 பங்கு ஜிப்சம், ஒரு பங்கு வேப்பம் புண்ணாக்கு எடுத்துக்கொண்டு முதலில் யூரியாவையும், வேப்பம் புண்ணாக்கையும் கலந்து யூரியாவின் நிறம் மாறிய பின் ஜிப்சத்தினை கலந்து முதல் நாள் வைத்திருந்து மறுநாள் இடலாம்.

    நேரடியாக யூரியா உரத்தை தெளிக்கும் பொழுது நீரில் கரைதல் ஆவியாதல் போன்றவற்றின் மூலம் வீணாகிறது தெளிக்கும் யூரியாவில் 40 சதம் மட்டுமே பயிர் எடுத்துக் கொள்ளும் எனவே விவசாயிகள்.

    தொழில் நுட்பத்தின் மூலம் யூரியா வீணாவதை தடுக்க முடியும். வேப்பம் புண்ணாக்கு உள்ள எண்ணெய் சத்து யூரியா கசிந்து நீராக வெளியேறுவதை தடுக்கிறது. ஜிப்சம் மேலுரை போல் செயல்பட்டு அடுத்த 15 நாட்களுக்கு சிறிது சிறிதாக பயிருக்கு எடுத்துக் கொடுக்கும்.

    விவசாயிகள் இதனை வயலில் மாலை நேரங்களில் மட்டும் இட வேண்டும். வயலில் நீர் இல்லாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும். மறுநாள் காலையில் லேசாக நீர் கட்டினால் போதுமானது.

    அதேபோல் காற்று மற்றும் மண்ணின் வெப்பநிலை அதிகமாக இருக்கும் பொழுது யூரியா உரம் இடுவதை தவிர்ப்பதே நல்லது.

    ஏனெனில் அதிக வெப்ப நிலையில் யூரியா மிக எளிதாக ஆவி ஆகி சென்றுவிடும். பயிருக்கு கிடைக்காது. சொட்டுநீர் பாசனத்தின் மூலம் யூரியா உரங்களை கொடுக்கும் போது யூரியா வீணாவது முற்றிலுமாக தவிர்க்கப்பட்டு பயிரின் வேருக்கு அருகிலேயே உரமானது கிடைக்கும்.

    எல்லாவற்றையும் விட அடிஉரமாக முக்கிய தொழுவரங்களை தேவையான அளவுக்கு இடுவதன் மூலம் மண்ணின் ஊட்டச்சத்து வங்கியாக இவை செயல்பட்டு.

    பயிர் உர சத்துக்கள் எடுத்துக் கொள்ளும். எடுக்கும் தன்மையும் அதிகரிக்கும். எனவே விவசாயிகள் யூரியாவை தனித்து விடாமல் வேப்பம் புண்ணாக்கு.

    ஜிப்சத்துடன் கலந்து விட்டு உரம் வீணாவதை தவிர்க்கவும் தேவையற்ற உரம் இடுவதை கைவிடவும். இவ்வாறு அவர் விவசாயிகளுக்கு அறிவுறுத்தி உள்ளார்.

    • பாட்டி வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன்.
    • வயிறு வலிப்பதாக பாட்டியிடம் தெரிவித்தான்.

    சேவூர் :

    சேவூா் அருகே கருமாபாளையத்தில் வசித்து வரும் கன்னியப்பன், ஜமுனா தம்பதியரின் மகன் சஞ்சய் (11). தனியாா் பள்ளியில் 5 ஆம் வகுப்பு படித்து வந்தாா்.

    அருகில் உள்ள பாட்டி வீட்டில் சஞ்சய் ஞாயிற்றுக்கிழமை விளையாடிக் கொண்டிருந்தபோது அங்கு வைத்திருந்த பூச்சிக்கொல்லி மருந்தை குடித்துள்ளாா்.உடனே வயிற்று வலி ஏற்பட்டதையடுத்து, பாட்டியிடம் சென்று குளிா்பானம் என நினைத்து பாட்டிலில் இருந்ததை குடித்துவிட்டேன் என பூச்சி மருந்து பாட்டிலைக் காட்டியுள்ளாா். உடனடியாக அவா் மேல் சிகிச்சைக்காக திருப்பூா் அரசு மருத்துவமனை அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தாா். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி சஞ்சய் திங்கள்கிழமை உயிரிழந்தாா். இது தொடா்பாக சேவூா் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

    • திருநாவலூர் அருகே விவசாயி கடன் பிரச்சினையால் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.
    • குடும்பத்தில் கணவன் மனைவி இடையே பிரச்சனை ஏற்பட்ட வண்ணம் இருந்ததாக தெரிகிறது.

    கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை தாலுகா சிலாபாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் விஜயகுமார் (வயது 32) இவர் விவசாய குடும்பத்தை சேர்ந்தவர். இவருக்கு கடந்த ஐந்தாண்டுக்கு முன்னர் திருமணம் நடைபெற்று ஒரு ஆண்,ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் விவசாயத்தில் ஏற்பட்ட நஷ்டத்தை போக்க விஜயகுமார் கடன் வாங்கினார். மேலும் கடந்த தேர்தலில் சுயேட்சையாக நின்று தோற்றார். சுயேட்சையாக நின்ற போதும் இவருக்கு கடன் ஏற்பட்டது. விவசாயத்தில் ஏற்பட்ட நஷ்டம் மற்றும் சுயேட்சை தேர்தலில் நின்றதற்கு செலவழிக்க பணத்திற்காக இவர் பல நபர்களிடம் கடன் வாங்கி உள்ளார். . இதனால் குடும்பத்தில் கணவன் மனைவி இடையே பிரச்சனை ஏற்பட்ட வண்ணம் இருந்ததாக தெரிகிறது. இந்நிலையில் கடனை கொடுத்தவர்கள் வீட்டிற்கு வந்து கடனை திரும்ப கேட்டுள்ளனர்.

    கடனை திரும்ப செலுத்த முடியாத காரணத்தால் கடன் கொடுத்தவர்கள் தகாத வார்த்தைகளால் விஜயகுமாரை திட்டி உள்ளனர். இதனால் நேற்று விஜயகுமாரின் மனைவி இவருடன் சண்டை போட்டு விட்டு திருநாவலூர் காமராஜர் நகரில் உள்ள அ வரது அம்மா வீட்டிற்கு சென்று விட்டார். விஜயகுமார் சண்டை போட்டு விட்டு கோபித்துக் கொண்டு சென்ற மனைவியை கூப்பிட மாமியார் வீட்டிற்கு சென்றார் அதற்கு அவரது மனைவி வர மறுத்து விட்டார். கடன் பிரச்சினை யால் தவித்து வந்த விஜயகுமார் மனை வியுடனும் தகராறு ஏற்பட்டதனால் மன உளைச்சலில் இருந்தார். மேலும் மனைவியும் வர மறுத்து விட்டதால் உடனே மாமியார் வீட்டின் பின்பக்கம் சென்று வீட்டு தோட்டத்திற்கு அடிக்க வைத்திருந்த பூச்சி மருந்தை எடுத்து குடித்துவிட்டு மயங்கி கீழே விழுந்தார். இதைப் பார்த்த மனைவி மற்றும் அக்கம்பக்கம் உள்ளவர்கள் உடனே அவரை மீட்டு சிகிச்சைக்கு திருநாவலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இந்நிலையில் நேற்று இரவு சிகிச்சை பலனின்றி விஜயகுமார் இறந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த திருநாவலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) விஜி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். கடன் பிரச்சினையால் விவசாயி பூச்சி மருந்து சாப்பிட்டு உயிரை விட்ட சோகம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

    ×