search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பூச்சாட்டு விழா"

    • கோவிலில் பூச்சாட்டு விழா 25ந் தேதி காப்பு கட்டுதலுடன் துவங்கியது.
    • நீராட்டு விழாவுடன் பூச்சாட்டு விழா நிறைவு பெறுகின்றது.

      அவிநாசி:

    அவிநாசி காந்திபுரத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ காமாட்சி அம்மன் கோவில் பூச்சாட்டு விழாவில் நேர்ந்து கொண்ட பக்தர்கள் அலகு குத்தி ஊர்வலமாக சென்றனர்.கோவிலில் பூச்சாட்டு விழா 25ந் தேதி காப்பு கட்டுதலுடன் துவங்கியது. தொடர்ந்து நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்ற திருவிளக்கு பூஜை, அம்மன் அழைத்தல் ஆகியன நடைபெற்றது. விழாவில் முக்கிய நிகழ்ச்சியான அலகு குத்தும் விழா நடைபெற்றது. தேவேந்திர குல வேளாளர்கள் சமூக வீர மக்கள், தங்கள் முதுகில் அலகுகுத்தி, சுவாமி தேரை இழுத்து சென்றனர். நீராட்டு விழாவுடன் பூச்சாட்டு விழா நிறைவு பெறுகின்றது.

    முன்னதாக நேற்று காலை நூற்றுக்கும் மேற்பட்ட சிறுமிகள் உட்பட பெண்கள், காமாட்சி அம்மன் கோவிலில் இருந்து மாவிளக்கு எடுத்துநான்கு ரத வீதிகளிலும் ஊர்வலமாக வந்தனர். பூச்சாட்டு விழாவை முன்னிட்டு தேவேந்திரகுல வேளாளர் சமூகத்தினர் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    • பக்தர்கள் முன்னிலையில் பூச்சாட்டு விழா நடைபெற்றது.
    • ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வழிபாடு மேற்கொண்டனர்.

    பவானி:

    பவானி செல்லாண்டி யம்மன், மாரியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் மாசி திருவிழா நடைபெறுவது வழக்கம்.

    அதுபோல் இந்த ஆண்டு மாசி திருவிழா செல்லியாண்டி அம்மன் கோவில் மற்றும் மாரியம்மன் கோவில்களில் உள்ள மூலவருக்கு பால், தயிர், சந்தனம் இளநீர், பன்னீர் உள்பட பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்கள் முன்னிலையில் பூச்சாட்டு விழா நடைபெற்றது.

    இதனையடுத்து வருகின்ற 21-ந் தேதி கம்பம் நடப்பட்டு பின்னர் மார்ச் மாதம் 1-ந் தேதி மாசி திருவிழா, பொங்கல் விழா நடைபெற உள்ளது.

    இதில் பவானி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் உள்ள ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபாடு மேற்கொண்டனர்.

    ×