search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அவினாசி காமாட்சி அம்மன் கோவில் பூச்சாட்டு விழாவில் அலகு குத்தி  பக்தர்கள் ஊர்வலம்
    X

    கோப்புபடம். 

    அவினாசி காமாட்சி அம்மன் கோவில் பூச்சாட்டு விழாவில் அலகு குத்தி பக்தர்கள் ஊர்வலம்

    • கோவிலில் பூச்சாட்டு விழா 25ந் தேதி காப்பு கட்டுதலுடன் துவங்கியது.
    • நீராட்டு விழாவுடன் பூச்சாட்டு விழா நிறைவு பெறுகின்றது.

    அவிநாசி:

    அவிநாசி காந்திபுரத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ காமாட்சி அம்மன் கோவில் பூச்சாட்டு விழாவில் நேர்ந்து கொண்ட பக்தர்கள் அலகு குத்தி ஊர்வலமாக சென்றனர்.கோவிலில் பூச்சாட்டு விழா 25ந் தேதி காப்பு கட்டுதலுடன் துவங்கியது. தொடர்ந்து நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்ற திருவிளக்கு பூஜை, அம்மன் அழைத்தல் ஆகியன நடைபெற்றது. விழாவில் முக்கிய நிகழ்ச்சியான அலகு குத்தும் விழா நடைபெற்றது. தேவேந்திர குல வேளாளர்கள் சமூக வீர மக்கள், தங்கள் முதுகில் அலகுகுத்தி, சுவாமி தேரை இழுத்து சென்றனர். நீராட்டு விழாவுடன் பூச்சாட்டு விழா நிறைவு பெறுகின்றது.

    முன்னதாக நேற்று காலை நூற்றுக்கும் மேற்பட்ட சிறுமிகள் உட்பட பெண்கள், காமாட்சி அம்மன் கோவிலில் இருந்து மாவிளக்கு எடுத்துநான்கு ரத வீதிகளிலும் ஊர்வலமாக வந்தனர். பூச்சாட்டு விழாவை முன்னிட்டு தேவேந்திரகுல வேளாளர் சமூகத்தினர் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    Next Story
    ×