search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புனித நீராட குவிந்த பக்தர்கள்"

    • பவானி கூடுதுறை காவிரி ஆற்றில் புனித நீராடி பரிகார பூஜைகள் செய்து வழிபாடு மேற்கொண்டனர்.
    • கொடுமுடியில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

    பவானி:

    பவானி நகரில் பிரசித்தி பெற்ற கோவிலாக சங்க மேஸ்வரர் கோவில் விளங்கி வருகிறது. இந்த கோவிலின் பின்பகுதியில் இரட்டை விநாயகர் சன்னதி படி த்துறை பகுதியில் காவிரி, பவானி மற்றும் கண்ணுக்கு புலப்படாத அமுத நதி என 3 நதிகள் சங்கமிப்பதால் முக்கூடல் சங்கமம் என்றும் தென்னகத்தின் காசி என்றும் சிறந்த பரிகார தலம் என பல பெயர் பெற்று விளங்கி வருகிறது.

    ஆண்டுதோறும் பல்வேறு விழாக்கள் நடைபெற்று வரும் இந்த கோவிலில் ஆடி அமாவாசை, தை அமா வாசை, மகாலய அமாவாசை ஆடி பெருக்கு, விடுமுறை தினங்கள் உள்பட ஆண்டு மமழுவதும் உள்ளூர், வெளியூர் மற்றும் வெளி மாநில பக்தர்கள் வந்து புனித நீராடி சங்கமேஸ்வ ரரை வழிபடுகிறார்கள்.

    மேலும் பொதுமக்கள் பலர் ஆற்றில் நீராடி தங்கள் குடும்பத்தில் இறந்த முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம், எள்ளும் தண்ணீர் விடுதல், பிண்டம் விடுதல் உட்பட பல்வேறு பரிகார பூஜைகள் செய்து வழிபாடு மேற்கொள்வது வழக்கம். இந்த ஆண்டு ஆடி மாதத்தில் 2 அமாவாசைகள் வந்தது. கடந்த மாதம் முதல் ஆடி அமாவாசை வந்தது. இதை தொடர்ந்து இன்றும் ஆடி அமாவாசை அனுஷ்டி க்கப்பட்டது.

    ஆடி அமவாசையை யொட்டி பவானி கூடுதுறைக்கு இன்று அதிகாலை முதலே ஈரோடு, சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ண கிரி உட்பட தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து பவானி கூடுதுறை காவிரி ஆற்றில் புனித நீராடி தங்கள் குடு ம்பத்தில் இறந்தவர்களுக்கு பல்வேறு வகையான பரிகார பூஜைகள் செய்து வழிபாடு மேற்கொண்டனர்.

    இதையடுத்து தங்கள் குடும்பத்துடன் வந்த மக்கள் தங்கள் முன்னோர்களுக்கு திதி, மற்றும் மற்றும் பரிகார பூஜைகள் செய்தனர்.

    ஆடி அமாவாசை இன்று மதியம் வரை மட்டுமே உள்ளதால் இன்று அதி காலையிலேயே பக்தர்கள் பலர் கோவிலுக்கு வந்திரு ந்தனர். தொடர்ந்து கூடு துறையில் பக்தர்கள் கூட்டம் அதிகளவில் இருந்தது. இதனால் எங்கு பார்த்தாலும் மக்கள் கூட்டமாகவே காண ப்பட்டது.

    பவானி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடு படுத்தப்பட்டு கண்காணித்து வந்தனர்.

    இதே போல் ஆடி அமாவாசையையொட்டி கொடு முடி காவிரி ஆற்றுக்கு இன்று அதிகாலை முதல் ஏராளமான பக்தர்கள் வந்திருந்தனர். தொடர்ந்து அவர்கள் காவிரி ஆற்றில் புனித நீராடி மகுடேஸ்வரரை வழிபட்டனர். மேலும் பொ துமக்கள் பலர் காவிரி ஆற்றில் நீராடி தங்கள் மு ன்னோர்களுக்கு திதி மற்றும் தர்ப்பணம் கொடுத்தனர். இதே போல் வாலிபர்கள் மற்றும் இளம் பெண்கள் திருமண தடை தோஷ பரிகார பூஜை செய்தனர்.

    இதனால் கொடுமுடியில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. இதை யொட்டி போலீஸ் பாது காப்பும் போடப்பட்டு இருந்தது.

    • கூடுதுறை பகுதியில் இன்று ஏராளமான உள்ளூர் வெளியூர் பக்தர்கள் காவிரி ஆற்றில் புனித நீராடி பரிகாரங்கள் செய்து வழிபாடு மேற்கொண்டு சென்றனர்.
    • கடந்த இரு நாட்களாக மழையின் காரணமாக கூடுதுறை பகுதி கூட்டம் இன்றி காணப்பட்ட நிலையில் இன்று சற்று கூட்டம் நிறைந்து காணப்பட்டது.

    பவானி:

    பவானி சங்கமேஸ்வரர் கோவில் பின்னால் உள்ள கூடுதுறை பகுதியில் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினமான இன்று ஏராளமான உள்ளூர் வெளியூர் பக்தர்கள் காவிரி ஆற்றில் புனித நீராடி பரிகாரங்கள் செய்து வழிபாடு மேற்கொண்டு சென்றனர்.

    வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்ததை தொட ர்ந்து கடந்த 2 நாட்களாக பவானி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் சாரல் மழை முதல் மிதமான மழை மற்றும் கனமழை கொட்டி தீர்த்தது.

    இதனால் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்க ப்பட்ட நிலையில் பொது மக்கள் பலரும் தங்கள் வீடுகளில் முடங்கிக் கிடந்தனர்.

    இந்நிலையில் விடுமுறை நாளான இன்று காலை பவானி சங்கமேஸ்வரர் கோவில் பின்பகுதியில் உள்ள கூடுதுறை காவேரி, பவானி, அமுதநதி கூடும் முக்கூடல் சங்கத்தில் உள்ளூர், வெளியூர் பகுதியில் இருந்து ஏராள மான பக்தர்கள் வருகை தந்து காவிரி ஆற்றில் புனித நீராடி தங்கள் குடும்பத்தில் இறந்த முன்னோர்களுக்கு திதி தர்ப்பணம், பிண்டம் விடுதல் போன்ற பரிகார பூஜைகள் செய்து சாமி வழிபாடு மேற்கொண்டு சென்றனர்.

    கடந்த இரு நாட்களாக மழையின் காரணமாக கூடுதுறை பகுதி கூட்டம் இன்றி காணப்பட்ட நிலையில் இன்று சற்று கூட்டம் நிறைந்து காணப்பட்டது.

    ×