search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பவானி கூடுதுறை"

    • பவானி கூடுதுறை தென்னகத்தின் காசி என்று அழைக்கப்படுகிறது.
    • பவானி கூடு துறையில் ஏராளமான பக்தர்கள் புனித நீராடினர்.

    பவானி:

    தை அமாவாசையை முன்னிட்டு பவானி கூடு துறையில் ஏராளமான பக்தர்கள் புனித நீராடி குடும்பத்தில் இறந்த முன்னோர்களுக்கு திதி தர்ப்பணம், எள்ளும் தண்ணியும் விடுதல், பிண்டம் விடுதல் போன்ற பரிகாரங்கள் செய்து வழிபாடு மேற்கொண்டனர்.

    பவானி நகரில் பிரசித்தி பெற்ற கோவிலாக சங்கமேஸ்வரர் கோவில் விளங்கிவருகிறது. இந்த கோவில் பின்பகுதியில் இரட்டை விநாயகர் சன்னதி படித்துறை பகுதியில் காவிரி, பவானி, கண்ணுக்கு புலப்படாத அமுதநதி என 3 நதிகள் சங்கமிக்கிறது.

    இதனால் கூடுதுறை தென்னகத்தின் காசி என்றும் சிறந்த பரிகார தலமாகவும் இருந்து வருகிறது. மேலும் சுற்றுலா தலமாகவும் உள்ளது. இதனால் கூடுதுறைக்கு தினமும் பொதுமக்கள் வந்து செல்கிறார்கள். மேலும் பவுர்ணமி, அமாவாசை மற்றும் விசேஷ நாட்களில் வழக்கத்தை விட பக்தர்கள் அதிகளவில் வருவார்கள்.

    இதே போல் ஈரோடு மாவட்ட பக்தர்கள் மட்டுமின்றி வெளியூர் மற்றும் வெளி மாநில பக்தர்கள் ஏராளமானோர் வந்து தங்கள் முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் எள்ளும் தண்ணியும் விடுவார்கள். மேலும் திருமண தடை தோஷம், செவ்வாய் தோஷம் உள்பட பல்வேறு பரிகார பூஜைகள் செய்து வழிபாடு மேற்கொண்டு செல்வது வழக்கம்.

    இந்த நிலையில் தை அமாவாசையை யொட்டி இன்று ஈரோடு, திருப்பூர், நாமக்கல், கோவை மற்றும் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த பொதுமக்கள் ஏராளமானோர் அதிகாலையிலேயே கூடுதுறையில் குவிந்தனர். தொடர்ந்து அவர்கள் கூடுதுறையில் புனித நீராடி தங்கள் முன்னோர்களுக்கு திதி மற்றும் தர்ப்பணம் கொடுத்தனர்.

    இதையொ ட்டி கூடுதுறையில் உள்ள 2 பரிகார மண்டபங்கள் மற்றும் தற்காலிக பரிகார மண்டபம் என பல்வேறு இடங்களில் பொதுமக்கள் முன்னோர்களுக்கு பல வகையான தர்ப்பணங்கள் கொடுத்தனர். மேலும் பக்தர்கள் பலர் ஆற்றில் புனித நீராடி சாமி தரிசனம் செய்தனர்.

    இதையொட்டி பவானி போலீஸ் துணை சூப்பிரண்டு அமிர்தவர்ஷ்னி தலைமையில் பவானி, சித்தோடு, அந்தியர், அம்மாபேட்டை, பவானி அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் என 200-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் நகரின் முக்கிய 50 இடங்களில் கேமராக்கள் பொருத்தப்பட்டு போலீசார் கண்காணித்து வருகின்றனர்.

    ஈரோடு கருங்கல்பாளையம் காவிரிகரை பகுதியில் அதிகாலை முதலே பொது மக்கள் குவிந்து புனித நீராடி முன்னோர்களுக்கு தர்பணம் மற்றும் திதி கொடுத்தனர். இதனால் இப்பகுதியில் மக்கள் கூட்டம் அலைமோதியது. மேலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

     இதேபோல் கொடுமுடி காவிரி ஆற்றில் இன்று காலை முதலே ஏராளமான பக்தர்கள் வந்து புனித நீராடினர். தொடர்ந்து பொதுமக்கள் பலர் திதி மற்றும் தர்ப்பணம் கொடுத்தனர். அதேபோல் திருமணமாகாத பெண்கள் மற்றும் ஆண்களும் ஏராளமானோர் வந்து புனித நீராடி பரிகாரம் செய்தனர்.

    தொடர்ந்து பக்தர்கள் பலர் மகுடேஸ்வரர் மற்றும் வீர நாராயண பெருமாளை வழிபட்டு சென்றனர். இதேபோல் மாவட்டத்தில் உள்ள கோவில்களிலும் பக்தர்கள் காலை முதலே பலர் வந்து சாமி தரிசனம் செய்தனர்.

    சத்தியமங்கலம் அருகே உள்ள பண்ணாரியம்மன் கோவிலில் இன்று அதிகாலை அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

    இதையொட்டி ஈரோடு மாவட்ட பக்தர்கள் மட்டுமின்றி மாநிலத்தின் பல பகுதி களில் இருந்தும் பக்தர்கள் பலர் வந்து சாமி தரிசனம் செய்தனர். மேலும் கர்நாடகா மற்றும் கேரளா மாநில பக்தர்கள் பலரும் கோவிலுக்கு வந்து அம்மனை வழிபட்டனர். இதனால் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலை மோதியது.

    மேலும் கோபி சாரதா மாரியம்மன், பாரியூர் கொண்டத்து காளியம்மன், அந்தியூர் பத்திரகாளியம்மன், சென்னிமலை முருகன் கோவில் உள்பட மாவட்ட த்தின் அனைத்து பகுதிகளில் உள்ள கோவில்களில் இன்று காலை முதல் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்தனர்.

    • அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் வந்து புனித நீராடி சாமி தரிசனம் செய்தனர்.
    • பரிகார பூஜைகள் செய்து முன்னோர்களை வழிபட்டனர்.

    ஈரோடு மாவட்டம் பவானி நகரில் சங்கமேஸ்வரர் கோவில் மிக பிரசித்தி பெற்ற கோவிலாக விளங்கி வருகிறது. இந்த கோவிலில் வேதநாயகி உடனமர் சங்கமேஸ்வரர் மற்றும் ஸ்ரீதேவி பூதேவி உடனமர் ஆதிகேசவபெருமாள் என சிவன் மற்றும் பெருமாள் கோவில் ஒரே வளாகத்தில் அமைந்த சிறப்பை பெற்ற கோவிலாகும்.

    அதேபோல் இந்த கோவிலுக்கு பின்பகுதி உள்ள இரட்டை விநாயகர் சன்னதி படித்துறையில் காவிரி, பவானி மற்றும் கண்ணுக்கு புலப்படாத அமுது நதி என 3 நதிகள் சங்கமிப்பதால் தென்னகத்தின் காசி என்றும் சிறந்த பரிகார ஸ்தலம் முக்கூடல் சங்கமம் சுற்றுலா தலம் என பல பெயர் பெற்று விளங்கி வருகிறது.

    இதனால் பவானி கூடுதுறை சங்கமேஸ்வரர் கோவிலுக்கு ஈரோடு மாவட்ட பொதுமக்கள் மட்டுமின்றி தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும், கர்நாடகா, ஆந்திரா, தொலுங்கானா உள்பட பல்வேறு வெளி மாநில பக்தர்களும் அதிகளவில் வந்து புனித நீராடி சாமி தரிசனம் செய்வார்கள். மேலும் இங்கு பல்வேறு வகையான பரிகார பூஜைகள் செய்து சாமி தரிசனம் மேற்கொண்டு செல்வது வழக்கம்.

    இந்த நிலையில் இன்று ஆடி மாதம் பிறப்பு மற்றும் ஆடி அமாவாசை என இரண்டும் இணைந்து வருகிறது. இதையொட்டி இன்று (திங்கட்கிழமை) பவானி கூடுதுறைக்கு அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் வந்து புனித நீராடி சாமி தரிசனம் செய்தனர்.

    மேலும் பொதுமக்கள் பலர் தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து ஏராளமானோர் வந்து தங்கள் குடும்பத்தில் இறந்த முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் எள்ளும் தண்ணியும் விடுதல் பிண்டம் விடுதல் போன்ற பரிகார பூஜைகள் செய்து முன்னோர்களை வழிபட்டனர்.

    இதே போல் ஈரோடு மாவட்ட பக்தர்கள் பலர் கோவிலுக்கு வந்து ஆற்றில் புனித நீராடி சங்கமேஸ்வரரை சாமி தரிசனம் செய்து வழிபாடு மேற்கொண்டனர்.

    இந்த ஆடி மாதம் 2 அமாவாசை வருவதால் இன்று கூட்டம் குறைவாக இருந்தாலும் பொதுமக்கள் வந்த வண்ணம் இருந்தனர். அடுத்த மாதம் 16-ந் தேதி ஆடி அமாவாசை அன்று கூட்டம் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதையொட்டி பவானி சரக போலீசார் ஏராளமானோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் பொதுமக்களுக்கு அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.

    இதே போல் கொடுமுடி காவிரி ஆற்றில் இன்று காலை முதலே ஏராளமான பொதுமக்கள் வந்து புனித நீராடி வருகிறார்கள். தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் பலர் தங்கள குடும்பத்துடன் வந்து மகுடேஸ்வரரை வழிபட்டு சென்றனர்.

    மேலும் இளம்பெண்கள் மற்றும் வாலிபர்கள் பலர் வந்து திருமண தடை நீங்கவும், திருமணம் தடை யின்றி நடக்கவும் பரிகார பூஜைகள் செய்தனர். இதே போல் பொதுமக்கள் பலர் வந்து புனித நீராடி தங்கள் முன்னோர்களுக்கு திதி மற்றும் தரிப்பணம் கொடுத்து வழபட்டனர்.

    மேலும் ஈரோடு கருங்கல் பாளையம் காவிரி ஆற்றில் ஆடி மாதம் பிறப்பு மற்றும் அமாவாசையையொட்டி இன்று அதிகாலை முதல் பொதுமக்களள் வந்து புனித நீராடி வருகிறார்கள். அதே போல் பக்தர்கள் பலர் காவிரி தங்கள் முன்னோர் களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு செய்து வருகிறார்கள். இதையடுத்து பொதுமக்கள் வந்து தொடர்ந்து பரிகார பூஜைகள் செய்து வருகிறார்கள்.

    • இறந்த முன்னோர்களுக்கு பரிகார பூஜைகள் செய்து சாமி தரிசனம் செய்தனர்.
    • கோவிலின் பல்வேறு பகுதிகளிலும் பக்தர்கள் கூட்டம் காணப்பட்டது.

    பவானியில் பிரசித்தி பெற்ற கோவிலாக சங்கமேஸ்வரர் கோவில் விளங்கி வருகிறது.

    இந்த கோவில் பின்பகுதியில் உள்ள இரட்டை விநாயகர் சன்னதி படித்துறையில் காவிரி, பவானி, கண்ணுக்கு புலப்படாத அமுதநதி என 3 நதிகள் சங்கமிப்பதால் முக்கூடல் சங்கமம், தென்னகத்தின் காசி என பல பெயர் பெற்று விளங்கி வருகிறது.

    ஆண்டுதோறும் பல்வேறு விழாக்கள் நடைபெற்று வரும் இந்த கோவிலில் அமாவாசை தினத்தன்று உள்ளூர், வெளியூர் வெளி மாநில பக்தர்கள் வருகை தந்து தங்கள் குடும்பத்தில் இறந்த முன்னோர்களுக்கு திதி தர்ப்பணம், எள்ளும் தண்ணியும் விடுதல், பிண்டம் விடுதல் என பல்வேறு வகையான பரிகார பூஜைகள் செய்து வழிபாடு மேற்கொண்டு செல்வது வழக்கம்.

    இந்த நிலையில் இன்று ஆனி மாத அமாவாசை தினத்தை முன்னிட்டு பவானி கூடுதுறை சங்கமேஸ்வரர் கோவிலில் ஏராளமான பக்தர்கள் காவிரி ஆற்றில் புனித நீராடி தங்கள் குடும்பத்தில் இறந்த முன்னோர்களுக்கு பரிகார பூஜைகள் செய்து சாமி தரிசனம் செய்தனர்.

    ஆனி மாத அமாவாசை தினத்தை முன்னிட்டு கோவிலின் பல்வேறு பகுதிகளிலும் பக்தர்கள் கூட்டம் காணப்பட்டது.

    • கர்நாடகா, ஆந்திர மற்றும் வட மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வந்து புனித நீராடி சங்கமேஸ்வரரை வழிபடுகிறார்கள்.
    • மாசி மாத அமாவாசையை யொட்டி இன்று காலை கொடுமுடிக்கு பொதுமக்கள் பலர் வந்து இருந்தனர்.

    பவானி:

    பவானி நகரில் பிரசித்தி பெற்ற கோவிலாக சங்க மேஸ்வரர் கோவில் விளங்கி வருகிறது.

    இக்கோவில் பின் பகுதி யில் உள்ள இரட்டை விநா யகர் சன்னதி படித்துறை பகுதியில் காவிரி, பவானி, கண்ணுக்கு புலப்படாத அமுத நதி என 3 நதிகள் சங்கமிப்பதால் முக்கூடல் சங்கமம், தென்னகத்தின் காசி என்றும், சிறந்த பரிகார தலமாகவும், சுற்றுலா தலமாகவும் விளங்கி வருகிறது.

    பவானி சங்கமேஸ்வரர் கோவிலில் ஆண்டு தோறும் பல்வேறு விழாக்கள் நடை பெற்று வருகிறது. இதனால் இங்கு பக்தர்கள் கூட்டம் இருந்து கொண்டே இருக்கும்.

    பவானி கூடுதுறை சிறந்த பரிகார தலமாக திகழ்வதால் ஈரோடு மாவட்ட பக்தர்கள் மட்டுமின்றி தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் தினமும் ஏராளமான பொது மக்கள் வருகிறார்கள். இதே போல் கர்நாடகா, ஆந்திர மற்றும் வட மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வந்து புனித நீராடி சங்கமேஸ்வரரை வழிபடுகிறார்கள்.

    மேலும் கூடுதுறையில் அமாவாசை, பவுர்ணமி, ஆடி பெருக்கு, ஆடி 18 மற்றும் விஷேச நாட்களில் வழக்கத்தை விட அதி களவில் பக்தர்கள் வருவார்கள்.

    இந்த கோவிலில் இன்று (திங்கட்கிழமை) மாசி மாத அமாவாசையை யொட்டி ஈரோடு, பவானி, அந்தியூர் உள்பட மாவட்டத்தின் பல பகுதிகளிலல் இருந்தும் சேலம், திருப்பூர், கோவை, நாமக்கல் உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்தும் பலர் கூடுதுறைக்கு வந்திருந்தனர்.

    தொடர்ந்து அவர்கள் கூடுதுறையில் நீராடி இறந்த தங்கள் முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் கொடுத்த னர். மேலும் எள்ளும் தண்ணீரில் விடுதல், பிண்டம் விடுதல் போன்ற பல்வேறு பரிகாரங்கள் செய்தனர். மேலும் பல பக்தர்கள் ஆற்றில் புனித நீராடி சாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.

    மேட்டூர் அணையில் இருந்து காவிரி ஆற்றில் குடிநீர் தேவைக்கு மட்டும் தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளதால் கூடுதுறையில் தண்ணீர் வரத்து குறைந்து காணப்படுகிறது.

    இதே போல் மாசி மாத அமாவாசையை யொட்டி இன்று காலை கொடுமுடிக்கு பொதுமக்கள் பலர் வந்து இருந்தனர். அவர்கள் காவிரி ஆற்றில் நீராடி தங்கள் முன்னோர்களுக்கு திதி மற்றும் தர்ப்பணம் கொடுத்தனர்.

    மேலும் திருமணமாகாத இளம் பெண்கள், வாலிப ர்களும் பலர் தங்கள் குடும்பத்துடன் வந்து ஆற்றில் புனித நீராடி பரிகார பூஜைகள் செய்தனர். தொடர்ந்து அவர்கள் மகுடேஸ்வரர் மற்றும் வீர நாராயண பெருமாளை வழிபட்டு சென்றனர்.

    • அதிகாரிகள் முன்னிலையில் கோவிலில் பல்வேறு இடங்களில் வைக்கப்பட்டு இருந்த உண்டியல்கள் திறக்கப்பட்டு எண்ணப்பட்டது.‌
    • இதில் பணம் மற்றும் தங்கம், வெள்ளி பொருட்கள் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி உள்ளனர்.

    பவானி:

    பவானி நகரில் பிரசித்தி பெற்ற கோவிலாக சங்க மேஸ்வரர் கோவில் விளங்கி வருகிறது.

    கோவில் பின் உள்ள இரட்டை விநாயகர் சன்னதி படித்துறை பகுதியில் காவிரி, பவானி கண்ணுக்கு புலப்படாத அமுத நதி என 3 நதிகள் சங்கமிப்பதால் முக்கூடல் சங்கமம், தென்னகத்தின் காசி மற்றும் சிறந்த பரிகார தலம் என பல பெயர் பெற்று விளங்கி வருகிறது.

    இந்த கோவிலில் ஆண்டு தோறும் பல்வேறு விழா க்கள் நடந்து வருகிறது. மேலும் பொதுமக்கள் பலர் இங்கு வந்து தங்கள் முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் எள்ளும், தண்ணியும் விடுதல், பிண்டம் விடுதல் போன்ற பல்வேறு பரிகார பூஜைகள் செய்து வருகிறார்கள்.

    இந்த கோவிலுக்கு வருகை தரும் பக்தர்கள் காணிக்கை செலுத்திட வசதிக்காக ராஜ கோபுரம், பெருமாள் சன்னதி, பசு பராமரிப்பு, அன்னதானம், சங்கமேஸ்வரர் சன்னதி, வேதநாயகி சன்னதி உள்பட பல்வேறு இடங்களில் உண்டியல்கள் வைக்கப்பட்டு உள்ளது.

    கோவிலுக்கு வரும் பக்தர்கள் உணடியல்களில் காணிக்கை செலுத்தி வருகிறார்கள்.

    இந்த உண்டி யல்கள் அதிகாரிகள் மற்றும் பொது மக்கள் முன்னிலையில் திறக்கப்பட்டு கோவில் பணியாளர்கள், தன்னார்வ லர்கள், அரசு பள்ளி மாணவ, மாணவிகள் மூலம் காணிக்கைகள் எண்ணப் படுவது வழக்கம்.

    அதேபோல் பெருமாள் கோவில் சன்னதியில் இந்து அறநிலையத்துறை துறை அதிகாரிகள் முன்னிலையில் கோவிலில் பல்வேறு இடங்களில் வைக்கப்பட்டு இருந்த உண்டியல்கள் திறக்கப்பட்டு எண்ணப்பட்டது.

    இதில் ரூ.27 லட்சத்து 33 ஆயிரத்து 842 பணம் மற்றும் 35 கிராம் தங்கம், 200 கிராம் வெள்ளி பொருட்கள் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி உள்ளதாக சங்க மேஸ்வரர் கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

    • முன்னோர்களுக்கு பல வகையான தர்ப்பணங்கள் கொடுத்தனர்.
    • பொதுமக்கள் ஏராளமானோர் கூடுதுறையில் குவிந்தனர்.

    தை அமாவாசையையொட்டி இன்று (சனிக்கிழமை) ஈரோடு, திருப்பூர், நாமக்கல், கோவை மற்றும் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த பொதுமக்கள் ஏராளமானோர் கூடுதுறையில் குவிந்தனர்.

    தொடர்ந்து அவர்கள் கூடுதுறையில் புனித நீராடி தங்கள் முன்னோர்களுக்கு திதி மற்றும் தர்ப்பணம் கொடுத்தனர்.

    இதையொட்டி கூடுதுறையில் உள்ள 2 பரிகார மண்டபங்கள் மற்றும் தற்காலிக பரிகார மண்டபம் என பல்வேறு இடங்களில் பொதுமக்கள் முன்னோர்களுக்கு பல வகையான தர்ப்பணங்கள் கொடுத்தனர்.

    மேலும் பக்தர்கள் பலர் ஆற்றில் புனித நீராடி சாமி தரிசனம் செய்தனர். இதையொட்டி பவானி போலீசார் கோவில் பகுதியில் தற்காலிக் போலீஸ் நிலையம் அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

    இதே போல் தை அமாவாசையையொட்டி கொடுமுடி காவிரி ஆற்றில் இன்று காலை முதலே ஏராளமான பக்தர்கள் வந்து புனித நீராடினர். தொடர்ந்து பொதுமக்கள் பலர் திதி மற்றும் தர்ப்பணம் கொடுத்தனர். அதே போல் திருமணமாகாத பெண்கள் மற்றும் ஆண்களும் ஏராளமானோர் வந்து புனித நீராடி பரிகாரம் செய்தனர். தொடர்ந்து பக்தர்கள் பலர் மகுடேஸ்வரர் மற்றும் வீர நாராயண பெருமாளை வழிபட்டு சென்றனர். இதனால் கொடுமுடி பகுதியில் மக்கள் கூட்டம் அலை மோதியது.

    தை அமாவாசையையொட்டி சத்தியமங்கலம் அருகே உள்ள பண்ணாரி யம்மன் கோவிலில் இன்று அதிகாலை அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

    இதையொட்டி ஈரோடு மாவட்ட பக்தர்கள் மட்டு மின்றி மாநிலத்தின் பல பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் பலர் வந்து சாமி தரிசனம் செய்தனர். மேலும் கர்நாடகா மற்றும் கேரளா மாநில பக்தர்கள் பலரும் கோவிலலுக்கு வந்து அம்ம னை வழிபட்டனர். இதனால் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலை மோதியது.

    • ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினமான இன்று உள்ளூர், வெளியூர் மற்றும் வெளி மாநில ஐயப்ப பக்தர்கள் வருகை அதிக அளவில் காணப்பட்டது.
    • பவானி சங்கமேஸ்வரர் கோவில் பகுதியில் பல்வேறு இடங்களில் ஐயப்ப பக்தர்கள் கூட்டம் நிறைந்து காணப்பட்டது.

    பவானி:

    பவானி நகரில் பிரசித்தி பெற்ற கோவிலாக வேதநாயகி உடனமர் சங்கமேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு பின்னால் இரட்டை விநாயகர் படித்துறை பகுதியில் காவிரி பவானி மற்றும் அமுத நதி என மூன்று நதிகள் சங்கமிப்பதால் முக்கூடல் சங்கமம் தென்னகத்தின் காசி, பரிகார ஸ்தலம் என பல பெயர் பெற்று விளங்கி வருகிறது.

    ஆண்டுதோறும் பல்வேறு விழாக்கள் நடைபெற்று வரும் இந்த கோவிலில் கார்த்திகை மாதம் ஐயப்ப பக்தர்கள் மாதமாகவே கருதப்படுகிறது.

    இந்த கார்த்திகை மாதம் ஐயப்ப பக்தர்கள் பலர் மாலை அணிவித்து ஐயப்ப சுவாமிக்கு விரதத்தை தொடங்கி வழிபாடு மேற்கொண்டு வருகின்றனர்.

    அதேபோல், கேரளாவில் உள்ள ஐயப்ப சுவாமி கோவிலுக்கு செல்லும் வெளிமாநில பக்தர்கள் ஐயப்பன் கோவிலுக்கு செல்லும் முன்பு பவானி சங்கமேஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்வது வழக்கம்.

    இதனால், ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினமான இன்று உள்ளூர், வெளியூர் மற்றும் வெளி மாநில ஐயப்ப பக்தர்கள் வருகை அதிக அளவில் காணப்பட்டது. இதனால் பவானி சங்கமேஸ்வரர் கோவில் பகுதியில் பல்வேறு இடங்களில் ஐயப்ப பக்தர்கள் கூட்டம் நிறைந்து காணப்பட்டது.

    • பண்ணாரியம்மன் கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர்.
    • பண்ணாரியம்மன் கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர்.

    பவானி நகரில் பிரசித்தி பெற்ற கோவிலாக சங்கமேஸ்வரர் கோவில் விளங்கி வருகிறது.

    இக்கோவிலின் பின்பகுதியில் காவிரி, பவானி மற்றும் கண்ணுக்கு புலப்படாத அமுத நதி என 3 நதிகள் சங்கமிப்பதால் முக்கூடல் சங்கமம், தென்ன கத்தின் காசி, பரிகார ஸ்தலம் என பல பெயர் பெற்று விளங்கி வருகிறது.

    ஆண்டு தோறும் பல்வேறு விழாக்கள் நடைபெற்று வரும் நிலையில் இரட்டை விநாயகர் சன்னதி படித்துறை பகுதியில் உள்ள கூடுதுறையில் பொது மக்கள் பக்தர்கள் புனித நீராடி தங்கள் குடும்பத்தில் இறந்த முன்னோர்களுக்கு அமாவாசை அன்று திதி தர்ப்பணம், எள்ளும், தண்ணீரில் விடுதல் போன்ற பல்வேறு பரிகார பூஜைகள் செய்து வழக்கம்.

    இந்த நிலையில் இன்று கார்த்திகை மாத அமாவாசை தினத்தை முன்னிட்டு உள்ளூர், வெளியூர் பக்தர்கள் மற்றும் வெளி மாநில ஐயப்ப பக்தர்கள் என பலர் பவானி கூடுதுறையில் புனித நீராடி சாமி தரிசனம் செய்து வழிபாடு மேற்கொண்டனர்.

    பரிகார பூஜைகளை செய்ய உள்ளூர், வெளியூர் பக்தர்களும் அதே போல் சாமி தரிசனம் செய்ய ஐயப்ப பக்தர்களும் அதிக அளவில் காணப்பட்டதால் கூடுதுறை பகுதி முழுவதும் கூட்டம் அதிகளவில் நிறைந்து காணப்பட்டது.

    இதனையடுத்து பவானி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

    கார்த்திகை மாத அமாவாசையையொட்டி சத்திய மங்கலம் அடுத்த பண்ணாரியம்மன் கோவிலில் இன்று அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்தனர். மேலும் கர்நாடகா மாநில பக்தர்களும் கோவிலுக்கு வந்து அம்மனை வழிபட்டனர்.

    மேலும் சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்களும் இன்று காலை அதிகளவில் வந்திருந்தனர். இதனால் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து அம்மனை வழிபட்டு சென்றனர். இதையொட்டி பண்ணாரியம்மன் கோவிலில் பக்தர்களின் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது.

    • பவானி நகரில் பிரசித்தி பெற்ற கோவிலாக வேதநாயகி உடனமர் சங்கமேஸ்வரர் கோவில் விளங்கி வருகிறது.
    • கார்த்திகை மாதத்தையொட்டியும், இன்று விடுமுறை தினம் என்பதாலும் ஏராளமான ஐயப்ப பக்தர்கள், பொதுமக்கள் பவானி கூடுதுறையில் புனித நீராடினர்.

    பவானி:

    பவானி கூடுதுறையில் இன்று ஏராளமான ஐயப்ப பக்தர்கள் புனித நீராடி சாமி தரிசனம் செய்து வழிபாடு மேற்கொண்டனர்.

    பவானி நகரில் பிரசித்தி பெற்ற கோவிலாக வேதநாயகி உடனமர் சங்கமேஸ்வரர் கோவில் விளங்கி வருகிறது.

    இந்த கோவிலுக்கு பின்னால் உள்ள இரட்டை விநாயகர் படித்துறை பகுதியில் காவிரி பவானி மற்றும் அமுத நதி என மூன்று நதிகள் சங்கமிப்பதால் முக்கூடல் சங்கமம், தென்னகத்தின் காசி, பரிகார ஸ்தலம் என பல பெயர் பெற்று விளங்கி வருகிறது.

    ஆண்டுதோறும் பல்வேறு விழாக்கள் நடைபெற்று வரும் இந்த கோவிலில் ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் உள்ளூர், வெளியூர் வெளிமாநில ஐயப்ப பக்தர்கள் பலரும் அதிகாலை முதலே பவானி கூடுதுறை காவிரி ஆற்றில் புனித நீராடி சாமி தரிசனம் செய்து வழிபாடு மேற்கொண்டு செல்வார்கள்.

    அதேபோல், தமிழ்நாடு கர்நாடகா ஆந்திரா போன்ற பகுதிகளில் இருந்தும் ஏராளமான ஐயப்ப பக்தர்கள் கோவிலுக்கு செல்லும்போது இங்கு உள்ள சங்கமேஸ்வரர் சாமியை தரிசனம் செய்து வழிபாடு மேற்கொண்டு செல்வது வழக்கம்.

    அதன்படி கார்த்திகை மாதத்தையொட்டியும், இன்று விடுமுறை தினம் என்பதாலும் ஏராளமான ஐயப்ப பக்தர்கள், பொதுமக்கள் பவானி கூடுதுறையில் புனித நீராடினர்.

    • கூடுதுறை பகுதியில் இன்று ஏராளமான உள்ளூர் வெளியூர் பக்தர்கள் காவிரி ஆற்றில் புனித நீராடி பரிகாரங்கள் செய்து வழிபாடு மேற்கொண்டு சென்றனர்.
    • கடந்த இரு நாட்களாக மழையின் காரணமாக கூடுதுறை பகுதி கூட்டம் இன்றி காணப்பட்ட நிலையில் இன்று சற்று கூட்டம் நிறைந்து காணப்பட்டது.

    பவானி:

    பவானி சங்கமேஸ்வரர் கோவில் பின்னால் உள்ள கூடுதுறை பகுதியில் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினமான இன்று ஏராளமான உள்ளூர் வெளியூர் பக்தர்கள் காவிரி ஆற்றில் புனித நீராடி பரிகாரங்கள் செய்து வழிபாடு மேற்கொண்டு சென்றனர்.

    வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்ததை தொட ர்ந்து கடந்த 2 நாட்களாக பவானி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் சாரல் மழை முதல் மிதமான மழை மற்றும் கனமழை கொட்டி தீர்த்தது.

    இதனால் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்க ப்பட்ட நிலையில் பொது மக்கள் பலரும் தங்கள் வீடுகளில் முடங்கிக் கிடந்தனர்.

    இந்நிலையில் விடுமுறை நாளான இன்று காலை பவானி சங்கமேஸ்வரர் கோவில் பின்பகுதியில் உள்ள கூடுதுறை காவேரி, பவானி, அமுதநதி கூடும் முக்கூடல் சங்கத்தில் உள்ளூர், வெளியூர் பகுதியில் இருந்து ஏராள மான பக்தர்கள் வருகை தந்து காவிரி ஆற்றில் புனித நீராடி தங்கள் குடும்பத்தில் இறந்த முன்னோர்களுக்கு திதி தர்ப்பணம், பிண்டம் விடுதல் போன்ற பரிகார பூஜைகள் செய்து சாமி வழிபாடு மேற்கொண்டு சென்றனர்.

    கடந்த இரு நாட்களாக மழையின் காரணமாக கூடுதுறை பகுதி கூட்டம் இன்றி காணப்பட்ட நிலையில் இன்று சற்று கூட்டம் நிறைந்து காணப்பட்டது.

    • பவானி கூடுதுறை காவரி ஆற்றில் இரு கரைகளையும் தொட்டப்படி தண்ணீர் சென்று வருகிறது.
    • கூடுதுறை படிதுறை படிக்கட்டுகளை மூழ்கியபடி கரை வரை தண்ணீர் பெருக்கெடுத்து செல்கிறது.

    பவானி:

    ஈரோடு மாவட்டம் பவானி கூடுதுறை சிறந்த பரிகார தலமாக திகழ்வதால் தினமும் ஏராளமான பொதுமக்கள் வந்து செல்கிறார்கள்.

    மேலும் அமாவாசை, பவுர்ணமி மற்றும் விஷேச நாட்களில் ஆயிரக்கணக்கான பொது மக்கள் கூடுதுறைக்கு புனித நீராடி திதி, தர்ப்பணம் கொடுத்து செல்வார்கள். இதையொட்டி தமிழகம் மட்டுமின்றி வெளி மாநில பக்தர்களும் கூடுதுறைக்கு வந்து புனித நீராடி சங்க மேஸ்வரரரை வழிபடுவது வழக்கம்.

    இந்த நிலையில் சேலம் மாவட்டம் மேட்டூர் அணைக்கு கர்நாடக மாநிலங்களில் இருந்து அதிகளவு தண்ணீர் வருகிறது. இதனால் அணை முழு கொள்ளளவை எட்டியது

    இதையொட்டி மேட்டூர் அணையில் இருந்து உபரி நீர் 1 லட்சத்து 80 ஆயிரம் கன அடிக்கு மேல் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. இதனால் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. மேலும் அம்மாபேட்டை, பவானி உளபட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள காவிரி ஆற்றில் வௌளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது.

    இதே போல் பவானி கூடுதுறை காவரி ஆற்றில் இரு கரைகளையும் தொட்டப்படி தண்ணீர் சென்று வருகிறது. மேலும் கூடுதுறை படிதுறை படிக்கட்டுகளை மூழ்கியபடி கரை வரை தண்ணீர் பெருக்கெடுத்து செல்கிறது.

    மேலும் பரிகாரம் செய்யும் மண்டபத்திலும் தண்ணீர் புகுந்து சூழ்ந்தது.

    இதையொட்டி பாதுகாப்பு கருதி மாவட்ட நிர்வாகத்தின் உத்தரப்படி கோவில் அதிகாரிகள் சார்பில் பவானி கூடுதுறையில் புனித நீராட, திதி மற்றும் தர்ப்பணம் கொடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் கூடுதுறை காவிரி ஆற்றுக்கு செல்லும் வழி அடைக்கப்பட்டு உள்ளது. மேலும் அந்த பகுதிக்கு பொதுமக்கள் செல்லாத படி அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் பொதுமக்கள் பலர் கூடுதுறைக்கு வந்தனர். புனித நீராட தடை விதிக்கப்பட்டு நுழைவு வாயில் அடைப்பட்டு இருந்ததால் ஒரு சிலர் வாகனங்கள் நிறுத்தும் இடத்தில் தங்கள் முன்னோருக்கு பரிகாரம் செய்தனர். அவர்கள் புனித நீராட முடியாததால் ஏமாற்றம் அடைந்தனர்.

    அதே நேரத்தில் பக்தர்கள் வழக்கம் போல சங்க மேஸ்வரர் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர்.

    • ஈரோடு பவானி கூடுதுறை சிறந்த பரிகார தலமாக விளங்கி வருகிறது.
    • அதிகாலை முதலே ஆயிரக்கணக்கான பொதுமக்கள் குவிந்தனர்.

    புரட்டாசி மாதத்தில் வரும் அமாவாசையை மகாளய அமாவாசையாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி நீர் நிலைகளில் பொது மக்கள் புனித நீராடி முன்னேர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது வழக்கம்.

    ஈரோடு மாவட்டம் பவானி கூடுதுறை சிறந்த பரிகார தலமாக விளங்கி வருகிறது. இதனால் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்தவர்கள் மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் கூடுதுறைக்கு தினமும் ஏராளமான பொதுமக்கள் வந்து ஆற்றில் புனித நீராடி சங்கமேஸ்வர ரை வழிபட்டு வருகிறார்கள்.

    மேலும் கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, கேரளா மற்றும் வட மாநிலங்களை சேர்ந்த பக்தர்களும் அதிகளவில் வந்து நீராடி வழிபட்டு செல்கிறார்கள்.

    இந்த நிலையில் புரட்டாசி மாத மகாளய அமாவாசை இன்று ஏராளமானோர் பொதுமக்கள் பவானி கூடுதுறைக்கு வந்திருந்தனர். அதிகாலை முதலே ஆயிரக்கணக்கான பொதுமக்கள் குவிந்தனர். அவர்கள் ஆற்றில் புனித நீராடி முன்னோர்களுக்கு திதி, எள்ளும் தண்ணியும் விடுதல், பிண்டம் விடுதல், பித்ரு பூஜை, தர்ப்பணம் போன்ற பரிகாரங்களை செய்தனர். தொடர்ந்து பொது மக்கள் சங்கமேஸ்வரரை தரிசனம் செய்தனர்.

    நேரம் செல்ல செல்ல பக்தர்களின் கூட்டம் அலை மோதியது. ஈரோடு, சேலம், நாமக்கல், கோவை, சென்னை, கரூர் உள்பட பல்வேறு மாவட்ட பக்தர்கள் மற்றும் வெளி மாநில பக்தர்கள் என லட்சக்கணக்கான பக்தர்கள் கூடுதுறையில் குவிந்து புனித நீராடினர்.

    இதை யொட்டி ஆண்கள் மற்றும் பெண்கள் குளிப்பதற்கு தனி, தனியாக தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் கோவில் வளாகத்தில் தடுப்புகள் அமைக்கப்பட்டு பொது மக்கள் வரிசையாக சென்று வழிபட்டனர். இதனால் பவானி நகரம் முழுவதும் பக்தர்களின் கூட்டமாக காணப்பட்டது.

    அசம்பா வித சம்பவங்கள் நடை பெறாமல் இருக்கும் பொருட்டு கோவில் நிர்வாகத்தின் மூலம் பல்வேறு இடங்களில் 50-க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கக்கபட்டு வருகிறது.

    கோவிலுக்கு செல்லும் நுழைவு வாயில் பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு பொதுமக்கள் கண்காணிக்கப்பட்டு வருகிறது. மேலும் புனித நீராடும் பகுதியில் போலீசார் ஒலி பெருக்கி மூலம் பாதுகாப்பு வழிமுறைகள் குறித்து வழியுறுத்தினர்.

    தீயணைப்பு வீரர்கள் மற்றும் அந்த பகுதியை சேர்ந்த மீனவர்கள் படகுகள் மூலம் ஆற்றில் சென்று கண்காணித்து ஆழமான பகுதிக்கு செல்ல வேண்டாம் அறிவுறுத்தி வருகிறார்கள்.

    இதனால் பவானி நகரம் முழுவதும் கடும் போக்கு வரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் வாகனங்கள் ஊர்ந்து சென்றன. ஆயிரக்கணக்கான வாகனங்களில் பொதுமக்கள் வந்ததால் கோவில் வளாகத்தில் வாகனங்கள் அணிவகுத்தன.

    மேலும் வெளியூர்களில் வந்த வாகனங்கள் பவானி பெண்கள் மேல்நிலை ப்பள்ளி, செல்லாண்டி யம்மன் கோவில் வளாகம் மற்றும் தேர் வீதி உள்பட பல் இடங்களில் வாகனங்கள் நிறுத்த ஏற்பாடு செய்யப்பட்டது.

    இதனால் கனரக வாகனங்கள் பவானி நகருக்குள் செல்ல தடை விதிக்கப்பட்டது. இதையொட்டி கனரக வாகங்கள் பவானி புதிய பஸ் நிலையம், காவிரி ஆற்று பாலம் மற்றும் குமாரபாளையம் வழியாக சென்றன.

    பவானி துணை போலீஸ் சூப்பிரண்டு அமிர்தவர்ஷினி மற்றும் இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜ் தலைமையில் 100-க்கு மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்கள் நகரம் முழுவதும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு கண்காணித்து வருகிறார்கள்.

    இதே போல் கொடுமுடி காவிரி ஆற்றில் இன்று அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் புனித நீராடினர். ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து முன்னோர்களுக்கு திதி கொடுத்தனர். தொடர்ந்து அவர்கள் மகுடேஸ்வரரை வழிபட்டனர். இதே போல் கருங்கல் பாளையம் காவிரி ஆற்றிலும் பக்தர்கள் பலர் திதி மற்றும் தர்ப்பணம் கொடுத்தனர்.

    ×