search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புனித சவேரியார்"

    நாகர்கோவில் கோட்டார் புனித சவேரியார் பேராலய திருவிழா இன்று மாலை கொடியேற்றத்துடன் தொடங்கி அடுத்த மாதம் (டிசம்பர்) 3-ந் தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது.
    நாகர்கோவில் கோட்டாரில் உள்ள புனித சவேரியார் பேராலய திருவிழா ஆண்டுதோறும் நவம்பர் 24-ந் தேதி தொடங்கி 10 நாட்கள் நடைபெறுவது வழக்கம். இதே போல இந்த ஆண்டும் வருகிற இன்று மாலை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அடுத்த மாதம் (டிசம்பர்) 3-ந் தேதி வரை 10 நாட்கள் திருவிழா நடக்கிறது.

    தொடர்ந்து விழா நாட்களில் காலையில் திருப்பலியும், மாலையில் ஆடம்பர கூட்டுத் திருப்பலியும் நடக்கிறது. விழாவின் முக்கிய நிகழ்வான தேர் பவனி 9-ந் தேதி இரவு 10.30 மணிக்கு நடைபெற உள்ளது. இதே போல 10-ந் தேதி காலையிலும் தேர் பவனி நடக்கும்.

    கொரோனா காரணமாக கடந்த ஆண்டு போலவே இந்த ஆண்டும் அனைவரும் முக கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைபிடித்து இறைவழிபாடு செய்ய வேண்டும் என்று கேட்டுகொள்கிறோம்.
    நாகர்கோவில் கோட்டார் புனித சவேரியார் பேராலய திருவிழா வருகிற 24- ந்தேதி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அடுத்த மாதம் (டிசம்பர்) 3-ந் தேதி வரை 10 நாட்கள் திருவிழா நடக்கிறது.
    நாகர்கோவில் கோட்டாரில் உள்ள புனித சவேரியார் பேராலய திருவிழா ஆண்டுதோறும் நவம்பர் 24-ந் தேதி தொடங்கி 10 நாட்கள் நடைபெறுவது வழக்கம். இதே போல இந்த ஆண்டும் வருகிற 24- ந் தேதி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அடுத்த மாதம் (டிசம்பர்) 3-ந் தேதி வரை 10 நாட்கள் திருவிழா நடக்கிறது. இந்த திருவிழா தொடர்பாக பங்குதந்தை ஸ்டான்லி சகாயசீலன் நேற்று பேராலய வளாகத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது கூறியதாவது:-

    குமரி மாவட்டம் இயற்கை எழில் கொஞ்சும் மாவட்டமாகும். இங்குள்ள கோட்டார் என்னும் இடத்துக்கு புனித சவேரியார் வந்தார். மக்களுடைய அன்றாட வாழ்க்கையில் இணைந்த அவர் சாதி, மத பேதமின்றி அனைத்து மக்களுக்காகவும் பணியாற்றினார். அதோடு மக்களோடு மக்களாக கலாசாரத்திலும், பண்பாட்டிலும் ஒன்றாகினார். அப்படிப்பட்ட புனித சவேரியாருக்கு இங்கு பேராலயம் கட்டப்பட்டுள்ளது. இந்த பேராலய திருவிழா வருகிற 24-ந் தேதி தொடங்கி 10 நாட்கள் நடக்கிறது.

    முதல் நாள் திருவிழா காவல்துறை சார்பில் நடைபெறுகிறது. அன்றைய தினம் காலையில் திருப்பலியும், மாலை 6 மணிக்கு திருக்கொடியேற்றமும் நடக்கிறது. பின்னர் ஆடம்பர கூட்டுத்திருப்பலி நடக்க உள்ளது. தொடர்ந்து விழா நாட்களில் காலையில் திருப்பலியும், மாலையில் ஆடம்பர கூட்டுத் திருப்பலியும் நடக்கிறது. விழாவின் முக்கிய நிகழ்வான தேர் பவனி 9-ந் தேதி இரவு 10.30 மணிக்கு நடைபெற உள்ளது. இதே போல 10-ந் தேதி காலையிலும் தேர் பவனி நடக்கும்.

    திருவிழா தொடர்பாக கலெக்டர் அரவிந்தை நேரில் சந்தித்து பேசினோம். அப்போது வழிபாடுகளுக்கு எந்த தடையும் இல்லை என்று அவர் கூறினார். மேலும் கொரோனா காரணமாக கடந்த ஆண்டு போலவே இந்த ஆண்டும் அனைவரும் முக கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைபிடிப்பதாக உறுதி அளித்தோம். மேலும் திருவிழாவையொட்டி டிசம்பர் 3-ந் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்க கோரிக்கை வைத்து உள்ளோம்.

    இதே போல போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணனையும் சந்தித்து பேசினோம். அப்போது ஏதும் அசம்பாவித சம்பவம் நடக்காதபடி பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்து தருவதாக அவர் கூறினார். மேலும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளையும் நேரில் சந்தித்து பேசி உள்ளோம். திருவிழாவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன.

    இந்த முறை திருவிழாவில் அனைத்து வழிபாடுகளும் நடக்கும். ஆனால் பொதுக்கூட்டம், கலை நிகழ்ச்சி மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்குதல் போன்ற நிகழ்ச்சிகள் எதுவும் நடக்காது. கடந்த ஆண்டு தேர் பவனி ஆலய வளாகத்துக்கு உள்ளேயே நடந்தது. இதனால் புனித சவேரியார் தங்களது வீட்டுக்கு வரவில்லையே என்று மக்கள் மத்தியில் ஆதங்கம் ஏற்பட்டது. எனவே இந்த ஆண்டு தேர் பவனி வழக்கம் போல நடக்க வேண்டும் என்று கோரி உள்ளோம். குறைவான ஆட்களுடன் வழக்கமான இடங்களுக்கு தேர் பவனி நடத்த ஆலோசித்து உள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின் போது உதவி பங்குதந்தை பிராங்கோ பிரான்சிஸ், கோட்டார் வட்டார முதல்வர் சகாய ஆனந்த், பங்கு பேரவை துணை தலைவர் சகாய திலகராஜ், செயலாளர் அந்தோணி சவரிமுத்து, பொருளாளர் செலுக்கஸ், துணை செயலாளர் ஆஸ்டின் ஆகியோர் உடன் இருந்தனர்.
    நாகர்கோவில் கோட்டார் புனித சவேரியார் பேராலயத்தில் புனித வெள்ளியையொட்டி சிலுவை பாதை வழிபாடு நடந்தது.
    இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு இறந்த தினம் புனித வெள்ளியாக கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த ஆண்டு புனித வெள்ளி தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி கிறிஸ்தவ ஆலயங்களில் சிறப்பு பிரார்த்தனைகள், சிலுவை பாதை வழிபாடு போன்றவை நடந்தன.

    நாகர்கோவில் கோட்டார் புனித சவேரியார் பேராலயத்தில் புனித வெள்ளியையொட்டி நேற்று காலை முதலே சிறப்பு ஆராதனைகள் நடந்தது.

    பின்னர் இயேசுவின் பாடுகளை தியானிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. ஆயர் நசரேன் சூசை தலைமை தாங்கி சிலுவைக்கு முத்தமிட்டு வழிபாட்டை தொடங்கி வைத்தார். தொடர்ந்து ஏராளமானோர் சிலுவையை முத்தமிட்டு காணிக்கை செலுத்தினர்.

    இதையடுத்து இரவு 8 மணிக்கு ஆயர் நசரேன் சூசை தலைமையில் சிலுவை பாதை நடந்தது. இயேசு கிறிஸ்து போல் வேடம் அணிந்த ஒருவர் சிலுவையை சுமந்து சென்றார். அவரை பின்தொடர்ந்து, பங்கு மக்கள் பாடல்கள் பாடியபடி சென்று ஆலயத்தை சுற்றி வந்தனர்.

    நிகழ்ச்சியில், மறைமாவட்ட அருட்பணியாளர் மைக்கேல் ஏஞ்சல், பங்கு தந்தை கிரேஷ் குணப்பால் ஆராச்சி, இணை பங்குத்தந்தை ஆன்றனி பிரபு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    மார்த்தாண்டம் சேகர சி.எஸ்.ஐ. ஆலயத்தில் தலைமை போதகர் யோவாஸ் தலைமையில் சிறப்பு ஆராதனை நடைபெற்றது. மார்த்தாண்டம் கிறிஸ்து ராஜா ஆலயத்தில் பங்கு தந்தை ஜோஸ் பிரைட் தலைமையில் சிலுவைப்பாதை நிகழ்ச்சி நடைபெற்றது. இதுபோல் மலங்கரை கத்தோலிக்க ஆலயங்களிலும், சீரோமலபார் ஆலயங்களிலும் சிலுவை பாதை மற்றும் வழிபாடுகள் நடந்தது.
    திருச்சி தென்னூர் பிஷப்குளம் சவேரியார் கோவில்தெருவில் அமைந்துள்ள புனித சவேரியார் ஆலய திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேர்பவனி நடைபெற்றது.
    திருச்சி தென்னூர் பிஷப்குளம் சவேரியார் கோவில்தெருவில் அமைந்துள்ள புனித சவேரியார் ஆலய திருவிழா கடந்த 7-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. நேற்று முன்தினம் காலை திருவிழா திருப்பலி நடைபெற்றது.

    இதனை தொடர்ந்து புனித சவேரியாரின் அலங்கார தேர்பவனி அன்று இரவு நடைபெற்றது. கே.என்.நேரு எம்.எல்.ஏ. தேர்பவனியை தொடங்கி வைத்தார்.

    ஆலயத்தில் இருந்து புறப்பட்ட தேர்பவனி பட்டாபிராமன்சாலை, அரசு மருத்துவமனை, புத்தூர் நால்ரோடு வழியாக சென்று மீண்டும் ஆலயத்தை வந்தடைந்தது. இதில் சவேரியார் கோவில்தெரு நிர்வாகிகள் மற்றும் விழாக்குழுவினர் திரளாக கலந்து கொண்டனர். 
    குமரி மாவட்ட கத்தோலிக்க தேவாலயங்களின் தலைமை தேவாலயமாக கிறிஸ்தவர்களால் போற்றப்படுவது கோட்டார் புனித சவேரியார் பேராலயம் ஆகும்.
    குமரி மாவட்ட கத்தோலிக்க தேவாலயங்களின் தலைமை தேவாலயமாக கிறிஸ்தவர்களால் போற்றப்படுவது கோட்டார் புனித சவேரியார் பேராலயம் ஆகும். கேட்ட வரங்களையெல்லாம் புனித சவேரியார் அருள்வதாக பக்தர்கள் நம்பிக்கை. அதனால்தான் புனித சவேரியாரை ‘கேட்ட வரம் தரும் கோட்டார் சவேரியார்‘ என்று வாயார புகழ்கிறார்கள்.

    புனித சவேரியார்

    கிறிஸ்தவர்களின் இதய ஆசனத்தில் வீற்றிருக்கும் புனித சவேரியார், ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்தவர். அந்த நாட்டின் நவார் மாகாணத்தில் சேவியர் அரண்மனையில் 1506-ம் ஆண்டு பிறந்தார். 1529-ம் ஆண்டு புனித இஞ்ஞாசியாரை சந்தித்தபிறகுதான் சவேரியாரின் வாழ்க்கை ஆன்மிகத்துக்கு திரும்பியது. அதைத்தொடர்ந்து 1537-ம் ஆண்டு சவேரியார் குருப்பட்டம் பெற்றார். 1542-ம் ஆண்டு அவர் கோவாவுக்கு வந்தார்.

    ஏழைகளிடம் மிகுந்த இரக்கம் காட்டினார். அவரது வார்த்தைகளும், செயல்பாடுகளும் மக்களின் மனதில் நீங்கா இடத்தை அவருக்கு பெற்றுத்தந்தன. அவர் பாடிய கத்தோலிக்க பாடல்கள் மக்களின் எண்ண ஓட்டங்களில் இடைவிடாது தவழ்ந்தன.

    புனித சவேரியார் கோவாவில் இருந்து, கடற்கரை ஓரமாக தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மணப்பாட்டுக்கு சென்று மக்களுக்கு போதனை நடத்தினார். அங்கிருந்து அடிக்கடி நாகர்கோவில் கோட்டாருக்கு அவரது பயணம் அமைந்தது.

    மன்னருக்கு உதவி

    அந்த நேரத்தில்தான் திருவிதாங்கூர் மன்னருக்கும், பாண்டிய மன்னருக்கும் போர் நடந்தது. இந்த போரில் திருவிதாங்கூர் மன்னர் வெற்றிபெற புனித சவேரியார் உதவி புரிந்தார். இதனால் திருவிதாங்கூர் மன்னர் அளவில்லா மகிழ்ச்சி அடைந்தார். தனது வெற்றிக்கு கை கொடுத்த புனித சவேரியாரை அவரும் போற்றினார். திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் நற்செய்தியை மக்களுக்கு அறிவிக்க புனித சவேரியாருக்கு அனுமதி வழங்கப்பட்டது. தற்போதுள்ள சவேரியார் பேராலயத்தைச் சுற்றி ஒரு சிறிய ஆலயம் கட்ட நிலத்தையும், பணத்தையும் மன்னர் பரிசாக கொடுத்தார். அதைத்தொடர்ந்து கோட்டாரை மையமாகக் கொண்டு நற்செய்தி பணிகளை சவேரியார் மேற்கொண்டார்.

    அதன்பின்னர் புனித சவேரியார் பசிபிக் கடல் தீவுகள், இலங்கை, ஜப்பான் போன்ற நாடுகளுக்கு சென்றார். இறுதியாக சீனாவுக்கு செல்லும் வழியில் சான்சியன் தீவில் கடுமையான காய்ச்சலால் பாதிக்கப்பட்டார். இந்த நிலையில் 1552-ம் ஆண்டு டிசம்பர் 3-ந் தேதி உயிர்நீத்தார்.

    அழியாத உடல்

    அவரது புனித உடல் பல மாதங்களுக்குப் பிறகும் அழிவுறாமல் அப்படியே இருந்ததால் அனைவரும் ஆச்சரியப்பட்டனர். இதனால் அதை பாதுகாக்க முடிவு செய்தனர். அதன்படி கோவாவில் நல்ல இயேசு ஆலயத்தில் புனித சவேரியாரின் உடல் இன்றும் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

    இறைப்பணி வாழ்வுக்காக லட்சக்கணக்கான மைல்கள் தூரம் நடந்து, நூற்றுக்கும் மேற்பட்ட ஊர்களிலும், தீவுகளிலும் இயேசுவின் நற்செய்தியை போதித்து, இறைஊழியம் செய்து பெரும்சாதனை புரிந்த சவேரியாருக்கு 1622-ம் ஆண்டு புனிதர் பட்டம் வழங்கி கவுரவிக்கப்பட்டார்.

    பேராலயம்

    புனிதர் பட்டம் பெற்ற சவேரியாருக்கு முதல் ஆலயம், நாகர்கோவில் கோட்டார் ஆலயமாகவே இருக்க வேண்டும் என்பது இந்த மறைமாவட்டத்து மக்களின் விருப்பமாக இருந்தது. அதை நிறைவேற்றினார்கள். உலகில் புனித சவேரியாருக்கு கட்டப்பட்ட முதல் ஆலயமாக கோட்டார் ஆலயம் விளங்கி வருகிறது.

    கோட்டார் மறைமாவட்ட பேராலயமாக திகழும் இந்த ஆலயத்துக்கு பல்லாயிரக்கணக்கான மக்கள் வந்து பிரார்த்தனை நடத்திச் செல்கிறார்கள். அவர்களது வேண்டுதல்கள் நிறைவேறுகின்றன.

    திருவிழாவில் மக்களுக்கு சிறப்பு

    சவேரியார் ஆலயம் கட்டும்போது நாகர்கோவில் அறுகுவிளை மற்றும் ராஜாவூர் மக்கள் அக்காலத்தில் சம்பளம் வாங்காமல் வேலை செய்தனர். இதன்காரணமாக ஆண்டுதோறும் திருவிழாவின்போது இவ்வூர்களின் மக்கள் சிறப்பிக்கப்படுகிறார்கள்.

    கொடிபட்டத்தில் கட்டுவதற்கான பூக்கள் மற்றும் பூ மாலைகளை ராஜாவூரில் இருந்தும், நாகர்கோவில் அறுகுவிளையில் இருந்தும் மேளதாளங்கள், பேண்டு வாத்தியங்கள் முழங்க ஊர்வலமாக புனித சவேரியார் பேராலயத்துக்கு கொண்டு வரப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது.

    தூய ஆரோபண மாதா ஆலயம்

    கி.பி. 1542 முதல் கி.பி. 1552 வரையுள்ள காலகட்டத்தில் புனித சவேரியார் கோட்டாரில் மறைபணியாற்றினார். அப்போது அவர் கோட்டாரில் தூய ஆரோபண மாதா ஆலயம் ஒன்றை எழுப்பினார். அந்த ஆலயத்தில் அவர் தனது புனிதம் மிக்க கரங்களால் திருப்பலி நிறைவேற்றி வந்தார்.

    கோட்டார் புனித சவேரியார் பேராலயத்தின் ஒரு பகுதியில் தூய ஆரோபண மாதா ஆலயம் இன்றும் இருக்கிறது. மக்கள் அந்த ஆலயத்தில் உள்ள மாதா சொரூபத்தின் முன் அமர்ந்து வேண்டுதல் செய்தும், வணக்கம் செலுத்தியும் வருகிறார்கள். புனித சவேரியார் இந்தியாவுக்கு வந்ததின் 450-வது ஆண்டு நினைவாக அவர் கட்டியெழுப்பிய தூய ஆரோபண அன்னை ஆலயத்தில் முழுநேர நற்கருணை ஆராதனை 1-5-1994 அன்று தொடங்கப்பட்டது.

    புனிதர்களின் திருப்பண்டம் இடம்பெற்ற பேராலயம்

    கோட்டார் புனித சவேரியார் பேராலயம் பல்வேறு சிறப்புகளைக் கொண்டு திகழ்கிறது. 1605-ம் ஆண்டில் மூவொரு இறைவன் ஆலயமானது புனித சவேரியாருக்கு அர்ப்பணிக்கப்பட்டது. தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு கேட்ட வரங்களை அள்ளித்தருபவர் என்று மக்களால் போற்றப்படும் புனித சவேரியாரின் வாழ்க்கைப் பயணம் திசைமாற காரணமாக இருந்தவர் புனித இஞ்ஞாசியார்.

    எனவே புனித சவேரியார் பேராலயத்தில் புனித இஞ்ஞாசியார் மற்றும் புனித சவேரியாரின் திருப்பண்டங்கள் வைக்கப்பட்டுள்ளன. 
    நாகர்கோவில் கோட்டார் புனித சவேரியார் பேராலய 10-ம் திருவிழாவையொட்டி அலங்கரிக்கப்பட்ட 4 தேர்கள் பவனி நடந்தது. திருவிழாவை காண ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.
    நாகர்கோவில் கோட்டார் புனித சவேரியார் பேராலய 10 நாள் திருவிழா கடந்த 24-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் காலை மற்றும் மாலையில் திருப்பலி, ஆடம்பர கூட்டு திருப்பலி ஆகியவை நடந்தன. ஒவ்வொரு நாள் விழாவையும் ஒவ்வொரு அமைப்பினர் நடத்தினார்கள். விழாவில் கடைசி 3 நாட்கள் தேர் பவனி நடைபெறுவது வழக்கம்.

    அதே போல 8-ம் நாள் மற்றும் 9-ம் நாள் திருவிழாவன்று இரவில் தேர் பவனி நடந்தது. அப்போது தேரின் பின்னால் மக்கள் கும்பிடு நமஸ்கார நேர்ச்சை நிறைவேற்றினர். இந்த நிலையில் 10-ம் திருவிழா நேற்று பகலில் தேர் பவனி நடந்தது. அலங்கரிக்கப்பட்ட தேர்களில் மிக்கேல் அதிதூதர், புனித செபஸ்தியார், புனித சவேரியார் மற்றும் மாதா சொரூபங்கள் வைக்கப்பட்டு இருந்த 4 தேர்கள் வீதிகளில் வலம் வந்தது.

    பேராலய வளாகத்தில் இருந்து புறப்பட்ட தேர் வடிவீஸ்வரம், கம்பளம் சந்திப்பு, ரெயில்வே ரோடு சந்திப்பு வழியாக கேப் ரோட்டுக்கு வந்து பின்னர் மீண்டும் பேராலயம் சென்றது. அப்போது அந்தந்த பகுதி மக்கள் வீட்டை விட்டு வெளியே வந்து பிரார்த்தனை செய்தனர். கூட்டத்தின் மத்தியில் தேர் ஆடி அசைந்து சென்ற காட்சியை ஏராளமானவர்கள் பார்த்து ரசித்தனர். பின்னர் மாலையில் தேர்கள் மீண்டும் நிலைக்கு வந்தன. அதைத் தொடர்ந்து தேரில் திருப்பலி நடந்தது.

    முன்னதாக காலை 6 மணிக்கு புனித சவேரியார் பெருவிழா திருப்பலி கோட்டார் மறைமாவட்ட ஆயர் நசரேன் சூசை தலைமையில் நடந்தது. அதைத் தொடர்ந்து 8 மணிக்கு மலையாள திருப்பலி நடைபெற்றது.

    10-ம் திருவிழாவையொட்டி நேற்று குமரி மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை விடப்பட்டு இருந்தது. இதைத் தொடர்ந்து மாவட்டம் முழுவதிலும் இருந்து மக்கள் குடும்பம், குடும்பமாக புனித சவேரியார் பேராலயத்தில் குவிந்தனர். தேர் பவனியையொட்டி பேராலயம் அமைந்துள்ள கேப் ரோடு, செட்டிகுளம் சந்திப்பு ரோடுகளில் போக்குவரத்து முற்றிலுமாக தடை செய்யப்பட்டு இருந்தது. இதனால் பக்தர்கள் பேராலயத்துக்கு வந்து செல்ல வசதியாக இருந்தது. இந்த சாலைகளில் எல்லாம் ஏராளமான திருவிழா கடைகள் அமைக்கப்பட்டு இருந்தன. கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது. விழாவையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
    நாகர்கோவில் கோட்டார் புனித சவேரியார் பேராலய 9-ம் நாள் திருவிழாவையொட்டி தேர் பவனி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
    குமரி மாவட்டத்தில் உள்ள கத்தோலிக்க தேவாலயங்களில் பிரசித்தி பெற்றதாக கருதப்படும் கோட்டார் புனித சவேரியார் பேராலய திருவிழா கடந்த 24-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் திருப்பலி மற்றும் ஆடம்பர கூட்டு திருப்பலி நடைபெற்று வருகின்றன.

    திருவிழாவின் 8-ம் நாளான நேற்று முன்தினம் இரவு 10.30 மணிக்கு மேல் தேர் பவனி நடந்தது. தேரின் பின்னால் ஏராளமான பக்தர்கள் கும்பிடு நமஸ்கார நேர்ச்சை நிறைவேற்றினர்.

    இந்த நிலையில் 9-ம் நாள் திருவிழா நேற்று நடந்தது. விழாவையொட்டி மாலை 6.30 மணிக்கு சிறப்பு ஆராதனை, நற்கருணை ஆசீர் ஆகியவை நடைபெற்றன. கோட்டார் மறைமாவட்ட ஆயர் நசரேன் சூசை தலைமை தாங்கி மறையுரையாற்றினார். அதன்பிறகு இரவு 10.30 மணிக்கு தேர் பவனி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர். தேரில் நல்லமிளகு, உப்பு மற்றும் மலர் மாலைகள் வைத்து பக்தர்கள் வழிபட்டனர்.


    சவேரியார் பேராலய 9-ம் நாள் திருவிழாவான நேற்று இரவில் தேர் பவனி நடைபெற்ற போது எடுத்த படம்.

    இறுதி நாள் விழாவான இன்று (திங்கட்கிழமை) காலை 6 மணிக்கு நடைபெறும் புனித சவேரியார் பெருவிழா திருப்பலியில் கோட்டார் மறைமாவட்ட ஆயர் நசரேன் சூசை மறையுரையாற்றுகிறார். அதன்பிறகு 8 மணிக்கு மலையாள திருப்பலியும், 11 மணிக்கு தேர் பவனியும் நடைபெற உள்ளது. பின்னர் இரவு 7 மணிக்கு தேரில் ஆடம்பர கூட்டு திருப்பலி நடக்கிறது. 10-ம் நாள் திருவிழாவையொட்டி குமரி மாவட்டத்துக்கு இன்று விடுமுறை விடப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

    ஒவ்வொரு ஆண்டும் கோட்டார் புனித சவேரியார் பேராலய திருவிழாவையொட்டி கேப் ரோட்டில், செம்மாங்குடி ரோடு சந்திப்பில் இருந்து ரெயில்வே ரோடு சந்திப்பு வரை தற்காலிக கடைகள் அமைக்கப்படும். இதே போல இந்த ஆண்டும் கேப் ரோட்டில் அமைக்கப்பட்டிருந்த எண்ணற்ற கடைகளில் பொருட்கள் வாங்குவதற்காக மக்கள் குவிந்தனர். இதனால் சவேரியார் பேராலயத்தில் மக்கள் கூட்டம் அலைமோதியது.

    ரோட்டில் நடந்து செல்ல முடியாத அளவுக்கு மக்கள் கூட்டம் இருந்ததால் கடைகளில் வியாபாரம் படுஜோராக நடந்தது. மேலும் போக்குவரத்து மாற்றமும் செய்யப்பட்டு இருந்தது. 
    நாகர்கோவில் கோட்டார் சவேரியார் பேராலயத்தின் 10 நாள் திருவிழா கடந்த 24-ந் தேதி தொடங்கியது. 8-ம் நாள் திருவிழாவான இன்று (சனிக்கிழமை) மாலை தேர் பவனி நடைபெறுகிறது.
    நாகர்கோவில் கோட்டார் சவேரியார் பேராலயத்தின் 10 நாள் திருவிழா கடந்த 24-ந் தேதி தொடங்கியது. 7-ம் நாள் திருவிழாவான நேற்று மாலை 6.15 மணிக்கு கோட்டார் மறைமாவட்ட முன்னாள் ஆயர் பீட்டர் ரெமிஜியுஸ் தலைமையில் ஆடம்பர கூட்டுத்திருப்பலி நடைபெற்றது.

    8-ம் நாள் திருவிழாவான இன்று (சனிக்கிழமை) மாலை 6.15 மணிக்கு கோட்டார் மறைமாவட்ட முன்னாள் ஆயர் பீட்டர் ரெமிஜியுஸ் தலைமையில் ஆடம்பர கூட்டு திருப்பலியும், இரவு 10.30 மணிக்கு தேர் பவனியும் நடைபெறும்.

    நாளை (ஞாயிற்றுக்கிழமை) 9-ம் நாள் திருவிழா ஆகும். மாலை 6.30 மணிக்கு சிறப்பு ஆராதனை மற்றும் நற்கருணை ஆசீர் நடைபெறும். கோட்டார் மறை மாவட்ட ஆயர் நசரேன் சூசை தலைமை தாங்கி, மறையுரை ஆற்றுகிறார். அன்று இரவு 10.30 மணிக்கு தேர்பவனி நடக்கிறது.

    திருவிழாவின் இறுதி நாளான 3-ந் தேதி காலை 6 மணிக்கு புனித சவேரியார் பெருவிழா திருப்பலி ஆயர் நசரேன் சூசை தலைமையில் நிறைவேற்றப்படுகிறது. அதை தொடர்ந்து காலை 8 மணிக்கு மலையாள திருப்பலியும், 11 மணிக்கு தேர் பவனியும், இரவு 7 மணிக்கு ஆடம்பர கூட்டு திருப்பலியும் நடக்கிறது. 3-ந் தேதியன்று குமரி மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.


    கோட்டார் சவேரியார் ஆலயத்தில் நடந்த திருப்பலியில் பங்கேற்ற மாணவிகளை படத்தில் காணலாம்.

    நாகர்கோவில் நகர போக்குவரத்து ஒழுங்குப்பிரிவு போலீசார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    நாகர்கோவில் கோட்டார் புனித சவேரியார் பேராலய தேர் திருவிழாவை முன்னிட்டு, கன்னியாகுமரியில் இருந்து நாகர்கோவில் மார்க்கமாக வரும் அனைத்து வாகனங்களும் பீச்ரோடு, ஆயுதப்படை முகாம் ரோடு, பொன்னப்ப நாடார் காலனி, ராமன்புதூர், செட்டிகுளம் சந்திப்பு வழியாக செல்ல வேண்டும். வடசேரி மற்றும் அண்ணா பஸ் நிலையத்தில் இருந்து கன்னியாகுமரி மார்க்கத்தில் செல்லக்கூடிய அனைத்து வாகனங்களும் வேப்பமூடு சந்திப்பு, பொதுப்பணித்துறை அலுவலக சாலை, செட்டிகுளம் சந்திப்பு, இந்துக்கல்லூரி சாலை, பீச்ரோடு சந்திப்பு வழியாக செல்ல வேண்டும்.

    இந்த போக்குவரத்து மாற்றம் நாளை (ஞாயிற்றுக்கிழமை) மதியம் 1 மணி முதல் 3-ந் தேதியன்று திருவிழா முடியும் வரை அமலில் இருக்கும். இந்த போக்குவரத்து மாற்றத்துக்கு பொதுமக்களும், வாகன ஓட்டுனர்களும் ஒத்துழைப்பு அளிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    அழகப்பபுரம் புனித சவேரியார் ஆலய திருவிழா கடந்த 25-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. 3-ந்தேதி சிறப்பு மாலை ஆராதனையும், 4-ந்தேதி கூட்டு திருப்பலியும் நடக்கிறது.
    அழகப்பபுரம் புனித சவேரியார் ஆலய திருவிழா கடந்த 25-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.

    விழா நாட்களில் தினமும் மாலை 6.30 மணிக்கு ஜெபமாலை, திருப்பலி ஆகியவை நடந்தது. விழாவில் 3-ந்தேதி மாலை 6.30 மணிக்கு அருட்பணியாளர் வின்சென்ட் தலைமையில் சிறப்பு மாலை ஆராதனையும், 4-ந்தேதி காலை 6 மணிக்கு அருட்பணியாளர் வசந்தன் தலைமையில் கூட்டு திருப்பலியும் நடக்கிறது.

    திருவிழா ஏற்பாடுகளை பங்குதந்தை நெல்சன் பால்ராஜ், உதவி பங்குதந்தை ராயப்பன், பங்கு பேரவையினர் மற்றும் பங்குமக்கள் செய்து வருகிறார்கள்.
    கோட்டார் புனித சவேரியார் பேராலய 4-ம் நாள் திருவிழாவையொட்டி சமய நல்லிணக்க விழா நேற்று நடந்தது. இதில் திரளான கிறிஸ்துவர்கள் கலந்து கொண்டனர்.
    குமரி மாவட்டத்தில் புகழ்பெற்ற கத்தோலிக்க தேவாலயங்களில் கோட்டார் சவேரியார் பேராலயமும் ஒன்று. இந்த பேராலயத்தில் ஆண்டு தோறும் நவம்பர் 24-ந் தேதி முதல் டிசம்பர் 3-ந் தேதி வரை 10 நாட்கள் திருவிழா விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். இதே போல இந்த ஆண்டு 10 நாள் திருவிழா கடந்த 24-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து விழா நாட்களில் காலையில் திருப்பலியும், மாலையில் ஆடம்பர கூட்டு திருப்பலியும் நடைபெற்றது.

    இந்த நிலையில் 4-ம் நாள் திருவிழாவான நேற்று சமய நல்லிணக்க விழா நடந்தது. கத்தோலிக்க சங்கம், கத்தோலிக்க சேவா சங்கம் மற்றும் குமரி மாவட்ட திருவருட் பேரவை இணைந்து இந்த விழாவை நடத்தின.

    விழாவுக்கு புனித சவேரியார் பேராலய பங்கு அருட்பணியாளர் கிரேஸ் குணபால் ஆராச்சி தலைமை தாங்கினார். பேராலய அருட்பணி பேரவை செயலாளர் ஆன்டனி சவரிமுத்து, குமரி மாவட்ட மீனவர் கூட்டுறவு இணைய துணை தலைவர் ஷாஜின்காந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இளங்கடை முஸ்லிம் ஜமாத் தலைவர் பாவலர் சித்திக், வள்ளலார் பேரவை தலைவர் சுவாமி பத்மேந்திரா, இணைபங்கு அருப்பணியாளர் ஆன்டனி பாபு, கோட்டார் வட்டார குருகுல முதல்வர் மைக்கேல் ஆஞ்சல் ஆகியோர் சிறப்புரையாற்றி நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள். நலத்திட்ட உதவியாக தையல் எந்திரம், அரிசி, சேலை உள்ளிட்டவை வழங்கப்பட்டன. முன்னதாக தேவசகாயம் மவுண்ட் வட்டார அருட்பணியாளர்கள் தலைமையில் மறையுரையாற்றப்பட்டது.

    சவேரியார் பேராலயத்தில் இன்று (புதன்கிழமை) நடைபெற உள்ள 5-ம் நாள் திருவிழா நகர வியாபாரிகள் சார்பில் நடக்கிறது. விழாவையொட்டி கணேசபுரம் ரோடு சந்திப்பில் இருந்து கோட்டார் ரெயில்வே ரோடு வரை சாலையோரம் ஏராளமான கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. கோவிலுக்கு வருபவர்கள் இந்த கடைகளில் பொருட்கள் வாங்கி மகிழ்கிறார்கள். 
    கோட்டார் மறை மாவட்டத்தின் தலைமை பேராலயமாக நாகர்கோவில் கோட்டாரில் உள்ள புனித சவேரியார் பேராலய திருவிழா கொடியேற்றம் இன்று (சனிக்கிழமை) நடக்கிறது.
    கோட்டார் மறை மாவட்டத்தின் தலைமை பேராலயமாக நாகர்கோவில் கோட்டாரில் உள்ள புனித சவேரியார் பேராலயம் திகழ்கிறது. இந்த ஆலயத்தின் திருவிழா ஆண்டுதோறும் நவம்பர் மாதம் 24-ந் தேதி தொடங்கி டிசம்பர் 3-ந் தேதி நிறைவடையும்.

    அதேபோல் இந்த ஆண்டுக்கான 10 நாள் திருவிழா இன்று (சனிக்கிழமை) தொடங்குகிறது. இதையொட்டி இன்று காலை 6.15 மணிக்கு ராஜாவூர் இறைமக்கள் சார்பில் திருப்பலி, மாலை 6.30 மணிக்கு கொடியேற்றம் நடைபெறுகிறது. அதைத்தொடர்ந்து ஆடம்பர கூட்டு திருப்பலி நிறைவேற்றப்படும். இதற்கு கோட்டார் மறைமாவட்ட குருகுல முதல்வர் பேரருட்பணியாளர் கிலேரியஸ் தலைமை தாங்கி மறையுரை ஆற்றுகிறார்.

    2-வது நாளான நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 8 மணிக்கு முதல் திருவிருந்து திருப்பலி, 11 மணிக்கு இறை இரக்கத் தூதுவர் குழுவினர் நிறைவேற்றும் அற்புத குணமளிக்கும் திருப்பலி, மாலை 6.15 மணிக்கு ஆடம்பர கூட்டு திருப்பலி நடைபெறுகிறது. இதேபோல் திருவிழா நாட்களில் தினமும் காலை, மாலை நேரங்களில் திருப்பலி நடக்கிறது.

    வருகிற 30-ந் தேதி மாலை 6.15 மணிக்கு நடைபெறும் ஆடம்பர கூட்டு திருப்பலியை குழித்துறை மறைமாவட்ட ஆயர் ஜெரோம்தாஸ் வறுவேல் நிறைவேற்றி, மறையுரையாற்றுகிறார்.

    வருகிற 1-ந் தேதி மாலை 6.15 மணிக்கு கோட்டார் மறைமாவட்ட முன்னாள் ஆயர் பீட்டர் ரெமிஜியுஸ் தலைமையில் ஆடம்பர கூட்டு திருப்பலியும், இரவு 10.30 மணிக்கு தேர் பவனியும் நடைபெறும்.

    2-ந் தேதி 9-ம் நாள் திருவிழா நடக்கிறது. அன்று மாலை 6.30 மணிக்கு சிறப்பு மாலை ஆராதனை மற்றும் நற்கருணை ஆசீர் நடைபெறும். கோட்டார் மறை மாவட்ட ஆயர் நசரேன் சூசை தலைமை தாங்கி, மறையுரை ஆற்றுகிறார். அன்று இரவு 10.30 மணிக்கு தேர்பவனி நடக்கிறது. திருவிழாவின் இறுதி நாளான 3-ந் தேதி காலை 6 மணிக்கு புனித சவேரியார் பெருவிழா திருப்பலி ஆயர் நசரேன் சூசை தலைமையில் நிறைவேற்றப்படுகிறது. அதை தொடர்ந்து 8 மணிக்கு மலையாள திருப்பலியும், 11 மணிக்கு தேர் பவனியும், இரவு 7 மணிக்கு தேரில் ஆடம்பர கூட்டு திருப்பலியும் நடக்கிறது.

    தேர்பவனியின்போது நேர்ச்சை செலுத்தக்கூடிய பக்தர்கள் புனித சவேரியார், தேவமாதா தேர்களுக்கு பின்னால் தரையில் கும்பிடு நமஸ்காரம் செய்வதும், உருண்டு வேண்டுவதும் இந்த திருவிழாவின் சிறப்பம்சமாகும்.

    விழா ஏற்பாடுகளை கோட்டார் வட்டார முதல்வர் அருட்பணியாளர் மைக்கேல் ஏஞ்சலூஸ், பங்கு தந்தை கிரேஸ் குணபால் ஆராச்சி, இணை பங்கு தந்தை ஆன்றனி பிரபு மற்றும் பங்கு பேரவை நிர்வாகிகள் செய்துள்ளனர். 
    ×