search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    புனித சவேரியார்
    X
    புனித சவேரியார்

    கோட்டார் புனித சவேரியார் பேராலய திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது

    நாகர்கோவில் கோட்டார் புனித சவேரியார் பேராலய திருவிழா இன்று மாலை கொடியேற்றத்துடன் தொடங்கி அடுத்த மாதம் (டிசம்பர்) 3-ந் தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது.
    நாகர்கோவில் கோட்டாரில் உள்ள புனித சவேரியார் பேராலய திருவிழா ஆண்டுதோறும் நவம்பர் 24-ந் தேதி தொடங்கி 10 நாட்கள் நடைபெறுவது வழக்கம். இதே போல இந்த ஆண்டும் வருகிற இன்று மாலை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அடுத்த மாதம் (டிசம்பர்) 3-ந் தேதி வரை 10 நாட்கள் திருவிழா நடக்கிறது.

    தொடர்ந்து விழா நாட்களில் காலையில் திருப்பலியும், மாலையில் ஆடம்பர கூட்டுத் திருப்பலியும் நடக்கிறது. விழாவின் முக்கிய நிகழ்வான தேர் பவனி 9-ந் தேதி இரவு 10.30 மணிக்கு நடைபெற உள்ளது. இதே போல 10-ந் தேதி காலையிலும் தேர் பவனி நடக்கும்.

    கொரோனா காரணமாக கடந்த ஆண்டு போலவே இந்த ஆண்டும் அனைவரும் முக கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைபிடித்து இறைவழிபாடு செய்ய வேண்டும் என்று கேட்டுகொள்கிறோம்.
    Next Story
    ×