search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புனித சவேரியார்"

    • விழா வருகிற 3-ந்தேதி வரை நடக்கிறது.
    • பங்கு மக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

    தூத்துக்குடி டி.சவேரியார்புரம் புனித சவேரியார் ஆலய 134-ம் ஆண்டு திருவிழா நேற்று முன்தினம் மாலையில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொடியேற்றத்துக்கு மறைமாவட்ட முதன்மை குரு பென்சன் தலைமை தாங்கி திருவிழா கொடியை ஏற்றி வைத்தார்.

    நிகழ்ச்சியில் பங்குதந்தைகள், பங்கு மக்கள் திரளாக கலந்து கொண்டனர். விழா வருகிற 3-ந் தேதி வரை நடக்கிறது. இதேபோன்று ஆறுமுகநேரி புனித சவேரியார் ஆலய திருவிழாவை முன்னிட்டு நேற்று முன்தினம் இரவு கொடிகள் முக்கிய தெருக்கள் வழியாக ஊர்வலமாக ஆலயத்திற்கு கொண்டு வரப்பட்டது.

    அந்த கொடிகளை திருச்செந்தூர் அமலிபுரம் பங்குத்தந்தை வில்லியம் சந்தானம் அடிகளார், காயல்பட்டினம் சிங்கித்துறை பங்கு தந்தை ஷிபாகர் அடிகளார், ஆறுமுகநேரி பங்குத்தந்தை அலாய்சிஸ் அடிகளார், பெரியதாழை துணை பங்கு தந்தை கிங்ஸ்லின் அடிகளார் ஆகியோர் அர்ச்சித்தனர். இதை தொடர்ந்து கொடி மரத்தில் கொடி ஏற்றப்பட்டது.

    • திருவிழா வருகிற 3-ந் தேதி வரை 9 நாட்கள் நடைபெறுகிறது.
    • 2-ந்தேதி தேர் பவனி நடைபெற உள்ளது.

    திருச்சிற்றம்பலம் அருகே உள்ள புனல்வாசல் கிராமத்தில் புனித சவேரியார் ஆலயம் உள்ளது. இந்த ஆலய திருவிழா நேற்று மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    தஞ்சாவூர் மங்களபுரம் புனித லூர்து அன்னை ஆலய பங்கு தந்தை மரிய சூசை கொடியேற்று விழாவில் கலந்து கொண்டு சிறப்பு திருப்பலியை நிறைவேற்றினார்.

    திருவிழா, வருகிற 3-ந் தேதி வரை 9 நாட்கள் நடைபெறுகிறது. விழா நாட்களில் தினமும் மாலை 6.15 மணிக்கு செபமாலை, சவேரியார் நவநாள் ஜெபம், திருப்பலி, மறையுரை ஆகியவை நடக்கிறது.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேர் பவனி வருகிற 2-ந்தேதி(வௌ்ளிக்கிழமை) நடக்கிறது. அன்று மாலை கூட்டு பாடல் திருப்பலியும், இரவு 10 மணிக்கு தேர் பவனியும் நடைபெற உள்ளது. 3-ந்தேதி (சனிக்கிழமை) திருவிழா திருப்பலியைத் தொடர்ந்து, மாலை 4 மணிக்கு கொடியிறக்கமும் நடைபெற உள்ளது.

    திருவிழா ஏற்பாடுகளை பங்குத்தந்தையும் புனல்வாசல் புனித ஆரோக்கிய அன்னை மேல்நிலைப்பள்ளி தாளாளருமான ஜான்சன் எட்வர்ட், உதவி தந்தை அற்புத சந்தியாகு, அருட் சகோதரிகள் மற்றும் புனல் வாசல் பங்கு மக்கள் செய்து வருகிறார்கள்.

    • திருவிழா வருகிற 3-ந்தேதி வரை 9 நாட்கள் நடக்கிறது.
    • வரும் 2-ந்தேதி தேர் பவனி நடைபெற உள்ளது.

    திருச்சிற்றம்பலம் அருகே உள்ள புனல்வாசல் கிராமத்தில் புனித சவேரியார் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தின் திருவிழா இன்று (வெள்ளிக்கிழமை) மாலை 5 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

    தஞ்சாவூர் மங்களபுரம் புனித லூர்து அன்னை ஆலய பங்கு தந்தை மரிய சூசை கொடியேற்ற விழாவில் கலந்து கொண்டு சிறப்பு திருப்பலியை நிறைவேற்றுகிறார். இன்று மாலை தொடங்கும் திருவிழா, வருகிற 3-ந் தேதி (சனிக்கிழமை) வரை 9 நாட்கள் நடைபெறுகிறது. தினமும் மாலை 6.15 மணிக்கு செபமாலை, சவேரியார் நவநாள் ஜெபம், திருப்பலி, மறையுரை ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

    வரும் 2-ந்தேதி (வெள்ளிக்கிழமை) மாலை கூட்டு பாடல் திருவிழா திருப்பலியும், அன்று இரவு 10 மணிக்கு தேர் பவனியும் நடைபெற உள்ளது. 3-ந்தேதி திருப்பலியை தொடர்ந்து, மாலை 4 மணிக்கு கொடியிறக்கமும் நடைபெற உள்ளது.

    திருவிழாவிற்கான ஏற்பாடுகளை பங்குத்தந்தையும் புனல்வாசல் புனித ஆரோக்கிய அன்னை மேல்நிலைப்பள்ளி தாளாளருமான ஜான்சன் எட்வர்ட், உதவி பங்குத்தந்தை அற்புத சந்தியாகு, அருட் சகோதரிகள் மற்றும் புனல் வாசல் பங்கு மக்கள் செய்து வருகிறார்கள்.

    • இந்த திருவிழா 12 நாட்கள் நடைபெறுகிறது.
    • தேர் பவனி வருகிற 2-ந்தேதி நடைபெறுகிறது.

    நெல்லை பாளையங்கோட்டை தெற்கு பஜாரில் நூற்றாண்டு பழமைவாய்ந்த தூய சவேரியார் பேராலயம் அமைந்துள்ளது. இங்கு ஆண்டு தோறும் பெருவிழா வெகு விமரிசையாக நடைபெறும். இந்த ஆண்டுக்கான விழா நேற்று மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    இதையொட்டி அலங்கரிக்கப்பட் கொடி புனித அர்ச்சிப்பு செய்யப்பட்டு, புனித நீர் தெளிக்கப்பட்டு ஆலயக்கொடி மரத்தில் ஏற்றப்பட்டு சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.

    தொடர்ந்து முன்னாள் பிஷப் ஜூடுபால்ராஜ் கலந்து கொண்டு சிறப்பு திருப்பலி நிறைவேற்றி நற்செய்தி வழங்கினார்.

    திருவிழா 12 நாட்கள் நடைபெறுகிறது. விழாவின் ஒவ்வொரு நாளும் ஆலயத்தில் சிறப்பு திருப்பலி, மறையுரை வழங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    விழாவின் முக்கிய நிகழ்வான புனிதரின் திருஉருவ தேர் பவனி வரும் 2-ந்தேதியும், திருவிழா திருப்பலி, புதுநன்மைத் திருவிழா 3-ந்தேதியும் நடைபெறுகிறது.

    கொடியேற்ற நிகழ்ச்சியில் கிறிஸ்தவர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

    • இந்த திருவிழா டிசம்பர் 3-ந்தேதி நிறைவடையும்.
    • டிசம்பர் 3-ந்தேதி தேர்ப்பவனி நடக்கிறது.

    கோட்டார் மறை மாவட்டத்தின் தலைமை பேராலயமாக நாகர்கோவில் கோட்டார் புனித சவேரியார் பேராலயம் அமைந்துள்ளது. உலக அளவில் புனித சவேரியாருக்கென முதன்முதலாக எழுப்பப்பட்ட ஆலயம் என்ற பெருமையை இந்த ஆலயம் பெற்றுள்ளது. கி.பி.1542 முதல் 1552-ம் ஆண்டு வரையுள்ள காலக்கட்டத்தில் சவேரியார் கோட்டாரில் தங்கியிருந்து சாதி, சமய பேதமின்றி நற்செய்தி பணியாற்றியதாகவும், இங்கு அவரே புனித ஆரோபண மாதா ஆலயம் ஒன்றை எழுப்பி, தனது புனிதமிக்க கரங்களால் திருப்பலி நிறைவேற்றியதாகவும் கூறப்படுகிறது.

    இந்த ஆலயத்தின் 10 நாள் திருவிழா ஆண்டுதோறும் நவம்பர் மாதம் 24-ந் தேதி தொடங்கி டிசம்பர் மாதம் 3-ந் தேதி நிறைவடையும். இந்த ஆண்டுக்கான திருவிழா நேற்று தொடங்கியது. இதையொட்டி முதல் நாள் திருவிழாவான நேற்று காலை 6.15 மணிக்கு திருப்பலியை ராஜாவூர் பங்கு இறைமக்களும், 8 மணி திருப்பலியை அருகுவிளை பங்கு இறைமக்களும் சிறப்பித்தனர்.

    மாலையில் கொடியேற்ற நிகழ்ச்சி நடந்தது. கொடிபட்டத்தில் கட்டுவதற்கான மலர்களை ராஜாவூர் மக்களும், அருகுவிளை மக்களும் மேளதாளங்கள், பேண்டு வாத்தியங்கள் முழங்க ஊர்வலமாக கொண்டு வந்தனர். அதைத்தொடர்ந்து கோட்டார் தெற்கு ஊர் மற்றும் வடக்கு ஊர் கொடியேற்றத்துக்கு வந்த கோட்டார் மறைமாவட்ட குருகுல முதல்வர் ஹிலேரியஸ்சுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.

    கோட்டார் வடக்கு ஊர் மற்றும் தெற்கு ஊர் நிர்வாகிகள் அவரிடம் கொடியேற்றி திருவிழாவை தொடங்கி வைக்குமாறு கேட்டுக் கொண்டனர். பின்னர் புனித சவேரியார் பேராலய பீடத்தில் கொடியேற்றத்துக்கான கொடிகள் மந்திரிப்பு நிகழ்ச்சி நடந்தது. கொடிகளை குருகுல முதல்வர் ஹிலேரியஸ் புனித சவேரியார் உருவத்துடன் கூடிய மற்றும் திருசிலுவை (குருசு) கொடிகளை மந்திரித்து தெற்கு ஊர் தலைவர் ஜஸ்டின், வடக்கு ஊர் தலைவர் ஜேசுராஜ் ஆகியோரிடம் வழங்கப்பட்டது. இதேபோல் கொடியேற்றத்துக்கான மலர்கள் தெற்கு ஊர் செயலாளர் ராஜன், வடக்கு ஊர் செயலாளர் கிங்சன் ஆகியோரிடம் வழங்கப்பட்டது.

    பின்னர் கொடியேற்ற நிகழ்ச்சி மேளதாளங்கள், பேண்டு வாத்தியங்கள் முழங்க நடந்தது. குருகுலமுதல்வர் ஹிலேரியஸ் கொடியை ஏற்றி வைத்தார். அப்போது பேராலய மணி ஒலிக்கப்பட்டது. சமாதானத்தை குறிக்கும் வகையில் வெண்புறாக்கள் பறக்க விடப்பட்டன. மலர்களைத் தூவி பக்தர்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். பட்டாசுகளும் வெடிக்கப்பட்டன.

    இதனை தொடர்ந்து முதல்நாள் திருவிழா ஆடம்பர கூட்டுத்திருப்பலி நடந்தது. இந்த திருப்பலியை ஹிலேரியஸ் தலைமையில் கோட்டார் மறைவட்ட முதன்மை அருட்பணியாளர் சகாய ஆனந்த், பேராலய பங்குதந்தை ஸ்டான்லி சகாய சீலன், இணை பங்குத்தந்தை ஆன்றோ ஜெராபின், முன்னாள் பங்குத் தந்தை குணபால் ஆராச்சி, மேலப்பெருவிளை பங்குத்தந்தை குருசு கார்மல் மற்றும் அருட்பணியாளர்கள் இணைந்து திருப்பலியை நிறைவேற்றினர். கொடியேற்ற நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பங்கு பேரவை துணைத்தலைவர் ஜேசுராஜா, செயலாளர் ராஜன், துணை செயலாளர் ராஜன் ஆராச்சி, பொருளாளர் ஜார்ஜ் பிரகாஷ் ராபின் ஆகியோர் செய்திருந்தனர். கொடியேற்ற நிகழ்ச்சி மற்றும் ஆடம்பர கூட்டுத் திருப்பலியில் பங்கு மக்கள் உள்ளிட்ட ஏராளமான இறைமக்கள் கலந்து கொண்டனர்.

    முதல்நாள் திருப்பலியை குமரி மாவட்ட காவல்துறையினர் சிறப்பித்தனர். திருப்பலி முடிந்த பிறகு காவல்துறை சார்பில் பொதுக்கூட்டம் நடந்தது. இதில் ஏழை, எளியவர்களுக்கு காவல்துறை சார்பில் நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டன. இதில் கோட்டார் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமர் மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.

    திருவிழாவின் ஒவ்வொரு நாள் விழாவும் நற்செய்தி வாசக கருப்பொருளில் நடைபெறுகிறது. 4-வது நாள் திருவிழாவான 27-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 8 மணிக்கு முதல் திருவிருந்து திருப்பலி, காலை 11 மணிக்கு இறை இரக்க தூதுவர் குழுவினரின் குணமளிக்கும் திருப்பலியும், மாலை 6.30 மணிக்கு ஆடம்பர கூட்டுத் திருப்பலியும் நடைபெற உள்ளது. முதல் திருவிருந்து திருப்பலியில் ஏராளமான சிறுவர்- சிறுமிகள் முதல் திருவிருந்து பெறுகிறார்கள்.

    8-வது நாள் திருவிழாவான வருகிற 1-ந் தேதி (வியாழக்கிழமை) மாலை 6.30 மணிக்கு ஆடம்பர கூட்டுத்திருப்பலி நடைபெறுகிறது. கோட்டார் மறைமாவட்ட முன்னாள் ஆயர் பீட்டர் ரெமிஜியுஸ் தலைமை தாங்கி மறையுரை ஆற்றுகிறார். இரவு 10.30 மணிக்கு தேர்ப்பவனி நடக்கிறது. 9-ம் நாள் திருவிழாவான 2-ந் தேதி மாலை 6.30 மணிக்கு சிறப்பு மாலை ஆராதனை, நற்கருணை ஆசீர் நடக்கிறது. கோட்டார் மறைமாவட்ட ஆயர் நசரேன் சூசை தலைமை தாங்கி திருப்பலி நிறைவேற்றுகிறார். அன்று இரவு 10.30 மணிக்கு தேர்ப்பவனி நடக்கிறது.

    10-ம் நாள் திருவிழாவான 3-ந்தேதி (சனிக்கிழமை) காலை 6 மணிக்கு பெருவிழாத் திருப்பலியை ஆயர் நசரேன் சூசை நிறைவேற்றுகிறார். காலை 8 மணிக்கு மலையாளத் திருப்பலியை திருவனந்தபுரம் உயர் மறைமாவட்ட பேரருட்பணியாளர் கிளாடின் அலெக்ஸ் நிறைவேற்றுகிறார். 11 மணிக்கு தேர்ப்பவனி நடக்கிறது. இரவு 7 மணிக்கு தேரில் ஆடம்பர கூட்டுத் திருப்பலி நடக்கிறது. கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு தேர்ப்பவனி ஆலய வளாகத்துக்குள் நடந்தது. கொரோனா அபாயம் நீங்கியதின் காரணமாக இந்த ஆண்டு வழக்கமாக தேர்ப்பவனி செல்லும் இடங்களில் தேர்ப்பவனி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    • இந்த திருவிழா நவம்பர் 24-ந்தேதி தொடங்கி டிசம்பர் 3-ந்தேதி நிறைவடையும்.
    • டிசம்பர் 1-ந்தேதி தேர்ப்பவனி நடக்கிறது.

    கத்தோலிக்க திருச்சபையின் மறை மாவட்டங்களில் ஒன்றான கோட்டார் மறைமாவட்டத்தின் தலைமைப் பேராலயமாக நாகர்கோவில் கோட்டார் புனித சவேரியார் பேராலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தின் 10 நாள் திருவிழா ஆண்டுதோறும் நவம்பர் மாதம் 24-ந் தேதி தொடங்கி டிசம்பர் 3-ந் தேதி நிறைவடையும். இந்த ஆண்டுக்கான திருவிழா வருகிற 24-ந்தேதி தொடங்குகிறது.

    இதுகுறித்து கோட்டார் புனித சவேரியார் பேராலய பங்குத்தந்தை ஸ்டான்லி சகாயசீலன் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    கி.பி.1542 முதல் 1552-ம் ஆண்டு வரையுள்ள காலகட்டத்தில் சவேரியார் கோட்டாரில் தங்கியிருந்து சாதி, சமய பேதமின்றி நற்செய்தி பணியாற்றினார். இங்கு அவரே புனித ஆரோபண மாதா ஆலயம் ஒன்றை எழுப்பி, தனது புனிதமிக்க கரங்களால் திருப்பலி நிறைவேற்றி வந்தார்.

    பல்வேறு வரலாற்று சிறப்புகளுடன் விளங்கும் கோட்டார் புனித சவேரியார் பேராலயம் அனைத்து மக்களும் நாடி வரும் கோடி அற்புதங்கள் விளையும் புண்ணிய பூமியாக காட்சி அளிக்கிறது.

    கோட்டார் சவேரியார் பேராலயத்துக்கு இன்னுமொரு சிறப்பும் உள்ளது. அதாவது குமரி மண்ணில் மறைசாட்சியாக மரித்து, இந்தியாவின் முதல் இல்லற புனிதராக கடந்த மே மாதம் 15-ந் தேதி புனிதர் நிலைக்கு உயர்த்தப்பட்ட தேவசகாயத்தின் உடல் பாகங்கள் அடக்கம் செய்யப்பட்ட கல்லறையும் இந்த ஆலயத்தில் அமைந்துள்ளது சிறப்பாகும்.

    இந்தநிலையில் கோட்டார் புனித சவேரியார் பேராலய திருவிழா வருகிற 24-ந் தேதி (வியாழக்கிழமை) மாலை 6 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. கோட்டார் மறைமாவட்ட குருகுல முதல்வர் கிலேரியஸ் தலைமை தாங்கி கொடியேற்றி வைக்கிறார். முதல் நாள் திருவிழாவை காவல்துறையினர் சிறப்பிக்கிறார்கள். ஒவ்வொரு நாள் திருவிழாவும் நற்செய்தி வாசக கருப்பொருளில் நடைபெறுகிறது. 4-வது நாள் திருவிழாவான 27-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 8 மணிக்கு முதல் திருவிருந்து திருப்பலி, 11 மணிக்கு இறை இரக்க தூதுவர் குழுவினரின் குணமளிக்கும் திருப்பலியும், மாலை 6.30 மணிக்கு ஆடம்பர கூட்டுத் திருப்பலியும் நடைபெற உள்ளது. முதல் திருவிருந்து திருப்பலியில் ஏராளமான சிறுவர்- சிறுமிகள் முதல் திருவிருந்து பெறுகிறார்கள்.

    8-வது நாள் திருவிழாவான வருகிற 1-ந் தேதி (வியாழக்கிழமை) மாலை 6.30 மணிக்கு ஆடம்பர கூட்டுத்திருப்பலி நடைபெறுகிறது. கோட்டார் மறைமாவட்ட முன்னாள் ஆயர் பீட்டர் ரெமிஜியுஸ் தலைமை தாங்கி மறையுரை ஆற்றுகிறார். இரவு 10.30 மணிக்கு தேர்ப்பவனி நடக்கிறது. 9-ம் நாள் திருவிழாவான 2-ந் தேதி மாலை 6.30 மணிக்கு சிறப்பு மாலை ஆராதனை, நற்கருணை ஆசீர் நடக்கிறது. கோட்டார் மறைமாவட்ட ஆயர் நசரேன் சூசை தலைமை தாங்கி திருப்பலி நிறைவேற்றுகிறார். அன்று இரவு 10.30 மணிக்கு தேர்ப்பவனி நடக்கிறது. 10-ம் நாள் திருவிழாவான 3-ந் தேதி (சனிக்கிழமை) காலை 6 மணிக்கு பெருவிழாத் திருப்பலியை ஆயர் நசரேன் சூசை நிறைவேற்றுகிறார். காலை 8 மணிக்கு மலையாள திருப்பலியை திருவனந்தபுரம் உயர் மறைமாவட்ட பேரருட்பணியாளர் கிளாடின் அலெக்ஸ் நிறைவேற்றுகிறார். 11 மணிக்கு தேர்ப்பவனி நடக்கிறது. இரவு 7 மணிக்கு தேரில் ஆடம்பர கூட்டுத் திருப்பலி நடக்கிறது.

    கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு தேர்ப்பவனி ஆலய வளாகத்துக்குள் நடந்தது. கொரோனா அபாயம் நீங்கியதின் காரணமாக இந்த ஆண்டு வழக்கமாக தேர்பவனி செல்லும் இடங்களில் தேர்ப்பவனி நடைபெறும். வருகிற 8-ந் தேதி மாலை 6 மணிக்கு கொடியிறக்க நிகழ்ச்சி நடைபெறும். திருவிழா நாட்களில் தினமும் காலை, மாலை வேளைகளில் திருப்பலி நடைபெறும். திருவிழாவை தெற்கு மற்றும் வடக்கு ஊர் இறைமக்கள், பக்த சபைகள், சங்கங்கள், அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் சிறப்பிக்கிறார்கள்.

    திருவிழா தொடங்குவதற்கான முறையான பறை அறிவிப்பு வருகிற 20-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) செய்யப்படுகிறது. கொரோனா பரவல் ஓய்ந்த பிறகு முதன்முதலாக இந்த ஆண்டு திருவிழா சிறப்பாக நடைபெற இருப்பதாலும், புனித தேவசகாயம், புனிதராக அறிவிக்கப்பட்ட பிறகு முதல் முறையாக திருவிழா நடைபெற இருப்பதாலும் கேரள மாநில பக்தர்கள், குமரி மாவட்ட பக்தர்கள், தமிழகத்தின் பிற மாவட்டங்களைச் சேர்ந்த பக்தர்கள் பெருமளவில் பங்கேற்க இருக்கிறார்கள். திருவிழாவின் கடைசி 3 நாட்களில் மட்டும் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கிறோம். அவர்களுக்கு தேவையான குடிநீர் வசதி, கழிப்பறை வசதிகளை மாநகராட்சியுடன் இணைந்து மேற்கொள்ள இருக்கிறோம்.

    கடைசி நாள் திருவிழாவான 3-ந் தேதி அன்று வழக்கம்போல் உள்ளூர் விடுமுறை அளிக்க கலெக்டரை சந்தித்து கேட்டுள்ளோம். அவரும் அதற்கான நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளார். விழாவுக்கு பல்வேறு துறைகளின் அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகளை அழைத்துள்ளோம். இதற்கான ஏற்பாடுகளை கோட்டார் வட்டார முதன்மை பணியாளர் ஆனந்த், பங்குத்தந்தையாகிய நான் மற்றும் இணை பங்குத்தந்தை ஆன்றோ ஜெராபின், அருட் சகோதரிகள், பேராலய அருட்பணி பேரவை மற்றும் இறைமக்கள் இணைந்து செய்து வருகிறார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின் போது இணை பங்குத்தந்தை ஆன்றோ ஜெராபின், பங்குப்பேரவை துணைத்தலைவர் ஜேசுராஜா, செயலாளர் ராஜன், துணைச்செயலாளர் ராஜன் ஆராச்சி, பொருளாளர் ஜார்ஜ் பிரகாஷ் ராபின் ஆகியோர் உடனிருந்தனர்.

    • அர்ச்சிப்பு விழாவில் ஆயிரக்கணக்கான பங்கு மக்கள் கலந்துகொண்டனர்.
    • பங்கு மக்களிடம் காணிக்கை பொருட்கள் பெறும் நிகழ்ச்சியும் நடந்தது.

    பாலவிளையில் புனித சவேரியார் மலங்கரை கத்தோலிக்க புது ஆலய அர்ச்சிப்பு விழா நேற்று நடந்தது.

    இதில் மார்த்தாண்டம் மறை மாவட்ட ஆயர் வின்சென்ட் மார் பவுலோஸ், திருவனந்தபுரம் உயர் மறை மாநில துணை ஆயர் மாத்யூஸ் மார் போளிகார்ப்பஸ், கூரியா ஆயர் ஆன்றணி மார் சில்வானோஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    ஆலயத்தை ஆயர் வின்சென்ட் மார் பவுலோஸ் திறந்து வைத்தார். பங்குதந்தை அலெக்ஸ் குமார் அனைவரையும் வரவேற்றார்.

    அதன்பிறகு ஆசியுரை வழங்கும் நிகழ்ச்சியும், பங்கு மக்களிடம் காணிக்கை பொருட்கள் பெறும் நிகழ்ச்சியும் நடந்தது. அதைத்தொடர்ந்து பலி பீடத்தில் வைக்கப்படும் நறுமண பெட்டியையும், ஆலய பீடத்தையும், பலி பீடத்தையும் ஆயர் வின்சென்ட் மார் பவுலோஸ் அர்ச்சித்து, வேண்டுதல் ஜெபம் செய்தார்.

    அதன்பிறகு ஆயர்கள் ஆன்றணி மார் சில்வானோஸ், மாத்யூஸ் மார் போளிகார்ப்பஸ் ஆலயத்தின் இரு பக்கவாட்டிலும் அர்ச்சிப்பு செய்தார்கள். அதைத்தொடர்ந்து ஆயர்கள் அருளுரையாற்றினார்கள் அதை தொடர்ந்து அன்பின் விருந்து நடைபெற்றது. அர்ச்சிப்பு விழாவில் ஆயிரக்கணக்கான பங்கு மக்கள் கலந்துகொண்டனர்.

    முன்னதாக ஆயர்களுக்கு பங்குத்தந்தை அலெக்ஸ் குமார் தலைமையில் பங்கு செயலாளர் ஜெபல்சிங், பொருளாளர் அசோக் ராஜா, கட்டுமான பணிக்குழு ஒருங்கிணைப்பாளர் இவான்ஸ் ஆகியோர் முன்னிலையில், பெண்கள் முத்துக்குடை அணிவகுக்க, மேள தாளம் முழங்க, பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது.

    • நாளை மதியம் 2.30 மணிக்கு ஆயர்களுக்கு வரவேற்பு நடக்கிறது.
    • 6 மணிக்கு அன்பின் விருந்து நடக்கிறது.

    கொல்லங்கோடு அருகே உள்ள பாலவிளையில் (காட்டுக்கடை) மலங்கரை கத்தோலிக்க திருச்சபை சார்பில் புனித சவேரியார் ஆலயம் கட்டப்பட்டுள்ளது. இந்த ஆலய அர்ச்சிப்பு விழா நாளை (சனிக்கிழமை) நடக்கிறது. நாளை மதியம் 2.30 மணிக்கு ஆயர்களுக்கு வரவேற்பு, 3 மணிக்கு ஆலய அர்ச்சிப்பு, மாலை 5.30 மணிக்கு பொதுக்கூட்டம், 6 மணிக்கு அன்பின் விருந்து போன்றவை நடக்கிறது.

    விழாவில் மார்த்தாண்டம் மறை மாவட்ட ஆயர் வின்சென்ட் மார் பவுலோஸ் தலைமை தாங்குகிறார். சிறப்பு விருந்தினர்களாக திருவனந்தபுரம் உயர் மறை மாநில துணை ஆயர் மாத்யூஸ் மார் போளிகார்ப்பஸ், ஆயர் ஆன்டனி மார் சில்வானோஸ் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள்.

    இதற்கான ஏற்பாடுகளை பங்குத்தந்தை அலெக்ஸ் குமார், ஒருங்கிணைப்பாளர் இவான்ஸ், செயலாளர் ஜெபல் சிங், பொருளாளர் அசோகராஜ், பங்கு பேரவை, பொதுக்குழு உறுப்பினர்கள் செய்துள்ளனர்.

    • மறைசாட்சி தேவசகாயத்துக்கு கடந்த 15-ந்தேதி புனிதர் பட்டம் வழங்கப்பட்டது.
    • மறைசாட்சி தேவசகாயத்துக்கு கடந்த 15-ந்தேதி புனிதர் பட்டம் வழங்கப்பட்டது.

    குமரி மாவட்டம் நட்டாலத்தை சேர்ந்த மறைசாட்சி தேவசகாயத்துக்கு கடந்த 15-ந் தேதி வாடிகனில் புனிதர் பட்டம் வழங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து தேசிய அளவிலான நன்றி விழா கோட்டார், குழித்துறை மறை மாவட்டங்கள் சார்பில் நேற்று முன்தினம் ஆரல்வாய்மொழி அருகே உள்ள காற்றாடிமலையில் நடந்தது. புனிதர் பட்டம் பெற்ற மறைசாட்சி தேவசகாயத்தின் கல்லறை நாகர்கோவில் கோட்டாரில் உள்ள புனித சவேரியார் பேராலயத்தில் உள்ளது.

    தேசிய அளவிலான நன்றி விழா முடிவடைந்ததைத் தொடர்ந்து புனித சவேரியார் பேராலயத்தில் நன்றி திருப்பலி நேற்று காலையில் நடந்தது. இதில் போப் ஆண்டவரின் இந்திய தூதர் லெயோபோல்டா ஜிரல்லி பங்கேற்று திருப்பலியை நிறைவேற்றினார்.

    நிகழ்ச்சியில் அகில இந்திய ஆயர் பேரவை தலைவர் கர்தினால் ஆஸ்வால்டு கிராவியாஸ், கோவா டாமன் பேராயர் பிலிப் நேரி பெர்ராவோ, மதுரை பேராயரும், குழித்துறை மறைமாவட்ட திருத்தூதரக பரிபாலகருமான அந்தோணி பாப்புசாமி, போபால் பேராயர் அலங்கார ஆரோக்கிய செபாஸ்டியன் துரைராஜ், பங்குதந்தை ஸ்டென்லி சகாயசீலன் மற்றும் பங்கு மக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

    பாளையங்கோட்டை சவேரியார் பேராலய திருவிழா கொடியேற்றம் ஆலய வளாகத்தில் நடந்தது. விழா நாட்களில் தினமும் காலை, மாலையில் திருப்பலி, மறையுரை நடக்கிறது.
    பாளையங்கோட்டை சவேரியார் பேராலய திருவிழா கொடியேற்றம் நேற்று மாலை ஆலய வளாகத்தில் நடந்தது. விழாவில் பாளையங்கோட்டை மறை மாவட்ட முன்னாள் ஆயர் ஜூடுபால்ராஜ் திருப்பலி நடத்தினார். வெய்க்காலிப்பட்டி புனித ஜோசப் கலை மற்றும் அறிவியல் கல்லூரி செயலாளர் சகாயஜான் மறையுரை ஆற்றினார்.

    மறை மாவட்ட முதன்மை குரு குழந்தைராஜ், பாதிரியார்கள் மை.பா.சேசுராஜ், அன்டோ, உடையார்பட்டி மைக்கேல், ஆயரின் செயலாளர் மைக்கேல் பிரகாசம், மும்பை டேவிட், மதுரை சேவியர் தயாளன், பேராலய பங்கு தந்தை ராஜேஷ், உதவி பங்கு தந்தையர்கள் சதீஸ் செல்வ தயாளன், அந்தோணிராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    விழா நாட்களில் தினமும் காலை, மாலையில் திருப்பலி, மறையுரை நடக்கிறது. 28-ந் தேதி மாலை 6 மணிக்கு ஒப்புரவு அருட்சாதனம், 2-ந் தேதி மாலை 6 மணிக்கு புனிதரின் தேர்பவனி, 3-ந் தேதி காலை 7.30 மணிக்கு திருவிழா திருப்பலி, புதுநன்மை விழா, மாலை 6 மணிக்கு கொடியிறக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. 5-ந் தேதி காலை 7.30 மணிக்கு உறுதிப் பூசுதல் நடைபெறுகிறது.
    முக்கூடல் அருகே உள்ள தாளார்குளம் தூய பிரான்சிஸ் சவேரியார் ஆலய திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து கூட்டுத் திருப்பலியும், பகல் 1 மணிக்கு அசனமும் நடைபெற்றது.
    முக்கூடல் அருகே உள்ள தாளார்குளம் தூய பிரான்சிஸ் சவேரியார் ஆலய திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. மறைமாவட்ட முதன்மை குரு குழந்தைராஜ், சிங்கம்பாறை பங்குத்தந்தை அருள் நேசமணி ஆகியோர் முன்னிலையில் கொடியேற்றம் நடைபெற்றது.

    தொடர்ந்து கூட்டுத் திருப்பலியும், பகல் 1 மணிக்கு அசனமும் நடைபெற்றது. விழா வருகிற 3-ந் தேதி வரை 10 நாட்கள் நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை தாளார்குளம் பங்குத்தந்தை சந்தியாகு, இறைமக்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.
    கோட்டார் தெற்கு ஊர் மற்றும் வடக்கு ஊர் மக்கள் சார்பில் கொடியேற்றத்துக்கு வந்த கோட்டார் மறைமாவட்ட குருகுல முதல்வர் கிலேரியஸ்சுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.
    குமரி மாவட்டத்தில் புகழ்பெற்ற கிறிஸ்தவ தேவாலயங்களில் நாகர்கோவில் கோட்டாரில் அமைந்துள்ள புனித சவேரியார் பேராலயமும் ஒன்று. கத்தோலிக்க திருச்சபையின் கோட்டார் மறைமாவட்ட தலைமை பேராலயமாக இந்த ஆலயம் விளங்குகிறது. கேட்ட வரம் தரும் கோட்டார் புனித சவேரியார் பேராலயம் என அழைக்கப்படும் இந்த ஆலயத்தின் 10 நாள் திருவிழா ஆண்டுதோறும் நவம்பர் மாதம் 24-ந் தேதி தொடங்கி டிசம்பர் மாதம் 3-ந் தேதி நிறைவடைவது வழக்கம்.

    அதேபோல் இந்த ஆண்டுக்கான 10 நாள் திருவிழா நேற்று தொடங்கியது. இதையொட்டி நேற்று காலை 6.15 மணி திருப்பலியை ராஜாவூர் பங்கு மக்களும், 8 மணி திருப்பலியை அருகுவிளை பங்கு மக்களும் சிறப்பித்தனர். மாலையில் கொடியேற்ற நிகழ்ச்சி நடந்தது. இதையொட்டி கொடியேற்றத்துக்கான மலர்களை ராஜாவூர் மக்களும், அருகுவிளை மக்களும் மேளதாளங்கள், பேண்டு வாத்தியங்கள் முழங்க ஊர்வலமாக கொண்டு வந்தனர்.

    அதைத்தொடர்ந்து கோட்டார் தெற்கு ஊர் மற்றும் வடக்கு ஊர் மக்கள் சார்பில் கொடியேற்றத்துக்கு வந்த கோட்டார் மறைமாவட்ட குருகுல முதல்வர் கிலேரியஸ்சுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் புனித சவேரியார் பேராலய பீடத்தில் கொடியேற்றத்துக்கான கொடிகள் மந்திரிப்பு நிகழ்ச்சி நடந்தது. கொடிகளை குருகுல முதல்வர் கிலேரியஸ் மந்திரித்து, குருசு (சிலுவை) கொடியை வடக்கூர் தலைவர் சகாய திலகராஜிடமும், புனித சவேரியார் கொடியை தெக்கூர் தலைவர் சவரிமுத்துவிடமும் வழங்கப்பட்டது. கொடியேற்றுத்துக்கான மலர்களை தெற்கு ஊர் மற்றும் வடக்கு ஊர் செயலாளர்கள் அந்தோணி சவரிமுத்து, கின்சன் ஆகியோரிடம் வழங்கப்பட்டது.

    இதையடுத்து கொடியேற்ற நிகழ்ச்சி நடந்தது. கோட்டார் மறைமாவட்ட குருகுல முதல்வர் கிலேரியஸ் கொடியேற்றி வைத்தார். பின்னர் அவருடைய தலைமையில் பேராலய வளாகத்தில் ஆடம்பர கூட்டுத் திருப்பலி நடந்தது. இதில் வட்டார குருகுல முதல்வர் சகாய ஆனந்த், கோட்டார் புனித சவேரியார் பேராலய பங்குத்தந்தை ஸ்டான்லி சகாய சீலன், இணை பங்குத்தந்தை சிலுவை பிராங்கோ பிரான்சிஸ் மற்றும் அருட்பணியாளர்கள், அருட்சகோதரிகள், பங்கு மக்கள், பக்தர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். முதல் நாள் திருவிழாவை மாவட்ட காவல்துறையினர் சிறப்பித்தனர்.

    இன்று (வியாழக்கிழமை) 2-வது நாள் திருவிழா நடக்கிறது. 5-வது நாள் திருவிழாவான 28-ந் தேதி காலை 8 மணிக்கு முதல் திருவிருந்து திருப்பலியும், 11 மணிக்கு குணமளிக்கும் திருப்பலியும் நடைபெறுகிறது. 8-ம் நாள் திருவிழாவான 1-ந் தேதி மாலை 6.30 மணிக்கு கோட்டார் மறைமாவட்ட முன்னாள் ஆயர் பீட்டர் ரெமிஜியுஸ் தலைமையில் ஆடம்பர கூட்டுத் திருப்பலியும், இரவு 10.30 மணிக்கு தேர்ப்பவனியும் நடக்கிறது.

    9-ம் நாள் திருவிழாவான 2-ந் தேதி மாலை 6.30 மணிக்கு கோட்டார் மறைமாவட்ட ஆயர் நசரேன் சூசை தலைமையில் சிறப்பு மாலை ஆராதனை, நற்கருணை ஆசீர் நடைபெறுகிறது. பின்னர் இரவு 10.30 மணிக்கு 2-வது நாள் தேர்ப்பவனி நடக்கிறது. 10-ம் நாள் திருவிழா 3-ந் தேதி நடக்கிறது. அன்று காலை 6 மணிக்கு ஆயர் நசரேன் சூசை தலைமையில் புனித சவேரியாரின் பெருவிழா ஆடம்பர கூட்டுத் திருப்பலி நடக்கிறது. 8 மணிக்கு திருவனந்தபுரம் உயர் மறைமாவட்ட பேரருட்பணியாளர் கிளாடின் அலெக்ஸ் தலைமையில் மலையாளத் திருப்பலி நடக்கிறது. காலை 11 மணிக்கு 3-வது நாள் தேர்ப்பவனி நடக்கிறது. மாலை 7 மணிக்கு தேரில் ஆடம்பர கூட்டுத் திருப்பலியுடன் திருவிழா நிறைவடைகிறது. . ஒவ்வொரு நாள் திருவிழாவையும் பக்த சபைகள், சங்கங்கள், இயக்கங்களைச் சேர்ந்தவர்கள் சிறப்பிக்கிறார்கள்.

    தேர்ப்பவனியின்போது புனித சவேரியார், மாதா தேர்களின் பின்னால் பக்தர்கள் தரையில் கும்பிடு நமஸ்காரம் செய்வதும், உருண்டு வேண்டுவதுதான் இந்த திருவிழாவின் சிறப்பம்சமாகும்.
    ×