search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Saint George"

    நாகர்கோவில் கோட்டார் சவேரியார் பேராலயத்தின் 10 நாள் திருவிழா கடந்த 24-ந் தேதி தொடங்கியது. 8-ம் நாள் திருவிழாவான இன்று (சனிக்கிழமை) மாலை தேர் பவனி நடைபெறுகிறது.
    நாகர்கோவில் கோட்டார் சவேரியார் பேராலயத்தின் 10 நாள் திருவிழா கடந்த 24-ந் தேதி தொடங்கியது. 7-ம் நாள் திருவிழாவான நேற்று மாலை 6.15 மணிக்கு கோட்டார் மறைமாவட்ட முன்னாள் ஆயர் பீட்டர் ரெமிஜியுஸ் தலைமையில் ஆடம்பர கூட்டுத்திருப்பலி நடைபெற்றது.

    8-ம் நாள் திருவிழாவான இன்று (சனிக்கிழமை) மாலை 6.15 மணிக்கு கோட்டார் மறைமாவட்ட முன்னாள் ஆயர் பீட்டர் ரெமிஜியுஸ் தலைமையில் ஆடம்பர கூட்டு திருப்பலியும், இரவு 10.30 மணிக்கு தேர் பவனியும் நடைபெறும்.

    நாளை (ஞாயிற்றுக்கிழமை) 9-ம் நாள் திருவிழா ஆகும். மாலை 6.30 மணிக்கு சிறப்பு ஆராதனை மற்றும் நற்கருணை ஆசீர் நடைபெறும். கோட்டார் மறை மாவட்ட ஆயர் நசரேன் சூசை தலைமை தாங்கி, மறையுரை ஆற்றுகிறார். அன்று இரவு 10.30 மணிக்கு தேர்பவனி நடக்கிறது.

    திருவிழாவின் இறுதி நாளான 3-ந் தேதி காலை 6 மணிக்கு புனித சவேரியார் பெருவிழா திருப்பலி ஆயர் நசரேன் சூசை தலைமையில் நிறைவேற்றப்படுகிறது. அதை தொடர்ந்து காலை 8 மணிக்கு மலையாள திருப்பலியும், 11 மணிக்கு தேர் பவனியும், இரவு 7 மணிக்கு ஆடம்பர கூட்டு திருப்பலியும் நடக்கிறது. 3-ந் தேதியன்று குமரி மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.


    கோட்டார் சவேரியார் ஆலயத்தில் நடந்த திருப்பலியில் பங்கேற்ற மாணவிகளை படத்தில் காணலாம்.

    நாகர்கோவில் நகர போக்குவரத்து ஒழுங்குப்பிரிவு போலீசார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    நாகர்கோவில் கோட்டார் புனித சவேரியார் பேராலய தேர் திருவிழாவை முன்னிட்டு, கன்னியாகுமரியில் இருந்து நாகர்கோவில் மார்க்கமாக வரும் அனைத்து வாகனங்களும் பீச்ரோடு, ஆயுதப்படை முகாம் ரோடு, பொன்னப்ப நாடார் காலனி, ராமன்புதூர், செட்டிகுளம் சந்திப்பு வழியாக செல்ல வேண்டும். வடசேரி மற்றும் அண்ணா பஸ் நிலையத்தில் இருந்து கன்னியாகுமரி மார்க்கத்தில் செல்லக்கூடிய அனைத்து வாகனங்களும் வேப்பமூடு சந்திப்பு, பொதுப்பணித்துறை அலுவலக சாலை, செட்டிகுளம் சந்திப்பு, இந்துக்கல்லூரி சாலை, பீச்ரோடு சந்திப்பு வழியாக செல்ல வேண்டும்.

    இந்த போக்குவரத்து மாற்றம் நாளை (ஞாயிற்றுக்கிழமை) மதியம் 1 மணி முதல் 3-ந் தேதியன்று திருவிழா முடியும் வரை அமலில் இருக்கும். இந்த போக்குவரத்து மாற்றத்துக்கு பொதுமக்களும், வாகன ஓட்டுனர்களும் ஒத்துழைப்பு அளிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    அழகப்பபுரம் புனித சவேரியார் ஆலய திருவிழா கடந்த 25-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. 3-ந்தேதி சிறப்பு மாலை ஆராதனையும், 4-ந்தேதி கூட்டு திருப்பலியும் நடக்கிறது.
    அழகப்பபுரம் புனித சவேரியார் ஆலய திருவிழா கடந்த 25-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.

    விழா நாட்களில் தினமும் மாலை 6.30 மணிக்கு ஜெபமாலை, திருப்பலி ஆகியவை நடந்தது. விழாவில் 3-ந்தேதி மாலை 6.30 மணிக்கு அருட்பணியாளர் வின்சென்ட் தலைமையில் சிறப்பு மாலை ஆராதனையும், 4-ந்தேதி காலை 6 மணிக்கு அருட்பணியாளர் வசந்தன் தலைமையில் கூட்டு திருப்பலியும் நடக்கிறது.

    திருவிழா ஏற்பாடுகளை பங்குதந்தை நெல்சன் பால்ராஜ், உதவி பங்குதந்தை ராயப்பன், பங்கு பேரவையினர் மற்றும் பங்குமக்கள் செய்து வருகிறார்கள்.
    கோட்டார் புனித சவேரியார் பேராலய 4-ம் நாள் திருவிழாவையொட்டி சமய நல்லிணக்க விழா நேற்று நடந்தது. இதில் திரளான கிறிஸ்துவர்கள் கலந்து கொண்டனர்.
    குமரி மாவட்டத்தில் புகழ்பெற்ற கத்தோலிக்க தேவாலயங்களில் கோட்டார் சவேரியார் பேராலயமும் ஒன்று. இந்த பேராலயத்தில் ஆண்டு தோறும் நவம்பர் 24-ந் தேதி முதல் டிசம்பர் 3-ந் தேதி வரை 10 நாட்கள் திருவிழா விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். இதே போல இந்த ஆண்டு 10 நாள் திருவிழா கடந்த 24-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து விழா நாட்களில் காலையில் திருப்பலியும், மாலையில் ஆடம்பர கூட்டு திருப்பலியும் நடைபெற்றது.

    இந்த நிலையில் 4-ம் நாள் திருவிழாவான நேற்று சமய நல்லிணக்க விழா நடந்தது. கத்தோலிக்க சங்கம், கத்தோலிக்க சேவா சங்கம் மற்றும் குமரி மாவட்ட திருவருட் பேரவை இணைந்து இந்த விழாவை நடத்தின.

    விழாவுக்கு புனித சவேரியார் பேராலய பங்கு அருட்பணியாளர் கிரேஸ் குணபால் ஆராச்சி தலைமை தாங்கினார். பேராலய அருட்பணி பேரவை செயலாளர் ஆன்டனி சவரிமுத்து, குமரி மாவட்ட மீனவர் கூட்டுறவு இணைய துணை தலைவர் ஷாஜின்காந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இளங்கடை முஸ்லிம் ஜமாத் தலைவர் பாவலர் சித்திக், வள்ளலார் பேரவை தலைவர் சுவாமி பத்மேந்திரா, இணைபங்கு அருப்பணியாளர் ஆன்டனி பாபு, கோட்டார் வட்டார குருகுல முதல்வர் மைக்கேல் ஆஞ்சல் ஆகியோர் சிறப்புரையாற்றி நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள். நலத்திட்ட உதவியாக தையல் எந்திரம், அரிசி, சேலை உள்ளிட்டவை வழங்கப்பட்டன. முன்னதாக தேவசகாயம் மவுண்ட் வட்டார அருட்பணியாளர்கள் தலைமையில் மறையுரையாற்றப்பட்டது.

    சவேரியார் பேராலயத்தில் இன்று (புதன்கிழமை) நடைபெற உள்ள 5-ம் நாள் திருவிழா நகர வியாபாரிகள் சார்பில் நடக்கிறது. விழாவையொட்டி கணேசபுரம் ரோடு சந்திப்பில் இருந்து கோட்டார் ரெயில்வே ரோடு வரை சாலையோரம் ஏராளமான கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. கோவிலுக்கு வருபவர்கள் இந்த கடைகளில் பொருட்கள் வாங்கி மகிழ்கிறார்கள். 
    கோட்டார் மறை மாவட்டத்தின் தலைமை பேராலயமாக நாகர்கோவில் கோட்டாரில் உள்ள புனித சவேரியார் பேராலய திருவிழா கொடியேற்றம் இன்று (சனிக்கிழமை) நடக்கிறது.
    கோட்டார் மறை மாவட்டத்தின் தலைமை பேராலயமாக நாகர்கோவில் கோட்டாரில் உள்ள புனித சவேரியார் பேராலயம் திகழ்கிறது. இந்த ஆலயத்தின் திருவிழா ஆண்டுதோறும் நவம்பர் மாதம் 24-ந் தேதி தொடங்கி டிசம்பர் 3-ந் தேதி நிறைவடையும்.

    அதேபோல் இந்த ஆண்டுக்கான 10 நாள் திருவிழா இன்று (சனிக்கிழமை) தொடங்குகிறது. இதையொட்டி இன்று காலை 6.15 மணிக்கு ராஜாவூர் இறைமக்கள் சார்பில் திருப்பலி, மாலை 6.30 மணிக்கு கொடியேற்றம் நடைபெறுகிறது. அதைத்தொடர்ந்து ஆடம்பர கூட்டு திருப்பலி நிறைவேற்றப்படும். இதற்கு கோட்டார் மறைமாவட்ட குருகுல முதல்வர் பேரருட்பணியாளர் கிலேரியஸ் தலைமை தாங்கி மறையுரை ஆற்றுகிறார்.

    2-வது நாளான நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 8 மணிக்கு முதல் திருவிருந்து திருப்பலி, 11 மணிக்கு இறை இரக்கத் தூதுவர் குழுவினர் நிறைவேற்றும் அற்புத குணமளிக்கும் திருப்பலி, மாலை 6.15 மணிக்கு ஆடம்பர கூட்டு திருப்பலி நடைபெறுகிறது. இதேபோல் திருவிழா நாட்களில் தினமும் காலை, மாலை நேரங்களில் திருப்பலி நடக்கிறது.

    வருகிற 30-ந் தேதி மாலை 6.15 மணிக்கு நடைபெறும் ஆடம்பர கூட்டு திருப்பலியை குழித்துறை மறைமாவட்ட ஆயர் ஜெரோம்தாஸ் வறுவேல் நிறைவேற்றி, மறையுரையாற்றுகிறார்.

    வருகிற 1-ந் தேதி மாலை 6.15 மணிக்கு கோட்டார் மறைமாவட்ட முன்னாள் ஆயர் பீட்டர் ரெமிஜியுஸ் தலைமையில் ஆடம்பர கூட்டு திருப்பலியும், இரவு 10.30 மணிக்கு தேர் பவனியும் நடைபெறும்.

    2-ந் தேதி 9-ம் நாள் திருவிழா நடக்கிறது. அன்று மாலை 6.30 மணிக்கு சிறப்பு மாலை ஆராதனை மற்றும் நற்கருணை ஆசீர் நடைபெறும். கோட்டார் மறை மாவட்ட ஆயர் நசரேன் சூசை தலைமை தாங்கி, மறையுரை ஆற்றுகிறார். அன்று இரவு 10.30 மணிக்கு தேர்பவனி நடக்கிறது. திருவிழாவின் இறுதி நாளான 3-ந் தேதி காலை 6 மணிக்கு புனித சவேரியார் பெருவிழா திருப்பலி ஆயர் நசரேன் சூசை தலைமையில் நிறைவேற்றப்படுகிறது. அதை தொடர்ந்து 8 மணிக்கு மலையாள திருப்பலியும், 11 மணிக்கு தேர் பவனியும், இரவு 7 மணிக்கு தேரில் ஆடம்பர கூட்டு திருப்பலியும் நடக்கிறது.

    தேர்பவனியின்போது நேர்ச்சை செலுத்தக்கூடிய பக்தர்கள் புனித சவேரியார், தேவமாதா தேர்களுக்கு பின்னால் தரையில் கும்பிடு நமஸ்காரம் செய்வதும், உருண்டு வேண்டுவதும் இந்த திருவிழாவின் சிறப்பம்சமாகும்.

    விழா ஏற்பாடுகளை கோட்டார் வட்டார முதல்வர் அருட்பணியாளர் மைக்கேல் ஏஞ்சலூஸ், பங்கு தந்தை கிரேஸ் குணபால் ஆராச்சி, இணை பங்கு தந்தை ஆன்றனி பிரபு மற்றும் பங்கு பேரவை நிர்வாகிகள் செய்துள்ளனர். 
    ×