search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புதுச்சேரி விடுமுறை"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மத்திய அரசு அலுவலகங்களுக்கு ஜனவரி 22-ந்தேதி அன்று அரைநாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
    • சில மாநிலங்களில் ராமர் கோவில் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    புதுச்சேரி:

    உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் மிக பிரமாண்டமாக கட்டப்பட்டு உள்ளது. இதன் கும்பாபிஷேக விழா வரும் 22-ந்தேதி கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதற்காக, சிறப்பான ஏற்பாடுகளை கோவிலின் அறக்கட்டளை செய்து வருகிறது. கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, நாடு முழுவதும் உள்ள முக்கிய தலைவர்கள், பிரபலங்களுக்கு அழைப்பிதழ் வழங்கப்பட்டு வருகிறது.

    உள்நாட்டில் மட்டுமல்ல சுமார் 55 நாடுகளில் இருந்து நூறு உயர் அதிகாரிகள் விழாவில் கலந்து கொள்ள உள்ளனர்.

    சில மாநிலங்களில் ராமர் கோவில் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும் மத்திய அரசு அலுவலகங்களுக்கு ஜனவரி 22-ந்தேதி அன்று அரைநாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு 22-ந்தேதி பிற்பகல் 2.30 மணி வரை நாடு முழுவதும் உள்ள அனைத்து மத்திய அரசு அலுவலகங்களுக்கும் விடுமுறை விதித்து மத்திய அரசு அறிவித்துள்ளது.

    இந்நிலையில் அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, புதுச்சேரியில் வரும் 22-ந்தேதி பொது விடுமுறை அளித்து புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.

    ராமர் கோவில் கும்பாபிஷேகத்தில் பங்கேற்பதற்காக விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    ×