search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புதிய கல்குவாரி அமைக்க"

    • காருடையாம்பாளையம் கிராமத்தில் கல்குவாரி அமைப்பதற்கான கருத்துக் கேட்பு கூட்டம் பவித்திரம் பகுதியிலுள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது
    • கல்குவாரி அமைந்தால் சுற்று புற பகுதிகளில் பலருக்கு பணிகள் கிடைக்கும்


    வேலாயுதம்பாளையம்,

    கரூர் மாவட்டம் க.பரமத்தி அடுத்துள்ள காருடையாம்பாளையம் கிராம பகுதியில் கல்குவாரி அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான கருத்துக் கேட்பு கூட்டம் க.பரமத்தி அடுத்த பவித்திரம் பகுதியில் தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் மாவட்ட மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரி ஜெயலட்சுமி முன்னிலை வகித்தார்.தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டு தங்களின் கருத்துக்களை தெரிவித்தனர். இதில் புதுக்கநல்லி, மாலப்பாளையம்புதூர் ஆகிய சமூக ஆர்வலர்கள் ஒரு சிலர் கல்குவாரி அமைக்கப்படுவதால் ஏற்படும் சுற்றுசூழல் பாதிப்பு குறித்து பேசினர். அதில் ஒரு சிலர் கல்குவாரி அமைந்தால் அதன் சுற்று புற பகுதிகளில் வசிக்கும் பலருக்கு பணிகள் கிடைக்கும் என ஆதரவாக பேசினர். பிறகு தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு குழு ஒருங்கிணைப்பாளர் முகிலன் பேசும் போது,

    கரூர் மாவட்டத்தில் நூற்றுக்கு மேற்பட்ட கல்குவாரிகள் செயல்பட்டு வருகிறது. தற்போது ஒரு சில குவாரிகளுக்கு போதிய அனுமதி இல்லாமல் செயல்பட்டு வருகிறது. இன்னும் ஒரு சில கல்குவாரிகளில் அனுமதிக்கப்பட்ட அளவை விட 50 மடங்கு கூடுதலாக ஆழமாக கல்வெட்டி எடுக்கப்பட்டு வருவது தற்போது கண்டறியப்பட்டுள்ளது. குவாரிகளில் வெடி வெடிப்பதற்கான நேரத்தை பின் பின்பற்றுவது கிடையாது. மேலும் கல்குவாரிகளில் போர்டு வைக்க வேண்டும் ஆனால் அவற்றை பல்வேறு கல் குவாரி நிறுவனங்கள் செயல்படுத்துவது இல்லை. ஒன்றியம் முழுவதும் சட்ட விரோதமான இயங்கும் கல்குவாரிகளை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். சுருக்க அறிக்கையில் முழுமையான விபரங்கள் எதுவும் இல்லை. கல் குவாரிக்கான திட்ட அறிக்கையில் சரியான தகவல்களை முதலில் அதிகாரிகள் தயார் செய்து கொடுக்க வேண்டும் இவ்வாறு அவர் பேசினார்.கூட்டத்தில் ஆதரவாளர்கள் எதிர்ப்பாளர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


    • விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
    • கல்குவாரி அமைப்பதற்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கக் கூடாது

    பு.புளியம்பட்டி:

    புஞ்சை புளியம்பட்டி அடுத்த காரப்பாடி ஊராட்சி க்கு உட்பட்ட சின்னான் குட்டை குடியிருப்பு பகுதி மற்றும் விவசாய விளை நிலங்களின் அருகே கல்கு வாரி செயல்பட்டு வருகிறது.

    இந்த கல்குவாரியில் அதிக சக்தி வாய்ந்த வெடி களை பயன்படுத்தி பாறை களை வெடித்து எடுப்பதால் அப்பகுதியில் உள்ள கிராம மக்கள் மற்றும் விவசாய தோட்டங்களில் வசிக்கும் விவசாயிகள் மிகுந்த சிரம த்திற்கு ஆளாகி வருகின்ற னர்.

    வெடிச்சத்தம் கேட்கும் போது ஏற்படும் அதிர்வு மற்றும் அதிக சத்தம் கார ணமாக கால்நடை களுக்கு மலட்டு த்தன்மை ஏற்பட்டு உள்ளதாக குற்றம் சாட்டு கின்றனர்.

    மேலும் அரசு அனுமதித்த அளவைவிட அதிக ஆழ த்திற்கு பாறைகளை வெடி த்தெடுப்பதால் அப்பகுதி யில் உள்ள விவசாயக் கிணறுகள் மற்றும் ஆழ்து ளை கிணறுகளில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து ள்ளது. கற்களை அதிக அளவில் பாரம் ஏற்றி செல்லும் லாரிக ளால் அப்பகுதியில் சாலைகள் சேதம் அடை ந்துள்ளது.

    கல்குவாரிக்கு செல்லும் சாலையில் 4 இடங்களில் புதிய பாலம் கட்டுமான பணி நடைபெறுவதால் குவாரி உரிமையாளர்க ளுக்கு ஆதரவாக பாலம் கட்டப்படுவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.

    இதுகுறித்து அதிகாரி களிடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை என வேதனையுடன் அந்த பகுதி மக்கள் தெரிவித்தனர்.

    ஏற்கனவே உள்ள கல்குவாரிக்கு அருகே மீண்டும் ஒரு புதிய கல்குவாரி அமைக்க மாவட்ட நிர்வாகம் மற்றும் கனிமவளத்துறை அனுமதி அளித்துள்ளதாக தகவல்கள் வெளியானதை அடுத்து இது சம்பந்தமாக காரா ப்பாடி ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே விவசாயிகள் மற்றும் பொது மக்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

    இந்த கூட்டத்திற்கு தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் வேணு கோபால் தலைமை தாங்கி னார். சத்தியமங்கலம் வட்டார தலைவர் சுப்பு முன்னிலை வகித்தார்.

    கூட்டத்தில் காரப்பாடி ஊராட்சிக்கு உட்பட்ட மாரம்பாளையம், மாரம்பா ளையம் புதூர், வகுத்து கவுண்டன்புதூர், நடுப்பாளையம், கொமர பாளையம், தேவம்பா ளை யம், சின்னான்குட்டை கோப்பம்பாளையம், கண்டி சாலை, காரப்பாடி, கோட்ட பாளையம், பாறைப்புதூர் உள்ளிட்ட கிராமங்களில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாய குடும்பங்கள் மற்றும் விவசாயக் கூலிகள் வசித்து வருகிறோம்.

    எங்களது பகுதியில் ஏற்கனவே ஒரு கல்குவாரி இயங்கி வருகிறது. இதனால் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளோம். இந்த நிலையில் மீண்டும் ஒரு கல்குவாரி அமைக்க அரசு அனுமதி வழங்குவதாக கூறப்படு கிறது.

    எனவே மீண்டும் இப்பகுதியில் கல்குவாரி அமைப்பதற்கு அனுமதி வழங்குவதை மாவட்ட நிர்வாகம் பரிசீலித்து விவசாயிகளின் நலன் கருதி அனுமதி வழங்கக் கூடாது என அரசை கேட்டுக் கொள்வது உள்ளிட்ட பல்வேறு தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட்டது.

    இந்த கூட்டத்தில் கார ப்பாடி ஊராட்சி மன்ற தலைவர் சாந்தி ராமசாமி, விவசாய சங்க நிர்வாகிகள் மோகன் குமார். சுப்பிரமணி.சதீஷ்குமார். முத்துக்குமார். பொன்னுசாமி, சண்முகம், வார்டு உறுப்பினர் லோக நாயகி நடராஜன் மற்றும் ஊர் பொதுமக்கள் விவசாயி கள் பலர் கலந்து கொண்ட னர்.

    ×