search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கல்குவாரி அமைக்க கருத்துக் கேட்பு கூட்டம்
    X

    கல்குவாரி அமைக்க கருத்துக் கேட்பு கூட்டம்

    • காருடையாம்பாளையம் கிராமத்தில் கல்குவாரி அமைப்பதற்கான கருத்துக் கேட்பு கூட்டம் பவித்திரம் பகுதியிலுள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது
    • கல்குவாரி அமைந்தால் சுற்று புற பகுதிகளில் பலருக்கு பணிகள் கிடைக்கும்


    வேலாயுதம்பாளையம்,

    கரூர் மாவட்டம் க.பரமத்தி அடுத்துள்ள காருடையாம்பாளையம் கிராம பகுதியில் கல்குவாரி அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான கருத்துக் கேட்பு கூட்டம் க.பரமத்தி அடுத்த பவித்திரம் பகுதியில் தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் மாவட்ட மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரி ஜெயலட்சுமி முன்னிலை வகித்தார்.தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டு தங்களின் கருத்துக்களை தெரிவித்தனர். இதில் புதுக்கநல்லி, மாலப்பாளையம்புதூர் ஆகிய சமூக ஆர்வலர்கள் ஒரு சிலர் கல்குவாரி அமைக்கப்படுவதால் ஏற்படும் சுற்றுசூழல் பாதிப்பு குறித்து பேசினர். அதில் ஒரு சிலர் கல்குவாரி அமைந்தால் அதன் சுற்று புற பகுதிகளில் வசிக்கும் பலருக்கு பணிகள் கிடைக்கும் என ஆதரவாக பேசினர். பிறகு தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு குழு ஒருங்கிணைப்பாளர் முகிலன் பேசும் போது,

    கரூர் மாவட்டத்தில் நூற்றுக்கு மேற்பட்ட கல்குவாரிகள் செயல்பட்டு வருகிறது. தற்போது ஒரு சில குவாரிகளுக்கு போதிய அனுமதி இல்லாமல் செயல்பட்டு வருகிறது. இன்னும் ஒரு சில கல்குவாரிகளில் அனுமதிக்கப்பட்ட அளவை விட 50 மடங்கு கூடுதலாக ஆழமாக கல்வெட்டி எடுக்கப்பட்டு வருவது தற்போது கண்டறியப்பட்டுள்ளது. குவாரிகளில் வெடி வெடிப்பதற்கான நேரத்தை பின் பின்பற்றுவது கிடையாது. மேலும் கல்குவாரிகளில் போர்டு வைக்க வேண்டும் ஆனால் அவற்றை பல்வேறு கல் குவாரி நிறுவனங்கள் செயல்படுத்துவது இல்லை. ஒன்றியம் முழுவதும் சட்ட விரோதமான இயங்கும் கல்குவாரிகளை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். சுருக்க அறிக்கையில் முழுமையான விபரங்கள் எதுவும் இல்லை. கல் குவாரிக்கான திட்ட அறிக்கையில் சரியான தகவல்களை முதலில் அதிகாரிகள் தயார் செய்து கொடுக்க வேண்டும் இவ்வாறு அவர் பேசினார்.கூட்டத்தில் ஆதரவாளர்கள் எதிர்ப்பாளர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


    Next Story
    ×