search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புகையிலை ஒழிப்பு"

    • காரைக்கால் மாவட்டத்தில் அமைந்துள்ள 154 மருந்து கடைகளிலும் சி.சி.டி.வி. கேமரா பொருத்தப்பட வேண்டும்.
    • பஞ்சாயத்து ஆணையர்கள் தங்கள் பகுதிகளில் பெட்டிகடை மற்றும் பல்வேறு கடைகளை அடிக்கடி ஆய்வு செய்ய வேண்டும்.

    புதுச்சேரி:

    காரைக்கால் மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை முற்றிலும் ஒழிப்பது, மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பல்வேறுபட்ட விழிப்புணர்வு நிகழ்வுகளை ஏற்படுத்துவது தொடர்பான, 3ம்கட்ட இறுதி ஆலோசனைக் கூட்டம், காரைக்கால் காமராஜர் அரசு வளாகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு, மாவட்ட துணை கலெக்ட ர்(வருவாய்) ஜான்சன் தலைமை தாங்கினார். துணை கலெக்டர்(பேரிடர் மேலாண்மை) பாஸ்கரன், போலீஸ் சூப்பிரண்டு சுப்பிரமணியன் மற்றும் உள்ளாட்சித் துறை, மீன்வளத்துறை, கடலோர காவல் படை, காரைக்கால் நகராட்சி, கல்வித்துறை, சமூக நலத்துறை மற்றும் அனைத்து கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர்கள் உள்ளிட்ட அரசுத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    அனைத்து துறை அதிகாரி களின் ஆலோ சனைகளை கேட்டறிந்த, துணை கலெக்டர் ஜான்சன் பேசியதாவது:-காரைக்கால் மாவட்டத்தில் அமைந்துள்ள 154 மருந்து கடைகளிலும் சி.சி.டி.வி. கேமரா பொருத்தப்பட வேண்டும். மருந்துகள் சரியான விலைக்கு விற்கப்ப டுகிறதா?, காலாவதியான மரு ந்துகள் விற்கப்படுகிறதா? என்பதை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்யவேண்டும். காரைக்கால் கடலில் இயங்கும் அனைத்து படகு களில் அரசு அறிவுறுத்திய வண்ணம் பூசப்பட வேண்டும். தேசியக்கொடியை பறக்க விட வேண்டும். வரிசை எண்ணை எழுதி வைக்க வேண்டும். அதேபோல், அனைத்து படகுகளிலும் பையோமெட்ரிக் கருவி பொருத்த வேண்டும். மேலும் இரவு நேரத்தில் சந்தேகப்படும்படியாக படகுகள், கடலில் வலம் வந்தால் மீனவர்கள் சம்மந்தப்பட்ட துறைக்கு தெரிவிக்க வேண்டும்.

    மேலும், போலீசார், கல்வித்துறையுடன் இணைந்து மாணவர்கள் மத்தியில் பல்வேறு விழிப்பு ணர்வுகளை ஏற்படுத்த வேண்டும். பள்ளிகள் அருகில் 100 மீட்டருக்குள் பெட்டி கடைகளை அனுமதிக்க கூடாது. அப்படி இருக்கும் பட்சத்தில், அக்கடைகளை அடிக்கடி ஆய்வு செய்ய வேண்டும். போதை, புகையிலை பொருட்கள் விற்பனையை தடுக்க வேண்டும். பள்ளிகளில் ஒவ்வொரு வெள்ளி க்கிழமையும் மாலை நேரத்தில், கல்வித்துறையும் மற்றும் போலீசாரும் இணைந்து மாணவ ர்களிடையே போதைப் பழக்கத்தின் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். அனைத்து கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர்கள் தங்கள் பகுதிகளில் பெட்டிகடை மற்றும் பல்வேறு கடைகளை அடிக்கடி ஆய்வு செய்ய வேண்டும். முக்கியமாக, காரைக்கால் மாவட்டத்தில், அனைத்து அரசுத் துறைகளும் ஒன்றிணைந்து செயல்ப ட்டால், அரசால் தடை செய்ய ப்பட்ட புகையிலை பொரு ட்களை முற்றிலும் ஒழிக்கலாம். இவ்வாறு அவர் பேசினார்.

    • தலைமை ஆசிரியர்களுக்கு கலெக்டர் அறிவுரை
    • புகையிலை ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு கருத்தரங்கு நடந்தது

    வேலூர்:

    வேலூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள காயிதே மில்லத் அரங்கில் பொது சுகாதாரத் துறை சார்பில் பள்ளிகளில் புகையிலை ஒழிப்பு குறித்து தலைமை ஆசிரியர்களுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கு இன்று நடந்தது.

    மாவட்ட கல்வி அலுவலர் அங்கு லட்சுமி தலைமை தாங்கினார்.

    இதில் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் கலந்து கொண்டு பேசியதாவது:-

    பள்ளிகளில் தற்போது அரையாண்டு தேர்வு நிறைவடைந்துள்ளது. இதன் மூலம் மாணவர்களின் தேர்ச்சி விகிதம் உங்களுக்கு தெரிந்திருக்கும். பொது தேர்வுகளில் தேர்ச்சி பெற முடியாத மாணவ மாணவிகளை நீங்கள் தேர்ச்சி பெற செய்ய வேண்டும். 2 மாதத்தில் பொது தேர்வு வரவுள்ளது.

    கடந்த ஆண்டு 10 மற்றும் 12-ம் வகுப்பில் வேலூர் மாவட்டம் கடைசி இடம் பிடித்தது. இதனை மாற்ற வேண்டும் கல்வியில் முன்னிலைப் பெரும் மாவட்டமாக கொண்டு வருவதற்கு தலைமை ஆசிரியர்கள் பொறுப்புடன் செயல்பட வேண்டும்.

    பள்ளிகளில் முழுமையாக புகையிலை, குட்கா போதைப்பொருட்களை ஒழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பள்ளிகளுக்கு அருகில் போதைப் பொருட்கள் விற்பனை செய்வது தெரிய வந்தால் உடனடியாக புகார் செய்ய வேண்டும்.

    மாநில அளவில் நடந்த கலாச்சார போட்டியில் வேலூர் மாவட்ட மாணவ மாணவிகள் அதிக அளவில் கலந்து கொண்டு பரிசுகளை பெற்று சாதனை படைத்துள்ளனர். இதே போல முதல் அமைச்சர் கோப்பைக்கான போட்டிகளிலும் அதிகளவில் மாணவ-மாணவிகள் பங்கேற்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

    • தாராபுரம் வட்ட சட்ட பணிக்குழு சார்பில் போதை மற்றும் புகையிலை ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.
    • தொழில் பயிற்சி நிலைய மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

    தாராபுரம் :

    திருப்பூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு உத்தரவின் பேரில் தாராபுரம் வட்ட சட்ட பணிக்குழு சார்பில் போதை மற்றும் புகையிலை ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.அதனை தாராபுரம் வட்ட சட்ட பணிகள் குழு தலைவரும், சார்பு நீதிபதியுமான எம்.தர்மபிரபு தொடங்கி வைத்தார்.

    அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் தொடங்கிய ஊர்வலம் மகாராணி கலை மற்றும் அறிவியல் கல்லூரி வரை சென்று திரும்ப தொழில் பயிற்சி நிலையம் வந்தது. முகாமிற்கு தாராபுரம் வட்ட சட்ட பணிகள் குழு தலைவரும், சார்பு நீதிபதியுமான தர்ம பிரபு மற்றும் குற்றவியல் நடுவர் எஸ்.பாபு ஆகியோர் தலைமை தாங்கி பேசினார்கள். அப்போது போதை மற்றும் புகையிலை பொருட்களை ஒழித்து நல்ல எதிர்கால மாணவ சமுதாயத்தை காப்பாற்ற மாணவர்கள் அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும் என நீதிபதிகள் கூறினர்.

    பிறகு முகாமில் பள்ளி மாணவர்கள் போதை மற்றும் புகையிலை பொருள் குறித்து கேட்கப்பட்ட கேள்விகளுக்கு நீதிபதிகள் பதில் அளித்தனர். தொழில் பயிற்சி நிலைய மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.  

    ×