search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    அனைத்து அரசுத் துறைகளும் ஒன்றிணைந்து செயல்பட்டால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை முற்றிலும் ஒழிக்கலாம்
    X

    3ம்கட்ட இறுதி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

    அனைத்து அரசுத் துறைகளும் ஒன்றிணைந்து செயல்பட்டால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை முற்றிலும் ஒழிக்கலாம்

    • காரைக்கால் மாவட்டத்தில் அமைந்துள்ள 154 மருந்து கடைகளிலும் சி.சி.டி.வி. கேமரா பொருத்தப்பட வேண்டும்.
    • பஞ்சாயத்து ஆணையர்கள் தங்கள் பகுதிகளில் பெட்டிகடை மற்றும் பல்வேறு கடைகளை அடிக்கடி ஆய்வு செய்ய வேண்டும்.

    புதுச்சேரி:

    காரைக்கால் மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை முற்றிலும் ஒழிப்பது, மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பல்வேறுபட்ட விழிப்புணர்வு நிகழ்வுகளை ஏற்படுத்துவது தொடர்பான, 3ம்கட்ட இறுதி ஆலோசனைக் கூட்டம், காரைக்கால் காமராஜர் அரசு வளாகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு, மாவட்ட துணை கலெக்ட ர்(வருவாய்) ஜான்சன் தலைமை தாங்கினார். துணை கலெக்டர்(பேரிடர் மேலாண்மை) பாஸ்கரன், போலீஸ் சூப்பிரண்டு சுப்பிரமணியன் மற்றும் உள்ளாட்சித் துறை, மீன்வளத்துறை, கடலோர காவல் படை, காரைக்கால் நகராட்சி, கல்வித்துறை, சமூக நலத்துறை மற்றும் அனைத்து கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர்கள் உள்ளிட்ட அரசுத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    அனைத்து துறை அதிகாரி களின் ஆலோ சனைகளை கேட்டறிந்த, துணை கலெக்டர் ஜான்சன் பேசியதாவது:-காரைக்கால் மாவட்டத்தில் அமைந்துள்ள 154 மருந்து கடைகளிலும் சி.சி.டி.வி. கேமரா பொருத்தப்பட வேண்டும். மருந்துகள் சரியான விலைக்கு விற்கப்ப டுகிறதா?, காலாவதியான மரு ந்துகள் விற்கப்படுகிறதா? என்பதை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்யவேண்டும். காரைக்கால் கடலில் இயங்கும் அனைத்து படகு களில் அரசு அறிவுறுத்திய வண்ணம் பூசப்பட வேண்டும். தேசியக்கொடியை பறக்க விட வேண்டும். வரிசை எண்ணை எழுதி வைக்க வேண்டும். அதேபோல், அனைத்து படகுகளிலும் பையோமெட்ரிக் கருவி பொருத்த வேண்டும். மேலும் இரவு நேரத்தில் சந்தேகப்படும்படியாக படகுகள், கடலில் வலம் வந்தால் மீனவர்கள் சம்மந்தப்பட்ட துறைக்கு தெரிவிக்க வேண்டும்.

    மேலும், போலீசார், கல்வித்துறையுடன் இணைந்து மாணவர்கள் மத்தியில் பல்வேறு விழிப்பு ணர்வுகளை ஏற்படுத்த வேண்டும். பள்ளிகள் அருகில் 100 மீட்டருக்குள் பெட்டி கடைகளை அனுமதிக்க கூடாது. அப்படி இருக்கும் பட்சத்தில், அக்கடைகளை அடிக்கடி ஆய்வு செய்ய வேண்டும். போதை, புகையிலை பொருட்கள் விற்பனையை தடுக்க வேண்டும். பள்ளிகளில் ஒவ்வொரு வெள்ளி க்கிழமையும் மாலை நேரத்தில், கல்வித்துறையும் மற்றும் போலீசாரும் இணைந்து மாணவ ர்களிடையே போதைப் பழக்கத்தின் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். அனைத்து கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர்கள் தங்கள் பகுதிகளில் பெட்டிகடை மற்றும் பல்வேறு கடைகளை அடிக்கடி ஆய்வு செய்ய வேண்டும். முக்கியமாக, காரைக்கால் மாவட்டத்தில், அனைத்து அரசுத் துறைகளும் ஒன்றிணைந்து செயல்ப ட்டால், அரசால் தடை செய்ய ப்பட்ட புகையிலை பொரு ட்களை முற்றிலும் ஒழிக்கலாம். இவ்வாறு அவர் பேசினார்.

    Next Story
    ×