search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பில்லூர்"

    • 5 ஆயிரம் கன அடி தண்ணீரும் பவானி ஆற்றில் திறந்து விடப்பட்டு வருகிறது.
    • தற்போது அணையின் நீர்மட்டம் 85 அடியாக உள்ளது.

    மேட்டுப்பாளையம்,

    கோவை, நீலகிரி மாவட்டத்தில் கடந்த 1 மாதமாக பருவமழை பெய்து வருகிறது.

    இதனிடையே பில்லூர் அணைக்கான நீர்வரத்து தற்போது அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு கனமழை கொட்டியது. இதன் காரணமாக பில்லூர் அணைக்கு வரும் தண்ணீரின் அளவு அதிகரித்து காணப்பட்டது. தண்ணீர் வரத்து அதிக ரிப்பால் அணையின் நீர்மட்டமும் கிடுகிடுவென உயர்ந்தது.

    பில்லூர் அணையின் மொத்த நீர்மட்டம் 100 அடியாகும். மழைக்கு முன்பு பில்லூர் அணையின் நீர்மட்டம் 77 அடியாக இருந்தது. நேற்று அணைக்கு வினாடிக்கு 6 ஆயிரம் கன அடிநீர் வந்தது. இதன் காரணமாக நேற்று ஒரே நாளில் அணையின் நீர்மட்டம் 12 அடி உயர்ந்து 89 அடிக்கு தண்ணீர் இருந்தது.

    இன்று மழையின் தாக்கம் சற்று குறைந்துள்ளது. இதன் காரணமாக அணைக்கு வரும் நீரின் அளவும் குறைந்துள்ளது. தற்போது அணைக்கு வினாடிக்கு 5 ஆயிரம் கன அடி தண்ணீர் வருகிறது.

    பாதுகாப்பு கருதி 5 ஆயிரம் கன அடி தண்ணீரும் பவானி ஆற்றில் திறந்து விடப்பட்டு வருகிறது. இதனால் பவானி ஆற்றிலும் வெள்ளம் பெருக்கெடுத்து செல்கிறது. தற்போது அணையின் நீர்மட்டம் 85 அடியாக உள்ளது.

    இதனிடயே மேட்டுப்பாளையம் நகராட்சிட்குட்பட்ட நரிப்பள்ளம் பகுதியில் பவானி ஆற்றில் திருப்பூர் குடிநீர் திட்டத்திற்காக மேற்கொள்ளப்பட்டு வந்த பணியின் போது அங்கிருந்த 3 டிப்பர் லாரிகள் வெள்ள நீரில் சிக்கியது.

    இதனை பொக்கலைன் உதவியுடன் பணியாளர்கள் அப்புறப்படுத்தப்படுத்தினர்.

    • முழு சோதனை ஓட்டம் நடத்தி ஒத்திகை பார்க்க மாநகராட்சி அதிகாரிகள் திட்டம்
    • கோவையில் நவ.1-ந் தேதி முதல் குடிநீர் வினியோகிக்க ஆயத்தம்

    கோவை,

    கோவை மக்களுக்கு சிறுவாணி, பில்லூர் அணைகள் மற்றும் ஆழியாறு, பவானி ஆறுகள் முக்கிய நீர் ஆதாரங்களாக திகழ்கின்றன. மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட விரி வாக்க பகுதிகளுக்கு கவுண்டம்பாளையம்-வடவள்ளி கூட்டுக்குடிநீர் திட்டம் உருவாக்கப்பட்டு, 11 ேகாடி லிட்டர் வரை வழங்கப்படுகிறது. சிறுவாணியில் தண்ணீர் இல்லாத பட்சத்தில் பில் லூர் அணையே கோவைக்கு கைகொடுக்கிறது.

    இந்நிலையில், வரும் 2040ம் ஆண்டு மக்கள் தொகையை கருத்தில் கொண்டு பில்லூர்-3 குடிநீர் திட்டம் ரூ.779 கோடி மதிப்பீட்டில் செயல்ப டுத்தப்படுகிறது. பவானி ஆற்று நீரை ஆதாரமாக கொண்ட இத்திட்டத்தில், மேட்டுப்பா ளையம், நெல்லித்துறை ஊராட்சி, முருகையன் பரிசல் துறை பகுதியில் ரூ.134 கோடி மதிப்பீட்டில் தலைமை நீரேற்று நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.

    அங்கிருந்து பன்னிம டைக்கு குடிநீர் கொண்டு வரப்பட்டு மாநகராட்சி பகுதிகளுக்கு வினியோ கிக்கப்படவுள்ளது. பணிகள் பெரும்பாலும் முடிந்துள்ள நிலையில் முழு சோதனை ஓட்டம் செய்து நவ.,1 முதல் குடிநீர் வினியோகிக்க மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.

    இதுகுறித்து மாநகராட்சி கமிஷனர் பிரதாப் கூறியதா வது:-

    பில்லூர்-3 குடிநீர் திட்டம் நல்ல முன்னேற்றம் அடைந்துள்ளது. இன்னும் 800 மீட்டர் தூரத்துக்கு குழாய் பதிக்க வேண்டி யுள்ளது. வரும், 25ந் தேதிக்குள் இதர பணிகளை யும் முடித்து சோதனை மேற்கொள்ளப்படும். அக்.,20க்குள் அனைத்து பணிகளும் முடிக்கப்பட்டு நவ.,1 முதல் குடிநீர் வினியோகம் துவங்க திட்டமிட்டுள்ளோம்.

    பில்லூர்-1 திட்டத்தில் மாநகராட்சிக்கு மட்டுமின்றி பல்லடம், பொங்கலூர் வரை தண்ணீர் செல்கிறது. பில்லூர்-2, 3 மாநகராட்சி பகுதி மக்களுக்கான திட்டம், பில்லூர்-3 துவங்கி விட்டால் தேவைக்கு அதிக மாக குடிநீர் கிடைக்கும். இருநாட்களுக்கு ஒருமுறை குடிநீர் வினியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்,

    • அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 4 ஆயிரம் கன அடியாக உள்ளது.
    • தற்போதைய அணையின் நீர்மட்டம் 80 அடியில் உள்ளது.

    மேட்டுப்பாளையம்,

    கோவை மாவட்டத்தில் உள்ள நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக மாவட்டத்தில் உள்ள பல்வேறு அணைகளுக்கும் தண்ணீர் வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

    அதன் ஒருபகுதியாக காரமடை அருகே உள்ள பில்லூர் அணையின் மொத்த கொள்ளளவு 100 அடி ஆகும். கோவை,திருப்பூர் மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக பில்லூர் அணை விளங்கி வருகிறது. அணையின் நீர்பிடிப்பு பகுதிகளான கேரள மாநிலம் அட்டப்பாடி மற்றும் நீலகிரி மாவட்டத்தில் உள்ள அப்பர்பவானி, அவலாஞ்சி, குந்தா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக பில்லூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

    இன்று காலை 6 மணி நிலவரப்படி அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 4 ஆயிரம் கன அடியாக உள்ளது. அதே நேரத்தில் நீர் வெளியேற்றம் வினாடிக்கு 6 ஆயிரம் கன அடியாக உள்ளது. இந்த நிலையில் பில்லூர் அணைப்பகுதியில் 1 மி.மீ மழையும்,கெத்தை பகுதியில் 2 மி.மீ,பரளி பகுதியில் 2 மி.மீ,அவலாஞ்சி பகுதியில் 144 மி.மீ மழையும், பதிவாகியுள்ளது.

    தொடர் மழையின் காரணமாக பில்லூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. தற்போதைய அணையின் நீர்மட்டம் 80 அடியில் உள்ளது. மேலும், அணையில் இருந்து மின் உற்பத்திக்காக வினாடிக்கு 6 ஆயிரம் கன அடி நீர் பவானி ஆற்றில் திறந்து விடப்படுவதால் பவானி ஆற்றின் இரு கரைகளையும் தொட்டவாறு தண்ணீர் நிரம்பி செல்கிறது.

    ×