search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மேட்டுப்பாளையம் பில்லூர் அணை நீர்மட்டம் ஒரே நாளில் 12 அடி உயர்வு
    X

    மேட்டுப்பாளையம் பில்லூர் அணை நீர்மட்டம் ஒரே நாளில் 12 அடி உயர்வு

    • 5 ஆயிரம் கன அடி தண்ணீரும் பவானி ஆற்றில் திறந்து விடப்பட்டு வருகிறது.
    • தற்போது அணையின் நீர்மட்டம் 85 அடியாக உள்ளது.

    மேட்டுப்பாளையம்,

    கோவை, நீலகிரி மாவட்டத்தில் கடந்த 1 மாதமாக பருவமழை பெய்து வருகிறது.

    இதனிடையே பில்லூர் அணைக்கான நீர்வரத்து தற்போது அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு கனமழை கொட்டியது. இதன் காரணமாக பில்லூர் அணைக்கு வரும் தண்ணீரின் அளவு அதிகரித்து காணப்பட்டது. தண்ணீர் வரத்து அதிக ரிப்பால் அணையின் நீர்மட்டமும் கிடுகிடுவென உயர்ந்தது.

    பில்லூர் அணையின் மொத்த நீர்மட்டம் 100 அடியாகும். மழைக்கு முன்பு பில்லூர் அணையின் நீர்மட்டம் 77 அடியாக இருந்தது. நேற்று அணைக்கு வினாடிக்கு 6 ஆயிரம் கன அடிநீர் வந்தது. இதன் காரணமாக நேற்று ஒரே நாளில் அணையின் நீர்மட்டம் 12 அடி உயர்ந்து 89 அடிக்கு தண்ணீர் இருந்தது.

    இன்று மழையின் தாக்கம் சற்று குறைந்துள்ளது. இதன் காரணமாக அணைக்கு வரும் நீரின் அளவும் குறைந்துள்ளது. தற்போது அணைக்கு வினாடிக்கு 5 ஆயிரம் கன அடி தண்ணீர் வருகிறது.

    பாதுகாப்பு கருதி 5 ஆயிரம் கன அடி தண்ணீரும் பவானி ஆற்றில் திறந்து விடப்பட்டு வருகிறது. இதனால் பவானி ஆற்றிலும் வெள்ளம் பெருக்கெடுத்து செல்கிறது. தற்போது அணையின் நீர்மட்டம் 85 அடியாக உள்ளது.

    இதனிடயே மேட்டுப்பாளையம் நகராட்சிட்குட்பட்ட நரிப்பள்ளம் பகுதியில் பவானி ஆற்றில் திருப்பூர் குடிநீர் திட்டத்திற்காக மேற்கொள்ளப்பட்டு வந்த பணியின் போது அங்கிருந்த 3 டிப்பர் லாரிகள் வெள்ள நீரில் சிக்கியது.

    இதனை பொக்கலைன் உதவியுடன் பணியாளர்கள் அப்புறப்படுத்தப்படுத்தினர்.

    Next Story
    ×