search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பிரண்ட்லைன் மிலேனியம் பள்ளி"

    • வானில் தோன்றிய நட்சத்திரங்களின் தொகுதிகளையும்,கோள்களையும் கண்டு வியந்து மகிழ்ந்தனர்.
    • வெற்றிகரமாகப் பயணித்தனர் என்பதையும் அறிந்து கொண்டனர்.

    திருப்பூர் :

    பிரண்ட்லைன் மிலேனியம் பள்ளியில் மாணவர்களுக்கு வானியல் நோக்கும் நிகழ்ச்சி (ஸ்கை வாட்ச்) நிகழ்ச்சி நடைபெற்றது. இரவு 7 மணி முதல் தொலை நோக்கியின் வாயிலாக வானில் தோன்றிய நட்சத்திரங்களின் தொகுதிகளையும்,கோள்களையும் கண்டு வியந்து மகிழ்ந்தனர்.

    பழங்கால மக்கள் இரவு நேரப்பயணங்களின் போது நட்சத்திரங்களின் துணையுடன் தான் வெற்றிகரமாகப் பயணித்தனர் என்பதையும் அறிந்துகொண்டனர்.

    வானியல் ஆய்வாளர் உமாசங்கர் இந்நிகழ்ச்சிக்கு வருகை தந்து வானியல் தொடர்பான கருத்துகளை மாணவர்களுக்குத் தெளிவாக விளக்கினார். இந்நிகழ்ச்சியில் பள்ளி தாளாளர் சிவசாமி, பள்ளி செயலாளர் சிவகாமி, பள்ளி முதல்வர் லாவண்யா மற்றும் ஆசி–ரி–யர்–களும் கலந்துகொண்டனர்.

    • துணை செயலாளர் வைஷ்ணவி நந்தன் மற்றும் பள்ளியின் முதல்வர் லாவண்யா ஆகியோர் பாராட்டினர்.
    • திருப்பூர் பிரண்ட்லைன் மிலேனியம் பள்ளியில் கிறிஸ்துமஸ் தின விழா கொண்டாடப்பட்டது.

    திருப்பூர்:

    திருப்பூர் பிரண்ட்லைன் மிலேனியம் பள்ளியில் கிறிஸ்துமஸ் தின விழா கொண்டாடப்பட்டது. விழாவில் மழலைச் செல்வங்கள் தங்களது இனிமையானக் குரலில் பாடல் பாடியும், நடனம் மற்றும் நாடகம் வாயிலாக இயேசு கிறிஸ்துவின் வரலாற்றை நம் கண் முன்னே கொண்டு வந்தனர். மேலும் கிறிஸ்துமஸ் ஏன் கொண்டாடுகிறோம் என்பது பற்றியும் இயற்கை, உயிரினங்கள் மற்றும் மனிதர்களை இறைவன் எவ்வாறு உருவாக்கினார் என்பது பற்றியும் தத்ரூபமாக நடித்துக் காண்பித்து அனைவரது பாராட்டையும் பெற்றனர். விழாவில் கலந்துகொண்ட அனைத்து மழலைச் செல்வங்களையும் பள்ளியின் தாளாளர் டாக்டர் சிவசாமி, செயலாளர் டாக்டர் சிவகாமி, இயக்குனர் சக்திநந்தன், துணை செயலாளர் வைஷ்ணவி நந்தன் மற்றும் பள்ளியின் முதல்வர் லாவண்யா ஆகியோர் பாராட்டினர்.

    ×