search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பி.எஸ்.ஆர்.கல்லூரி"

    • மாவட்ட அளவில் நடந்த போட்டியில் பி.எஸ்.ஆர்.கல்லூரி மாணவன் சாதனை படைத்துள்ளது.
    • கதை, கட்டுரை, பேச்சுப்போட்டி கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்றது.

    சிவகாசி

    தமிழக அரசின தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் மாவட்ட அளவிலான கல்லூரி மாணவர்களுக்கிடையேயான கதை, கட்டுரை, பேச்சுப்போட்டி கடந்த ஏப்ரல் மாதம் விருதுநகர் மாவட்ட த்தில் நடைபெற்றது.

    மாவட்டம் வாரியாக நடைபெற்ற போட்டியில் முதல் சுற்றில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சென்னை பல்கலைக் கழகத்தில் மாநில அளவிலான இறுதிப் போட்டிகள் நடைபெற்றன. இதில் பி.எஸ்.ஆர். பொறியியல் கல்லூரியின் உயிர் மருத்துவப் பொறியியல் துறையின் மாணவன் நெல்லையப்ப ராஜா மாநில அளவில் இரண்டாம் பரிசு பெற்றார்.

    வெற்றி பெற்ற மாண வனுக்கு தமிழக அரசின் சார்பில் ரூ.12 ஆயிரம் காசோலை மற்றும் சான்றி தழை, தமிழ் வளர்ச்சித்துறை மற்றும் உலக தமிழாராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநர் அருள் வழங்கி பாராட்டினார்.

    வெற்றி பெற்ற மாணவனுக்கு கல்லூரியின் இயக்குநர் விக்னேஷ்வரி அருண்குமார், முதல்வர் செந்தில்குமார், டீன் மாரிச்சாமி, உயிர் மருத்துவப்பொறியியல் துறைத்தலைவர் மணிகண்டன், ஒருங்கிணைப்பாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் மாணவனை பாராட்டினர்.

    • வெற்றி பெற்ற பி.எஸ்.ஆர்.கல்லூரி மாணவருக்கு பரிசு வழங்கப்பட்டது.
    • மாணவர் கிஷோரை பி.எஸ்.ஆர். கல்வி குழுமங்களின் தாளாளர் சோலைசாமி உள்பட பலர் பாராட்டினர்.

    சிவகாசி

    சிவகாசி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாவட்ட அளவிலான ''பாரதி இளங்கவிஞர் விருது'' க்கான கவிதை போட்டி நடந்தது. இதில் 25 கல்லூரிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

    இந்த போட்டிக்கான தலைப்பு மாணவர்கள் முன்னிலையில் வழங்கப்பட்டது. ''நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ?'' என்ற தலைப்பில் 50 வரிகளுக்கு மிகாமல் மாணவர்கள் கவிதை எழுதினர்.

    இதில் சிவகாசி பி.எஸ்.ஆர்.கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர் கிஷோர் தமிழ்த்துறை சார்பில் கலந்து கொண்டு 2-ம் பரிசை பெற்றார். அவர் தனது கவிதையில் பஞ்சம், லஞ்சம், இயற்கை சீரழிவு போன்ற சமூக சாடல்கள் இடம் பெற்றன.

    இவரை பாராட்டி பி.எஸ்.ஆர். கல்லூரி வணிகவியல் துறைத்தலைவர் பேராசிரியர் சுரேஷ் பரிசு வழங்கினார். பரிசு பெற்ற மாணவர் கிஷோரை பி.எஸ்.ஆர். கல்வி குழுமங்களின் தாளாளர் சோலைசாமி, இயக்குநர் விக்னேஷ்வரி அருண்குமார், கல்வி சார் இயக்குநர் கோபால்சாமி, முதல்வர் சுந்தரராஜ் மற்றும் அனைத்து துறை தலைவர்கள், பேராசிரியர்கள் பாராட்டினர்.

    ×