search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வெற்றி பெற்ற பி.எஸ்.ஆர்.கல்லூரி மாணவருக்கு பரிசு
    X

    கவிதை போட்டியில் வெற்றி பெற்ற பி.எஸ்.ஆர்.கல்லூரி மாணவர் கிஷோருக்கு பரிசு வழங்கப்பட்டது.

    வெற்றி பெற்ற பி.எஸ்.ஆர்.கல்லூரி மாணவருக்கு பரிசு

    • வெற்றி பெற்ற பி.எஸ்.ஆர்.கல்லூரி மாணவருக்கு பரிசு வழங்கப்பட்டது.
    • மாணவர் கிஷோரை பி.எஸ்.ஆர். கல்வி குழுமங்களின் தாளாளர் சோலைசாமி உள்பட பலர் பாராட்டினர்.

    சிவகாசி

    சிவகாசி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாவட்ட அளவிலான ''பாரதி இளங்கவிஞர் விருது'' க்கான கவிதை போட்டி நடந்தது. இதில் 25 கல்லூரிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

    இந்த போட்டிக்கான தலைப்பு மாணவர்கள் முன்னிலையில் வழங்கப்பட்டது. ''நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ?'' என்ற தலைப்பில் 50 வரிகளுக்கு மிகாமல் மாணவர்கள் கவிதை எழுதினர்.

    இதில் சிவகாசி பி.எஸ்.ஆர்.கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர் கிஷோர் தமிழ்த்துறை சார்பில் கலந்து கொண்டு 2-ம் பரிசை பெற்றார். அவர் தனது கவிதையில் பஞ்சம், லஞ்சம், இயற்கை சீரழிவு போன்ற சமூக சாடல்கள் இடம் பெற்றன.

    இவரை பாராட்டி பி.எஸ்.ஆர். கல்லூரி வணிகவியல் துறைத்தலைவர் பேராசிரியர் சுரேஷ் பரிசு வழங்கினார். பரிசு பெற்ற மாணவர் கிஷோரை பி.எஸ்.ஆர். கல்வி குழுமங்களின் தாளாளர் சோலைசாமி, இயக்குநர் விக்னேஷ்வரி அருண்குமார், கல்வி சார் இயக்குநர் கோபால்சாமி, முதல்வர் சுந்தரராஜ் மற்றும் அனைத்து துறை தலைவர்கள், பேராசிரியர்கள் பாராட்டினர்.

    Next Story
    ×