search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாறாங்கல்"

    • போலீசார் குழிவிளை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
    • வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    கன்னியாகுமரி:

    களியக்காவிளை அருகே குழிவிளை பகுதியில் சட்ட விரோதமாக அனுமதி இன்றி பாறை கற்களை உடைத்து வாகனங்களில் கடத்துவதாக களியக்காவிளை போலீசாருக்கு புகார் வந்தது.

    இதையடுத்து களியக்காவிளை சப்-இன்ஸ்பெக்டர் சிந்தாமணி தலைமையில் போலீசார் குழிவிளை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது சந்தேகத்துக்கு இடமாக ஒரு டெம்போ வந்துக்கொண்டிருந்தது. அந்த டெம்போவை தடுத்து நிறுத்தி சோதனை செய்த போது. டெம்போவில் எந்த அனுமதியும் இல்லாமல் பறாங்கல் கடத்துவது தெரிய வந்தது.

    இதைத்தொடர்து டெம்போவையும் பறிமுதல் செய்த போலீசார் டெம்போ டிரைவரான குளப்புறம் பகுதியை சேர்ந்த ஜோண்ஸ் டேனியல் என்பவரை கைது செய்தனர்.

    பின்னர் அவர் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    • போலீசார் வாகனத்தை பறிமுதல் செய்தனர்
    • வழக்குப்பதிவு செய்த போலீசார் தொடர்ந்து விசாரணை

    கன்னியாகுமரி:

    களியக்காவிளை அருகே மடிச்சல் பகுதியில் அனுமதியின்றி பெரிய பெரிய பாறாம்கற்களை உடைத்து கடத்துவதாக களியக்காவிளை போலீசாருக்கு புகார் வந்த வண்ணம் இருந்தது.

    இதையடுத்து களியக்காவிளை இன்ஸ்பெக்டர் காளியப்பன் தலைமையில் போலீசார் மடிச்சல் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது தனியாருக்கு சொந்தமான இடத்தில் கல் உடைக்கும் வாகனம் எந்த ஒரு அனுமதியும் இல்லாமல் பாறைகளை உடைப்பது தெரியவந்தது. இதை தொடர்ந்து அங்கு சென்ற போலீசார் வாகனத்தை பறிமுதல் செய்து வாகனத்தை பயன்படுத்தியதாக மடிச்சல் பகுதியை சார்ந்த மணிகண்டன் என்பவரை கைது செய்தனர்.

    மேலும் மணிகண்டன் மீது வழக்குமப்பதிவு செய்த போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×