என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    களியக்காவிளை அருகே அனுமதியின்றி பாறாங்கல் கடத்திய டெம்போ பறிமுதல் - டிரைவர் கைது
    X

    களியக்காவிளை அருகே அனுமதியின்றி பாறாங்கல் கடத்திய டெம்போ பறிமுதல் - டிரைவர் கைது

    • போலீசார் குழிவிளை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
    • வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    கன்னியாகுமரி:

    களியக்காவிளை அருகே குழிவிளை பகுதியில் சட்ட விரோதமாக அனுமதி இன்றி பாறை கற்களை உடைத்து வாகனங்களில் கடத்துவதாக களியக்காவிளை போலீசாருக்கு புகார் வந்தது.

    இதையடுத்து களியக்காவிளை சப்-இன்ஸ்பெக்டர் சிந்தாமணி தலைமையில் போலீசார் குழிவிளை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது சந்தேகத்துக்கு இடமாக ஒரு டெம்போ வந்துக்கொண்டிருந்தது. அந்த டெம்போவை தடுத்து நிறுத்தி சோதனை செய்த போது. டெம்போவில் எந்த அனுமதியும் இல்லாமல் பறாங்கல் கடத்துவது தெரிய வந்தது.

    இதைத்தொடர்து டெம்போவையும் பறிமுதல் செய்த போலீசார் டெம்போ டிரைவரான குளப்புறம் பகுதியை சேர்ந்த ஜோண்ஸ் டேனியல் என்பவரை கைது செய்தனர்.

    பின்னர் அவர் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    Next Story
    ×