search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாராளுமன்ற நிலைக்குழு"

    • இந்த குழுவில் எம்.பி.க்கள் ரமேஷ் சந்திர கவுசிக், கவுஸ்லேந்திரகுமார், காஜேன் முர்மு மற்றும் அதிகாரிகள்
    • பாராளுமன்ற நிலை குழுவினர் கார் மூலம் திருவனந்தபுரம் புறப்பட்டு சென்றனர்.

    கன்னியாகுமரி :

    பாராளுமன்ற நிலைக் குழு அதன் தலைவர் ராஜேந்திர அகர்வால் எம்.பி. தலைமையில் நேற்று மாலை திருவனந்தபுரத்தில் இருந்து கார் மூலம் கன்னியாகுமரி வந்தது. இந்த குழுவில் எம்.பி.க்கள் ரமேஷ் சந்திர கவுசிக், கவுஸ்லேந்திரகுமார், காஜேன் முர்மு மற்றும் அதிகாரிகள் இடம் பெற்று இருந்தனர்.

    கன்னியாகுமரியில் முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் சங்கி லித்துறை கடற்கரையில் நின்றபடி கடலின் இயற்கை அழகை பார்த்து ரசித்த குழு சன்செட் பாயிண்ட் கடற்கரை பகுதிக்கும் சென்றது. அங்கு மாலையில் கடலில் சூரியன் மறையும் காட்சியை பார்த்து ரசித்தனர்.

    அதன் பிறகு கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு சென்றனர். அங்கு வந்த பாராளுமன்ற குழுவினரை நாகர்கோவில் தேவசம் தொகுதி கோவில்களின் கண்காணிப்பாளரும், கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் மேலாளருமான ஆனந்த் மற்றும் கோவில் நிர்வாகத்தினர் வரவேற்றனர். அதன்பிறகு இந்த எம்.பி.க்கள் குழுவினர் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர்.

    கோவிலில் உள்ள ஸ்ரீகால பைரவர் சன்னதி, ஆஞ்சநேயர் சன்னதி, தியாக சவுந்தரி அம்மன் சன்னதி, மூலஸ்தான கருவறையில் அமைந்துள்ள பகவதி அம்மன் சன்னதி, இந்திர காந்த விநாயகர் சன்னதி, பாலசவுந்தரி அம்மன் சன்னதி, ஸ்ரீ தர்ம சாஸ்தா அய்யப்பன் சன்னதி, ஸ்ரீ நாகராஜர், சூரிய பகவான் சன்னதி ஆகிய சன்ன திகளுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர். பின்னர் இந்த பாராளுமன்ற நிலை குழுவினர் கார் மூலம் திருவனந்தபுரம் புறப்பட்டு சென்றனர்.

    இந்த எம்.பி.க்கள் குழுவினருடன் தேசிய நெடுஞ்சாலைத்துறை பொறியாளர்கள் மற்றும் அதிகாரிகள் வந்திருந்தனர். இந்த பாராளுமன்ற நிலை குழுவினருடன் ஏராளமான துப்பாக்கி ஏந்திய போலீஸ் அதிரடிப்படையினரும் பாதுகாப்புக்காக வந்து இருந்தனர்.

    • கொரோனா 2வது அலையில், பல மருத்துவமனைகளில் ஆக்சிஜன் சிலிண்டர் தட்டுப்பாடு நிலவியது.
    • ஆக்சிஜன் பற்றாக்குறையால் நிகழ்ந்த உயிரிழப்புகள் குறித்து மறு தணிக்கை செய்ய வேண்டும்.

    நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலையின் போது நிகழ்ந்த உயிரிழப்புகள் குறித்த ஆய்வு செய்த பாராளுமன்ற சுகாதார நிலைக்குழு, தனது 137 பக்க அறிக்கையை தாக்கல் செய்துள்ளது. மாநிலங்களவையில் நேற்று தாக்கல் செய்யப்பட்ட அந்த அறிக்கையில், ஆக்சிஜன் சிலிண்டர்கள் பற்றாக்குறையால் நிகழ்ந்த கொரோனா இறப்புகளை மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் உன்னிப்பாக ஆய்வு செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது

    பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு சரியான இழப்பீடு வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்றும், அரசு துறையிடம் இருந்து அதிக வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புணர்வு எதிர்பார்ப்பதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரிப்பு சுகாதார உள்கட்டமைப்பில் கடும் அழுத்தத்தை ஏற்படுத்தி உள்ளதாக அதில் கூறப்பட்டுள்ளது.

    கொரோனா 2வது அலை உச்சத்தில் இருந்த போது பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு, பல மருத்துவமனைகளில் ஆக்சிஜன் சிலிண்டர் தீர்ந்து விட்டது, ஒரு சில மணிநேரம் மட்டுமே ஆக்சிஜன் வினியோகிக்க முடியும் என்ற சூழல் நிலவியதாக அந்த அறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

    ஆக்சிஜன் பற்றாக்குறையால் ஏற்பட்ட உயிரிழப்புகளை தெரிவிக்கும்படி மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய சுகாதார அமைச்சகம் வேண்டுகோள் விடுத்தது, எனினும் 20 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் உயிரிழப்புகள் எதுவும் இல்லை என பதிலளித்து இருந்தன.

    மத்திய சுகாதார அமைச்சகம், மாநிலங்களின் ஒருங்கிணைப்புடன், ஆக்சிஜன் பற்றாக்குறையால் நிகழ்ந்த உயிரிழப்பு குறித்து மறு தணிக்கை செய்து ஆவணப்படுத்த வேண்டும், அது அரசின் பொறுப்புள்ள உணர்வை வெளிப்படுத்துவதுடன், ஒரு முன்னெச்சரிக்கை கொள்கையை உருவாக்கி, இது போன்ற சுகாதார அவசரநிலை சூழலை எதிர் கொள்ள உதவும் என்றும் பாராளுமன்ற நிலைக்குழு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

    ரூபாய் நோட்டு தட்டுப்பாடு, வங்கிக்கடன் மோசடி, கடன் கொள்கை ஆகியவை தொடர்பாக ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் பட்டேலிடம் நிதித்துறைக்கான பாராளுமன்ற நிலைக்குழு சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளது. #UrjitPatel
    புதுடெல்லி:

    ரிசர்வ் வங்கி கவர்னராக உள்ள உர்ஜித் பட்டேல் நிதித்துறைக்கான பாராளுமன்ற நிலைக்குழு முன்னிலையில் இன்று ஆஜரானார். காங்கிரஸ் எம்.பி வீரப்ப மொய்லி தலைமையிலான இந்த நிலைக்குழுவில் உறுப்பினராக உள்ள பல்வேறு கட்சி எம்.பி.க்களும் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

    பொதுத்துறை வங்கிகளில் கடன் பெற்று வெளிநாட்டுக்கு ஓடிய தொழிலதிபர்கள் குறித்து உர்ஜித் பட்டேலிடம் கேள்வி எழுப்பப்பட்டது. மேலும், சமீபத்தில் ஏற்பட்ட ரூபாய் நோட்டு தட்டுப்பாடு, வங்கியில் கடன் பெறுவதற்கான விதிமுறைகளில் உள்ள கோளாறுகள், பணமதிப்பிழப்புக்கு பின்னர் வங்கிகளுக்கு வந்த ரூபாய் குறித்தும் கேள்வி எழுப்பட்டது.

    இதற்கு பதிலளித்து பேசிய உர்ஜித் பட்டேல், வங்கி அமைப்பை மேலும் வலிமையானதாக மாற்றுவதற்கான பணிகள் நடந்து வருவதாக கூறியுள்ளார். சமீபத்தில் ஏற்பட்ட பிரச்சனைகளை சரிசெய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம் என்றும் அவர் கூறியுள்ளார்.

    கூட்டம் முடிந்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி தினேஷ் திரிவேதி, “பணமதிப்பிழப்புக்கு பின்னர் வங்கிகளுக்கு திரும்பி வந்த நோட்டுகள் குறித்து ரிசர்வ் வங்கி எந்த தகவல்களும் வெளியிடவில்லை. நிச்சயமாக அது நிலைக்குழுவிடம் பகிர்ந்து கொள்ள வேண்டும். நாளை கவர்னர் அதனை தாக்கல் செய்வார் என எதிர்பார்க்கிறோம்” என கூறினார்.

    நாளையும் நிலைக்குழு முன்னிலையில் உர்ஜித் பட்டேல் ஆஜராகி விளக்கமளிக்க உள்ளார். 
    ×