search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம்"

    • சாராயம், கஞ்சா விற்பனை, மின்கட்டணம், விலைவாசி உயர்வு போன்ற வற்றை தடுக்க தவறிய தி.மு.க. அரசை கண்டிப்பது, அனைத்து பெண்களுக்கும் ரூ.1,000 வழங்கவேண்டும் என்பன உள்பட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.
    • ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க. அரசு தேர்தல் சமயத்தில் அளித்த வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்ற வேண்டும்.

    பெரும்பாறை:

    திண்டுக்கல் மேற்கு மாவட்டம் கொடைக்கானல் கீழ்மலை ஒன்றிய பா.ஜ.க. சார்பாக பாச்சலூர், தாண்டிக்குடி பகுதியில் தமிழக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க. அரசு தேர்தல் சமயத்தில் அளித்த வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்ற வேண்டும்.

    சாராயம், கஞ்சா விற்பனை, மின்கட்டணம், விலைவாசி உயர்வு போன்ற வற்றை தடுக்க தவறிய தி.மு.க. அரசை கண்டிப்பது, அனைத்து பெண்களுக்கும் ரூ.1,000 வழங்கவேண்டும் என்பன உள்பட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

    பாச்சலூர் கிளை தலைவர் மாரிமுத்து தலைமை தாங்கினார். ஒன்றிய துணைத்தலைவர் சிவக்குமார் முன்னிலை வகித்தார். ஒன்றியச் செயலாளர் கிருஷ்ணசாமி, ஒன்றிய பொதுச்செயலாளர் பசுபதி, ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். ஒன்றிய உறுப்பினர் அர்ஜுணன் நன்றி கூறினார்.

    • செல்வ.பூமிநாதன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    • நரேந்திரன் மாநில பொதுக்குழு உறுப்பினர் கண்டன உரையாற்றினார்.

    கடலூர்:

    கடலூர் மேற்கு மாவட்டம் திட்டக்குடி நகர பா.ஜ.க . சார்பில் திட்டக்குடி நகராட்சி மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் எதை யும் செய்து தராத நகராட்சி ஆணையரை பணியிடை மாற்றம் செய்யக்கோரி திட்டக்குடி பஸ் நிறுத்தத்தில் நகரதலைவர் செல்வ.பூமிநாதன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் சுரேஷ் வரவேற்று பேசினார். பொன்.பெரிய சாமி மாவட்ட தலைவர் தொழில் துறை பிரிவு முன்னிலை வகித்தார். நரேந்திரன் மாநில பொதுக்குழு உறுப்பினர் கண்டன உரையாற்றினார்.

    ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட தலைவர் வெளி நாடுவாழ் தமிழ் பிரிவு சேனாதிபதி, முன்னாள் பொதுச் செயலாளர் விவசாய அணி நாகராஜ், ஒன்றிய கவுன்சிலர் கொளஞ்சி, மாவட்ட செயலாளர் ஓபிசி அணிஎஸ்.ஆர். பூமிநாதன், மாவட்ட செயலாளர் கூட்டுறவு பிரிவு சக்திவேல், நகர பொதுச்செயலாளர்கள் ராமு மணிவண்ணன், நகரத் துணைத் தலைவர் அய்யாக்கண்ணு, நகரச் செயலாளர் முல்லை நாதன், நன்றி உரை சிவா மாவட்ட துணை தலைவர் விளையாட்டு மேம்பாட்டு பிரிவு உட்பட ஒன்றிய நிர்வாகிகள், நகர நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • வீடுகளுக்கு குடிநீா் வினியோகம் செய்ய வேண்டும்.
    • பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.

    ஊட்டி

    கூடலூா் நகரசபையை கண்டித்து பா.ஜ.க. சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

    நகராட்சி அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு நகரத் தலைவா் ரவிகுமாா் தலைமை தாங்கினார்.

    மாநில விவசாய அணி செயலாளரும், முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினருமான சவுந்திரபாண்டியன் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு பேசினார்.

    ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றவா்கள் கூறிய தாவது:-

    மத்திய அரசின் தூய்மை இந்தியா திட்டத்தின் மூலம் ஒதுக்கப்பட்ட நிதியை தூய்மைப் பணியாளா்களின் வங்கிக் கணக்கில் ஊதியமாக செலுத்த வேண்டும். அனைத்து வாா்டுகளிலும் குடிநீா், நடைபாதை, தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும்.

    மேலும், மத்திய அரசின் ஜல் ஜீவன் திட்டத்தின் மூலம் குடிநீர் குழாய்களை அமைத்து ஒருநாள் விட்டு ஒருநாள் வீடுகளுக்கு குடிநீா் வினியோகம் செய்ய வேண்டும்.

    வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்ட மங்குழி ஆற்றின் பாலத்தை உடனடியாக கட்ட வேண்டும். கூடலூா் பஸ் நிலையம் கட்டும் பணி தொய்வடைந்துள்ளது. விரைந்து கட்டி முடித்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

    ஆர்ப்பாட்டத்தில் பட்டியல் அணி மாவட்டச் செயலாளா் பாா்த்திபன், பொதுச் செயலாளா் நளினி, நிா்வாகிகள் ராதாகிரு ஷ்ணன், சிபி, ராமு, வக்கீல் அணி நிா்வாகி பாஸ்கரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

    • பஸ் நிலையத்தின் அருகே உள்ள தடுப்பு சுவரை அகற்ற வலியுறுத்தல்
    • சுவர் மீது ஆபத்தான முறையில் அமர்வதாக புகார்

    கண்ணமங்கலம்:

    கண்ணமங்கலம் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள சாலையில் தடுப்பு சுவர் உள்ளது. வேலூர்- திருவண்ணாமலை செல்லும் பயணிகள் ரோட்டில் நின்று கொண்டும் பஸ் நிழற்கூடம் உள்ளே அமராமல் சிலர் சாலையில் உள்ள சிமெண்ட் சுவர் மீது ஆபத்தான முறையில் அமருகின்றனர்.

    எனவே பயணிகள் போக்குவரத்துக்கு இடைஞ்சலாக சிமெண்ட் சுவர் மீது, அமருவதை தடுக்க சிமெண்ட் சுவரை நெடுஞ்சாலைத்துறையினர் அகற்ற வேண்டும் என பாஜக சார்பில் வாயில் கருப்பு துணி கட்டி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    இதில் பா.ஜ.க. மாநில விவசாய அணி செயற்குழு உறுப்பினர் ரேகா, மாவட்ட தலைவர் கோதண்டராமன், கீழ்நகர் மல்லிகா, பெரிய அய்யம்பாளையம் கிருத்திகா, பானு, ராஜேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

    • போலீசார் கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    குடியாத்தம்:

    வேலூர் மாநகராட்சியை கண்டித்து பாரதீய ஜனதா கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர். பாரதீய ஜனதா கட்சியினரை போலீசார் கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.

    இதனை கண்டித்து குடியாத்தம் புதிய பஸ் நிலையம் அருகே பாரதீய ஜனதா கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

    குடியாத்தம் நகர பொதுச்செயலாளர் ஆர். ரங்கநாதன் தலைமை தாங்கினார்.

    ஒன்றிய தலைவர் ரூபேஷ், ஒன்றிய பொதுச் செயலாளர் நரசிம்மன், முன்னாள் ஒன்றிய தலைவர் வாழைபிரகாசம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×