என் மலர்
உள்ளூர் செய்திகள்

வாயில் கருப்பு துணி கட்டி பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம்
- பஸ் நிலையத்தின் அருகே உள்ள தடுப்பு சுவரை அகற்ற வலியுறுத்தல்
- சுவர் மீது ஆபத்தான முறையில் அமர்வதாக புகார்
கண்ணமங்கலம்:
கண்ணமங்கலம் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள சாலையில் தடுப்பு சுவர் உள்ளது. வேலூர்- திருவண்ணாமலை செல்லும் பயணிகள் ரோட்டில் நின்று கொண்டும் பஸ் நிழற்கூடம் உள்ளே அமராமல் சிலர் சாலையில் உள்ள சிமெண்ட் சுவர் மீது ஆபத்தான முறையில் அமருகின்றனர்.
எனவே பயணிகள் போக்குவரத்துக்கு இடைஞ்சலாக சிமெண்ட் சுவர் மீது, அமருவதை தடுக்க சிமெண்ட் சுவரை நெடுஞ்சாலைத்துறையினர் அகற்ற வேண்டும் என பாஜக சார்பில் வாயில் கருப்பு துணி கட்டி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இதில் பா.ஜ.க. மாநில விவசாய அணி செயற்குழு உறுப்பினர் ரேகா, மாவட்ட தலைவர் கோதண்டராமன், கீழ்நகர் மல்லிகா, பெரிய அய்யம்பாளையம் கிருத்திகா, பானு, ராஜேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story






