search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பழைய பென்சன் திட்டம்"

    • 2004-ம் ஆண்டு ஜனவரில் இருந்து புதிய பென்சன் திட்டம்
    • நாளை ராம்லீலா மைதானத்தில் மெகாபேரணி

    டெல்லி ராம்லீலா மைதானத்தில் பழைய பென்சன் திட்டத்தை மீண்டும் அமல்படுத்தக்கோரி மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்களின் சங்கங்கள் பேரணிநடத்த உள்ளனர். இந்த பேரணி நாளை நடைபெற உள்ளது.

    பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீட்டெடுப்பதற்கான கூட்டு அமைப்பு/தேசிய கூட்டு நடவடிக்கை கவுன்சில் ஆகியவை இந்த பென்சன் உரிமை மகாபேரணிக்கு ஏற்பாடு செய்துள்ளது.

    இதுகுறித்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீட்டெடுப்பதற்கான கூட்டு அமைப்பின் தேசிய ஒருங்கிணைப்பாளர் மற்றும் இந்திய ரெயில்வே ஆண்களுக்கான பெடரேசன் பொது செயலாளர் ஷிவ் கோபால் மிஷ்ரா கூறுகையில் ''2014-ம் ஆண்டு ஜனவரி 1-ல் இருந்து புதிய பென்சன் திட்டம் அமல்படுத்தப்பட்டதற்கு, அரசு ஊழியர்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர். பழைய ஓய்வூதியம் திட்டத்தில் இருந்து புதிய ஓய்வூதியத்திற்கு தள்ளப்பட்டுள்ளதால், எதிர்காலம் குறித்து அவர்கள் கவலைப்படுகிறார்கள். லட்சக்கணக்கான ஊழியர்கள் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு நாங்கள் இந்த கூட்டமைப்பை உருவாக்கியுள்ளோம். நாளை காலை 9.30 மணிக்கு பேரணி நடைபெறும்'' என்றார்.

    மத்திய, மாநில, ரெயில்வே, ஆசியர்கள் உள்ளிட்ட அரசு ஊழியர்கள் இந்த பேரணியில் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.

    • கூட்டத்தில் புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்து பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.
    • மருத்துவ காப்பீடு திட்டத்தை விரிவுபடுத்தி முழு பண பயனும் கிடைக்கும் விதத்தில் அரசு உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.

    திருச்சி,

    தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு உதவியாளர் முன்னேற்ற சங்க மாநில பொதுக்குழு கூட்டம் திருச்சியில் இன்று நடைபெற்றது. மாநில தலைவர் காமராஜ் தலைமை தாங்கினார். மாநில துணை தலைவர் பெரியசாமி வரவேற்றார். மாநில இணை செயலாளர் மனோகரன் அஞ்சலி தீர்மானங்கள் வாசித்தார்.

    அரசு ஊழியர் சங்க திருச்சி மாவட்ட தலைவர் பால்பாண்டி, மாவட்ட செயலாளர் பழனிச்சாமி, தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு உதவியாளர் முன்னேற்ற சங்க முன்னாள் மாநில பொருளார் சிவக்குமார், முன்னாள் மாநில இணைசெயலளார் ராணி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். மாநில பொதுச் செயலாளர் ஜெயபால் சங்கத்தின் செயல்பாடுகள் மற்றும் ஆண்டறிக்கை வாசித்து சிறப்புரையாற்றினார்.

    மாநில இணை செயலர் ராஜசேகரன், மாநில செயற்குழு உறுப்பினர்கள் அமுதா மற்றும் சக்திவேல் ஆகியோர் தீர்மானங்களை முன்மொழிந்தனர். நிறைவாக மாநில துனைத் தலைவர் மணிராஜ் நன்றி கூறினார்.

    கூட்டத்தில் புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்து பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். முடக்கப்பட்ட அகவிலைப்படி 3 தவணைகளையும் ரொக்கமாக வழங்க வேண்டும். மருத்துவ காப்பீடு திட்டத்தை விரிவுபடுத்தி முழு பண பயனும் கிடைக்கும் விதத்தில் அரசு உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.

    கொரோனா காலத்தில் பணியாற்றிய கால்நடை பராமரிப்பு உதவியாளர்களை முன் பணியாளர்களாக அறிவிக்க வேண்டும். சி. பிரிவு ஊழியர்களான கால்நடை பராமரிப்பு உதவியாளர்களை எங்கள் பதவிகள் அல்லாத இடங்களில் மாற்றுப் பணிக்கு அமர்த்தக் கூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    ×