search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பழிக்கு பழி"

    கோயம்பேட்டில் 5 பேர் கும்பலால் வெட்டப்பட்ட வாலிபர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

    போரூர்:

    கோயம்பேடு மெட்டுகுளம் பகுதியை சேர்ந்தவர் விக்னேஷ் (வயது 22). இவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன.

    கடந்த 25-ந் தேதி இரவு இவர் அதே பகுதியில் நடந்த சென்றார். அப்போது விக்னேசை 5 பேர் கொண்ட கும்பல் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி சென்று விட்டனர்.

    இதில் தலை உள்ளிட்ட இடங்களில் பலத்த காயம் அடைந்த அவரை மீட்டு சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த விக்னேஷ் நேற்று இரவு உயிரிழந்தார்.

    இதையடுத்து கோயம்பேடு போலீசார் கொலை வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    இதில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கணேசன் என்பவரை விக்னேஷ் கொலை செய்து இருந்ததும், ஜாமினில் வந்த அவரை கணேசனின் தம்பி பிரகாஷ் மற்றும் அவரது நண்பர்கள் 4 பேரும் சேர்ந்து பழிக்கு பழியாக தீர்த்து கட்டி இருப்பது தெரிந்தது.


    இதையடுத்து கணேசனின் தம்பி பிரகாஷ் அவரது நண்பர்கள் மோகன், அஜித், ஆரோக்கியம், சாரதி, ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்கள் அனைவரும் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.

    ×