என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "பழிக்கு பழி"
போரூர்:
கோயம்பேடு மெட்டுகுளம் பகுதியை சேர்ந்தவர் விக்னேஷ் (வயது 22). இவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன.
கடந்த 25-ந் தேதி இரவு இவர் அதே பகுதியில் நடந்த சென்றார். அப்போது விக்னேசை 5 பேர் கொண்ட கும்பல் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி சென்று விட்டனர்.
இதில் தலை உள்ளிட்ட இடங்களில் பலத்த காயம் அடைந்த அவரை மீட்டு சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த விக்னேஷ் நேற்று இரவு உயிரிழந்தார்.
இதையடுத்து கோயம்பேடு போலீசார் கொலை வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இதில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கணேசன் என்பவரை விக்னேஷ் கொலை செய்து இருந்ததும், ஜாமினில் வந்த அவரை கணேசனின் தம்பி பிரகாஷ் மற்றும் அவரது நண்பர்கள் 4 பேரும் சேர்ந்து பழிக்கு பழியாக தீர்த்து கட்டி இருப்பது தெரிந்தது.
இதையடுத்து கணேசனின் தம்பி பிரகாஷ் அவரது நண்பர்கள் மோகன், அஜித், ஆரோக்கியம், சாரதி, ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்கள் அனைவரும் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்