search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பயணிகள் அலறல்"

    • சாரல் மழை பெய்ததால் அரசு பஸ் டிரைவர் பிரேக் போட்டுள்ளார்.
    • தனியார் பஸ்சின் கண்ணாடி உடைந்தது. அரசு பஸ்சின் பின் பகுதி சேதம் அடைந்தது.

    கடலூர்:

    கடலூர் பஸ் நிலையத்திலிருந்து இன்று காலை நெல்லிக்குப்பம் நோக்கி அரசு பஸ் பயணிகளை ஏற்றி கொண்டு சென்று கொண்டிருந்தது. கடலூர் அருகே கோண்டூர் பகுதி பஸ் நிறுத்தத்தில் டிரைவர் பஸ்சை நிறுத்தினார். இதனையடுத்து பஸ்சில் பயணிகளை ஏற்றி, இறக்கி விட்டு அரசு பஸ் சென்றது. அப்போது பஸ்சின் பின்னால் தனியார் பள்ளி பஸ் ஒன்று மாணவிகளை ஏற்றி வருவதற்காக கடலூரில் இருந்து நெல்லிக்குப்பம் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் இன்று காலையிலிருந்து கடலூரில் சாரல் மழை பெய்த வண்ணம் இருந்தது. இதனால் சாலையில் சென்ற அரசு பஸ் டிரைவர் பிரேக் போட்டுள்ளார். உடனே பஸ்சின் பின்னால் வந்த தனியார் பள்ளி பஸ் முன்னால் சென்ற அரசு பஸ் மீது வேகமாக மோதியது. இதில் தனியார் பஸ்சின் கண்ணாடி உடைந்தது. அரசு பஸ்சின் பின் பகுதி சேதம் அடைந்தது.

    இந்த விபத்தில் பஸ்சில் பயணம் செய்த பயணிகள் அலறினர். உடனடியாக பஸ்சில் இருந்து பயணிகள் அனைவரும் வேகவேகமாக கீழ் இறங்கினர். பயணிகளின் அலறல் சத்தம் கேட்டு அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் அங்கு வந்து பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். மேலும் இந்த விபத்தில் பஸ்சில் பயணம் செய்த பயணிகள் எந்த வித காயம் இன்றி தப்பினர். இதுகுறித்து தகவல் அறிந்த புதுநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பயணிகளை மாற்று பஸ்சில் அவர்கள் செல்லும் இடங்களுக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இன்று காலை அரசு பஸ் மீது மோதி தனியார் பள்ளி பஸ் உடைந்தது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • பூண்டியாங்குப்பம் அருகே தனியார் பஸ் வந்தபோது எதிரே லாரி ஒன்று வந்தது.
    • இதுகுறித்து கடலூர் முதுநகர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    கடலூர்:

    கடலூரிலிருந்து சிதம்பரம் நோக்கி இன்று காலை தனியார் பஸ் ஒன்று பயணிகளை ஏற்றிெகாண்டு சென்றது. இந்நிலையில் விழுப்புரம்- நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. மேலும் கடலூர் மாவட்டம் பூண்டியாங்குப்பம் ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வந்த நிலையில் அந்த பகுதியில் உள்ள சாலை மிக குறுகலாக உள்ளது. இதனையடுத்து பூண்டியாங்குப்பம் அருகே தனியார் பஸ் வந்தபோது எதிரே லாரி ஒன்று வந்தது. இதில் லாரி மீது மோதாமல் இருப்பதற்காக தனியார் பஸ் டிரைவர் சாலை ஓரமாக சென்றுள்ளார்.

    அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரமாக இருந்த பள்ளத்தில் பஸ் இறங்கியது. இதில் பஸ்சில் இருந்த பயணிகள் அனைவரும் அலறினர். அதிர்ச்டவசமாக பள்ளத்தில் மழை பெய்ததில் சேரும் சகதியுமாக இருந்ததால் அதில் பஸ் இறங்கி கீழே சாயாதவாறு நின்றது. இதை அந்த வழியாக சென்ற பொதுமக்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்து பஸ்சில் இருந்து பயணிகளை மீட்டு மாற்று பஸ்சில் அவர்கள் செல்லும் இடங்களுக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து கடலூர் முதுநகர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த முதுநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு பள்ளத்தில் இறங்கிய பஸ்சை மீட்கும் முயற்ச்சியில் ஈடுபட்டு வந்தனர். இதனால் அந்த பகுதி பரபரப்பாக இருந்தது.

    • பஸ்சை வழிமறித்து சரமாரியாக கல் வீசி தாக்கியதில் முன் பக்க கண்ணாடி உடைந்து சேதம் அடைந்தது.
    • வழக்கு பதிவு செய்து அடையாளம் தெரியாத 2 நபர்களை தேடி வருகின்றனர்.

    கடலூர்:

    விருத்தாசலத்தில் இருந்து கடலூர் நோக்கி சம்பவத்தன்று தனியார் பஸ் ஒன்று பயணிகளை ஏற்றிக்கொண்டு வந்து கொண்டிருந்தது‌. அப்போது கடலூர் அடுத்த பெத்த நாயக்கன் குப்பம் சென்று கொண்டிருந்தபோது திடீரென்று இரண்டு நபர்கள் பஸ்சை வழிமறித்து சரமாரியாக கல் வீசி தாக்கியதில் முன் பக்க கண்ணாடி உடைந்து சேதம் அடைந்தது. அப்போது பஸ்ஸில் இருந்த பயணிகள் அலறி கத்தினர். இதனைத் தொடர்ந்து 2 நபர்கள் அங்கிருந்து தப்பி ஓடினர்.

    இந்த கல்வீசி தாக்குதல் நடத்திய சம்பவத்தில் டிரைவர் ராஜவன்னியன், நடத்துனர் பாலமுருகன் ஆகியோர் காயமடைந்தனர். இவர்கள் கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து குறிஞ்சிப்பாடி போலீசார் வழக்கு பதிவு செய்து அடையாளம் தெரியாத 2 நபர்களை தேடி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பாக காணப்பட்டது.

    ×