search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பன்னீர் சமையல்"

    • பன்னீரில் உள்ள கால்சியம் எலும்புகளை வலுவாக்க உதவும்.
    • தினசரி பன்னீர் சாப்பிட்டால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கலாம்.

    தேவையான பொருட்கள்

    பன்னீர் - 300 கிராம்

    ஷாஹி ஜீரா - 1 தேக்கரண்டி

    வெங்காயம் - 2

    தக்காளி - 6

    இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி

    மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி

    காஷ்மீரி மிளகாய் தூள் - 3 தேக்கரண்டி

    சீரக தூள் - 1 தேக்கரண்டி

    தனியா தூள் - 1 தேக்கரண்டி

    கடலை மாவு - 2 தேக்கரண்டி

    மிளகு தூள் - அரை தேக்கரண்டி

    தயிர் - 1 மேசைக்கரண்டி

    கரம் மசாலா தூள் - 1 தேக்கரண்டி

    சர்க்கரை - 1 தேக்கரண்டி

    கஸ்தூரி மேத்தி - சிறிதளவு

    பச்சை மிளகாய் - 5

    இஞ்சி நீளவாக்கில் - சிறிய துண்டு

    கொத்தமல்லி இலை - சிறிதளவு

    உப்பு, நெய், எண்ணெய் - தேவைக்கேற்ப

    தாளிக்க

    பட்டை

    கிராம்பு

    பச்சை ஏலக்காய்

    கருப்பு ஏலக்காய்

    அன்னாசி பூ

    பிரியாணி இலை

    செய்முறை:

    பன்னீரை துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்

    தக்காளியை விழுதாக அரைத்து கொள்ளவும்.

    வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    இஞ்சி, ப.மிளகாயை நீளவாக்கில் நறுக்கி கொள்ளவும்.

    பாத்திரத்தில் நறுக்கிய பன்னீரை போட்டு அதனுடன் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மிளகு தூள், உப்பு சேர்த்து கலந்து 15 நிமிடங்கள் ஊற வைத்த பின்னர் நெய்யில் வறுத்து கொள்ளவும்.

    கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய், நெய் ஊற்றி சூடானதும் பட்டை, கிராம்பு, பச்சை ஏலக்காய், கருப்பு ஏலக்காய், கிராம்பு, அன்னாசி பூ, ஷாஹி ஜீரா, பிரியாணி இலை போட்டு தாளித்த பின்னர் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

    வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும் இஞ்சி விழுது, பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

    அடுத்து மஞ்சள் தூள், காஷ்மீரி மிளகாய் தூள், சீரக தூள், தனியா தூள், கடலை மாவு, உப்பு சேர்த்து கலந்துவிடவும்.

    பின்பு அரைத்த தக்காளி விழுது சேர்த்து வதக்கவும். தக்காளி பச்சை வாசனை போய் சுருண்டு வரும் வரை வதக்கவும்.

    அடுத்து அதில் அடித்த தயிர், கரம் மசாலா தூள், சர்க்கரை சேர்த்து நன்றாக கிளறி விட்ட பின்னர் 1 கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.

    அடுத்து மசாலாவில் கஸ்தூரி மேத்தி, நீளவாக்கில் நறுக்கிய பச்சை மிளகாய், இஞ்சி, கொத்தமல்லி இலை சேர்க்கவும்.

    கடைசியாக வறுத்த பன்னீர் துண்டுகளை சேர்த்து 3 நிமிடம் குறைந்த தீயில் வைத்து ஓரங்களில் எண்ணெய் பிரிந்து வரும் போது இறக்கி பரிமாறவும்..

    இப்போது தாபா ஸ்டைல் பன்னீர் மசாலா தயார்.

    • பன்னீரில் உள்ள அதிகளவு கால்சியம் எலும்புகளை வலுவாக்க உதவும்.
    • சிறு வயதிலே மூட்டு பிரச்சினையால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு பன்னீர் சிறந்த தீர்வு.

    தேவையான பொருட்கள்

    முட்டை - 5

    பன்னீர் - அரை கப்

    பச்சை மிளகாய் - 4

    மிளகுத்தூள் - அரை டீஸ்பூன்

    உப்பு - தேவைகேற்ப

    எண்ணெய் - தேவைகேற்ப

    செய்முறை

    பன்னீரை துருவிக்கொள்ளவும்.

    ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் துருவிய பன்னீர், ப.மிளகாய், மிளகுத்தூள், உப்பு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.

    இதில் முட்டையை உடைத்து ஊற்றி நன்றாக அடித்து கொள்ளவும்.

    தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் அடித்து வைத்த முட்டையை ஊற்றி சுற்றி எண்ணெய் விட்டு வெந்ததும் திருப்பி போட்டு வேக வைத்து எடுத்து பரிமாறவும்.

    இப்போது சூப்பரான பன்னீர் ஆம்லெட் ரெடி.

    • இதற்கு தொட்டுகொள்ள எதுவும் தேவையில்லை.
    • குழந்தைகளுக்கு இந்த ரெசிபி மிகவும் பிடிக்கும்.

    தேவையான பொருள்கள்

    சுத்திகரிக்கப்பட்ட மாவு - 3 கப்

    சர்க்கரை - 1 தேக்கரண்டி

    பேக்கிங் பவுடர் - 1 தேக்கரண்டி

    வெண்ணெய் - 5 ஸ்பூன்

    பால் - 1 கப்

    உப்பு

    ஸ்டப்பிங்கிற்கு

    பன்னீர் - 200 கிராம்

    பச்சை மிளகாய் - 4

    கரம் மசாலா தூள் - 1 தேக்கரண்டி

    கொத்தமல்லி தலை - 2 டீஸ்பூன்

    மிளகாய்த்தூள் - 2 தேக்கரண்டி

    சாட் மசாலா - 2 தேக்கரண்டி

    வெங்காயம் - 1

    செய்முறை

    பன்னீரை துருவிக்கொள்ளவும்.

    வெங்காயம், கொத்தமல்லி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் மாவு மற்றும் பேக்கிங் பவுடர் சேர்த்து நன்றாக கலந்து தனியே வைக்கவும்.

    இப்போது ஒரு பால் ஜாடியில் பால், வெண்ணெய், சர்க்கரை, மற்றும் உப்பு சேர்த்து நன்றாக கலக்கவும்.

    தனியே எடுத்து வைத்துள்ள மாவு கலவையில், இந்த பால் கலவையை ஊற்றி நன்கு பிசையவும். மாவு மிகவும் மென்மையாக வரும் வரை பிசையவும். பிறகு, பிசைந்தது வைத்த மாவை மென்மையான மெல்லிய ஈர துணி கொண்டு 40 நிமிடங்கள் மூடி வைக்கவும்.

    ஒரு பெரிய கிண்ணத்தில் பிசைந்து வைத்த பன்னீர், வெங்காயம், கொத்தமல்லி, பச்சை மிளகாய், உப்பு, கரம் மசாலா தூள், மிளகாய்த்தூள், மற்றும் சாட் மசாலாவை சேர்த்து நன்கு கலக்கி அதை தனியே எடுத்து வைத்துக்கொள்ளவும். இப்பொழுது பன்னீர் குல்ச்சாவிற்கு தேவையான ஸ்டப்பிங் தயாராக உள்ளது.

    ஒரு உருண்டை மாவை எடுத்து சற்று தடியாக தேய்க்க வேண்டும். இப்போது செய்து வைத்துள்ள ஸ்டப்பிங் பொருள்களை வட்டத்தின் நடுவில் வைத்து மாவை மூட வேண்டும்.

    பிறகு, ஸ்டப்பிங் செய்துள்ள மாவை தேய்த்து வட்ட வட்டமாக மாற்றவும். இதில் மிக கவனமாக செயல்பட வேண்டும். ஏனெனில் ஸ்டப்பிங் செய்துள்ள பொருள்கள் வெளியே பிதுங்கி வராமல் கவனமாக தேய்க்க வேண்டும். இவ்வாறு அனைத்தையும் செய்து வைக்கவும்.

    தோசை கல்லை அடுப்பில் வைத்து செய்து வைத்த குல்ச்சாவை போட்டு சுற்றி எண்ணெய் விட்டு ஒரு புறம் வெந்ததும் திருப்பி போட்டு மறுபுறம் வேக வைத்து எடுக்கவும்.

    அடுப்பில் இருந்து குல்ச்சாவை எடுத்த பின்னர் அதன் மீது சிறிய வெண்ணெய் தடவ வேண்டும்.

    இப்பொழுது சுவையான பன்னீர் குல்ச்சா தயார்.

    • நீரிழிவு உள்ளவர்களும்கூட பன்னீரை தைரியமாக சாப்பிடலாம்.
    • புரதம், பாஸ்பரஸ், கால்சியம் போன்ற சத்துக்கள் பன்னீரில் அதிகம்.

    தேவையான பொருட்கள்:

    பன்னீா் - 500 கிராம்

    மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி

    உப்பு - தேவையான அளவு

    வெங்காயம் - 4

    பச்சை மிளகாய் - 7

    கறிவேப்பிலை - 2 கொத்து

    பூண்டு, பூண்டு விழுது - 1 ½மேஜைக்கரண்டி

    சோம்பு தூள் - 1 தேக்கரண்டி

    கரம் மசாலா தூள் - 1½ மேஜைக்கரண்டி

    மிளகு தூள் - 1 தேக்கரண்டி

    உருளைக்கிழங்கு - 3

    பொரிக்க தேவையான பொருட்கள்:

    சோள மாவு - 4 மேஜைக்கரண்டி

    உப்பு - தேவையான அளவு

    பிரெட் தூள் - தேவையான அளவு

    எண்ணெய் - பொரிக்க

    செய்முறை:

    வெங்காயம், ப.மிளகாய், கறிவேப்பிலையை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    பன்னீரை துருவிக்கொள்ளவும்.

    உருளைக்கிழங்கை வேகவைத்து தோல் உரித்து மசித்து கொள்ளவும்.

    கடாயில் எண்ணெய் விட்டு சூடானதும வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்..

    வெங்காயம் பொன்னிறமானதும் இஞ்சி பூண்டு கலவையை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

    அடுத்து அதில் சோம்பு, கரம் மசாலா மற்றும் மிளகு தூள் சேர்த்து வதக்கவும்.

    பின்னர் துருவிய பன்னீரை சேர்த்து நன்கு கிளறவும்.

    மீண்டும் 5 நிமிடம் வேக வைக்கவும். பின்பு தீயை அணைத்து அதனை ஆற வைக்கவும்.

    பின்பு பன்னீர் கலவையை மசித்த உருளைகிழங்குடன் சேர்த்து நன்கு பிசையவும்.

    பின்பு அதனை சிறு சிறு பகுதிகளாக பிரித்து உருண்டைகளாக உருட்டி, தட்டையாக செய்து கொள்ளவும்.

    பின்பு சோள மாவுடன் நீர் சேர்த்து கலவை தயாரித்து கொள்ளவும்.

    கட்லெட்டுகளை சோளமாவுக் கலவையில் முக்கி பின் பிரெட் தூளில் நன்றாக பிரட்டி எடுத்து வைக்கவும். இவ்வாறு அனைத்தையும் செய்து வைக்கவும்.

    கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் செய்து வைத்த கட்லெட்டுகளை போட்டு பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.

    இப்போது சுவையான பன்னீர் கட்லெட் தயார்.

    • பஜ்ஜி என்றாலே அனைவரது நாவில் இருந்தும் நீர் ஊறும்.
    • பன்னீர் பஜ்ஜி குழந்தைக்கு ஒரு சிறந்த ஸ்நாக்ஸாக இருக்கும்.

    தேவையான பொருட்கள்:

    பன்னீர் - 200 கிராம்

    கடலை மாவு - 1 கப்

    அரிசி மாவு - 2 டேபிள் ஸ்பூன்

    இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1/2 டீஸ்பூன்

    மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்

    பேக்கிங் சோடா - 1/4 டீஸ்பூன்

    உப்பு - தேவையான அளவு

    எண்ணெய் - தேவையான அளவு

    செய்முறை

    பன்னீரை வேண்டிய வடிவில் வெட்டிக் கொள்ள வேண்டும்.

    ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, அரிசி மாவு, இஞ்சி பூண்டு பேஸ்ட், மிளகாய் தூள், பேக்கிங் சோடா மற்றும் உப்பு சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, பஜ்ஜி மாவு பதத்திற்கு கரைத்துக் கொள்ள வேண்டும்.

    ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், நறுக்கிய பன்னீர் துண்டுகளை கடலை மாவு கலவையில் நனைத்து, எண்ணெயில் போட்டு, பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும்.

    இப்போது சுவையான பன்னீர் பஜ்ஜி ரெடி!!!

    • இன்று பன்னீரைக் கொண்டு அட்டகாசமான போண்டா செய்யலாம்.
    • இது அற்புதமான ஸ்நாக்ஸ் மட்டுமின்றி, எளிதில் செய்யக்கூடிய ரெசிபி.

    தேவையான பொருட்கள்:

    பன்னீர் - 300 கிராம்

    கடலை மாவு - 1 கப்

    அரிசி மாவு - 1/4 கப்

    மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்

    மிளகுத் தூள் - 1 டீஸ்பூன்

    கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்

    சீரகப் பொடி - 1 டீஸ்பூன்

    வெங்காயம் - 1

    பச்சை மிளகாய் - 1

    துருவிய இஞ்சி - 1 டீஸ்பூன்

    கறிவேப்பிலை - சிறிது

    கொத்தமல்லி - சிறிது

    புதினா - 2 டேபிள் ஸ்பூன்

    உப்பு - சுவைக்கேற்ப

    பேக்கிங் சோடா/சமையல் சோடா - 1/2 டீஸ்பூன்

    எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு

    செய்முறை:

    * வெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கிகொள்ளவும்.

    * ஒரு பௌலில் கடலை மாவை போட்டு அதனுடன் அரிசி மாவு மற்றும் உப்பு சேர்த்துக் கொள்ள வேண்டும்.

    * பின்பு அதனுடன் மிளகாய் தூள், மிளகுத் தூள், கரம் மசாலா, சீரகப் பொடி சேர்த்துக் கொள்ள வேண்டும்.

    * அடுத்து அதில் வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லி, புதினா மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தேவையான அளவு நீரை ஊற்றி போண்டா பதத்திற்கு ஓரளவு கெட்டியான பதத்தில் பிசைந்து கொள்ள வேண்டும்.

    * பின் அதில் பன்னீர் துண்டுகள், பேக்கிங் சோடா சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.

    * ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும், பிசைந்து வைத்துள்ள போண்டா மாவை சிறிது சிறிதாக போட்டு, பொன்னிறமாக பொரித்து எடுத்தால், சுவையான பன்னீர் போண்டா தயார்.

    * அதை காரச்சட்னியுடன் சூடாக பரிமாறவும்.

    ×