search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பணம் பறிமுதல்"

    • குமரன் நகரில் தி.மு.க.வினர் பணம் கொடுப்பதாக புகார் எழுந்தது.
    • தி.மு.க.வினர் போலீஸ் நிலையம் வந்து முற்றுகையிட்டனர்.

    கோத்தகிரி:

    நீலகிரி பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட கோத்தகிரி அரவேணு பகுதியில் உள்ள சக்கத்தா கிராமத்தில் தி.மு.க.வினர் ஓட்டுக்கு பணம் கொடுப்பதாக பா.ஜ.க. மற்றும் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் பறக்கும் படை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர்.

    அதன்பேரில் பறக்கும் படை அதிகாரி ராஜலட்சுமி, கோத்தகிரி இன்ஸ்பெக்டர் ஜெயமுருகன் ஆகியோர் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர்.

    அப்போது அங்கு நின்ற கோத்தகிரி ஒன்றிய தி.மு.க. செயலாளர் நெல்லை கண்ணனின் காரை தனிப்படை போலீசார் சோதனையிட்டனர். அப்போது ரூ.8 லட்சத்து 500 பணம் காரில் இருந்தது. அந்த பணத்தை போலீசார் கைப்பற்றினர்.

    அந்த பணம் ஓட்டுக்காக கொடுக்க வைக்கப்பட்டிருந்ததா அல்லது என்ன நோக்கத்திற்காக காரில் வைக்கப்பட்டிருந்தது என்பது பற்றி விசாரணை நடக்கிறது. பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் ஒப்படைக்க தனிப்படை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.

    இதேபோல நீலகிரி தொகுதிக்கு உட்பட்ட அன்னூர் குமரன் நகரில் தி.மு.க.வினர் பணம் கொடுப்பதாக புகார் எழுந்தது. அதன்பேரில் தனிப்படை போலீசார் அங்கு விரைந்து சென்று இருந்தனர்.

    அங்கு பணத்துடன் நின்ற தி.மு.க.வைச் சேர்ந்த நபரை பறக்கும் படை அதிகாரிகள் கையும், களவுமாக பிடித்து அன்னூர் போலீஸ்நிலையம் கொண்டு வந்தனர். அங்கு அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. தகவல் அறிந்த ஏராளமான தி.மு.க.வினர் போலீஸ் நிலையம் வந்து முற்றுகையிட்டனர். பிடிபட்ட நபர் பணம் எதுவும் கொடுக்கவில்லை எனவும், அவரை விடுவிக்க வேண்டும் எனவும் கூறினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    • பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
    • உரிய ஆவணமும் இல்லாமல் ரூ.1 லட்சத்து 33 ஆயிரத்து 200 ரூபாய்எடுத்து சென்றது தெரிய வந்தது.

    கோவில்பட்டி:

    பாராளுமன்ற தேர்தலையொட்டி தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    அந்த வகையில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே இனாம்மணியாச்சி பகுதியில் நேற்று நள்ளிரவில் கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலரும், நிலையான கண்காணிப்புக் குழு அலுவலருமான ஜவஹர் மற்றும் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சுடலைமணி தலைமையில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது அவ்வழியே வந்த கோவில்பட்டி கிருஷ்ணா நகரை சேர்ந்த பிஸ்கட் வியாபாரி வீரபாண்டியன் என்பவரின் இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனையிட்ட போது, அதில் ரூ.1 லட்சத்து 99 ஆயிரம் ரொக்கப்பணம் இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து அவரிடம் அதற்கான ஆவணங்ளை கேட்டனர். ஆனால் அவரிடம் அதற்கான உரிய ஆவணங்கள் ஏதும் இல்லை என்பதால் அந்த பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்து கோவில்பட்டி வட்ட வழங்கல் அலுவலர் பாண்டி யராஜனிடம் ஒப்படைத்தனர்.

    இதேபோல் கோவில்பட்டி அருகே கயத்தார்-கடம்பூர் சாலையில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது அந்த வழியாக மினி லோடு ஆட்டோ வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர்.

    அப்போது அந்த வாகனத்தில் கடம்பூரை சேர்ந்த மசாலா பொருட்கள் வியாபாரி முத்துக்குமார் என்பவர் எவ்வித உரிய ஆவணமும் இல்லாமல் ரூ.1 லட்சத்து 33 ஆயிரத்து 200 ரூபாய்எடுத்து சென்றது தெரிய வந்தது. இதையடுத்து தேர்தல் பறக்கும் படையினர் அந்தப் பணத்தை பறிமுதல் செய்து கோவில்பட்டி வட்ட வழங்கல் அலுவலர் பாண்டியராஜிடம் ஒப்படைத்தனர்.

    • பறக்கும் படையினர் வாகன சோதனை நடத்தினர்.
    • மது பாட்டில் கொண்டு வந்த லாரியில் ஜி.பி.எஸ். கருவி பொருத்தப்படாமல் இருப்பதும் தெரிய வந்தது.

    பெங்களூர்:

    கர்நாடகாவில் 2 கட்டமாக பாராளுமன்ற தேர்தல் நடக்கிறது. இதையடுத்து வேட்பாளர்கள் தீவிர பிரசாரம் செய்து வருகின்றனர். இந்நிலையில் வாக்காளர்களுக்கு அதிக அளவில் பரிசு பொருட்கள் கொண்டு செல்லப்படுவதாக தேர்தல் பறக்கும்படை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்ததை அடுத்து வாகன சோதனையை தீவிரப்படுத்தி உள்ளனர்.

    இந்நிலையில் கர்நாடக மாநிலம் பாகல்கோட்டை நாயனகோளி செக்போஸ்ட் சோதனை சாவடியில் பறக்கும் படையினர் வாகன சோதனை நடத்தினர். அப்போது அந்த வழியாக ஒரு லாரியை நிறுத்தி சோதனை நடத்தியபோது அதில் 1100 பீர் பெட்டிகள் கொண்டு செல்லப்படுவது தெரிய வந்தது.

    மேலும் அதற்கான உரிய ஆவணங்கள் இல்லை. மது பாட்டில் கொண்டு வந்த லாரியில் ஜி.பி.எஸ். கருவி பொருத்தப்படாமல் இருப்பதும் தெரிய வந்தது.

    இதையடுத்து பறக்கும் படை அதிகாரிகள் ரூ.16 லட்சம் மதிப்புள்ள மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். இதேபோல் 5 சரக்கு வாகனங்களில் சோதனை நடத்தியதில் ஆவணங்கள் இன்றி கொண்டு சென்ற ரூ.10.77 லட்சம் ரொக்க பணத்தையும் கைப்பற்றினர்.

    • திருப்பூர் தெற்கு தொகுதியில் அதிகபட்சமாக ரூ.81 லட்சத்து 58 ஆயிரத்து 918 மதிப்பிலான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
    • உரிய ஆவணங்களை சமர்ப்பித்ததால் ரூ.1 கோடியே 77 லட்சத்து 38 ஆயிரத்து 891 மதிப்பிலான பொருட்கள் திருப்பி வழங்கப்பட்டுள்ளது.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டத்தில் திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு, அவினாசி, பல்லடம், காங்கயம், தாராபுரம், உடுமலை, மடத்துக்குளம் ஆகிய 8 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. நாடாளுமன்ற தேர்தல் நடைமுறை கடந்த மாதம் 17-ந் தேதி முதல் அமலானது. தேர்தல் பறக்கும் படை, நிலை கண்காணிப்பு குழுவினர் தீவிர ரோந்துப்பணியில் ஈடுபட்டு உரிய ஆவணங்கள் இல்லாமல் ரூ.50 ஆயிரத்துக்கு மேல் பணம் மற்றும் பரிசு பொருட்கள், மதுபானங்கள் கொண்டு சென்றால் அவற்றை பறிமுதல் செய்து நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

    மாவட்டத்தில் கடந்த மாதம் 17-ந் தேதி முதல் இன்று வரை ரூ.3 கோடியே 27 லட்சத்து 71 ஆயிரத்து 428 பணத்தை பறக்கும்படை, நிலைக்கண்காணிப்பு குழுவினர் பறிமுதல் செய்தனர். மேலும் தங்கம், வெள்ளி பொருட்கள் ரூ.18 லட்சத்து 90 ஆயிரத்து 471 மதிப்பிலான பொருட்களையும், மது மற்றும் போதைப்பொருட்கள் ரூ.7 லட்சத்து 60 ஆயிரம் மதிப்பிலும், டி.வி., பாத்திரங்கள், சால்வை, அரிசி, வேட்டி, சேலைகள், டி-சர்ட்டுகள், பனியன்கள் உள்பட ரூ.24 லட்சத்து 42 ஆயிரத்து 170 மதிப்பிலும் பறிமுதல் செய்தனர்.

    திருப்பூர் மாவட்டத்தில் இதுவரை மொத்தம் ரூ.3 கோடியே 78 லட்சத்து 64 ஆயிரத்து 71 மதிப்பிலான பணம்-பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மாவட்டத்தில் திருப்பூர் தெற்கு தொகுதியில் அதிகபட்சமாக ரூ.81 லட்சத்து 58 ஆயிரத்து 918 மதிப்பிலான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

    இதுவரை உரிய ஆவணங்களை சமர்ப்பித்ததால் ரூ.1 கோடியே 77 லட்சத்து 38 ஆயிரத்து 891 மதிப்பிலான பொருட்கள் திருப்பி வழங்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் 178 பணம் பறிமுதல் வழக்குகள் தொடுக்கப்பட்டதில், 134 வழக்குகளில் உரிய ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டதால் பணம் விடுவிக்கப்பட்டுள்ளன. 47 வழக்குகள் நிலுவையில் உள்ளதாக தேர்தல் செலவின பிரிவு பொறுப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    • பறக்கும் படையினர், நிலை கண்காணிப்பு குழுவினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • சம்பந்தப்பட்டவர்கள் உரிய ஆவணங்களை காண்பித்து பணத்தை திரும்ப பெற்று கொள்ளலாம்.

    ஈரோடு:

    தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் வரும் 19-ந் தேதி நடைபெற உள்ளது. தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் பரிசுப் பொருட்கள் கொடுப்பதை தடுக்கும் வகையில் பறக்கும் படையினர், நிலை கண்காணிப்பு குழுவினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    ஈரோடு மாவட்டத்திலும் இரவு, பகல் என சுழற்சி முறையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு ரூ.50 ஆயிரத்திற்கு மேல் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து செல்லப்படும் பணங்களை பறிமுதல் செய்து வருகின்றனர்.

    அதன்படி ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, பெருந்துறை, பவானி, கோபி, அந்தியூர், பவானிசாகர் என மாவட்டம் முழுவதும் உள்ள 8 சட்டமன்ற தொகுதிகளில் இதுவரை தேர்தல் பறக்கும் படையினர் சோதனையில் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து செல்லப்பட்ட ரூ.4 கோடியே 28 லட்சத்து 20 ஆயிரத்து 303 பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

    இதில் உரிய ஆவணங்கள் காண்பித்ததால் ரூ.2 கோடியே 95 லட்சத்து 65 ஆயிரத்து 213 சம்பந்தப்பட்டவர்களிடம் திரும்ப ஒப்படைக்கப்பட்டுள்ளது. மீதம் ரூ.1 கோடியே 32 லட்சத்து 55 ஆயிரத்து 090 பணம் மாவட்ட கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

    சம்பந்தப்பட்டவர்கள் உரிய ஆவணங்களை காண்பித்து பணத்தை திரும்ப பெற்று கொள்ளலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    • பறக்கும் படையினர் அங்கு சோதனை செய்தபோது 20 மது பாட்டில்கள் இருந்தது தெரியவந்தது.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து மது பாட்டில்களை போட்டு விட்டு தப்பி ஓடிய நபர்களை தேடி வருகின்றனர்.

    நெல்லை:

    நெல்லை மாவட்ட ஊரக வளர்ச்சி துறை உதவி பொறியாளர் சுந்தரி தலைமையிலான பறக்கும் படையினர் நெல்லை சட்டமன்ற தொகுதியில் தீவிர கண்காணிப்பு மற்றும் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் இன்று காலை தச்சநல்லூரில் இருந்து டவுன் செல்லும் சாலையில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த சாலையோரம் தேனீர்குளம் பகுதியில் உள்ள டாஸ்மாக் மதுபான கடையில் ஆட்கள் நடமாட்டம் இருந்ததை கவனித்தனர். இதையடுத்து அங்கு பறக்கும் படையினர் விரைந்து சென்றனர்.

    இதை பார்த்த சிலர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். இதைத்தொடர்ந்து பறக்கும் படையினர் அங்கு சோதனை செய்தபோது 20 மது பாட்டில்கள் இருந்தது தெரியவந்தது. அதை பறிமுதல் செய்த பறக்கும் படையினர் தச்சநல்லூர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

    இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மது பாட்டில்களை போட்டு விட்டு தப்பி ஓடிய நபர்களை தேடி வருகின்றனர்.

    • பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.
    • ரூ.10 லட்சத்தை பறிமுதல் செய்து முதன்மை தேர்தல் நடத்தும் அலுவலரிடம் ஒப்படைத்தனர்.

    ஈரோடு:

    தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் வரும் 19-ந் தேதி நடைபெற உள்ளது.

    வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப்பொருட்கள் வழங்குவதை தடுக்கும் பொருட்டு பறக்கும் படை, நிலை கண்காணிப்பு குழு அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு மற்றும் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் ஈரோடு மாவட்டம் சித்தோடு ஆவின் அருகே பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வீரப்பன்சத்திரத்தில் இருந்து பவானி நோக்கி சென்று கொண்டிருந்த ஏ.டி.எம். எந்திரங்களுக்கு பணம் கொண்டு செல்லும் வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் உரிய ஆவணங்கள் இன்றி ரூ.10 லட்சம் பணம் இருப்பது தெரிய வந்தது.

    இது குறித்து ஓட்டுனரிடம் கேட்டுள்ளனர். அதற்கு அவர் இன்று ஏ.டி.எம். எந்திரங்களுக்கு பணம் நிரப்ப ரூ.67 லட்சம் கொண்டு சென்றதாகவும், அதில் ரூ.64 லட்சம் ஏ.டி.எம். எந்திரத்தில் வைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

    ஆனால் அவர் கொடுத்த ஆவணங்களின்படி ரூ.3 லட்சம் மட்டுமே மீதம் இருக்க வேண்டிய நிலையில் ரூ.10 லட்சம் இருந்ததால் சந்தேகம் அடைந்த அதிகாரிகள் ரூ.10 லட்சத்தை பறிமுதல் செய்து முதன்மை தேர்தல் நடத்தும் அலுவலரிடம் ஒப்படைத்தனர்.

    • பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
    • பணத்தை பறிமுதல் செய்து விளாத்திகுளம் தாலுகா அலுவலகத்தில் தேர்தல் அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

    விளாத்திகுளம்:

    பாராளுமன்ற தேர்தலையொட்டி விளாத்திகுளத்தை அடுத்து சின்னவநாயக்கன்பட்டியில் தனியார் மில் அருகே இளநிலை பொறியாளர் ரவிச்சந்திரன் தலைமையிலான பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிளை நிறுத்தி சோதனை செய்தனர்.இதில் உரிய ஆவணங்கள் எதுவுமின்றி ரூ.60ஆயிரத்து 50 கொண்டு சென்றது தெரிய வந்தது.மேலும் மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்தவர் விருதுநகர் மாவட்டம், ராஜீவ்காந்திபுரம் கிராமத்தை சேர்ந்த செல்வராஜ் என்பவரது மகன் விக்ரம் என்பதும் தெரிய வந்தது. இதனையடுத்து அதனை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பணத்தை பறிமுதல் செய்து விளாத்திகுளம் தாலுகா அலுவலகத்தில் தேர்தல் அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

    • கண்காணிப்பு குழுவினர் 28 மூட்டைகளை பறிமுதல் செய்தனர்.
    • பறிமுதல் செய்யப்பட்ட புதிய ஆடைகளை கடலூர் தாசில்தார் அலுவலகத்தில் வைத்தனர்.

    கடலூர்:

    பாராளுமன்றத் தேர்தல் வருகிற ஏப்ரல் 19-ந்தேதி தமிழகத்தில் ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இதனை தொடர்ந்து கடலூர் மாவட்டத்தில் பறக்கும் படையினர் மற்றும் நிலையான கண்காணிப்பு குழு சார்பில் தீவிர கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் கடலூர் மஞ்சக்குப்பம் ஆல்பேட்டை சோதனைச் சாவடியில் நிலையான கண்காணிப்பு குழு அதிகாரி ஆனந்தி தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது புதுச்சேரியில் இருந்து கடலூர் நோக்கி சரக்கு வாகனம் ஒன்று வந்து கொண்டிருந்தது. அதனை நிறுத்தி சோதனை செய்தபோது பல்வேறு மூட்டைகள் இருந்தன. இதில் சந்தேகம் அடைந்த கண்காணிப்பு குழுவினர் அதனை பிரித்து பார்த்தபோது புதிய ஆடைகள் இருந்தது தெரிய வந்தது.

    இதனைத் தொடர்ந்து டிரைவரிடம் ஆடைகள் கொண்டு செல்வதற்கு உரிய ஆவணம் உள்ளதா? என கேட்டனர். அப்போது ஆவணம் இல்லாததால் உடனடியாக கண்காணிப்பு குழுவினர் 28 மூட்டைகளை பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு 8 லட்சமாகும்.

    பறிமுதல் செய்யப்பட்ட புதிய ஆடைகளை கடலூர் தாசில்தார் அலுவலகத்தில் வைத்தனர். இதனை வருவாய் கோட்டாட்சியர் அபிநயா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது தாசில்தார் பலராமன் உடன் இருந்தார்.

    • பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • மோட்டார் சைக்கிளில் வந்த நபரை மடக்கி பிடித்து சோதனை செய்தனர்.

    பண்ருட்டி:

    தமிழகம் முழுவதும் பாராளுமன்ற தேர்தல் வரும் 19-ந் தேதி நடைபெற உள்ளது. இதனையடுத்து வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா மற்றும் பரிசுப்பொருட்கள் எடுத்து செல்லபடுகிறதா? என்று பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதற்காக பண்ருட்டியில் 3 பறக்கும் படை, 3 நிலையான கண்காணிப்பு குழுவினர் அதி நவீன கேமரா பொருத்தப்பட்ட வாகனங்கள் மூலம் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் நேற்று பிற்பகல் பண்ருட்டி கடலூர் சாலையில் நரிமேடு அருகே பண்ருட்டி வட்டார வளர்ச்சி அலுவலர் சக்தி தலைமையிலான, தேர்தல் பறக்கும் படையினர் சப்-இன்ஸ்பெக்டர் புஷ்பராஜ், போலீசார் ராஜசேகர், சுரேஷ் ஆகியோர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த நபரை மடக்கி பிடித்து சோதனை செய்தனர். சோதனையில் அவர் எந்தவித ஆவணமும் இன்றி ரூ.62 ஆயிரத்து எடுத்து சென்றது தெரிய வந்தது. இதையடுத்து அவரிடம் விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் அவர் புதுவை மணவெளியை சேர்ந்த கோபிநாத் (வயது 32) என்பதும், இந்த தொகையை எந்தவித ஆவணங்களும் இன்றி எடுத்து வந்ததும் தெரியவந்தது. தொடர்ந்து அவரிடம் இருந்த ரூ.62 ஆயிரத்தை பறிமுதல் செய்து பண்ருட்டி தாசில்தார் ஆனந்த்யிடம் ஒப்படைத்தனர்.

    • வீட்டிலுள்ள ஒவ்வொரு பகுதியிலும் அங்குலம்-அங்குலமாக சோதனை நடத்தப்பட்டது.
    • காங்கிரஸ் நிர்வாகி தாமஸ் வீட்டில் சுமார் 11 மணிநேரம் சோதனை நடத்தப்பட்டது.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் கூடலூர் தாலுகா, ஸ்ரீ மதுரை ஊராட்சிக்கு உட்பட்ட மண்வயல் கம்மாத்தி பகுதியை சேர்ந்தவர் ஏ.ஜெ.தாமஸ். இவர் ஸ்ரீமதுரை ஊராட்சி முன்னாள் தலைவராக பதவி வகித்தவர்.

    மேலும் தமிழக காங்கிரஸ் முக்கிய பிரமுகராகவும் செயல்பட்டு வருகிறார்.

    இந்த நிலையில் காங்கிரஸ் நிர்வாகி தாமஸ் வீட்டில் கோடிக்கணக்கில் பணம் பதுக்கி வைக்கப்பட்டு உள்ளதாக வருமானவரித்துறைக்கு ரகசிய தகவல்கள் வந்தது. தொடர்ந்து அவரது வீட்டுக்கு நேற்று காலை 11 மணியளவில் 8 பேர் அடங்கிய வருமான வரித்துறை அதிகாரிகள், 2 கார்களில் புறப்பட்டு வந்தனர்.

    பின்னர் அவர்கள் வீட்டில் உள்ள அனைவரிடமும் விசாரணை நடத்தினார்கள். தொடர்ந்து வீட்டிலுள்ள ஒவ்வொரு பகுதியிலும் அங்குலம்-அங்குலமாக சோதனை நடத்தப்பட்டது. மேலும் பீரோ லாக்கர்கள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

    காங்கிரஸ் நிர்வாகி தாமஸ் வீட்டில் சுமார் 11 மணிநேரம் சோதனை நடத்தப்பட்டது. இதில் கத்தை, கத்தையாக 500 ரூபாய் நோட்டுகள் சிக்கியது. கணக்கில் வராத மொத்தம் ரூ.3 கோடி ரொக்கப்பணம் பிடிபட்டது.

    தொடர்ந்து கைப்பற்றப்பட்ட பணத்துக்கான ஆவணங்களை வருமானவரி அதிகாரிகள் கேட்டனர். தாமசிடம் மேற்கண்ட பணத்துக்கான உரிய ஆதாரங்கள் இல்லை என்று தெரிகிறது. பின்னர் ரூ.3 கோடி ரொக்கப்பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்து உள்ளனர்.

    இதுதொடர்பாக வருமானவரித்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

    கூடலூர் காங்கிரஸ் நிர்வாகி தாமஸ் வீட்டில் கோடிக்கணக்கில் பணம் பதுக்கப்பட்டு இருப்பதாக புகார் வந்ததை தொடர்ந்து அவரது வீட்டில் சுமார் 10 மணி நேரத்துக்கும் மேலாக சோதனை நடத்தினோம். அப்போது அவரது வீட்டில் கணக்கில் வராத ரூ.3 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.

    இந்த பணத்தை அவர் பாராளுமன்ற தேர்தலில் செலவழிப்பதற்காக பதுக்கி வைத்திருந்தாரா என்பது பற்றிய விவரம் தெரியவில்லை. இதுதொடர்பாக தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்து உள்ளனர்.

    நீலகிரி மாவட்டத்தில் பாராளுமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒருசில நாட்களே இருக்கும் சூழ்நிலையில், கூடலூர் காங்கிரஸ் நிர்வாகி தாமஸ் வீட்டில் கணக்கில் வராத ரூ.3 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • ரூ.1 கோடியே 38 லட்சத்து 57 ஆயிரத்து 630 பணம் மாவட்ட கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
    • உரிய ஆவணங்களை காண்பித்து பணத்தை திரும்ப பெற்றுக் கொள்ளலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    ஈரோடு:

    தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் வரும் 19-ந் தேதி நடைபெற உள்ளது. தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் பரிசு பொருட்கள் கொடுப்பதை தடுக்கும் வகையில் பறக்கும் படையினர், நிலை கண்காணிப்பு குழுவினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    ஈரோடு மாவட்டத்திலும் இரவு, பகல் என சுழற்சி முறையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு ரூ.50 ஆயிரத்திற்கு மேல் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து செல்லப்படும் பணங்களை பறிமுதல் செய்து வருகின்றனர்.

    அதன்படி ஈரோடு கிழக்கு, மேற்கு, மொடக்குறிச்சி, பெருந்துறை, பவானி, கோபி, அந்தியூர், பவானிசாகர் என மாவட்டம் முழுவதும் உள்ள 8 சட்டமன்ற தொகுதிகளில் இதுவரை தேர்தல் பறக்கும் படையினர் சோதனையில் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து செல்லப்பட்ட ரூ.3 கோடியே 73 லட்சத்து 40 ஆயிரத்து 813 பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

    இதில் உரிய ஆவணங்கள் காண்பித்ததால் ரூ.2 கோடியே 34 லட்சத்து 83 ஆயிரத்து 183 சம்பந்தப்பட்டவர்களிடம் திரும்ப ஒப்படைக்கப்பட்டுள்ளது. மீதம் ரூ.1 கோடியே 38 லட்சத்து 57 ஆயிரத்து 630 பணம் மாவட்ட கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்டவர்கள் உரிய ஆவணங்களை காண்பித்து பணத்தை திரும்ப பெற்றுக் கொள்ளலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    ×