search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "படுகாயம் அடைந்த"

    • பாத்திரத்தில் வைத்திருந்த வெந்நீர் ரித்திகா மீது கொட்டியது.
    • இதில் அவர் படுகாயம் அடைந்தார்.

    பு.புளியம்பட்டி:

    ஈரோடு மாவட்டம் புஞ்சைபுளியம்பட்டி அடுத்து புங்கம்பள்ளி கைகாலன் குட்டை பகுதி யை சேர்ந்தவர் செல்ல ப்பாண்டி (வயது 27). இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு நூற்பாலையில் மேற்பார்வையாளராக வேலை பார்த்து வருகிறார்.

    இவரது மனைவி சத்யா (24). இவர்களுடைய மகள் ரித்திகா (3).

    இந்த நிலையில் கடந்த 5-ந் தேதி சத்யா வீட்டுக்கு வெளியே வெந்நீர் போட்டு கொண்டு இருந்தார். அப்போது அங்கு விளையாடிக் கொண்டிருந்த ரித்திகா அங்கு யாரும் இல்லாத போது பாத்திரத்தில் இருந்து வெந்நீர் எடுக்க முயன்றார்.

    அப்போது ரித்திகா திடீரென பாத்திரத்தில் வைத்திருந்த வெந்நீர் அவர் மீது கொட்டியது. இதனால் ரித்திகா அலறி துடித்தார். இதில் அவர் படுகாயம் அடைந்தார்.

    அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்து ரித்திகாவை மீட்டு சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

    இந்நிலையில் கடந்த சில நாட்களாக அங்கு சிகிச்சை பெற்று வந்த ரித்திகா சிகிச்சை பலன் அளிக்காமல் பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து புளியம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • கத்தியை எடுத்து பெண்ணின் தோள்பட்டை, விரல்கள் உள்பட பல்வேறு இடங்களில் சரமாரியாக குத்தினார்.
    • பவானிசாகர் போலீசார் வழக்கு பதிவு செய்து சந்தோஷ் மற்றும் காந்தன் ஆகியோரை கைது செய்தனர்.

    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் பவானிசாகர் பொதுப் பணித்துறை பணியாளர் குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் நஞ்சுண்டப்பன். இவரது மகன் சந்தோஷ் (வயது 32). இரு சக்கர வாகன மெக்கானிக்.

    பவானிசாகர் பகுதியை சேர்ந்த 28 வயது பெண் ஒருவர் தற்காலிக திடக்கழிவு மேலாண்மை அலுவலராக பணி புரிந்து வருகிறார். அந்த பெண் மற்றும் சந்தோஷ் ஆகிய 2 பேரும் கடந்த 2 ஆண்டுகளாக காலித்து வந்ததாக தெரி கிறது.

    இந்த நிலையில் சந்தோஷ் காதலித்த அந்த பெண் வேறு ஒருவரை காதலித்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

    இதுபற்றி கேள்பட்டதும் ஆத்திரமடைந்த சந்தோஷ் தனது நண்பர் பவானிசாகர் இலங்கை தமிழர் மறு வாழ்வு முகாமை சேர்ந்த காந்தன் (38) என்பவருடன் தான் காதலித்த பெண் வேலை செய்யும் அலுவலகத் துக்கு சென்றார்.

    அங்கு சந்தோசுக்கும் அந்த பெண்ணுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. தொடர்ந்து அவர்கள் தகராறில் ஈடுபட்டனர். அப்போது சந்தோஷ் தான் வைத்திருந்த கத்தியை எடுத்து அந்த பெண்ணின் கன்ன, தோள்பட்டை, விரல்கள் உள்பட பல்வேறு இடங்களில் சரமாரியாக குத்தினார்.

    இதில் அவர் படுகாயம் அடைந்து அலறி துடித்தார். அப்போது அந்த பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு அலுவலகத்தில் வேலை செய்பவர்கள் வந்து பார்த்தனர்.

    இதையடுத்து படுகாயம் அடைந்த அந்த பெண்ணை மீட்டு சத்திய மங்கலம் அரசு ஆஸ்பத்தி ரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இது குறித்து பவானிசாகர் போலீசார் வழக்கு பதிவு செய்து சந்தோஷ் மற்றும் காந்தன் ஆகியோரை கைது செய்தனர்.

    இதையடுத்து அவர்கள் 2 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு கோபிசெட்டிபாளையம் கிளை சிறையில் அடைக்கப்பட்டனர்.

    ×