search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "injured woman"

    • பலத்த காயம் அடைந்த அட்லிண்டா சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு உள்ளார்.
    • அங்கு சிகிச்சை பெற்று வந்த அட்லிண்டாவை ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ. நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

    தூத்துக்குடி:-

    ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பெரியதாழை சவேரியார் தெருவைச் சேர்ந்த ஆரோக்கியம் மகன் மெர்லின் (வயது41). இவரது மனைவி அட்லிண்டா (35). இவர்கள் தனது மகன்க ளுடன் மோட்டார் சைக்கி ளில் திருச்செந்தூர் நோக்கி சென்றபோது, அந்த வழியாக வந்த வாகனம் மோட்டார் சைக்கிள் மீது விபத்து ஏற்பட்டது.

    இதில் பலத்த காயம் அடைந்த அட்லிண்டா சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு உள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக குலசேகரன்பட்டினம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இது குறித்து அறிந்த ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் ஊர்வசி அமிர்தராஜ் நேற்று காலை தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு வந்தார். அங்கு சிகிச்சை பெற்று வந்த அட்லிண்டாவை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும் நிவாரண உதவியாக ரூ. 25 ஆயிரம் வழங்கினார்.

    அப்போது, பெரியதாழை பங்குதந்தை சுசீலன், ஊர் பெரியவர்கள் அந்தோணி, லிபொன்ஸ் அமலதாஸ், கூட்டுறவு சங்க தலைவர் சந்தியா ரமேஷ், மாவட்ட காங்கிரஸ் பொருளாளர் காங்கிரஸ் எடிசன், ஊடகப்பிரிவு முத்துமணி, முன்னாள் இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஜெய சீலன், மாநில பொதுக்குழு உறுப்பினர் சுரேஷ், மாவட்ட கமிட்டி ஜெனி மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

    • கத்தியை எடுத்து பெண்ணின் தோள்பட்டை, விரல்கள் உள்பட பல்வேறு இடங்களில் சரமாரியாக குத்தினார்.
    • பவானிசாகர் போலீசார் வழக்கு பதிவு செய்து சந்தோஷ் மற்றும் காந்தன் ஆகியோரை கைது செய்தனர்.

    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் பவானிசாகர் பொதுப் பணித்துறை பணியாளர் குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் நஞ்சுண்டப்பன். இவரது மகன் சந்தோஷ் (வயது 32). இரு சக்கர வாகன மெக்கானிக்.

    பவானிசாகர் பகுதியை சேர்ந்த 28 வயது பெண் ஒருவர் தற்காலிக திடக்கழிவு மேலாண்மை அலுவலராக பணி புரிந்து வருகிறார். அந்த பெண் மற்றும் சந்தோஷ் ஆகிய 2 பேரும் கடந்த 2 ஆண்டுகளாக காலித்து வந்ததாக தெரி கிறது.

    இந்த நிலையில் சந்தோஷ் காதலித்த அந்த பெண் வேறு ஒருவரை காதலித்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

    இதுபற்றி கேள்பட்டதும் ஆத்திரமடைந்த சந்தோஷ் தனது நண்பர் பவானிசாகர் இலங்கை தமிழர் மறு வாழ்வு முகாமை சேர்ந்த காந்தன் (38) என்பவருடன் தான் காதலித்த பெண் வேலை செய்யும் அலுவலகத் துக்கு சென்றார்.

    அங்கு சந்தோசுக்கும் அந்த பெண்ணுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. தொடர்ந்து அவர்கள் தகராறில் ஈடுபட்டனர். அப்போது சந்தோஷ் தான் வைத்திருந்த கத்தியை எடுத்து அந்த பெண்ணின் கன்ன, தோள்பட்டை, விரல்கள் உள்பட பல்வேறு இடங்களில் சரமாரியாக குத்தினார்.

    இதில் அவர் படுகாயம் அடைந்து அலறி துடித்தார். அப்போது அந்த பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு அலுவலகத்தில் வேலை செய்பவர்கள் வந்து பார்த்தனர்.

    இதையடுத்து படுகாயம் அடைந்த அந்த பெண்ணை மீட்டு சத்திய மங்கலம் அரசு ஆஸ்பத்தி ரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இது குறித்து பவானிசாகர் போலீசார் வழக்கு பதிவு செய்து சந்தோஷ் மற்றும் காந்தன் ஆகியோரை கைது செய்தனர்.

    இதையடுத்து அவர்கள் 2 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு கோபிசெட்டிபாளையம் கிளை சிறையில் அடைக்கப்பட்டனர்.

    ×