search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பஞ்சர் சைக்கிள்"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மகளிர் அணி சார்பில் விசாகப்பட்டினம் காந்தி சிலை முன்பு கண்டன போராட்டம் செய்தனர்.
    • பவன் கல்யாண் பஞ்சர் செய்யப்பட்ட சைக்கிள். அந்த சைக்கிளை தான் அவர் வைத்திருக்கிறார் என்பது உண்மை.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் வியூகம் என்ற தெலுங்கு சினிமா பட விழா நடந்தது.

    இதில் கலந்துகொண்ட ஆந்திர மந்திரி ரோஜா பேசுகையில் :-

    பவன் கல்யாண் ரசிகர்களும் கபு ஜாதியினரும் பவன் கல்யாண் முதல் மந்திரியாக வரவேண்டும் என்று விரும்புகிறார்கள். ஆனால் பவன் கல்யாண் பஞ்சர் செய்யப்பட்ட சைக்கிள். அந்த சைக்கிளை தான் அவர் வைத்திருக்கிறார் என்பது உண்மை எனக் கிண்டலாக பேசினார்.

    மேலும் மந்திரி ராம்பாபு பேசுகையில்:-

    ராஜமுந்திரி ஜெயிலில் சந்திரபாபு நாயுடுவிடம் ஜனசேனா கட்சி தலைவர் பவன் கல்யாண் சரண் அடைந்தார் என்றார்.

    பட விழாவில் ரோஜா மற்றும் ராம் பாபு பேசியது பவன் கல்யாண் ரசிகர்கள் மற்றும் அவரது கட்சியினருக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது.

    இதனை கண்டித்து பவன் கல்யாண் கட்சியைச் சேர்ந்த மகளிர் அணி சார்பில் விசாகப்பட்டினம் காந்தி சிலை முன்பு கண்டன போராட்டம் செய்தனர்.

    அப்போது மந்திரி ரோஜா மற்றும் ராம் பாபு ஆகியோரின் படங்களை செருப்பால் அடித்து கோஷம் எழுப்பினர்.

    இது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    ×