search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நெம்மேலி"

    • நெம்மேலி கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் மூலம் தென்சென்னை மக்கள் பயன்பெறுவார்கள்.
    • சீர்மிகு சென்னையை உருவாக்கியதில் திமுகவுக்கு மிகப்பெரிய பங்கு உள்ளது.

    செங்கல்பட்டு:

    செங்கல்பட்டு மாவட்டம் நெம்மேலியில் ரூ.2,465 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட கடல்நீரை குடிநீராக்கும் நிலையத்தை இன்று திறந்து வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 95 முடிவுற்ற திட்டப்பணிகளையும் தொடங்கி வைத்தார். மேலும் ரூ.1,802 கோடி மதிப்பீட்டிலான 39 புதிய திட்டப்பணிகளுக்கு முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார்.

    இதைத்தொடர்ந்து அவர் கூறியதாவது:

    * நாளொன்றுக்கு 150 மில்லியன் லிட்டர் உற்பத்தித்திறன் கொண்ட கடல்நீரை குடிநீராக்கும் நிலையம் திறக்கப்பட்டுள்ளது.

    * எனது இதயத்திற்கு நெருக்கமான திட்டம், கடல் நீரை குடிநீராக்கும் திட்டம்.

    * அமைச்சர் நேரு எதையும் நேர்த்தியாக பிரமாண்டமாக செய்யக்கூடியவர்.

    * நாம் செயல்படுத்திய திட்டங்களை பட்டியல் போட்டால், இன்று ஒரு நாள் போதாது.

    * நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் துறை மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

    * நிதி நெருக்கடியிலும், குடிநீர் திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம்.

    * மீஞ்சூர் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் மூலம் வடசென்னை மக்கள் பயன்பெறுகின்றனர்.

    * நெம்மேலி கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் மூலம் தென்சென்னை மக்கள் பயன்பெறுவார்கள்.

    * கடல்நீரை குடிநீராக்கும் நிலையம் மூலம் தென் சென்னையில் 9 லட்சம் மக்கள் பயன்பெறுவர்.

    * சீர்மிகு சென்னையை உருவாக்கியதில் திமுகவுக்கு மிகப்பெரிய பங்கு உள்ளது.

    * சென்னையில் மேம்பாலம் உள்ளிட்ட பல கட்டமைப்புகள் திமுக ஆட்சியில்தான் உருவானது.

    * சென்னை மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

    * வெற்று அறிவிப்புகளை வெளியிடும் அரசு திமுக அரசு கிடையாது என்று கூறினார்.

    ×