search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நூல் விலை"

    • நூல் விலை உள்பட மூலப்பொருட்களின் விலையை கருத்தில் கொண்டு ஆடைகளின் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.
    • நூல் விலையில் அடிக்கடி மாற்றம் ஏற்படுவதால், தொழில்துறையினர் ஆடைகளின் விலையை நிர்ணயம் செய்வதில் குழப்பம் ஏற்படும்.

    திருப்பூர்:

    திருப்பூரில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பின்னலாடை நிறுவனங்கள் மற்றும் அதனை சார்ந்த ஜாப் ஒர்க் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. பின்னலாடை தயாரிப்புக்கு மிக முக்கிய மூலப்பொருளாக இருந்து வருவது நூல் ஆகும். தொழில்துறையினர் தங்களுக்கு ஆர்டர்கள் கிடைத்தவுடன், அதற்கேற்ற படி நூல்களை மொத்தமாக கொள்முதல் செய்து ஆடைகளை தயாரிப்பார்கள். நூல் விலை உள்பட மூலப்பொருட்களின் விலையை கருத்தில் கொண்டு ஆடைகளின் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.

    இந்நிலையில் நூல் விலையில் அடிக்கடி மாற்றம் ஏற்படுவதால், தொழில்துறையினர் ஆடைகளின் விலையை நிர்ணயம் செய்வதில் குழப்பம் ஏற்படும். இந்நிலை யில் கடந்த ஆண்டில் அடிக்கடி நூல் விலை உயர்ந்து வந்தது. எனவே நூல் விலையை குறைக்க தொழில் துறையினர் வலியுறுத்தி வந்தனர். இந்த நிலையில் நடப்பு ஆண்டில் ஜனவரி மாதம் 20 ரூபாய் நூல் விலை குறைந்த நிலையில் பிப்ரவரி மாதத்தில் நூல் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி ஜனவரி மாத நிலையே தொடரும் என நூற்பாலைகள் அறிவித்திருந்தது.

    இதன் தொடர்ச்சியாக மார்ச் மாதத்திற்கான நூல் விலையிலும் எந்தவிதமான மாற்றமும் ஏற்படவில்லை. இதேபோல் ஏப்ரல், மே மாதத்திலும் நூல் விலையில் மாற்றம் இல்லாமல் நீடித்தது. இந்நிலையில் நடப்பு மாதத்திற்கான(ஜூன்) நூல் விலை ஆனது இன்று அறிவிக்கப்பட்டது. இதில் கடந்த மாதத்தை போலவே அதே நிலை தொடரும் என நூற்பாலைகள் தெரிவித்துள்ளனர். இதன்படி தொடர்ந்து 5 மாதங்களாக நூல் விலை அதிகரிக்காமல், ஒரே நிலையில் இருந்து வருவது தொழில் துறையினருக்கு சற்று நிம்மதியை அளித்துள்ளது.

    அதன்படி ஒரு கிலோ 10-வது நம்பர் கோம்டு நூல் ரூ.185-க்கும், 16-ம் நம்பர் ரூ.195-க்கும், 20-வது நம்பர் கோம்டு நூல் ரூ.253-க்கும், 24-ம் நம்பர் ரூ.265-க்கும், 30-ம் நம்பர் ரூ.275-க்கும், 34-ம் நம்பர் ரூ.295-க்கும், 40-ம் நம்பர் ரூ.315-க்கும், 20-ம் நம்பர் செமி கோம்டு நூல் கிலோ ரூ.245-க்கும், 24-ம் நம்பர் ரூ. 255-க்கும், 30-ம் நம்பர் ரூ.265-க்கும், 34-ம் நம்பர் ரூ. 285-க்கும், 40-ம் நம்பர் ரூ.305-க்கும் விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • நூல் விலை உள்பட மூலப்பொருட்களின் விலையை கருத்தில் கொண்டு ஆடைகளின் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.
    • கடந்த நான்கு மாதங்களாக நூல் விலை அதிகரிக்காமல், ஒரே நிலையில் இருந்து வருவது திருப்பூர் பின்னலாடை தொழில் துறையினருக்கு சற்று நிம்மதியை அளித்துள்ளது.

    திருப்பூர்:

    திருப்பூரில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பின்னலாடை நிறுவனங்கள் மற்றும் அதனை சார்ந்த ஜாப் ஒர்க் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. பின்னலாடை தயாரிப்புக்கு மிக முக்கிய மூலப்பொருளாக இருந்து வருவது நூல் ஆகும். தொழில்துறையினர் தங்களுக்கு ஆர்டர்கள் கிடைத்தவுடன், அதற்கேற்ற படி நூல்களை மொத்தமாக கொள்முதல் செய்து ஆடைகளை தயாரிப்பார்கள். நூல் விலை உள்பட மூலப்பொருட்களின் விலையை கருத்தில் கொண்டு ஆடைகளின் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.

    இந்நிலையில் நூல் விலையில் அடிக்கடி மாற்றம் ஏற்படுவதால், தொழில்துறையினர் ஆடை ளின் விலையை நிர்ணயம் செய்வதில் குழப்பம் ஏற்படும். கடந்த சில மாதங்களாகவே அடிக்கடி நூல் விலை உயர்ந்து வருகிறது. எனவே நூல் விலையை குறைக்க தொழில் துறையினர் வலியுறுத்தி வந்தனர்.

    கடந்த ஜனவரி மாதம் 20 ரூபாய் நூல் விலை குறைந்த நிலையில், பிப்ரவரி மாதத்தில் நூல் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி ஜனவரி மாத விலையே தொடரும் என நூற்பாலைகள் அறிவித்திருந்தது. இதன் தொடர்ச்சியாக மார்ச், ஏப்ரல் மாதத்திலும் நூல் விலையில் மாற்றம் இல்லாமல் நீடித்தது.

    இந்நிலையில் நடப்பு (மே) மாதத்திற்கான நூல் விலை இன்று அறிவிக்கப்பட்டது. அதில் 10ம் நம்பர் மற்றும் 16ம் நம்பர் கோம்டு நூல் விலை மட்டும் 5 ரூபாய் உயர்ந்துள்ளது. (திருப்பூரில் இந்த வகை நூல்கள் அதிக அளவில் பயன்படுத்துவது கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது) மற்ற நூல் வகைகள் அனைத்தும் கடந்த மாதத்தை போலவே அதே நிலை தொடரும் என நூற்பாலைகள் தெரிவித்துள்ளனர்.

    இதன்படி கடந்த நான்கு மாதங்களாக நூல் விலை அதிகரிக்காமல், ஒரே நிலையில் இருந்து வருவது திருப்பூர் பின்னலாடை தொழில் துறையினருக்கு சற்று நிம்மதியை அளித்துள்ளது.

    நூல் விலையானது ஒரு கிலோ 10-வது நம்பர் கோம்டு நூல் ரூ.185-க்கும், 16-ம் நம்பர் ரூ.195-க்கும், 20-வது நம்பர் கோம்டு நூல் ரூ.253-க்கும், 24-ம் நம்பர் ரூ.265-க்கும், 30-ம் நம்பர் ரூ.275-க்கும், 34-ம் நம்பர் ரூ.295-க்கும், 40-ம் நம்பர் ரூ.315-க்கும், 20-ம் நம்பர் செமி கோம்டு நூல் கிலோ ரூ.245-க்கும், 24-ம் நம்பர் ரூ. 255-க்கும், 30-ம் நம்பர் ரூ.265-க்கும், 34-ம் நம்பர் ரூ. 285-க்கும், 40-ம் நம்பர் ரூ.305-க்கும் விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • நூல் விலையை அடிப்படையாகக் கொண்டு தான் உற்பத்தி செய்யும் துணிகளின் விலை முடிவாகும்.
    • புதிய ஆர்டர்கள் அதிக அளவில் வர வாய்ப்புள்ளதால் ஜவுளி உற்பத்தியாளர்கள் உற்சாகம் அடைந்து உள்ளனர்.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் சுற்று வட்டாரத்தில் முக்கிய தொழிலாக விசைத்தறி தொழில் உள்ளது. இங்கு வேட்டி, சர்ட், சுடிதார், துண்டு, லுங்கி உள்பட பல்வேறு ஜவுளி வகைகள் உற்பத்தி செய்யப்படுகிறது. இவை உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

    ஆனால் கடந்த சில மாதங்களாக நூல் விலை உயர்வால் விற்பனை இல்லாமல், உற்பத்தி செய்யப்பட்ட துணிகள் தேக்கமடைந்தன. இதனால் உற்பத்தியாளர்கள் மிகவும் பாதிக்கப்பட்டனர். வேலை இழந்து தவிக்கும் நிலை ஏற்பட்டது. இந்த நிலையில் நூல் விலை படிப்படியாக குறைந்து வருகிறது. இதனால் புதிய ஆர்டர்கள் அதிக அளவில் வர வாய்ப்புள்ளதால் ஜவுளி உற்பத்தியாளர்கள் உற்சாகம் அடைந்து உள்ளனர்.

    இதுகுறித்து தமிழ்நாடு விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பு நிர்வாகிகள் கூறியதாவது:-

    நூல் விலையை அடிப்படையாகக் கொண்டு தான் உற்பத்தி செய்யும் துணிகளின் விலை முடிவாகும். கடந்த பல மாதங்களாக நூல் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்தது. இதனால் துணி உற்பத்தி செலவு அதிகரித்துவிட்டது. கூடுதலாக விலை வைத்து துணி விற்பனை செய்தாலும் மொத்த கொள்முதல் வியாபாரிகள் வாங்குவதில்லை. இதனால் பெருமளவில் உற்பத்தி செய்யப்பட்ட துணிகள் தேக்கமடைந்துவிட்டன.

    ஆர்டரும் இல்லாததால் தொடர்ந்து உற்பத்தி செய்ய முடியாத நிலை ஏற்பட்டதால் ஜவுளி தொழில் மிகவும் சரிவைநோக்கி சென்றது. தற்போது நூல் விலை கிலோவுக்கு 20 முதல் 30 ரூபாய் வரை குறைந்துள்ளது. இதனால் தொழில் இயல்பு நிலைக்கு வந்துள்ளது. புதிய ஆர்டர்கள் அதிக அளவு வரும் என எதிர்பார்க்கிறோம். அப்படி வரும் பட்சத்தில் மீண்டும் ஜவுளி உற்பத்தி தொழில் சூடு பிடிக்கும். இதனால் பலருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    • நூல் விலை கிலோவுக்கு ரூ.40 குறைத்து நூற்பாலைகள் அறிவித்துள்ளன.
    • அரசின் முயற்சியால் பஞ்சு விலை குறைய தொடங்கி இருக்கிறது.

    திருப்பூர்:

    பின்னலாடை உற்பத்தியின் முக்கிய மூலப்பொருளான நூல் விலை இந்த மாதம் கிலோவுக்கு ரூ.40 குறைந்தது. இது குறித்து திருப்பூர் பனியன் உற்பத்தியாளர்கள் தெரிவித்த கருத்துக்கள் வருமாறு:- இந்திய ஏற்றுமதி நிறுவனங்களின் கூட்டமைப்பு (பியோ) தலைவர் சக்திவேல்:-

    நூல் விலை கிலோவுக்கு ரூ.40 குறைத்து நூற்பாலைகள் அறிவித்துள்ளன. குஜராத் மாநிலத்தில் நூல் விலை குறைந்துள்ளது. நூற்பாலைகள் நூல் விலையை மேலும் குறைக்க வேண்டும். பஞ்சு விலை குறைந்து வருகிறது. அதற்கு ஏற்ப நூல் விலையையும் குறைத்து கடந்த மார்ச் மாத நூல் விலையை அறிவித்தால் பனியன் உற்பத்தியாளர்கள் புதிய ஆர்டர்களை தைரியமாக எடுத்து செய்ய முடியும். ஏற்கனவே நூல் விலை உயர்வால் ஆர்டர்களை பெற தயக்கம் காட்டியதால் திருப்பூரை தேடி வந்த ஆர்டர்கள் மாறி சென்று விட்டன. நூல் விலையை மேலும் குறைத்து நூற்பாலை உரிமையாளர்கள் திருப்பூர் பனியன் தொழில் மேம்பட ஒத்துழைக்க வேண்டும்.

    டீமா தலைவர் முத்துரத்தினம்:-

    இந்தியாவில் பருத்தி உற்பத்தி தற்போது இல்லை. புதிய பருத்தி பஞ்சு வர இன்னும் 3 மாதம் ஆகும். வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட பஞ்சுவரத்து இன்னும் இந்தியாவுக்கு வரவில்லை. இருந்தபோதிலும் பஞ்சு விலை குறைந்து வருகிறது. இதற்கு காரணம் பதுக்கல் பஞ்சை வியாபாரிகளிடமிருந்தோ, நூற்பாலைகளில் இருந்தோ வெளியே கொண்டு வர வேண்டும் என்று மத்திய அரசிடம் தொடர்ந்து வலியுறுத்தி வந்தோம். அதன் விளைவாக வேறு வழியின்றி பதுக்கல் பஞ்சு வெளியே வர தொடங்கி இருக்கிறது. 40 லட்சம் பேல்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசிடம் தெரிவிக்கப்பட்டது.

    அரசின் முயற்சியால் பஞ்சு விலை குறைய தொடங்கி இருக்கிறது. மேலும் நூல் விலை குறைந்தால் மட்டுமே பனியன் உற்பத்தியை தொடங்குவது என்று உற்பத்தியாளர்கள் ஒரு முடிவு எடுத்து உள்ளனர். இதன் காரணமாக நூற்பாலைகளில் 90 சதவீதம் நூல் விற்பனை சரிந்து விட்டது. இருப்பில் உள்ள நூல்களை விற்பனை செய்ய வேண்டும் என்பதற்காக வேறு வழி இல்லாமல் நூல் விலையை குறைக்க தொடங்கி இருக்கிறார்கள். இந்த விலை குறைவு என்பது போதாது. வானுயர நூல் விலையை உயர்த்தி விட்டு இப்போது கிலோவுக்கு ரூ.40 குறைத்தால் மட்டும் போதாது. இன்னும் நூல் விலையை குறைக்க வேண்டும். பதுக்கல் பஞ்சை வெளியே கொண்டு வந்து நூல் விலை சீராக இருக்க மத்திய அரசு தொடர்ந்து கவனம் செலுத்த வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    ×